புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நீ வந்தது விதியானால் I_vote_lcapநீ வந்தது விதியானால் I_voting_barநீ வந்தது விதியானால் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வந்தது விதியானால்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:57 pm

நகரத்தின் நடுவில் இருக்கும் உயரமான கட்டிடம், காலையும் இல்லாமல் மதியமும் இல்லாமல் அனல் காற்று வீசிக் கொண்டு இருந்த மந்தமான வேளை, கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்த வீட்டு வாசலில் காலணிகள் நிரம்பி இருந்தது, ஆண்கள் செருப்பும் பெண்கள் செருப்பும் சரி பாதியாக கலந்து இருந்தது. ஹாலில் பெரியவர்கள் அனைவரும் சாவகாசமாக டி.வி பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். தரையில் பல வகையான பழங்களுடன் தட்டுகள், கீழே சிந்திய பூக்கள், காபி இருந்து காலியான டம்பளர்கள் இருந்தன. கிச்சனில் கீழே இரைக்கப்பட்ட மிச்சர்கள் ஸ்வீட்டுகள், அடுப்பில் பால் பொங்கிய கரை, மாடத்தில் காபி சிந்திய கரைகள் இருந்தன. உள் அறையில் அலங்காரத்துடன் இருந்த பெண்ணிடம், அவளைவிட அலங்காரத்தில் இருந்த அவளின் அம்மா, அத்தைகள், சித்திகள், மாமிகள் எதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த வீட்டின் உள் பக்கமாக இருந்த பால்கனியில் இருந்து பார்த்தால் பாதி சென்னை தெரியும். அந்த பால்கனியில் ஊத நிற சட்டையும், கருப்பு நிற ஃப்ண்டும் அணிந்துக் கொண்டு அங்கு இருந்த நாற்காலியில்
அமர்ந்து இருந்தான் ராகவன், கையில் புத்தகத்துடன்.

அந்த புத்தத்தின் அட்டையில் “லாஸ் ஆஃப் ஜெனிட்டிக் இன்ஜீனியரிங்” என்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சிறு நேரத்தில் யாரோ கனைப்பது போல இருந்தது. ராகவன் நிமிர்ந்து பார்த்தான். தலை நிறைய மல்லிகைப் பூவுடன், மாம்பழ நிற புடவையில், அதிகமான மேக்கப்பில், உதடு சாயம் காய்ந்த நிலையில் நின்றுக் கொண்டு இருந்தாள் மலர்விழி.

“சாரி சாரி, வாங்க உக்காருங்க எப்ப வந்தீங்க” என்று ராகவன் அவளை பார்த்து சொன்னான்.

அவளும் தயங்கிய வாரே அமர்ந்து “ நான் வந்ததுக்கு அப்பறம் நீங்க மூன்று பேஜ் படிச்சீட்டீங்க” என்று வெட்கத்துடன் சிரித்தாள்.

“அப்படியா சாரிங்க, நான் படிக்கு பொழுது பக்கத்தில எது நடந்தாலும் எனக்கு தெரியாது, என்னை நீங்க கூப்பிட்டு இருக்கலாமே” என்றான்.

“சரி நீங்களே பாப்பீங்கனு பார்த்தேன், நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” கண்களை கீழே பார்த்தபடி.

“உங்க பெயர் என்னங்க” என்றான் ராகவன் அவளை பார்த்து. முதல் முறையாக அவனை சிரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.

“பேர் தெரியாம தான் பெண்ணு பார்க்க வந்தீங்களா?” கேலி சிரிப்புடன் கேட்டாள்.

“ஆமாங்க, உங்க பேர் சொல்லுங்க” என்றான் எந்த சிரிப்பும் இல்லாமல்.

“மலர்விழி”

“ஓ மலர்விழி யா? நல்ல தமிழ் பெயர்”

“ஆமாம் எனக்கு தமிழ்-னா உயிர்”

உற்சாகமானவன் “அப்படியா, அப்ப நிறைய புத்தகங்கள் எல்லாம் படிப்பீங்களா?”

“உம் நிறைய படிப்பேன்”

“அப்படியா, நானும் புத்தகப் விரும்பி தான். நான் படித்தது கூட M.lib (library science). நானே விரும்பி தான் இந்த படிப்பை எடுத்தேன். இப்போ மும்பை நேஷனல் நூலகத்தில் வேலையில் இருக்கிறேன், சரி உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்"

“அரவிந்.. அடிக்கா ................... ராபின்.. ஷர்மா, அப்புறம் ....”

“ஏங்க தமிழ் என் உயிரு-னு சொன்னீங்க”

“ஆமாங்க குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் வாரம் தவறாம படிப்பேன்”

பெருமூச்சு விட்டவனாக “சரி எதோ பேசணும்-னு வரச் சொன்னீங்களே, அதைப்பத்தி சொல்லுங்க”

“சும்மா தான், என் ஃப்ரண்ஸ் பேச சொன்னாங்க”

“அப்படியா, நான் உங்க ஃப்ரண்ஸல யாரை கல்யாணம் செய்துக் கொள்ள போறேன்” என்றான் சிரித்துக் கொண்டு.

“ஆ அவங்களை இல்ல, என்னை தான் .......” என்று அவளை அறியாமல் அலறினாள்.

“அப்புறம் என்ன, நீங்களே பேச வேண்டியது தானே, அவங்க சொல்லி தான் செய்வீங்களா”

“அப்படி இல்ல எனக்கு இதுல எல்லாம் பழக்கம் கிடையாது”

“அப்ப நான் மட்டும் என்ன வாரத்திற்கு ஐந்து முறை பெண் பார்க்கும் வேலையா பார்க்குறேன், எனக்கும் இது தான் முதல் முறை. இன்னும் கேட்டால் பெண்ணிடம் பேசுவதே இது தான் முதல் முறை. சின்ன வயதில் இருந்து புஸ்தகம் மட்டும் தான் என்னுடைய நண்பர்கள்”

“அப்படியா? எனக்கு அப்படி தான்..” என்று அவள் முடிப்பதற்குள், ராகவன் குறுக்கிட்டு

“என்ன ராணி, தினத்தந்தி, மங்கையர் மலர் தானே” என்றான் முகத்தில் அறைந்தார் போல.

மலர் அமைதியாக இருந்தாள்.

“இங்க பாருங்க மலர், உங்க ஃப்ரண்ஸ் உங்களுக்கு தப்பா சொல்லி கொடுத்து இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு அது பிடிக்குனு சொல்ல சொல்லி. எனக்கு நல்லா புரியுது உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை என்று, அப்படி உங்களுக்கு இருந்து இருந்தால் நான் என்ன புத்தகம் இப்போ படிச்சினு இருந்தேன்னு ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பீங்க அல்லது கவனிச்சாவது இருப்பீங்க. கவனிச்சீங்களா?” என்று அவளை நோக்கி கேட்டான்.

அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள். அப்புறம் அவனே பேச்சை தொடர்ந்தான்.

”அப்படி செய்வது தான் ஒரு புத்தக பிரியரின் முதல் அடையாளமாக இருக்கும்,....... எதோ பேப்பர்களில் சமீபத்தில் வந்த சில பெயர்களை சொல்லி பிடித்த எழுத்தாளர்கனு பொய் சொல்லிறீங்க, சரியா” என்றான் அவளின் கண்களை பார்த்து.

“அப்படி இல்ல, ஆனா.......”

“புத்தகம் படிக்காது ஒண்ணும் தேச துரோக குற்றம் அல்ல, ஆனால் பொய் சொல்வது கிட்டதட்ட அப்படி தான்” என்றான் தீர்மானமாக.

மலர்விழியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, எப்பொழுது வேண்டுமானால் அவை கண்களை தாண்டும் நிலையில் இருந்தது. அவள் தழு தழுத்த குரலில்

“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா” என்றாள் ராகவனின் கண்களை பார்த்து.

ராகவன் பெருமூச்சுடன் தன்னுடைய பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் எதோ எழுதி அவளின் விரல்கள் அவள் மேல் படாமல் அவள் கையில் பேப்பரை வைத்து விட்டு பால்கனியில் இருந்து வெளியே வேகமாக சென்றான். ராகவன் சென்றவுடன் மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, அந்த பேப்பரை பிரிக்க பயந்தாள், கைகள் நடுங்கிய வாரே பிரித்தாள். அதில்

“என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?” என்று எழுதி இருந்தது. மலர்விழிக்கு அழுகை இன்னும் அதிகமானது, அந்த பேப்பரை முகத்தில் மூடியபடி அழுதாள். அவளுடைய தோழிகள் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே வந்தார்கள், மலர்விழியை பார்த்து

“ஏய் என்ன டீ அழுவுற, மாப்பிள்ளையை அதுக்குள்ள பிரிய முடியலையா?” என்று கிண்டல் செய்தனர்.

“போங்கடீ எல்லாரும், உங்களால தான் அவர் என்னை வேண்டாம்னு சொல்லீட்டு போய்டாரு, நீ என்னுடைய விதி-ன்னு சொல்லிட்டு போய்டாரு, பாரு எழுதி குடுத்துட்டு போயிட்டார்” என்று அழுதாள்.

“என்னடீ உளற, அடுத்த மாசம் கல்யாணம் வச்சீக்கலாம்னு சொல்லீட்டு போறாங்க, நீ லூசு மாதிரி பேசற. குடு அத” என்று தோழிகள் அந்த பேப்பரை வாங்கி பார்த்து விட்டு சிரித்தார்கள்.

“லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே” என்று அவளிடம் பேப்பரை கொடுத்தாள் ஒரு தோழி.

“ என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?
நீ எந்தன் உயிர் அன்றோ”

என்று பேப்பரின் கீழே கடைசியில் எழுதி இருந்தது. மலர்விழியின் முகம் வெட்கத்தால் பூரித்தது.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 10, 2009 11:11 pm

மீனு wrote:“ என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?
நீ எந்தன் உயிர் அன்றோ”

இந்த இரண்டு வரியில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.

முரண்பாடான விவாதத்தின் முடிவு சுமூகமாத்தான் இருக்கும் என்று உணர்த்தும் கதை. இரசித்து படிக்க முடிந்தது. நன்றி



நீ வந்தது விதியானால் Eegaraitkmkhan
நீ வந்தது விதியானால் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 11:18 pm

நீ வந்தது விதியானால் 678642



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 10, 2009 11:29 pm

லூசு மலர்விழி.... நீ வந்தது விதியானால் 677196



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 3:49 am

Tamilzhan wrote:லூசு மலர்விழி.... நீ வந்தது விதியானால் 677196

நீ வந்தது விதியானால் 838572



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 11, 2009 3:50 am

யாரது ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 3:51 am

பிரகாஸ் wrote:யாரது ?

கதை படித்தால் தெரியும் அண்ணா..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 11, 2009 3:53 am

அதற்கு இல்லை லூசு என்று சொல்லுகிறார்கள் அதுக்கு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 3:55 am

பிரகாஸ் wrote:அதற்கு இல்லை லூசு என்று சொல்லுகிறார்கள் அதுக்கு

தமிழன் அண்ணா.. இப்படிதான் கதையில் வரும் மலர்விழி லூஸு
என்று சொல்றார்..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 11, 2009 3:56 am

லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே”

இது போல



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக