ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ! சிவா!!

3 posters

Go down

சிவ! சிவா!! Empty சிவ! சிவா!!

Post by ramkumark5 Sat Oct 06, 2012 7:04 pm

சிவ! சிவா!!

சிறு வயது முதலே மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மழையில் நனைவது என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். பள்ளி நாட்களில் நனைந்து கொண்டே கிரிக்கெட் விளையாடிய ஞாபகங்கள் இன்னும் மனதிலே பசுமையான நினைவுகளாய் உள்ளன.

மழை என்றால் எவ்வளவு இஷ்டமோ அந்த அளவு இடி என்றால் பயந்திடுவேன். இடி விழுந்தால் அடுத்த நொடி வீட்டுக்குள் ஓடி வந்து காதுகளை மூடிக் கொள்வேன். இந்த பயம் சில நேரங்களில் காய்ச்சல், ஜுரம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. எனது இந்த பயத்தை கவனித்த என் தந்தை இடி விழும் நேரங்களில் சிவ! சிவா!! என்று சொல்லுமாறு கூறினார். அப்படி சொன்னால், இடி நம்மை பார்த்து பயந்து ஓடி விடும் என்றார்.

இடி பயந்து ஓடியதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் சிவ! சிவா!! என்று சொல்லும் போது மனதிற்குள் பயம் குறைந்து ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும்.

பின் ஒரு நாள் இரவு வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பலத்த இடி சத்தம் கேட்க நான் சிவ! சிவா!! என்று கூறி மனதை சாந்தபடுத்தினேன் அப்போது ஒரு குட்டி பெண் என்னிடம் ஓடி வந்து “என்னைய கூப்பிட்டீங்களா அண்ணா?” என்றாள்.

அந்த பெண் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாய் கூடி வந்திருக்கும் கனகராஜ் வாத்தியாரின் மகள் சிவானி. என்னை விட நான்கைந்து வயது இளையவள். அவளின் குரல் மழலை தனம் நிரம்பியதாய் இருந்தது. அக்கா, தங்கை என்று யாரும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ அவள் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒரு விதமான ஈர்ப்பும், பாசமும் அவள் மீது தோன்றியது.

சிவ! சிவா!! Images?q=tbn:ANd9GcRggT9gRZ6hnG3q8DpoFqQpBcXgyaOMLeTZ3h2f7Zjvma47ckm6yy5KyPP1LA

அவளை தூக்கி திண்ணையில் அமர வைத்து அவளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் மழை ஆரம்பிக்கவே இருவரும் மழையில் நனைந்து விளையாட ஆரம்பித்தோம். என்னை போன்றே அவளுக்கும் மழையில் நனைவது என்றால் ரொம்ப பிரியம்.

அன்று முதல் இருவரும் ரொம்ப நெருக்கமாகி விட்டோம். தினம் தினம் மாலை என் வீட்டிற்கு “அண்ணா நானும் வந்துட்டேன்” என்று ஓடி வந்துருவாள். தன் மழலை பேச்சாலும் சுட்டி செயல்களாலும் என் வீட்டில் எல்லோருக்கும் செல்லம் ஆனாள். என் பொம்மைகளும் விளையாட்டு உபகரணங்களும் அவளுக்கும் செல்லம் ஆனது.

அவள் குடும்பத்தில் எங்காவது ஊருக்கு கிளம்பினார்கள் என்றால் ‘அண்ணனை விட்டு வர மாட்டேன்’ என்று அடம் பிடிப்பாள். பல நேரங்களில் அவள் அம்மா வேறு வழியில்லாமல் சிவானியை அடித்து அழைத்து செல்வாள். அதை பார்க்கும் போது மனதிற்கு வருத்தமாய் இருக்கும்.

என் குடும்பத்தினர் கோவில், சுற்றுலா என்று வெளியூர் செல்லும் நேரங்களில், சிவானியை பிரிய மனமில்லாமல் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். சில நேரம் சிவானியின் பெற்றோர் அனுமதியுடன் அவளையும் எங்களுடன் வெளியூருக்கு கூட்டி செல்வதுண்டு.

சிவானியின் அன்பும் பாசமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களுக்கு பின் மீண்டும் அவள் தந்தைக்கு இட மாறுதலாகி விட அவர்கள் குடும்பம் வேறு ஊருக்கு புலம் பெயர்ந்தது. என் குடும்பமும் தந்தையின் தொழில் சம்பந்தமாக வெளி நாட்டில் குடியேற அதன் பின்னர் சிவானியை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. அவள் நினைவுகள் மட்டும் இன்னும் என்னுள் நீங்காமல் நிற்கிறது.

இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆகிறது அவள் என்னை விட்டு சென்று. இன்று இடி இடித்த போது கூட சிவ! சிவா!! என்று கூறி விட்டு கதவுகளை நோக்கினேன், சிவானி அண்ணா என்று ஓடி வருவாள் என்ற எண்ணத்தில். சிவ! சிவா!!
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

சிவ! சிவா!! Empty Re: சிவ! சிவா!!

Post by யினியவன் Sat Oct 06, 2012 8:30 pm

இடியில் பிறந்த உறவின் பிரிவு ஏக்கமாக தங்கள் கதையினூடே - அருமை ராம்குமார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவ! சிவா!! Empty Re: சிவ! சிவா!!

Post by ramkumark5 Sat Oct 06, 2012 11:35 pm

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஓசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்.............


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

சிவ! சிவா!! Empty Re: சிவ! சிவா!!

Post by யினியவன் Sun Oct 07, 2012 1:27 am

கையில் விக்சும் அமிர்தாஞ்சனும் வெச்சுக்கோங்க - சிலிர்த்து சிலிர்த்தே ஜலிப்பு புடிச்சிக்கும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவ! சிவா!! Empty Re: சிவ! சிவா!!

Post by கரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 5:16 am

என்னங்க ராம்குமர்சிளிர்த்டது உடல் மட்டும் தானா இல்லை உள்ளமுமா ? சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சிவ! சிவா!! Empty Re: சிவ! சிவா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum