ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்குரியவனே..!!

+6
ரா.ரா3275
பூவன்
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
காயத்ரி வைத்தியநாதன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புக்குரியவனே..!!  Empty அன்புக்குரியவனே..!!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 11:46 am

நின் காதலில் கசிந்துருகி
கண்ணீர்க்கடலில்
நினைவுப்படகில் தத்தளிக்கும்
எனைக் கரம் பிடித்து
கரைசேர்க்க
அன்புக்குரியவனே அருகே வா...!!

பொய்யுரைக்கா உன் விழி கூர்ந்து
உள்ளிருக்கும் எனை உணர
அன்புக்குரியவனே அருகே வா...!!

பசி, தூக்கம் தவிர்த்து
பசலையில் வாடும் எனை
முத்தம் பரிமாறி
நின்மடிகிடத்தி உறங்கவைக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

மனதாள்பவனே
நான் உந்தன் சுவாசமா..
நீ கொள்ளும் பயணத்தின்
ஓட்டுநரா...
நடத்துனரா..
உடன் பயணிக்கும் பயணியா..
இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
நானறிய
அன்புக்குரியவனே அருகே வா..!!!

என் எண்ணத்தை சமைத்து
கவிதையாய்ப் பரிமாற
உண்டு மகிழ்ந்து
உன்னுள்ளம் உரைக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

யாவற்றிலும், யாதுமாய்
தோன்றுபவனே..
என்னவனாய் என்னில்லத்தில்
என்றென்றும்
நீயாகத் தோற்றமளிக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

இயற்கையின் இரகசியத்தை
இடைவிடாது பேசிமகிழ
அன்புக்குரியவனே அருகே வா...!!!

நம் காதல்பயணத்தில்
மழலையிசை கேட்டு மகிழ..
பிரபஞ்சம் போற்ற
நம் பிள்ளைகளை பேணிகாக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!!

இதயத்தில் இருப்பவனே
என் இறுதிப் பயணத்தின்
இறங்(க்)கும் தருவாயில்
சுவாசம் துறந்து
உன் இதயத்தில் கலக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

என் கரம்பிடித்து
காதல் உணர்த்திய நின் கரம்
என் சதைக்கு தீ மூட்டி
பாரினில் பஞ்சபூதமிருக்கும்வரை
நின் நெஞ்சத்தில் குடியிருக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!‎

--நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by Guest Sat Oct 13, 2012 11:51 am

முதல் கவி அருமை ... தொடர்ந்து எழுதுங்கள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by Guest Sat Oct 13, 2012 11:51 am

விருப்ப பொத்தனை பாவித்தேன் ..
avatar
Guest
Guest


Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by ஜாஹீதாபானு Sat Oct 13, 2012 11:54 am

மனதாள்பவனே
நான் உந்தன் சுவாசமா..
நீ கொள்ளும் பயணத்தின்
ஓட்டுநரா...
நடத்துனரா..
உடன் பயணிக்கும் பயணியா..
இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
நானறிய
அன்புக்குரியவனே அருகே வா..!!!

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு...

அருமையா இருக்கு கவிதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by யினியவன் Sat Oct 13, 2012 11:57 am

சிந்தைக்கு சிதை மூட்டியவனை
சிதைக்கு தீமூட்ட அழைக்கும்
உன்னதமே காதல்

அன்புக்குரியவன் சிந்தையில் சிதறாமல்
இருப்பது வரிகளில் வலிகளாக - நன்று...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by balakarthik Sat Oct 13, 2012 12:02 pm

அருமை வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புக்குரியவனே..!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:05 pm

கருத்திட்டு எம்மை ஊக்குவிக்கும் தோழமைகளுக்கு நன்றி..எம் எழுத்துக்களை வளப்படுத்த குறையிருப்பினும் தவறாமல் சுட்டிக்காட்டவும்..குறைகளையும், நிறைகளாய் ஏற்கும் பக்குவமுண்டு எமக்கு..நன்றி.


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:13 pm

யினியவன் wrote:சிந்தைக்கு சிதை மூட்டியவனை
சிதைக்கு தீமூட்ட அழைக்கும்
உன்னதமே காதல்

அன்புக்குரியவன் சிந்தையில் சிதறாமல்
இருப்பது வரிகளில் வலிகளாக - நன்று...
...எமது வரிகளும் நட்புகளின் சிந்தையில் என்றும் நினைவிருக்கும்படி முயற்சிக்கிறேன்,,,நன்றி தோழர்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by பூவன் Sat Oct 13, 2012 12:18 pm

காதலில் கசிந்து
விழிகள் மோதி
பசி தூக்கம் மறந்து
மனதாள்பவன்
மனதால பயணித்து
எண்ணங்களை சமைத்து
யாதுமாய் தோற்றமளித்து
மழலை இசை கேட்டு
இதயம் இறக்கும் வரை
இறுதி வரை பயணிக்கும்
உங்கள் அன்புக்குரியவர் அருகில் வர வாழ்த்துக்கள் ,.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 12:21 pm

பெண்ணின் பார்வையில் ஆணை நேசிக்கும் கவிதை அருமை...
வார்த்தைகளில் பலம் சேர்த்து மனதின் பலவீனத்தைச் சொல்வது சூப்பர்...
நன்று...வாழ்த்துகள்...


அன்புக்குரியவனே..!!  224747944

அன்புக்குரியவனே..!!  Rஅன்புக்குரியவனே..!!  Aஅன்புக்குரியவனே..!!  Emptyஅன்புக்குரியவனே..!!  Rஅன்புக்குரியவனே..!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்புக்குரியவனே..!!  Empty Re: அன்புக்குரியவனே..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum