Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
5 posters
Page 1 of 1
டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
அக்டோபர் 10,2012 சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது குறித்தும் , தடுப்பது குறித்தும் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலியாகி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் 8-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையி்ல் டெங்கு பாதிப்பினை தடுப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த டெங்கு காய்ச்சல் பற்றி கொஞ்சம் விரிவா பாக்கலாம்
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.
இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும். டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்
பரவும் விதம்
(Aedes aegypti) என்கிற கொசு கடிப்பதால் மட்டுமே இந்த நோய் பரவும்
இக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாக கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.
நோய் அறிகுறிகள் :
1. காய்ச்சல், திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் திடீரென அதிகரித்தல்.
2. சருமத்தில் வேனற்கட்டிகள், அல்லது வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவ தொடங்கும்.
3. தசை வலி.
4. மூட்டுகளில் வலி.
5. தலைவலி.
சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.
அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.
அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.
டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.
பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.
சிகிச்சை :
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை,இதெற்கென்று மருந்துகள் இல்லை (நாட்டு மருந்து ,பாட்டிவைத்தியம் பற்றி சரியாக தெரியாது ) ஓய்வும், திரவங்கள் வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படுவதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகள் ஆகியவை அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம்
தடுக்கும் முறைகள்
முற்றிலுமாக கொசுக்களை தடுப்பது மட்டுமே தீர்வாகும்
கொசுக்களை உடலுக்கு தீங்கில்லாமல் விரட்டும் முறை
படத்தில் காட்டியுள்ளபடி ரெபெல்லென்ட்டில் கற்பூரத்தை வைத்து பிளக் பாயின்ட்டில் மாட்ட வேண்டும். பின்பு switch on செய்தால் கொசுக்கள் ஓடி விடும். கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் அங்கு தங்காது. முயற்சி செய்து பாருங்கள்.
http://www.eegarai.net/t88629-topic
http://naharvu.blogspot.in/2012/06/blog-post_27.html
இந்த இரண்டு லிங்க் களிலும் சில எளிய வழிமுறைகள் உள்ளது
இனி டெங்கு பற்றிய சில உண்மைகள் சுருக்கமாக
1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவகிறது (பெண் கொசு மட்டுமே)
2.இந்த கொசு பகலில் கடிக்கும் பழக்கம் உடையது.
3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே முட்டையி டும்.
4.இவை தவிர கழிவு நீரிலோ சாக்கடையிலோ முட்டை இடாது
5.எனவே டெங்குவை ஒழிக்க கொசு மருந்து அடிப்பதோ, சாக்கடையை சுத்தம் செய்வதோ பலன் தராது
6.வீட்டை சுற்றிலும் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட் டில்கள், தேங்காய் ஓடுகள், உரல்,பழைய காலணிகள், பொருட்கள் எது வாயினும் அதில்தேங்கியுள்ள சிறதளவுநீரை முழுவது மாக வெளி யேற்றினால்மட்டடுமே டெங்குவை தடுக்க முடியும்.
7 .இந்த கொசு, மற்றகொசுக்களைபோல வெகு துரம் பறக்க முடியாது! உங் கள் வீட்டில் உற்பத்தியாகும்கொசு மட்டுமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
8. டெங்கு அனைவரையும் தாக்கினாலும் குழந்தைகளுக்கு மட்டு மே ஆபத்தானது.30% குழந்தைகள் மிக ஆபத்தை நெருங்கலாம்
9.மிக முக்கியமானது பாதிக்கபட்ட , காய்ச்சல் உள்ள குழந்தைகள், மீண்டும் அது போன்ற கொசுக்களால் கடிக்கப்படும்போது மட்டுமே ஆபத்தான நில மையை அடையும். இல்லயேல் அது சாதாரண காய்ச்சலாகவே முடியும்!
10.எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொசுவலையிட்டு பாதுகாத்தல் மிக மிக முக்கியம்
11 .கொசுக்கள் பரவாமல் தடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்
"வரும் முன் காப்போம்"
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
நல்ல பயன் உள்ள பதிவு அண்ணா ,
அறியாத செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி
அறியாத செய்திகளை அறிய தந்தமைக்கு நன்றி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
மிக மிக தேவையான பகிர்வு ராஜ் அருண்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
ஆண் பப்பாளி பூவை காய்ச்சி அந்த நீரை ஒரு நாளுக்கு மூன்று வேளை குடித்து வந்தால், இந்த டிங்கி (எங்கள் ஊரில் இப்படித்தான் சொல்லுவோம்) நல்ல பலன் கிடைக்கும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: டெங்கு காய்ச்சல்-ஒரு விரிவான பார்வை
மிகவும் பிரயோசனமான பதிவு. நன்றி
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த டெங்கு பெரும் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.
நாம் வாழும் இடங்களிலுள்ள சுற்றுப்புறச் சூழலை சரியாகப் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதே இதிலிருந்து காத்துக் கொள்வதற்கு சிறந்த வழி. குறிப்பாக நுளம்புகள் பெருகுமிடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழித்து விட வேண்டும்.
தற்போதிருக்கும் நடைமுறைக் காலகடத்தில் நேரம் என்பது மிகக் குறைவாகவே அனைவருக்கும் காணப்படுகின்றது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களிலாவது இதனைக் கவனித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செயற்படுவோமாக.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த டெங்கு பெரும் உயிரிழப்புக்களைத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.
நாம் வாழும் இடங்களிலுள்ள சுற்றுப்புறச் சூழலை சரியாகப் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதே இதிலிருந்து காத்துக் கொள்வதற்கு சிறந்த வழி. குறிப்பாக நுளம்புகள் பெருகுமிடங்களை அடையாளங்கண்டு அவற்றை அழித்து விட வேண்டும்.
தற்போதிருக்கும் நடைமுறைக் காலகடத்தில் நேரம் என்பது மிகக் குறைவாகவே அனைவருக்கும் காணப்படுகின்றது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களிலாவது இதனைக் கவனித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் செயற்படுவோமாக.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» டெங்கு காய்ச்சல்
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்
» சிறுநீரகக் கற்கள். விரிவான பார்வை
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» சென்னைக்கு பரவியது டெங்கு காய்ச்சல்
» 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல்
» சிறுநீரகக் கற்கள். விரிவான பார்வை
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» சென்னைக்கு பரவியது டெங்கு காய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|