புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 1%
viyasan
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
18 Posts - 3%
prajai
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_m10சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 21, 2012 10:13 pm

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவையாவன.
௧.திருவுந்தியார்
௨. திருக்களிற்றுப்படியார்
௩. சிவஞான போதம்
௪. சிவஞான சித்தியார்
௫. இருபா இருபஃது
௬. உண்மை விளக்கம்
௭. சிவப்பிரகாசம்
௮. திருவருட்பயன்
௯. வினா வெண்பா
௧௦. போற்றிப் பஃறொடை வெண்பா
௧௧. கொடிக்கவி
௧௨. நெஞ்சு விடு தூது
௧௩. உண்மை நெறி விளக்கம்
௧௪. சங்கற்ப நிவாரணம்.

இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று

என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.

திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624

624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.


இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர்.

இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 3:44 pm

நன்று சாமி அவர்களே மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 3:47 pm

அருமை தொடர் சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 24, 2012 10:27 pm

கடவுள் வணக்கம்
பாடல் எண் : 1
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.


படிக்க வசதியாக :
கல்லால் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே


பொழிப்புரை :
மலைவு (உள்ளவர்களுக்கு) மலைவு இல்லார் கல்லால் நீழல் (கீழ் இருந்து) அருளிய (வற்றைச் சொல்லுவதற்கு) நல்லார் (கள்) பொல்லார் (உடைய) இணைமலர் (களை) புனைவரே.

மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன், மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து, அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க, நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன், பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின், இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, புனைவரே: வணங்குவார்களே, அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 25, 2012 5:22 pm

அழகான தொடக்கம், அருமையான விளக்கவுரை.

தொடருங்கள் சாமி
சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Sep 27, 2012 4:42 pm

இப்படி எல்லாம் தமிழில் நூல்கள் உள்ளனவா?
அறிய வைத்ததற்கு நன்றி !

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 12, 2012 8:25 pm

அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.


பொழிப்புரை :
தம்மை உணர்ந்து: தான் யார் என்பதை நன்கு உணர்ந்த மெய்ப்பொருள் சைவர்,
தமையுடைய தன்னுணர்வார்: தம்மை உடைமைப் பொருளாகக் கொண்டுள்ள, தம்முடைய இறைவன் சிவபெருமானையும் நன்றாக அறிவார்கள்.
எம்மை உடைமை: என்னை அவர்களின் உறவாக, உடையவராகக் கொண்டுள்ளதாலே,
எமையிகழார்: எம்மையும், எம்மால் இயற்றப்படுகின்ற, இந்நூலையும் ஏதும் குறையிருப்பினும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.
தம்மை உணரார்: அவ்வாறு தான் யார் என்பதை உணராதவர்கள்,
உணரார்: அவர்களை ஆட்கொள்ள வேண்டிய சிவபெருமானையும் அறிய மாட்டார்கள்.
உடங்கியைந்து தம்மிற் புணராமை: இப்படி, நம்மை இயக்கும் இறை சிவபெருமானுக்கு, நாம் அடிமை, நாம் அவனது உடமைப்பொருள் என்று உணராதவர்கள்,
கேளாம் புறன்: சொல்பவற்றையெல்லாம் நான் புறந்தள்ளிவிடுவேன்.

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Dec 13, 2012 7:55 am

அருமையான விளக்கம். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக