Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கானல் நீர்.....
3 posters
Page 1 of 1
கானல் நீர்.....
ஜனனி தன் சீமந்தம் முடிந்து தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு குதூகலமாய் சென்றாள். கனவுகளுடன் தன் குருதியில் உருவாகும் குழந்தையைக் காணும் ஆவலில் அவள்...
நாட்கள் கனவுகளுடன் நகர்ந்தது. மெல்ல இடுப்பு வலி எட்டிப் பார்க்க, பிறக்கப்போகும்
குழந்தையைப் பற்றிய கற்பனையில் வலியை மறந்து ஜனனி. ”எட்டாம் மாசக் குழந்தை தொட்டில் ஏறாதே, கடவுளே இது பிரசவ வலியாக இருக்கக் கூடாதே” என ஜனனியின் தாய் பதட்டத்தில்.
அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்...ஜனனியும், தாயும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க..முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தை, அவர்களின் மகிழ்விற்கு எல்லை ஏது? அதிக நேரம் நீடிக்கவில்லை அந்த மகிழ்ச்சி...குழந்தையின் மூளைக்கு இரத்தம் செல்லவில்லையாம்.. செவிலித்தாய் குழந்தையை அவசரப் பிரிவிற்கு அள்ளிச் செல்ல, ஜனனி மயக்க நிலையில்..தாயோ கவலையின் உச்சத்தில்..நல்லபடியாக குழந்தை பிழைக்க வேண்டுமே என நினைவில் வந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டி நின்றாள்..
ஜனனி கண்விழித்தவுடன், அம்மா குழந்தை எங்கே? ”சிகிச்சை நடைபெறுகிறது..இரண்டு நாள் நீ பால் கொடுக்க கூடாதாம்..மருத்துவர் சொன்னார்..” ஏன்? அதிர்ந்தாள் ஜனனி..”குழந்தை உடல் பாதிக்குமாம்..” பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லையே..உள்ளூர வருந்தினாலும், அம்மா கவலைப் படக்கூடாதே என, இரண்டு நாள் தானே என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள்..அம்மா ஏன் முகத்தில் கவலையாக இருக்கிறாய் ஜனனி கேட்க, ”அப்படியெல்லாம் இல்லை..சற்று சோர்வாக இருக்கு அவ்வளவுதான்”
அன்று மதியம் ஜனனியின் மாமனாரும்,மாமியாரும் வர, அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஜனனி குழந்தையைப் பார்த்தீர்களா என கேட்க, ஹ்ம்ம் பார்த்தோம்..என்று கூறியபடியே..உங்களுக்கு வேறு மருத்துவமனையே கிடைக்கவில்லையா..அனைவரும் வந்து செல்லும் இந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து..இப்படி எங்களையெல்லாம் இங்கே வரவழைத்து விட்டீர்களே என கடிந்தார் மாமனார். புன்னகையுடன் அமைதியாய் ஜனனி.
மாலை அனைவரும் வீடு திரும்ப, கார் வரவழைத்து அனைவரும் அமர்ந்தபிறகு, ஜனனி அம்மாவிடம், குழந்தையை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என புருவம் உயர்த்த, “குழந்தை இன்னும் இரண்டு நாள் இங்கு சிகிச்சை பெற வேண்டுமாம்..நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்..நான் வந்து கவனித்துக் கொள்கிறேன் வா” அம்மாவைப் பின் தொடர்ந்து காரில் அமர்ந்தாள்.
வீட்டு வாசலையடைந்த ஜனனி குழந்தையில்லாமல் தான் மட்டும் தனியாக செல்வதை எண்ணி வெறுமையாய் உணர்ந்தபடியே உள்ளே நுழைய எத்தனிக்க என்ன ஜனனிமா உன் புள்ள இறந்துட்டானாமே..? பாவம் தளச்சம்புள்ளைய இப்படி பரிகொடுத்திட்டியே தாயி...
ஐயோ பாட்டிம்மா, மெதுவா பேசுங்க.அம்மா காதுல விழுந்தா சண்டைக்கு வந்துடுவாங்க..குழந்தை இறக்கவில்லை..நல்லாத்தான் இருக்கான்..நாளைக்கு அழைச்சிக்கிட்டு வந்திடுவோம். ஜனனியை ஒருமாதிரி பார்த்தவாறே உள்ளே சென்ற பாட்டி..எவ்வளவு அழகான பிள்ளை இப்படி சவமா வந்திருக்கானே அழுகுரல் கேட்க, உள்ளே விரைந்து சென்ற ஜனனி அந்தக் காட்சியைக் கண்டதும் சிலையாய் உறைந்து நின்றாள். பையிலிருந்து இறந்த குழந்தையை வெளியில் எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா..
இப்படி உத்துப் பாக்காத தாயி அழுதிடுமா என பக்கத்து வீட்டுப் பாட்டி கூற, அம்மா இறந்த தன் குழந்தையைக் கையில் கொடுக்க..நெருப்பிலிட்ட புழுவாய் மனம் துடிக்கிறது..அழக்கூடத் தோன்றாமல் மனம் கணக்க, அப்படியே உட்கார்ந்து அமைதி காத்தாள்..இரண்டு பாட்டியும் குழந்தைக்கு செய்ய வெண்டிய சடங்குகளை செய்து முடித்து வீட்டின் கொல்லைப்புறத்தில் குழந்தையைப் புதைத்தும் ஆயிற்று.. தன் உணர்வை வெளிப்படுத்தக் கூடத் தெரியாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள் ஜனனி.
கொல்லைப்புறம் செல்லும்போதெல்லாம், குழந்தையின் முகம் கண்ணில் தோன்றுகிறது..இரவில் குழந்தை அழும் குரல் கேட்டால் தன் குழந்தை அழுவதாய் உணர்ந்து பாலூட்ட எத்தனிக்க, அழுதது தன் குழந்தை இல்லை என தன்னுணர்வு பெற்று., பின் இரவெல்லாம் விழித்து கண்ணீரில் கரைந்த இரவுகள் காலமெல்லாம் நினைவில் வருகிறது.
அவள் நினைவில் வந்து உறுத்துவது குழந்தையின் இறப்பு மட்டுமல்ல.
தன் குழந்தையைப் பரிகொடுத்ததுக் கூடத் தெரியாமல் இருக்கும் ஒரு தாயிடம் ஆறுதலாய் பேசக் கூடத் தோன்றாமல் ஆசாரத்தை மனதில் கொண்டு அரசாங்க மருத்துவமையில் சேர்த்ததற்காக சண்டையிட்ட தன் மாமனார், மாமியாரின் மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் இப்படியும் மனிதர்களா என்ற விரக்தியும் மேலோங்கி நின்றது....
பாசமில்லா இடத்தில், பாசத்தை எதிர்நோக்கும் இவள் கானல் நீரை அருந்தக் காத்திருக்கும் பேதையோ....??
இப்படி பாசமற்ற மனிதர்களிடம் பாசத்தை எதிர்பார்த்தது அவள் குற்றமா? அல்லது பாசத்தை எதிர்பார்ப்பவளிடம் பாசத்தைக் காட்டாதது அவர்கள் குற்றமா?
நாட்கள் கனவுகளுடன் நகர்ந்தது. மெல்ல இடுப்பு வலி எட்டிப் பார்க்க, பிறக்கப்போகும்
குழந்தையைப் பற்றிய கற்பனையில் வலியை மறந்து ஜனனி. ”எட்டாம் மாசக் குழந்தை தொட்டில் ஏறாதே, கடவுளே இது பிரசவ வலியாக இருக்கக் கூடாதே” என ஜனனியின் தாய் பதட்டத்தில்.
அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்...ஜனனியும், தாயும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க..முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தை, அவர்களின் மகிழ்விற்கு எல்லை ஏது? அதிக நேரம் நீடிக்கவில்லை அந்த மகிழ்ச்சி...குழந்தையின் மூளைக்கு இரத்தம் செல்லவில்லையாம்.. செவிலித்தாய் குழந்தையை அவசரப் பிரிவிற்கு அள்ளிச் செல்ல, ஜனனி மயக்க நிலையில்..தாயோ கவலையின் உச்சத்தில்..நல்லபடியாக குழந்தை பிழைக்க வேண்டுமே என நினைவில் வந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டி நின்றாள்..
ஜனனி கண்விழித்தவுடன், அம்மா குழந்தை எங்கே? ”சிகிச்சை நடைபெறுகிறது..இரண்டு நாள் நீ பால் கொடுக்க கூடாதாம்..மருத்துவர் சொன்னார்..” ஏன்? அதிர்ந்தாள் ஜனனி..”குழந்தை உடல் பாதிக்குமாம்..” பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட முடியவில்லையே..உள்ளூர வருந்தினாலும், அம்மா கவலைப் படக்கூடாதே என, இரண்டு நாள் தானே என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள்..அம்மா ஏன் முகத்தில் கவலையாக இருக்கிறாய் ஜனனி கேட்க, ”அப்படியெல்லாம் இல்லை..சற்று சோர்வாக இருக்கு அவ்வளவுதான்”
அன்று மதியம் ஜனனியின் மாமனாரும்,மாமியாரும் வர, அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்ற ஜனனி குழந்தையைப் பார்த்தீர்களா என கேட்க, ஹ்ம்ம் பார்த்தோம்..என்று கூறியபடியே..உங்களுக்கு வேறு மருத்துவமனையே கிடைக்கவில்லையா..அனைவரும் வந்து செல்லும் இந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து..இப்படி எங்களையெல்லாம் இங்கே வரவழைத்து விட்டீர்களே என கடிந்தார் மாமனார். புன்னகையுடன் அமைதியாய் ஜனனி.
மாலை அனைவரும் வீடு திரும்ப, கார் வரவழைத்து அனைவரும் அமர்ந்தபிறகு, ஜனனி அம்மாவிடம், குழந்தையை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என புருவம் உயர்த்த, “குழந்தை இன்னும் இரண்டு நாள் இங்கு சிகிச்சை பெற வேண்டுமாம்..நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்..நான் வந்து கவனித்துக் கொள்கிறேன் வா” அம்மாவைப் பின் தொடர்ந்து காரில் அமர்ந்தாள்.
வீட்டு வாசலையடைந்த ஜனனி குழந்தையில்லாமல் தான் மட்டும் தனியாக செல்வதை எண்ணி வெறுமையாய் உணர்ந்தபடியே உள்ளே நுழைய எத்தனிக்க என்ன ஜனனிமா உன் புள்ள இறந்துட்டானாமே..? பாவம் தளச்சம்புள்ளைய இப்படி பரிகொடுத்திட்டியே தாயி...
ஐயோ பாட்டிம்மா, மெதுவா பேசுங்க.அம்மா காதுல விழுந்தா சண்டைக்கு வந்துடுவாங்க..குழந்தை இறக்கவில்லை..நல்லாத்தான் இருக்கான்..நாளைக்கு அழைச்சிக்கிட்டு வந்திடுவோம். ஜனனியை ஒருமாதிரி பார்த்தவாறே உள்ளே சென்ற பாட்டி..எவ்வளவு அழகான பிள்ளை இப்படி சவமா வந்திருக்கானே அழுகுரல் கேட்க, உள்ளே விரைந்து சென்ற ஜனனி அந்தக் காட்சியைக் கண்டதும் சிலையாய் உறைந்து நின்றாள். பையிலிருந்து இறந்த குழந்தையை வெளியில் எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா..
இப்படி உத்துப் பாக்காத தாயி அழுதிடுமா என பக்கத்து வீட்டுப் பாட்டி கூற, அம்மா இறந்த தன் குழந்தையைக் கையில் கொடுக்க..நெருப்பிலிட்ட புழுவாய் மனம் துடிக்கிறது..அழக்கூடத் தோன்றாமல் மனம் கணக்க, அப்படியே உட்கார்ந்து அமைதி காத்தாள்..இரண்டு பாட்டியும் குழந்தைக்கு செய்ய வெண்டிய சடங்குகளை செய்து முடித்து வீட்டின் கொல்லைப்புறத்தில் குழந்தையைப் புதைத்தும் ஆயிற்று.. தன் உணர்வை வெளிப்படுத்தக் கூடத் தெரியாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள் ஜனனி.
கொல்லைப்புறம் செல்லும்போதெல்லாம், குழந்தையின் முகம் கண்ணில் தோன்றுகிறது..இரவில் குழந்தை அழும் குரல் கேட்டால் தன் குழந்தை அழுவதாய் உணர்ந்து பாலூட்ட எத்தனிக்க, அழுதது தன் குழந்தை இல்லை என தன்னுணர்வு பெற்று., பின் இரவெல்லாம் விழித்து கண்ணீரில் கரைந்த இரவுகள் காலமெல்லாம் நினைவில் வருகிறது.
அவள் நினைவில் வந்து உறுத்துவது குழந்தையின் இறப்பு மட்டுமல்ல.
தன் குழந்தையைப் பரிகொடுத்ததுக் கூடத் தெரியாமல் இருக்கும் ஒரு தாயிடம் ஆறுதலாய் பேசக் கூடத் தோன்றாமல் ஆசாரத்தை மனதில் கொண்டு அரசாங்க மருத்துவமையில் சேர்த்ததற்காக சண்டையிட்ட தன் மாமனார், மாமியாரின் மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் இப்படியும் மனிதர்களா என்ற விரக்தியும் மேலோங்கி நின்றது....
பாசமில்லா இடத்தில், பாசத்தை எதிர்நோக்கும் இவள் கானல் நீரை அருந்தக் காத்திருக்கும் பேதையோ....??
இப்படி பாசமற்ற மனிதர்களிடம் பாசத்தை எதிர்பார்த்தது அவள் குற்றமா? அல்லது பாசத்தை எதிர்பார்ப்பவளிடம் பாசத்தைக் காட்டாதது அவர்கள் குற்றமா?
Re: கானல் நீர்.....
ஈரம் பேசும் கதை...இரக்கமற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பது ஜனனியின் குற்றம் மட்டுமன்று ... ஜனங்களின் குற்றமும் கூட...
நல்ல கதை...வாழ்த்துகள் காயத்ரி வைத்யநாதன்...
நல்ல கதை...வாழ்த்துகள் காயத்ரி வைத்யநாதன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கானல் நீர்.....
ரா.ரா3275 wrote:ஈரம் பேசும் கதை...இரக்கமற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பது ஜனனியின் குற்றம் மட்டுமன்று ... ஜனங்களின் குற்றமும் கூட...
நல்ல கதை...வாழ்த்துகள் காயத்ரி வைத்யநாதன்...
ம்ம் உண்மைதான்..கிடைக்காது எனத்தெரிந்தும் எதிர்பார்ப்பது அறிவின்மையையே காட்டுகிறது...நன்றி
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Re: கானல் நீர்.....
கானல் நீர் தான் என தெரிந்தும்
கண்ணீர் விடுவது தவறு.
அன்பிற்கு விலையில்லாத பொழுது
இந்தக் கண்ணீருக்கா விலை இருக்கப் போகுது?
கதை நன்று காயத்ரி.
கண்ணீர் விடுவது தவறு.
அன்பிற்கு விலையில்லாத பொழுது
இந்தக் கண்ணீருக்கா விலை இருக்கப் போகுது?
கதை நன்று காயத்ரி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|