ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண் குதிரை

5 posters

Go down

மண் குதிரை Empty மண் குதிரை

Post by ramkumark5 Sat Oct 06, 2012 5:05 pm

பெரியன்ன கருப்பசாமி கோவில் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள மந்தையில் இருக்கும் மண்குதிரை தான். கோவிலுக்கும் எனக்குமான உறவு சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கோவிலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் பல மாறுதலுக்கு உட்பட்டாலும் மண்குதிரை மட்டும் தான் நான் சிறு வயதில் பார்த்ததை போலவே இப்போதும் கம்பீரமாய் தோற்றமளித்து கொண்டிருக்கிறது. ஊரில் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான ஒரு இடம் என்றால் கருப்பசாமி கோவில் மந்தை தான் என்று கூற வேண்டும்.

மண் குதிரை 2647643415_9459b9418b

எறி பந்து, கபடி, கிட்டி(கில்லி), கோ கோ, குண்டு உருட்டல், பம்பரம் சுத்துறது என்று பல விதமான விளையாட்டுகளும் அரங்கேறும். ஜாதி பாகுபாடின்றி ஊரின் அத்தனை சிறுவர்களும் ஒன்றாய் கூடி விளையாடும் இடம் என்றால் அது மந்தை மைதானம் தான். வயதிற்கு ஏற்றார் போல இரண்டு, மூன்று குழுக்களாய் விளையாடுவோம்.

சுமார் 17,18 வருடங்களுக்கு முன் ஒரு நாள், அன்று விடுமுறை என்பதால் காலையிலேயே மந்தையை அடைந்து இருந்தேன். அன்றும் மந்தை மிகவும் கலகலப்பாகவே இருந்தது. காலையிலேயே கபடி போட்டி தொடங்கி இருந்தது. பொதுவாக கபடி போட்டியில் சிறுவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நானும், லோகநாதனும் கபடி போட்டியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எனது வேடிக்கை அப்படியே மண் குதிரையின் பக்கம் திரும்பியது.

ஊரில் கோவிலின் மீதும் மண் குதிரையின் மீதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அமாவாசை தினத்தில் கருப்பசாமி இந்த குதிரையில் ஊரையே வலம் வருவார் என்பதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பது தான் அந்த நம்பிக்கை. பல வருடங்களாகவே இன்றளவிலும் இந்த நம்பிக்கை ஊரில் இருந்து வருகிறது.

அப்போது லோகநாதனின் அண்ணன் யோகநாதனும் மந்தைக்குள் நுழைந்தான். எங்களை விட இரு வயதே மூத்தவன் என்பதால் அவனுக்கும் கபடி போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. இப்போது மூன்று பேர் சும்மா இருக்கிறோம் என்பதால் ஒரு யோசனை தோன்றியது. மூவரும் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி லோகநாதன் சென்று மந்தையில் இருக்கும் கலையரங்க தூணினை நோக்கி ஒன்று, இரண்டு என என்ன ஆரம்பித்தான். யோகநாதன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து விட்டான். சிறிது யோசித்தவனாய் நான் மண் குதிரையின் புற பக்கம் சென்று ஒளிந்து கொண்டேன்.

லோகநாதன் தன் தேடல் படலத்தை ஆரம்பித்தான். கோவிலின் ஒவ்வொரு பகுதியாக தேடினான். முதலில் யோகநாதனை கண்டுவிட்டான். எப்படியாவது அவனிடம் மாட்டக் கூடாது என்ற எண்ணத்தில் மண் குதிரையின் பின் பக்கம் சென்றேன். அப்போது தெரியாமல் நான் குதிரையின் வாலில் இடித்து விட்டேன். வலியுடன் திரும்பி பார்த்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. நான் இடித்ததில் குதிரை வாலின் முனை இரண்டு அங்குலம் அளவிற்கு உடைந்து விட்டது.

பயத்தில் நான் வாலின் உடைந்த சிறு பகுதியை எடுத்து தூரமாய் தூக்கி எறிந்து விட்டேன். பயத்தில் என்ன செய்வதென்று அறியாத நான் மந்தையில் இருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

வீட்டுக்குள் நுழையவும் ஆத்தா என்னிடம் வந்து “என்னடா ராசா அதுக்குள்ள வந்துட்ட. மந்தையில பயலுக யாரும் இல்லையா” என கேட்டது. “இல்லை ஆத்தா எல்லாம் பெரிய பசங்களா இருக்காங்க. என்னை ஆட்டத்துக்கு சேத்துகிற மாட்டேன்கிறாங்க. அது சரி அடுத்து என்னிக்கி அமாவாசை வரும்” என்று கேட்டேன்.

“இன்னிக்கு தான் ராசா அமாவாசை. அடுத்து ஒரு மாசம் கழிச்சு வரும். இன்னிக்கு பொழுது இறங்கின அப்புறம் வெளிய எங்கேயும் போகாத ராசா. கருப்பன் குதிரையில தீர்ப்பு கொடுக்க வருவாரு” என ஆத்தா கூறியது. எனக்கு உடல் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. நேராக சென்று பாயை எடுத்து விரித்து படுத்து கொண்டேன். ஆத்தா நேராக வந்து என் கழுத்தையும், நெஞ்சையும் தொட்டு பார்த்துவிட்டு “அடி ஆத்தி புள்ளைக்கு இப்பிடி காய்ச்சல் அடிக்குதே” என்று புலம்பியது. அந்த நேரம் அங்கு வந்த என் அப்பத்தா “புள்ளை எதையாச்சும் பாத்து பயந்திருக்கும் போல. இளங்கி பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் திருநீறு வாங்கி கொடு என்று சொல்லிவிட்டு சென்றது. பூசாரியிடம் சென்று திருநீறு வாங்கி வந்த பிறகும் காய்ச்சல் குறைவதாய் இல்லை. இரவு கருப்பசாமி வந்து என்னை தண்டிப்பார் என்று பயம் என் மனதை ஆழ்த்தியது.

அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஆறு முறை எழுந்து அடுப்படிக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தேன். தண்ணீர் 6 முறை என்றால் அதை பயத்தில் பதினைந்து முறையாவது வெளியேற்றம் செய்திருந்தேன். அதையும் மீறி நள்ளிரவு இரண்டு மணி அளவில் சற்று கண் அசர்ந்தேன். கருப்பன் அருவாளுடன் வந்து என்னை வெட்டும் கனவுகள் நிரம்பியதாய் இருந்தது அந்த தூக்கம். மறுநாள் காலை விடிந்த பின் தான் எனக்கு காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.

வாழ்க்கையின் தேடலுக்காக இன்று வெளி மாநிலத்தில் வந்து குடியேறி விட்டாலும், ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று மண் குதிரையும் அதன் உடைந்த வாலையும் சிறிது நேரம் நின்று ஆழ்ந்து நோக்கிய பின்னே வீட்டிற்கு திரும்புவேன். இன்றளவிலும் கூட அமாவாசை நாட்கள் என்றால் மனதில் சிறிதளவும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். இருக்காதா பின்னே!!!
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by யினியவன் Sat Oct 06, 2012 8:35 pm

கிராமத்து நம்பிக்கையின் பின்னணியில் நெய்த கதை நன்று ராம்குமார்.

குஜராத்தில் அய்யனார் இல்லேன்னு தான் அங்க போயிட்டீங்களோ!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by ச. சந்திரசேகரன் Sat Oct 06, 2012 8:42 pm

கதை நன்று. உண்மை கதையில் உம்மை கதையின் நாயகனாக கண்டோம் நன்றிகள்.


மண் குதிரை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by சிவா Sat Oct 06, 2012 8:59 pm

மண்வாசனை வீசும் கதை, நன்றாக உள்ளது!


மண் குதிரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by கரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 9:08 pm

சிறுகதையின் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்க நானும் உங்களுடன் இணைந்துவிட்டேன் விளையாட்டில்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by ramkumark5 Sat Oct 06, 2012 11:29 pm

யினியவன் wrote:கிராமத்து நம்பிக்கையின் பின்னணியில் நெய்த கதை நன்று ராம்குமார்.

குஜராத்தில் அய்யனார் இல்லேன்னு தான் அங்க போயிட்டீங்களோ!!! புன்னகை

கதைகள் அனைத்தும் என் கற்பனை மட்டுமே. சில நேரங்களில் கதையின் நாயகனாக என்னை இணைத்து கொண்டு எழுதுகிறேன். 🐰


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by ramkumark5 Sat Oct 06, 2012 11:30 pm

ச. சந்திரசேகரன் wrote:கதை நன்று. உண்மை கதையில் உம்மை கதையின் நாயகனாக கண்டோம் நன்றிகள்.

கதைகள் அனைத்தும் என் கற்பனை மட்டுமே. எதுவும் உண்மை சம்பவம் இல்லை. சில நேரங்களில் கதையின் நாயகனாக என்னை இணைத்து கொண்டு எழுதுகிறேன்.

Original source: http://www.eegarai.net/t89972-topic#ixzz28XjQs5Sj


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by ramkumark5 Sat Oct 06, 2012 11:31 pm

கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி.


உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

மண் குதிரை Empty Re: மண் குதிரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum