புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
48 Posts - 51%
heezulia
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
48 Posts - 51%
heezulia
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_m10மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியத் தமிழ்ப்ப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு சிறு பேட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 10:38 am

* ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளீர்களா?

* தலைமை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்கள்! ஓய்வு பெறும் பொழுது உங்கள் பணியில் முழுத் திருப்தி இருந்ததா? அல்லது அப்பொழுது இதை இவ்வாறு செய்திருக்கலாம், அல்லது இதை செய்யாமல் விட்டுவிட்டோம் என்ற மனக் குறைகள் அதிகம் இருந்ததா?

* மலேசியாவில் உள்ள குழந்தைகள் தமிழ் படிப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். சீனம் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். இதனால் இன்னும் எத்தனை ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாத நிலைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள். (உத்தேசமாகக் கூறலாம் அல்லது இச்சூழ்நிலை வராது என மறுப்புக் கூறலாம்)

* அடுத்து வரும் தேர்தலில் எதிர்க்கட்சியான பாஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைமைத்தால் முஸ்லிம் அல்லாத இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இப்பொழுது இருப்பதைப் போல் முழுச் சுதந்திரத்துடன் வாழ முடியுமா? அல்லது சமய அடக்குமுறைகளை அந்த அரசு மேற்கொள்ளுமா?

* மலேசியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளை அதிகம் வாங்கிப் படிப்பவர்கள் தமிழகத் தமிழர்களா? அல்லது மலேசியத் தமிழர்களா? உங்களைக் கவர்ந்த நாளிதழ் எது?

* தமிழகம் சென்றுள்ளீர்களா? அவ்வாறு சென்றிருந்தால் அங்குள்ள நிறை குறைகளை ஓரிரு வரிகளில் கூற முடியுமா?

* ஏன் மலேசியத் தமிழனாகப் பிறந்தோம் என வருந்தியதுண்டா? அல்லது மகிழ்ச்சியடைந்துள்ளீர்களா?

* உங்களிடம் படித்த மாணவர்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பெரிய துறைகளில் பணிபுரிகிறார்களா?

* சாலையில் செல்லும்பொழுது உங்களிடம் பிச்சை கேட்பவர்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றும்?



இந்தக் கேள்விகளுக்கு திரு மாணிக்கம் நடேசன் அவர்கள் தந்த பதில்கள் கீழே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 10:39 am

மலேசியா முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு மாணிக்கம் நடேசன் அவர்களுடன் ஒரு பேட்டி.

ஈடிணையில்லா இன்ப புதையலான ஈகரைக்கும் மதிப்பிற்குறிய தலைவர் சிவா அவர்களுக்கும் முதலில் எனது பணிவான பாராட்டுகள். இணையம் இல்லையென்றால் இன்று பலரும் பல நாடுகளும் முடங்கிவிடும்,, அது போன்றே ஈகரை இல்லையென்றால் இங்கு இணைந்துள்ள பல நல்ல தமிழ் உள்ளங்களும் முடங்கிவிடும். அதற்காக ஈகரைக்கு எனது இணையில்லா நன்றி.

1998 முதல் நான் இணையத்தை பயன்படுத்தி அதன் மூலம் நல்லதையும், கெட்டதையும் அன்றாடம் பார்த்து படித்து வருகிறேன். குறிப்பாக தமிழையும் தமிழர்களைப்பற்றியும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கம் தான். ஏனெனில் என் பெற்றோர்கள் தமிழர்கள் எனவே நானும் பிறப்பால் தமிழன், அம்மா என்னும் வார்த்தை எனக்கு தானாக வந்தது, அப்பா என்னும் சொல் என் அம்மா எனக்கு சொல்லித் தந்தது. இப்படி இணையத்தில் தமிழைத் தேடி வரும்போது தான் இந்த ஈகரை என்னும் இனிய தமிழ் தென்றல் என்னைத் தழுவிக்கொண்டது. அணைத்துக் கொண்டேன், இன்ப ஈகரையை என்னுள் இணைத்துக் கொண்டேன். இனியும் பிரிக்க முடியாத பல உறவுகளை எனக்கு தந்த இந்த இணைப்பிற்கு துணையாக நிற்பேன்.

தலைமை ஆசிரியர் என்னும் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனது ஆசிரியர் பணியிலும், தலைமை ஆசிரியர் பொறுப்பிலும் என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எனது பணியை பொறுப்போடு செய்திருக்கிறேன் என்னும் திருப்தி இருக்கிறது, சில நேரங்களில் என்னை அறியாமலேயே சில தவறுகள் செய்திருக்கிறேன், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். நான் எனது பள்ளியிலும் மாணவ மாணவியர்களை பெயர் அழைப்பது குறைவு, பெரும்பாலும் உறவை முறையில் தான் அழைப்பேன், (எடுத்துக் காட்டாக அண்ணா, அக்கா, மாமா, சித்தி, அங்கள், ஆன்டி, தாத்தா, பாட்டி போன்று)

மலேசியாவில் தமிழ் கல்வி அழியாது, இங்குள்ள தமிழ் பொற்றோர்களிடம் தனது பிள்ளைகள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்னும் தாக்கம் தலை தூக்கி நிற்கிறது, ஆண்டு தோறும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவரகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. தேசிய பள்ளிகளுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் தங்களது பிள்ளைகளை அனுப்பி வந்த பொற்றோர்கள் தமிழ் மொழியின் மேல் உள்ள தாக்கத்தில் இன்று பலர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வருவது தமிழின் வளர்ச்சிக்கு ஒளிவிளக்காக இருக்கிறது என்பதை உணரலாம்.

தமிழ்ப் பள்ளிகளில் படிக்காத பலர் இன்று தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள், இது இங்கு தமிழ் மொழியின் வளர்ச்சியை காட்டுகிறது. ஒரு காலத்தில் தமிழ் நேசன், தமிழ் முரசு என்று இரு தமிழ் நாளேடுகள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று ஐந்து தமிழ் நாளேடுகள் மலேசியாவில் வெளிவருவது இந்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு இன்னொரு மைல்கல்.

அடுத்து வரும் பொதுத்தேர்தலில் எதிர்கட்சியான பாஸ் கட்சி ஒரு மதவாத கட்சியாகும், கட்டுக்கோப்பாகவம் மதத்தை அடிப்படையாக வைத்தும் ஆட்சி நடத்த முனைவார்கள், ஆனால் இந்தியர்களையும் சீனர்களையும் இப்போது இருப்பது போல் அவ்வளவு சுதந்திரமாக வாழ விடமாட்டார்கள், பொது இடங்களில் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்படும், செய்யப்பட வேண்டும் மேலும் குற்றச் செயல்கள் குறையும், மற்ற சமயங்களின் சுதந்திரம் கொஞ்சம் பாதிக்கப்படலாம், ஆனால் அழிக்கப்படாது அடக்கு முறையும் அமல்படுத்தப்படாது என உறுதியாக கூறலாம். ஏனெனில் இன்று பாஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் அனைத்துலக் சூழலில் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள், அனைவரையும் அணைத்து , இணைத்துச் சென்றால்தான் அவர்கள் ஆட்சியில் நிலைத்திருக்க முடியும் என்பதை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

மலேசிய தமிழ் நாளிதழ்களை அதிகம் வாங்கிப் படிப்பவர்கள் மலேசிய தமிழிர்கள் தான், ஏனென்றால் எண்ணிக்கையில் மலேசிய தமிழர்கள் தான் அதிகம். மேலும் இங்கு வெளியாகும் தமிழ் நாளேடுகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்னும் எண்ணமாகவும் இருக்கலாம். தமிழக தமிழர்கள் நாளிதழ்கள் வாங்கும் பணத்தை சேமித்தால் பிறகு அது ஒரு பெரிய தொகையாக சேமிப்பில் இருக்கும் என்பது ஒரு சிக்கன செயலாகும், ஏற்றுக் கொள்ளலாம். இன்று எல்லா இந்திய உணவகங்களிலும் தமிழ் நாளேடுகள் இருக்கும், அங்கு சென்று தமிழக தமிழர்கள் படித்துக் கொள்ளலாம்.பிழைப்பு நாடி இங்குள்ள தமிழர்களை நம்பி வந்த தமிழக தமிழர்கள் இது போன்று பத்திரிகைகளில் பணத்தை விரயமாக்கமல் இருக்கலாம்.

நான் குறிப்பாக எந்த தமிழ் நாளேடும் வாங்குவதில்லை, காரணம் இன்றைய மலேசிய தமிழ் நாளேடுகள் நாற்றமடிக்கும் அரசியலுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தருகின்றன, மக்களுக்கு தேவையான முக்கிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை, இங்குள்ள எல்லா தமிழ் நாளேடுகளுக்கும் நான் அனுப்பிய பல முக்கிய செய்திகளை வெளியிடவே இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஞாயிறன்றும் மட்டும் தவறாமல் எல்லா தமிழ் பத்திரிக்கைகளையும் வாங்கி விடுவேன்.

மலேசியா ஒரு வளமான நாடு, அருமையான சீதோசன நிலையை கொண்டது, ஓரிரு மாதங்களைத் தவிர ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்கிறது. எல்லா நாட்டு உணவு வகைகளும் இங்கு கிடைக்கின்றன, பல இன மக்கள் வாழும் இந்த நாட்டில் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். எனது நான்கு பிள்ளைகளும் பட்டதாரிகள், கை நிறைய சம்பாதிக்கிறார்கள், மகிழ்ச்சியான வாழ்க்கை, இந்த இனபமான சீழல் தமிழ் நாட்டில் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறி.

சுமார் 36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில், எனது மாணவர்கள் பலர் இன்று பல முக்கிய பதிவிகளில் இருப்பதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றும் என்னை மறக்காமல் என்னையும் மதித்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பல நல்ல மாணவ உறவுகள் இருந்து வருவதால் எனக்கு இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ வேண்டும் என்னும் பேராசையும் இருக்கிறது. இன்றும் என்னைப் பார்க்கும் மாணவர்கள் கிண்டலாக, ‘ சார் நீங்க எப்பவுமே யூத் தான் சார், எங்களுக்கே உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது ‘ என்று சொல்லும்போது அவர்களிடம் உள்ள பாசத்தை என்னால் உணர முடிகிறது. எனக்கு இதுவே போதும் எனது பணியை சிறப்பாக செய்திருக்கிறேன் என்பதை எடுத்துக் காட்ட..

சாலையில் பிச்சை எடுப்பவரைக் கண்டால், கடுங்கோபம் வரும். பசி என்றால் சாப்பாடு வாங்கித் தருவேன், கையில் காசு எதுவும் தரமாட்டேன், காரணம் அந்த பணத்தை பல பிச்சைக்காரர்கள் மது அருந்த பயன்படுத்துகிறார்கள். காசு தான் வேண்டும் என அடம் பிடிப்பவர்களுக்கு எதுவுமே தரமாட்டேன். வேலை செய்யும் எண்ணம் உள்ளவராக இருந்தால் நண்பர்களிடம் கேட்டு ஏதாவது ஒரு வேலை வாங்கித்தர முயற்சி செய்வேன்.

அன்புடன்
மாணிக்கம் நடேசன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 10:44 am

சிவா இது நம்ம அய்யாதானே?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 10:46 am

யினியவன் wrote:சிவா இது நம்ம அய்யாதானே?

நம் அய்யாவேதான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 10:51 am

உங்கள் கேள்விகளும் அய்யாவின் பதில்களும் அருமை.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 11:18 am

நம்ம அய்யா மலேசியா தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரா ?
நான் இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.
தமிழகத்தில் தமிழை கற்றுக்கொடுப்பதைவிட அங்கு கற்றுக்கொடுப்பது சிறந்த செயலே. தமிழுக்கான அவர் பணி இனி மென்மேலும் நமது ஈகரை வாயிலாக சிறக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இத்தருணத்தில் நமது அய்யா எனது இருதயத்தில் மேலோங்கியே இருக்கிறார். தமிழுக்காக அவர் செய்த தொண்டு போற்றுதற்குரியது. அவரை சிரம் தாழ்ந்து வணங்குவதில் நான் பெருமிதம்கொள்கிறேன்.



[You must be registered and logged in to see this link.]


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 12:19 pm

நன்றி எல்லாம வேண்டாம் கவியன்பன் சார், உங்கள் அன்பான பாசம் மட்டும் போதும்,
எல்லாரும் சுபிட்சமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எனது பேராசை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 1:05 pm

அய்யா சிவா அண்ணாவின் கேள்வியும் உங்கள் பதிலும் அருமை , அய்யா நீங்கள் ஆசிரியர் என்பதில் மிக்க மகிழ்ச்சி ,

இனி நானும் உங்கள் மாணவனின் ஒருவன் ......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2012 12:11 pm

அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 12:48 pm

மலரும் இந்த மொட்டுக்கு என் உரம் போட்டீர்கள். நன்றி மாமா அங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக