புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_lcapபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_voting_barபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:59 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.] நூலாசிரியர்

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. இவருக்கிருந்த தமிழ் இலக்கியத் திறனும் பௌத்த சமயத் தத்துவங்களில் கொண்டிருந்த புலமையும் ஈடுபாடும் இந்நூலிலிருந்து புலனாகின்றன. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:25 am

சக்கரவாளக் கோட்டம் உணர்த்தும் உண்மை

மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் தோழி சுதமதியிடம் சக்கரவாளக் கோட்டத்தின் தன்மையை விளக்கும்போது நிலையாமைக் கோட்பாடு அழுத்தம் பெறுகிறது.

சுடுகாட்டில் தவநெறியில் செல்லும் துறவிகள், பெருஞ்செல்வர், அண்மையில் மகவு பெற்ற இளமகளிர், அறம் அறியா இளம் சிறுவர், முதியோர், இளையோர் ஆகியோரை வேறுபாடின்றிக் கொடுந்தொழிலை உடைய எமன் கொன்று குவிப்பதைக் கண்டும் நிலையாமையை உணரவில்லை மக்கள். இறப்பு உண்மை என்று தெரிந்த பின்னரும் அறநெறியில் செல்லாதவர்களை எண்ணி அத்தெய்வம் வருந்துகிறது.

யாக்கை நிலையாமை

மாதவியின் தாய் சித்ராபதியின் தூண்டுதலால் உதயகுமரன் காமம் மீதூரப் பெற்று மணிமேகலையைக் காண அம்பலம் செல்கின்றான். மணிமேகலையைக் கண்டு, ‘நங்கையே! நீ நற்றவம் மேற்கொண்டதற்குரிய காரணம் தான் யாதோ?’ என்று துணிந்து கேட்கிறான். அதற்கு அவள் பிறத்தலும் முதுமை அடைதலும் நோயுற்று வருந்துதலும் பின் இறத்தலும் உடையது இவ்வுடல். மேலும் இது துன்பங்களுக்கு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் நிலையாமையை மணிமேகலை உதயகுமாரனுக்கு உணர்த்தித் தன்னைப் பின்தொடர வேண்டாமென அறிவுரை கூறுகிறாள். அத்துடன் யாக்கையின் இத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நல்ல தவத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறாள். அதைக் கீழ்வரும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்

(உதயகுமரன் அம்பலம் புக்க காதை:136-139)

(இடும்பை = துன்பம், பிணி = நோய், கொள்கலம் = இருப்பிடம்)

மேலும் மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து, உதயகுமரனுக்கு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றையும் அறிவுறுத்துகிறாள். நிலையாமை மிக விரிவாகப் பேசப்படுகின்ற இடங்களில் இது ஒன்றாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:26 am

நிலைத்ததும் நிலையாததும்

நிலையாமை பற்றிப் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழி விளக்கிச் செல்லும் சாத்தனார் நிலைத்து நிற்பது எதுவென்றும் கூறுகிறார்.

இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணையாவது

(சிறைசெய் காதை: 135-138)

(யாக்கை = உடம்பு, வான்பெருஞ்செல்வம் = சிறந்த பொருள், புத்தேள் உலகம் = தேவர் உலகம், விழுத்துணை = சிறந்த துணை)

நிலையாமைக் கோட்பாட்டை மிகவும் வற்புறுத்துவதாலேயே வாழ்க்கையை மறுத்துரைக்கிறது பௌத்த சமயம் என எண்ண இயலாது. அதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு அறங்களை மேற்கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஏனென்றால் அவரவர் செய்த வினைக்கு ஏற்பப் பிறவிகள் தொடரும். அதனைத் தவிர்க்க வேண்டுமாயின் நிலையாமையை மனத்தில் பதித்து, அறத்தை இடையறாது மேற்கொள்ளவேண்டும்.

அறநெறிக் கோட்பாடு

நான்கு வாய்மை

மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்தான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற மாதவி துயர் தாங்காது வருந்துகிறாள். ஆடலையும் பாடலையும் துறக்கிறாள். பௌத்தத் துறவியாகிய அறவண அடிகளின் பாதங்களில் வீழ்ந்து தனது காதலனாகிய கோவலன் உற்ற கடுந்துயர் கூறி வருந்துகிறாள். வருந்திய மாதவிக்கு அறவண அடிகள் அறவுரை கூறுகிறார். அப்போது மாதவிக்கு அவர் நான்கு வாய்மைகளையும் விளக்குகிறார். அவை

துக்கம் - துன்பம்
துக்க காரணம் - துன்பத்திற்கான காரணம்
துக்க நிவாரணம் - துன்பத்தைப் போக்கல்
துக்க நிவாரண மார்க்கம் - துன்பத்தைப் போக்கும் வழி

இதனையே
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக

(ஊர்அலர் உரைத்த காதை:64-67)

என விளக்குகிறார். அதாவது பிறந்தவர்கள் அடைவது பெருந்துன்பம்; பிறப்பை நீக்கியவர்கள் அடைவது மிகப்பேரின்பம். பற்றினால் வருவது பெருந்துன்பம். பற்றை நீக்குவதால் அடைவது பேரின்பம்.

நான்கு வாய்மைகளை விளக்கியபின் அறவண அடிகள் ஐந்து சீலம் பற்றிக் கூறுகிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:27 am

ஐந்து சீலம்

பௌத்த சமய அறநெறிக் கோட்பாடுகளில் அடிப்படையானவை ஐந்து சீலக்கோட்பாடு. அவை:

கொல்லாமை
கள்ளாமை - திருடாமை
பிறன்மனை விரும்பாமை
பொய்யாமை
கள்ளுண்ணாமை


ஐந்து சீலங்களில் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகிய அறங்கள் ஆங்காங்கே வலியுறுத்திப் பேசப்படுகின்றன. சான்றாக ஒரு சில இடங்களைப் பார்க்கலாம்.

கொல்லாமையும் கருணையும்

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு விரிவாகும்போது கருணையாகிறது. அன்பின் விரிவே கருணையாகும். தொடர்புடையவரிடம் அதாவது உறவினரிடமும் நண்பர்களிடமும் காட்டுவது அன்பு. அப்படியின்றித் தொடர்பு இல்லாதவரிடமும் அதாவது அனைத்து உயிர்களிடமும் காட்டப்படுவது கருணையாகும். யார் எங்குத் துன்பமுற்றாலும் அதைக் கேள்விப்பட்டபோது அவர்களுக்காக வருந்துவது கருணையின் அடையாளமாகும். இத்தகையோர் கொல்லாமையைப் பெரிதும் போற்றுவார்கள். இத்தகைய கோட்பாட்டைத் தன் உயிர்க் கொள்கையாகக் கொண்டவர்தான் புத்தர். உயிர்கள் அனைத்திடமும் கருணை காட்ட வேண்டுமென்று அறவுரை கூறியதோடு வாழ்ந்தும் காட்டினார். எந்த உயிர்க்கும் தீங்கு நேர்வதை அவரால் பொறுக்க முடிவதில்லை. புத்தரின் இந்தக் கோட்பாட்டை, சாத்தனார், ஆபுத்திரன் வாயிலாக விளக்குகிறார்.

ஆபுத்திரனும் ஆவும்

காசியில் வேதம் ஓதும் அந்தணனாகிய அபஞ்சிகனின் மனைவி சாலி. அவள் நெறி தவறி நடந்ததால் பெற்ற பிள்ளையை இரவு நேரத்தில் யாரும் அறியாத போது ஒரு தோட்டத்தில் விட்டு விட்டுச் செல்கிறாள். பசியால் குழந்தை அழுகிறது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பசு ஒன்று ஏழு நாள் வரை அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்த்தது. அதனால் அக்குழந்தை ஆபுத்திரன் என வழங்கப்பட்டான். இளம்பூதி என்னும் அந்தணன் மனைவியோடு அவ்வழியே வந்தபோது அக்குழந்தையைக் கண்டான். அக்குழந்தையைத் தன் மகன் என எடுத்துச் சென்று வளர்த்தான். அந்தணர்க்குரிய வேதங்களையெல்லாம் நன்கு கற்பித்தான்.

ஆபுத்திரனின் கருணை

ஒருநாள் அந்தணர் ஒருவர் வீட்டில் வேள்வியில் பலிகொடுக்கப் பசு ஒன்றைக் கட்டி வைத்திருந்ததை ஆபுத்திரன் கண்டான். அஞ்சி நடுங்கிய நிலையில் அப்பசுவின் துயரினைக் கண்டு பெருந்துயரம் கொண்டான். இரவில் யாரும் அறியாதபோது அப்பசுவை விடுவித்து அவ்வூரை விட்டு நீங்கினான். பசுவைத் தேடிய அந்தணர் ஆபுத்திரன் செயலைக் கண்டு இழிவான சொற்களால் வசைபாடி அடித்துத் துன்புறுத்தினார். அப்போது கோபங்கொண்ட ஆபுத்திரன் அவர்களை வெறுத்துப்பேசி அவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறான். ‘அந்தணர்களே, பிற உயிர் வருந்துவதற்குரிய எதையும் செய்யாதீர். நான் கூறுவதைக் கேளுங்கள். மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல்லை மேய்ந்து இந்தப் பெரிய உலகத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் தன் இனிய பாலைத் தரும் இப்பசுவிடம் உமக்கு உண்டான சினம்தான் யாது? உரைப்பீராக’ என்றான்.

எந்தக் காரணத்திற்காகவும் உயிர்களைப் பலிகொடுக்கக்கூடாது என்பதில் புத்தர் உறுதி பூண்டிருந்தார்; அவருடைய அந்தக் கோட்பாடே இங்கு ஆபுத்திரன் வாயிலாக விளக்கப்படுகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:28 am

கள் உண்ணாமையும் ஊன் உண்ணாமையும்

ஆதிரையின் கணவனான சாதுவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து செல்லும் போது கப்பல் உடைய, நாகர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். தான் யார் என்பதையும் தனக்கு நேர்ந்த துயரத்தையும் அவர்கள் மொழியிலேயே விளக்குகிறான் நாகர் தலைவனுக்கு. அதனால் மகிழ்ந்த நாகர் தலைவன், துயரம் அடைந்த இவன் நம் இரக்கத்திற்கு உகந்தவன் எனக்கூறி, இந்த நம்பிக்கு இளமை பொருந்திய ஒரு பெண்ணைக் கொடுத்து, விருப்பம் தரும் கள்ளையும் புலாலையும் வேண்டுமளவு கொடுங்கள் என்று தன் மக்களுக்கு உத்தரவிட்டான்.

சாதுவன் அறிவுரை

நாகர் தலைவன் கூறியதைக் கேட்ட சாதுவன் அதிர்ச்சியுறுகிறான், ‘வெவ்வுரை கேட்டேன்; வேண்டேன்’ என்று கூறுகிறான். தன் உத்தரவிற்கு மதிப்பளிக்காமல் மறுத்துரைத்த சாதுவன் மேல் கோபங்கொண்ட நாகர் தலைவன், ‘பெண்டிரும் உணவும் இல்லையானால் மக்களுக்கு இவ்வுலகத்தில் அடையக்கூடிய பலன் வேறேதும் உண்டோ? உண்டெனில் நாங்களும் அறியுமாறு சொல்வாயாக’ என்று சினத்துடன் அதட்டினான்.

சாதுவன் நாகர் தலைவனிடம்,

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

(ஆதிரை பிச்சையிட்ட காதை: 84-90)

எனக் கூறுகிறான்.

இதன் பொருள்:

அறிவை மயக்கும் கள்ளையும் நிலையற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தெளிந்த அறிவினை உடையோர் விலக்கினர். பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போன்றதாகும். நல்லறங்களைச் செய்கின்றவர்கள் அடைவதற்கு அரிய இன்பம் கொண்ட மேலுலகங்களை அடைதலும், தீமைகளைச் செய்கின்றவர்கள் தாங்கற்கரிய துன்பத்தைத் தரும் நரகங்களை அடைதலும் உண்மை என உணர்தலால் மனவலிமை மிக்க அறிஞர்கள் அவற்றை நீக்கினர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:28 am

காமத்தை ஒழித்தல்

பௌத்த சமயத்தின் அறங்களில் முக்கியமானது காமத்தை ஒழித்தல். காமம் பல குற்றங்களை இழைக்கத் தூண்டும். தத்துவம் உணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் விலக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஐந்து உள்ளன. அவற்றுள் காமமாகிய குற்றத்தைக் களைந்தவர் எவரோ, அவரே மற்றக் குற்றங்களையும் களைந்தவர் ஆவர் எனக் கருதி, தவநெறி மேற்கொள்வோர் அதனை அறவே விலக்கினர். காமத்தினின்றும் நீங்காதவர் பொறுக்கவியலாத நரகத்தில் வீழ்ந்து துன்புறுவர் என்று காமத்தின் தன்மை உணர்த்தப்படுகிறது.

விழுத்துணை அறம்

விழுத்துணை அறமாகப் போற்றப்படுவது பசிப்பிணி போக்கல். எல்லா அறங்களிலும் முதன்மையான அறமாக பசிப்பிணிப் போக்கல் கருதப்படுகிறது. ஏனென்றால் பசியின் கொடுமை எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் கொடுமையானது. அதனால் முதலில் பசியின் கொடுமை விளக்கப்படுகிறது.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டு விட்டுச்சென்றதும் மணிமேகலை மெல்ல உலாவி வருகிறாள். அப்போது தீவதிலகை அங்குத் தோன்றுகிறாள். தீவதிலகை இந்திரன் ஏவலால் புத்தர் பாதபீடிகையைப் பாதுகாப்பவள். தீவுக்குத் திலகம் போன்றவள். இந்திரன் ஏவலால் மணிபல்லவத் தீவில் தங்கியிருப்பவள்.

மணிமேகலை புத்த பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பை அறிந்ததைக் கேட்டு, கோமுகிப் பொய்கையில் வைகாசிப் பௌர்ணமியன்று வெளியில் வரும் அமுதசுரபியைப் பெறும் தகுதியுடையவள் இவளே, எனக்கருதி அமுதசுரபியின் தன்மையை விளக்குகிறாள். மணிமேகலை புத்த பீடிகையைத் தொழுது கோமுகிப் பொய்கையை வலம் வந்து நின்றபோது, அமுதசுரபி மணிமேகலையின் கையை அடைந்தது. அப்பொழுது தீவதிலகை உயிர்களுக்கு உண்டாகும் பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் உரைத்து, ‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்’ என்றாள்.

பசியின் கொடுமை

பசிப்பிணி, தன்னால் பற்றப்பட்டவருடைய உயர்குடிப்பிறப்பை அழிக்கும். சிறப்பைக் கெடுக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தையும் நீக்கும். நாணமாகிய அணியையும் போக்கும். மேன்மை பொருந்திய அழகைச் சிதைக்கும். மனைவியரோடு பிறர் கடைவாயிலில் பிச்சை எடுக்க நிறுத்தும். பசிப்பிணி அத்தகைய கொடுமை வாய்ந்தது. (பாத்திரம் பெற்ற காதை: 76-81)

பசியின் கொடுமையை விளக்க ஒரு சான்றையும் கூறுகிறாள் தீவதிலகை. புல்லும் மரமும் கரியுமாறு எங்கும் அழல்போலும் வெம்மை மிகுந்தது. அதனால் உயிர்கள் பசியால் அழியுமாறு மழைவளம் குன்றியது. அரச கடமையிலிருந்து நீங்கிய அருமறை ஓதும் அந்தணன் விசுவாமித்திரன். தவமுனியாகிய அவனும் பசியால் எங்கும் திரிய நேர்ந்தது. தன் கொடும்பசியைப் போக்கிக் கொள்ள எதையும் காணாது தனக்குச் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனை உண்டான் என்றால் பசியின் கொடுமையை என்னென்பது. (பாத்திரம் பெற்றகாதை:82-91) அத்தகைய பசியின் கொடுமையைப் போக்க உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேயாவர்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தழைக்கவே அறங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. மண்ணில் நல்லவண்ணம் வாழ நெறிகளைக் காட்டுகின்றன. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:29 am

முதன்மையான அறம்

மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியந்தான். ஆயினும் அது கூறும் சமயக் கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளும் அப்படித்தான். ஆயினும் மணிமேகலை பசியின் கொடுமையை விளக்கிப் பசிப்பிணி தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாகப் பேசுவது மிகச் சிறந்த கோட்பாடாகும். இதைப் போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப் பேசவில்லை. எல்லாச் சமயங்களும் அன்னதானத்தைப் பெரிதும் போற்றுகின்றன. தானத்தில் அன்னதானமே சிறந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்க மாட்டார்கள். இருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். நற்செயல்கள் பலவற்றை அடுக்கிக் கூறும் பாரதி

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து இப்பாரை

உயர்த்திட வேண்டும் (முரசு: 23)

என்று பசியைப் போக்குவதற்கே முதலிடம் தருகிறார்.

பசித்தவனுக்கு உணவுதான் கடவுள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உயிர் வளர்க்க ஊன் வளர்க்க வேண்டும். அந்த ஊன் வளர உணவு வேண்டும். இல்லையேல் பசிக்கொடுமை தாளாமல் சமூக விரோதிகளாக மாறுவதற்கான சூழல்தான் உருவாகும். மனிதர்க்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் உணவே முதல் தேவையாகிறது. உறுபசி இல்லாத நாடே நல்லநாடு என்கிறார் வள்ளுவப் பேராசான். பாரகம் செயல்பட, பசிப்பிணி முற்றுமாக அகலவேண்டும். அப்போதுதான் சிந்திக்க முடியும். செயலாற்றவும் முடியும். இல்லையேல் மனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாகவே அமைந்துவிடும்.

சமண சமயம் நான்கு வகை தானங்களை வலியுறுத்துகிறது. அவற்றுள் முதன்மையானது அன்னதானமே. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் (இராமலிங்கம் அடிகள்) அறச்சாலைகள் அமைத்து ஏழை எளியவர்க்கு உணவிடச் செய்தமையை இங்கு நினைவு கூரலாம். எனவேதான் சாத்தனார் மணிமேகலை கரங்களில் அமுதசுரபி என்ற கற்பனைப் பாத்திரத்தைத் தந்து பசிப்பிணிப் போக்கும் அறச்செயலைச் செய்ததாகக் காப்பியம் படைக்கிறார். எத்தனை இனிய கற்பனை! இப்போது அப்படியொரு பாத்திரம் கிடைத்தால்.... என்று நீங்களும் என்னைப்போல் நினைக்கிறீர்கள் தானே? ஒவ்வொரு மனமும் அமுதசுரபிதான். அதில் அன்பு சுரக்கப் பெற்றால் அன்னம் மட்டுமா, அமிர்தத்தையே அனைவருக்கும் தரலாமல்லவா? எல்லாமே சாத்தியம்தான்!

பொறுக்கும் ஆற்றலுடையோர்க்கு அளிப்பவர்கள் அறத்தை விலை கூறி விற்பவராவர். ஏழைகளின் பசியைப் போக்குவோரிடத்தில்தான் மேலான அறநெறி வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த உலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தவராவர். அந்த மணிமேகலை வரிகள் இதோ,

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

(பாத்திரம் பெற்ற காதை:92:96)

மக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலையே சிறந்த அறம் என்கிறார்.

மக்கள் தேவர் என இரு சாரார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்அறம் சாற்றினர்

(அறவணர்த் தொழுத காதை: 116-119)

இன்றும் மக்களிடையே அன்னதானம் (ஏழைகளுக்கு உணவிடுவது) பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:32 am

குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

தொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம், நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படிக் கிடைத்த பாடல்கள் பத்தொன்பது என்று கூறுகிறார்கள். புறத்திரட்டிலும் (புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுக்கப்பட்ட தொகைநூல்) குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நீலகேசிக்கு, சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் காணப்படுகின்றன.

குண்டலகேசியின் துறவும் சமயப் பணிவும்

தன்னைக் கொல்ல நினைத்த கணவனைக் கொன்றபின் குண்டலகேசி வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு உஞ்சைமாநகர் சென்று அருகச்சந்திரன் என்னும் பௌத்தத் துறவியிடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை - அவரின் அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டினாள் குண்டலகேசி.

புலனடக்கமே மெய்யான தவம்.

மனத்தூய்மை உடையவர்க்கே இன்பமும் புகழும் உரியன.

ஆசையினை அனுபவித்து அழிக்கலாம் என்பது எரியும் தீயை நெய் கொண்டு அணைக்கலாம் என்பதை ஒக்கும்.

நாள் என்று சொல்லப்படுகின்ற வாளின் வாயில் மக்கள் தலை வைத்துள்ளனர்.

எல்லாம் ஊழால் அமைவன.

அதனால் இழப்பின்போது வருந்துதல் வேண்டாம்.

ஆக்கத்தின்போது மகிழ்தலும் வேண்டாம்.

என்பன போன்ற அறங்களைக் குண்டலகேசி திறம்பட எடுத்துரைக்கிறது.

புத்தரின் பெருமை

குண்டலகேசியின் கடவுள் வாழ்த்துப் புத்தரின் பெருமையைக் கீழ்வருமாறு விளக்குகிறது.

பிறர் மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவதற்கு முன்பே,
அம்மெய்யுணர்வைத் தாம் பெற்றுத் துறவை மேற்கொண்டவர்.

தாம் வீடுபேறு அடையும்வரை பிற உயிர்க்கு நன்மைதரும் வழிகளை ஆராய்ந்து உணர்ந்தவர்.

தாம் உணர்ந்த நல்லறங்களை மக்களுக்கு அறிவுறுத்தியவர்.

எதையும் தாம் விரும்பாது பிறருடைய நன்மையின் பொருட்டே முயற்சிகளை மேற்கொண்டவர்.

இத்தகைய அருங்குணங்களை உடைய புத்தரே எம்இறைவன். அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து வணங்குவோம் என்றுரைக்கும் பாடல் இதோ.

முன்தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களே


நிலையாமைக் கோட்பாடு

இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, கணந்தோறும் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லை. இதற்கு என்ன காரணம்? அறியாமைதானே? இப்படிக் கூறுவதின் வாயிலாகக் கூற்றுவன் வருவதற்கு முன் அறச்செயல்களைச் செய்து நல்வினையைப் பெருக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறது குண்டலகேசி. அந்தப் பாடலைப் பார்ப்போமா?

பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பு பின்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால்
நமக்கு நாம் அழாதது என்னே!


குண்டலகேசியின் சிறப்பு

குண்டலகேசி முழுவதும் கிடைக்கவில்லை யென்பது முன்பு கூறியது போல் இழப்புதான். ஆயினும் நீலகேசி என்ற சமணக் காப்பியம் தோன்றி தர்க்க நூல்களின் வரிசையில் சிறப்புப் பெறக் காரணமாக அமைந்தது குண்டலகேசி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தோன்றிய முதல் தர்க்கநூல் என்ற சிறப்பிற்கும் உரியது குண்டலகேசி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:36 am

வீரசோழியம்

புத்தமித்திரர் என்னும்  பௌத்த சமயத்தவரால் எழுதப்பட்ட நூல் வீரசோழியம். இஃது ஓர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தை ஓரளவிற்குத் தழுவித் தமிழின் ஐந்திலக்கணங்களையும் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) சுருக்கமாகக் கூறுவது.

புத்தமித்திரரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இதற்கு வீரசோழியக் காரிகை என்ற பெயரும் உண்டு.

நூலின் அமைப்பு

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஒவ்வொன்றுக்கும் ஓர் அதிகாரம் என்ற வகையில் ஐந்து அதிகாரங்கள் கொண்டது. அதிகாரங்கள் படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. நூலின் துவக்கத்தில் ஒரு பாயிரம் உள்ளது.

நூலின் சிறப்பு

வீரசோழியம் இப்போது வழக்கொழிந்து போனாலும் அது தோன்றிய காலகட்டத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக்குமரக் கோட்டத்தே அரங்கேற்றும் காலத்தில், அப்புராணத்தின்    முதற்செய்யுளில்    வருகிற திகடசக்கரம் (திகழ்+தசக்கரம்) என்னும் சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டது என்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒத்துக் கொண்டனர் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இதன் காலம் 11-ஆம் நூற்றாண்டு என்பர்.

வீரசோழியம் என்னும் இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்கு ஓரளவு உதவி புரிகின்றன.

 




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:42 am

பிற நூல்கள்

பௌத்த சமயத்தவர் மிகுந்த செல்வாக்கோடு தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். சமயத்தைப் பரப்பப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். ஆயினும் பல நூல்களின் பெயர்களைத்தாம் அறிய முடிகிறதே தவிர நூல் முழுவதையும் கண்டறிய முடியவில்லை. காலத்தால் அழிந்தன சில; பாதுகாப்பார் இல்லாமல் அழிந்தன சில. எப்படியாயினும் அது தமிழுக்குப் பேரிழப்பு என்பதில் மறுகருத்து இருக்க இயலாது.

சித்தாந்தத் தொகை

சித்தாந்தத் தொகை இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனக் கூறுவர். இயற்றிய ஆசிரியர் பெயரோ காலமோ தெரியவில்லை.

‘மருள்தரு மனம் வாய் மெய்யிற் கொலை முதல்
வினை பத்தாமே’


என்பது சித்தாந்தத்தொகை என்பதாக, நீலகேசி புத்தவாதச் சருக்கத்தில் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி வேறுசெய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

திருப்பதிகம்

இதுவும் தமிழுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் ஆசிரியர் அவருடைய காலம் ஏதும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் செய்யுள் உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது திருப்பதிகம் எனக் கொள்க என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

எண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டால் மிகவுழன்று
எண்ணிகந்த காலங்கள் இருந்தீர ஒருங்குணர்ந்தும்
எண்ணிகந்த தானமும் சீலமும் இவையாக்கி
எண்ணிகந்த குணத்தினான் எம்பெருமான் அல்லனோ


விம்பசாரன் கதை

நீலகேசி உரையினால் (130-வது பாட்டு உரை) இப்படியொரு நூல் இருந்ததை அறிகிறோம். நீலகேசி உரையாசிரியர் விம்பசாரக் கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, இது விம்பசாரக் கதை என்னும் காவியம், பௌத்த சமய நூல். அதன்கண் கண்டு கொள்க என எழுதியுள்ளார். ஞானப்பிரகாசரும் நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய நான்கடிகளை மேற்கோள்காட்டி விம்பசாரன் கதையைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி வேறெந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.

இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும் அவருக்குப் பலவிதத்திலும் தொண்டு செய்து அவரை ஆதரித்து வந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றைக் கூறுவது இக்காப்பியம் என்கிறார் மயிலை சீனிவேங்கடசாமி. (பௌத்தமும் தமிழும் : 115)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:44 am

தொகுப்புரை

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மை யானவை ஏதோ ஒரு சமயத்தோடு பின்னிப் பிணைந்திருப்பனவே எனலாம். சங்க காலத்து இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் காட்டுவன. அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் சமயச் சார்புடையனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் சங்கத்திற்குப் பின்வந்த பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கும்போது சமயங்களின் சுவடுகள் ஆழமாகப் பதிந்துள்ளமையை அறிந்து கொள்ளலாம். தம் கோட்பாடுகளைப் பரப்ப முனைந்து நின்ற சமயங்கள் அனைத்தும் தமிழையும் மேம்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமயம் வளர்ந்தபோது தமிழும் வளர்ந்தது. தமிழ் மேம்பட்டபோது சமயங்களும் மேம்பட்டன. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகித் தமிழுக்கு வளம் சேர்த்தன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.

பௌத்த சமயம் தன் சமயக் கோட்பாடுகளைப் பரப்பிய போது காப்பியங்களும் பிறநூல்களும் தோன்றின. பௌத்த சமயத்தின் சாரத்தையே வடித்துக் கொடுத்துள்ளார் சாத்தனார். மணிமேகலை அதனைப் பறைசாற்றி நிற்கிறது. பௌத்த சமயக் கருத்துகளை மட்டுமன்றி மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல அறநெறிகளையும் பரப்பிய பெருமைக்குரியது பௌத்த சமயம். சான்றாக, கொல்லாமை, கள் உண்ணாமை, எல்லாவற்றுக்கும் மேலாகப் பசிப்பிணியைப் போக்கும் அறச்செயல், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சீரிய செயல் ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தையும் விரிவாக இப்பாடத்தில் பார்த்தோம்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்தில் பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகின்றன. அவரவர் சமயக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் அங்குச் சமயக் காழ்ப்பில்லை; சமயப் பொறையே காணப்பட்டது. சிலப்பதிகாரக் காப்பியம் இதற்குச் சிறந்த சான்று. பல்வேறு போக்கில் மணிமேகலைக் காப்பியம் சிறந்த காப்பியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆயினும் அரிய அறங்கள் பலவற்றை மக்களின் மேம்பாட்டிற்காகக் கூறிய சாத்தனார், சமயப்பற்றின் காரணமாகச் சமயக் காழ்ப்பிற்கு அவரை அறியாமலேயே மணிமேகலையில் வித்திடுகின்றார். இதுவே பின்னர் குண்டலகேசியாக ஒரு காப்பியம் உருவாகவும் அதற்கு எதிரான நீலகேசி தோன்றுவதற்கும் காரணமாகியது எனலாம்.

குண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் முழுமையாகக் கிடைக்காததால் அதன் பயன்பாட்டை நாம் கவனிக்க இயலவில்லை.

வீரசோழியம் என்ற இலக்கண நூல் இன்றைய நிலையில் வழக்கொழிந்து போயினும் அது தோன்றிய காலத்தில் சிறப்பாக இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால்தான் உரையாசிரியர் பலராலும் அதன் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

பௌத்த சமயத் தமிழ் நூல்கள் சில அழிந்துபட்டன. அவற்றையும் இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவையும் கிடைத்திருந்தால் பௌத்த சமயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொண்டிருப்போம். அப்படி அமையாமல் போனது பௌத்த சமயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்ட இழப்பு எனலாம். ஆயினும் பௌத்த சமயம் ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் அது தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும் மறக்க இயலாது. காலத்தால் இனி அழிக்க முடியாத பெருமை உடையது என்றும் கூறலாம்.

இந்திய மண்ணில் பிறந்து, தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வளமாக வாழ்ந்த இந்தச் சமயம் இங்கு வேரின்றிப் போனது வருத்தத்தைத் தரும் வரலாற்று நிகழ்ச்சிதான். ஆயினும் உலகின் வேறுபல நாடுகளில் தன் சுவடுகளைப் பதித்து இன்றும் வாழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது எனலாம்.

பல்வேறு அரசியல் காரணங்களாலும் சாதி, சமயக் காரணங்களாலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பலரும் (பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள்) பௌத்த சமயத்தைப் பின்பற்றிய செய்தி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் இதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதன் தொடர்ச்சியே மதமாற்றம் எனலாம். இக்கால கட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரிவினர் பௌத்த சமயத்தைத் தழுவுவது நடைமுறைச் செயலாக மலர்ந்துள்ளது.

மூலம்:tamilvu.org



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக