Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்!
2 posters
Page 1 of 1
ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்!
“ஒரு சிற்பி செய்த சிலையைத் தெய்வச் சிலையாக மக்கள் வணங்குகிறார்கள். செய்த சிலையின் கண் திறப்பு என்பது சிற்பிக்குச் சவால் விடும் பணி. அந்தப் பணியைச் செய்யும் போது சிற்பியின் கண்களும் உளியும் எப்படிப்பட்ட உச்சநிலை விழிப்புணர்வுடன் செயல்படுகிறதோ, அந்த அளவு விழிப்புணர்வுடன் நான் இந்த அரசை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாதென்று மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகளைவிட இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று மக்கள் நினைக்கும் வகையில் நான் ஆட்சியை நடத்த முயல்கிறேன். எனவே நீங்கள் மிகவும் கட்டுப்பாடாக நேர்மையாக இருக்க வேண்டும். படாடோபமும், ஆடம்பரமும் கூடவே கூடாது’ என்று பொதுக் குழுவிலும் பலமுறை அறிக்கைகளிலும் சொல்லியிருக்கிறார் புரட்சித் தலைவி.
“அதையெல்லாம் மறந்துவிட்டு, தொண்டர்களை உசுப்பிவிட்டு ஆர்ப்பாட்டமாகப் பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், “கேட்டை’யில் பிறந்து, நாளை “கோட்டையாளப் போகிறவரே’ என்று ஃப்ளக்ஸ் பேனர் வைத்தால் பதவி பறிபோகத்தான் செய்யும்!’ என்று சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா பற்றிக் குறிப்பிட்டார் சென்னை புறநகர்ப் பகுதி அ.இ.அ.தி.மு.க. பிரமுகர்.
அம்மாவுக்கும், கட்சிக்கும் ஒரு துளியளவுகூட துரோகம் நினைக்காமல், முழுவிசுவாசியாக இருந்த ஜெயகுமார், அம்மாவின் கருணைப் பார்வையிலிருந்து விலக்கப்பட்டது கட்சிக்குள் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது.
பொதுவாக மீடியாவில் மேற்சொன்ன காரணம் அலசப்பட்டாலும், ஜெயக்குமார் பதவி பறிப்புக்கு வேறு பல காரணங்களும் உலா வருகின்றன. சபாநாயகர் பொறுப்பில் இருப்பதால் பல அமைச்சர்களிடம் “நாட்டாமை’ செய்தே அவர்களது இலாக்காக்களில் காரியங்களைச் செய்து கொண்டார் என்று புலம்புகின்றனர் சிலர்.
சபாநாயகராக இருந்ததால் கட்சி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட முடியாது. எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமது ஆதரவாளர்கள் மூலம், தனி ஆவர்த்தனம் நடத்த காரணமாகியிருந்தாராம். தமது பிறந்த நாளை முன்னிட்டு அம்மாவின் ஆசி வாங்க நேரம் கேட்க, நேரம் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டார் ஜெயக்குமார். ஏதோ புகைந்து கொண்டிருப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அதைப் பற்றி எரியவிடாமல் தமது ஆதரவாளர்களை அடக்கி வாசிக்க வைத்திருந்தால் ஜெயக்குமார் தலை தப்பியிருக்கும் என்கிறார்கள்.
ஆனால், அவரது விதி வேறு வகையில் வேலை செய்துவிட்டது. இருந்தும், இன்னமும் ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள், “நல்ல திறமையான அமைச்சர்கள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார் அம்மா. எனவே அண்ணன் அமைச்சர் ஆனாலும் ஆகக்கூடும்’ என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் எப்போது அதிர்ஷ்டக் காற்று வீசும்; எப்போது சுனாமி சூறையாடும் என்று யாருக்கும் தெரியாதே. ஜெயக்குமாரைத் தூக்கியடித்த சுனாமியில் இரண்டு பிரமுகர்கள் கட்சிப் பதவியை இழந்தனர். பன்னிரண்டு பிரமுகர்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
“நிலையாமை’ தத்துவத்தை ஆளும் கட்சிப் பிரமுகர்களைவிட வேறு யாரும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. “எப்போது நம் தலையில் கத்தி விழும்’ என்று அமைச்சர்களுக்குத் தெரியாததால், அவர்களது செயல்திறமை பாதிக்கப்படுகிறது. மேலும் பதவி பறிக்கப்படுமோ என்ற டென்ஷனில் குறுகிய காலத்துக்குள் வளத்தைச் சேர்க்க முற்படும்போது விஷயங்கள் அம்பலமாகின்றன. கடைசியில் அதுவே பதவியை விட்டுத் தூக்குவதற்குக் காரணமாய் அமைந்துவிடுகிறது.
ஓர் அமைச்சரைத் தூக்கும்போது எதற்காக நீக்குகிறார் முதல்வர் என்ற காரணம் வெளியில் சொல்லப்படுவதில்லை. அதே அமைச்சர் மீண்டும் சேர்க்கப்படுகிறார். அப்போது செய்த “தவறு’ சரியாக்கப்பட்டு விட்டதா என்பதும் மக்களுக்குத் தெரியாது. அமைச்சர் சிவபதி ஏன் நீக்கப்பட்டார்; பின்பு மீண்டும் ஏன் சேர்க்கப்பட்டார் என்று யாருக்கும் தெரியாது.
“ஒருவரை அமைச்சராக்கும் போது அவர் திறமையாளர், பண்பாளர், அனுபவஸ்தர் என்றெல்லாம் எழுதி அவரது சாதகமான அம்சங்களைப் பட்டியலிடுகிறார்கள். புரட்சித் தலைவி அவரை நீக்கியபின் அவர் செய்த தவறுகள், கட்சி விரோத நடவடிக்கைகளும் பட்டியலிடப்படுகின்றன. மீடியாதான் இரண்டையும் செய்கிறது! நீக்கத்துக்குப் பல காரணங்கள் சொல்லப் படுகிற போது, அவற்றில் ஏதாவது ஒரு காரணத்துக்காக அவரை நீக்கியிருக்கலாம் அல்லவா புரட்சித் தலைவி?’ என்று கேட்கிறார் ஒரு மூத்த அ.தி.மு.க. பிரமுகர்.
ஜெயக்குமார் போன்ற சீனியர்களே அம்மாவில் அறிவிப்புகளை புறக்கணித்து செயல்படுவது சரிதானா? தவிர இப்படித் தலையில் கத்தி தொங்குவதால் செயல்பாடு பாதிக்கப்படுகிறது என்பதும் சரியல்ல. உதாரணத்துக்கு நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செந்தில்பாலாஜி போன்றவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களே. மேலும் பொதுப்பணித்துறை லஞ்ச லாவண்யத்துக்கு பெயர் பெற்றது. அந்ததுறையை புகாரின்றி கையாள்கிறாரே ராமலிங்கம். ஓர் அமைச்சர் செயல்படுகிறாரா... இல்லையா என்பதை கணிக்கக்கூடியவர் முதல்வர் மட்டுமே என்று நம்மிடம் சொன்னார் அவர்.
சிவபதியை போல் செங்கோட்டையன், இசக்கி,உதயகுமார், வேலுமணி போன்றோரும், பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் கைவசமாகும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அமைச்சர்கள் சந்திக்கும் பதற்றம் சீனியர் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் அதிகாரிகளிடத்திலும் இருக்கிறது. டம்மி போஸ்டிங் கிடைக்கும் அதிகாரிகள் பசையான போஸ்டிங் கிடைக்க பல நிழல் வேலைகளில் இறங்குகிறார்கள்.
இச்சூழலில் மற்றொரு அதிரடியாக சி.வி.சண்முகமும் நீக்கப்பட்டிருக்கிறார். நல்ல நிர்வாகியா இருந்தும் அவர் நீக்கப்பட்டது ஏன்? என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் கேட்டபோது சி.வி.சண்முகத்தின் சகோதரர் அமைச்சர் பேரை சொல்லி ரொம்பவே விளையாடி விட்டார் என்கிறார்கள்.
துணை சபாநாயகர் தனபால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தாழ்த்தப்பட்ட சமூகம் குஷியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை சபாநாயகராக இதுவரை 18 பேர் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட தலித் இல்லை.
செங்கோட்டையன், ஜெயக்குமார், விவகாரங்கள் காரணமாக கட்சி பிரச்னைகளில் சசிகலாவின் தலையீடு மீண்டும் தொடங்கியிருக்கிறது. நிச்சயமாக கிடையாது. சசிகலா தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிக்கிறார். அவரது வலது கண் பார்வை முழுக்க பாதிக்கப்பட்டிருக்கிறது. கோயில்களை தவிர வேறெங்கும் செல்வதில்லை. அறைக்குள்ளே முடங்கியிருக்கிறார் என்கிறது போயஸ் தோட்டத் தகவல்.
முதல்வரின் மகா நட்சத்திரம், சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் தினங்களில் (நவக்கிரக நடமாட்டப்படி சந்திராஷ்டமம் என்பது கெட்ட பலன்கள் நடக்கும் நாட்கள்), அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களிடையே யார் தலை உருளபோகிறதே, யார் தலை உயரப்போகிறதோ என்ற பதற்றம் இருக்கிறது.
இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் போகனை தவிர மேலும் பல புதுமுகங்கள் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.
-ப்ரியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ. அதிரடி - உருளும் தலைகள்; மிரளும் பிரமுகர்கள்!
ஒவ்வெரு நாள் காலையிலும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்தித்தாளைப் பார்த்து தான் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது இன்றைக்கு நமக்கு எந்த துறை என்று இன்னும் சில பேர் நமது பெயர் (நீக்கம்)வந்துவிடக்கூடாது என்றும் சிலர் வராதா(சேர்ப்பு) என்றும் கணக்கிட்டு கொண்டிருக்கின்றனர்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோடி - மிரளும் இலங்கை... பதற்றத்தில் பாகிஸ்தான்..!
» தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள்
» உருளும் டயர்கள் உருவான கதை _
» மிரளும் அம்மாக்கள்!
» மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ!
» தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள்
» உருளும் டயர்கள் உருவான கதை _
» மிரளும் அம்மாக்கள்!
» மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|