Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
+4
லோகு
தா.கமலக்கண்ணன்
அசுரன்
eraeravi
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தாண்டவம் !
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர்
விக்ரம் கூட்டணியில் படம் .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .
காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார் . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து உள்ளது தெரின்றது .ஆங்கிலம் பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கமல ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான். என்று அறுதி இட்டுக் கூ றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை வைத்தே யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் . கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி இருப்பார்கள் .
திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான் நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக் கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால் நாட்டில் மணவிலக்கு வராது .
படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி ,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள் .மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண் அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா ! என்று செல்லிடப் பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர் .விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில் முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் . மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத் திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன் எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால் காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ? என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான் காவல் உயர் அதிகாரி என்பது மனைவிக்கு தெரிகின்றது .
மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ வாசிப்பில் தேறி விடுகிறார் .
பார்வையற்றோர் ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக் கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில் துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு , பார்வையற்ற விக்ரமை கொடூரமாக தாக்கும் காட்சி பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம் பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து விட்டாரா ? என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் .
படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள் ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது. விக்ரம் காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும் காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து உள்ளார். நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் .
ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று . எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது நீ அழகு இல்லை என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர் துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.
அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான, மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத்த தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை! உன் கதை ! என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு வருகிறது .
நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
நடிப்பு விக்ரம் .
இயக்கம் விஜய் .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தெய்வத்திருமகள் தந்த சிறந்த இயக்குனர் விஜய் , நடிகர்
விக்ரம் கூட்டணியில் படம் .படத்தில் அதிக எதிர்ப்பார்ப்புடன் சென்றேன் .ஆனால் தெய்வத் திருமகள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ,படம் பார்க்கும் படி உள்ளது .வழக்கம் போல தீவிரவாதி கதைதான் .
காவல் உயர் அதிகாரி விக்ரம் .அவரது நண்பன் காவல் உயர் அதிகாரியே துரோகியாக மாறும் மசாலா கதைதான் .கதை நடப்பது லண்டனில் என்பதால், லண்டனை மிக நன்றாக படம் பிடித்து உள்ளார் . லண்டனில் பாம் வெடித்த காட்சிகளை இணைத்து உள்ளது தெரின்றது .ஆங்கிலம் பேசும் காட்சிகளில் அலுப்பு தட்டுகின்றது.நடிப்பில் சிவாஜி கணேசன் ,கமல ஹாசன் இருவருக்கும் அடுத்து விக்ரம் தான். என்று அறுதி இட்டுக் கூ றலாம்.பார்வையற்றவர்கள் கண்களில் பார்வை இல்லாததால் காதுகளே விழிகள். ஒலியை வைத்தே யார் என்று சொல்லி விடுவார்கள் .நான் மதிக்கும் மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றவர்கள். பார்வை இழந்த விக்ரமை கொலைக்காரனாக காட்டியது வருத்தமே .ஒரு கொலை அல்ல வருசையாக படம் முழுவதும் கொலை செய்கிறார் . கொலை செய்வது தீவிரவாதிகளைத்தான் என்றாலும் பார்வையற்றவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் .ராஜபார்வை படத்தில் கமலை பார்வையற்றவராக மிக கண்ணியமாக காட்டி இருப்பார்கள் .
திருமணம் வேண்டாம் நன்கு பார்த்து ,தெரிந்து, புரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த விக்ரமை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்கிறார் அவர் அம்மா சரண்யா. மழையில் தான் நனைந்து கொண்டு நாய் குட்டிகளுக்கு குடை பிடிக்கும் மணப்பெண் அனுஷ்காவை பார்த்து வியந்து போகிறார் விக்ரம்.அவரசக் கல்யாணம் ஆகி விட்டதால் இருவரும் உடன் தம்பதியாகமல் உடன்படிக்கை செய்கின்றனர் .இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பராகி காதலித்து பிறகு தம்பதியாவோம் என்று .ஒப்பந்தப்படி இருவரும் நடந்து கொள்கின்றனர் .இப்படி புரிந்து நடந்தால் நாட்டில் மணவிலக்கு வராது .
படத்தில் சிறப்பு அம்சம் என்னவென்றால் கணவன் மனைவி புரிதல் பற்றி ,விட்டுக் கொடுக்கும் நல்ல குணம் பற்றி கருத்து உள்ளது .இன்றைக்கு பல தம்பதிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தகவல் படத்தில் உள்ளது .பாராட்டுக்கள் .மனைவியின் ஓவியத்தை காட்சிப் படுத்தி நிதி திரட்டி ,மனைவி ஆசைப்பட்ட கண் அறகட்டளை தொடங்க உதவுகிறார் கணவன் . ஓவிய கண்காட்சி திறக்க முக்கிய பிரமுகர்கள் வந்த நேரத்தில் ,என்னவென்று சொல்லாமல் உடன் வா ! என்று செல்லிடப் பேசியில் அழைக்கிறார் . மனைவி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதால் வர மறுக்கிறார் .பிறகுதான் தெரிகிறது ஓவிய கண்காட்சி என்பது இருவருமே கோபப்படாமல் புரிந்து கொள்கின்றனர் .விருந்துக்கு ஒரு பெரிய உணவகத்தில் முன் பதிவு செய்து விட்டு ,மனைவியை காரில் அழைத்து செல்கிறார் .மனைவியோ எனக்கு தூக்கம் வருகிறது உணவகத்திற்கு வரவில்லை என்கிறார் .உணவக வாசல் வரை வந்து விட்டு திரும்ப வீட்டிற்கு செல்கிறார் .பதிவு செய்து விட்டு வராமல் போனதால் உணவகத்தினர் திட்டுகின்றனர் . மனைவியுடன் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்வார் . தெய்வத் திருமகள் படத்தில் நன்றாக நடித்த அனுஷ்கா மனைவியாக இந்தப்படத்திலும் நன்றாக நடித்து உள்ளார் .பொதுவாக கணவன் எழுதர்ராக இருந்து கொண்டு அலுவலர் என்று போய் சொல்வதுதான் வழக்கம் .ஆனால் காவல் உயர் அதிகாரியாக இருக்கு விக்ரமை மனைவி காவல் உதவி ஆய்வாளாரா ? என்றதும் ஆம் என்கிறார் .பிறகுதான் காவல் உயர் அதிகாரி என்பது மனைவிக்கு தெரிகின்றது .
மனைவிக்கு பியானோ வாசிக்கத் தெரியும் .கணவருக்கு தெரியாது .ஆனால் மனைவிக்காக பியானோ வாசிக்க கற்று ,பியானோ வாசிப்பில் தேறி விடுகிறார் .
பார்வையற்றோர் ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்து வவ்வால் போல உணர்ந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் .பார்வையற்றோர் பள்ளியில் பயின்று இந்த ஆற்றலைக் கற்றுக் கொண்டு விக்ரம் தீவிரவாதிகளை கொலை செய்கிறார் .கடைசி காட்சியில் துரோகியாக மாறிய காவல்துறை நண்பன் இரைச்சல் ஒலியை மிகைப் படுத்தி வைத்து விட்டு விக்ரமிற்கு காதில் எதுவும் கேட்க முடியாதபடி செய்து விட்டு , பார்வையற்ற விக்ரமை கொடூரமாக தாக்கும் காட்சி பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகின்றது .நாடகர் விக்ரம் பார்வையற்றவராகவே மாறி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார். கடைசியில் விக்ரம் இறந்து விட்டாரா ? என்று தொட்டுப் பார்க்கும் கையை பிடித்துக் கொண்டு விக்ரம் தாக்கும் காட்சி அபாரம் .மனதிற்கு பாரம் .
படத்தின் பெரும் பகுதி லண்டனில் நடப்பதால் லண்டன் காரர்கள் ஆங்கிலம் பேசுவதால் படம் சில காட்சிகளில் அந்நியப்படுகின்றது. விக்ரம் காயம் பட்டதும் மருத்துவமனைக்கு வந்து அனாதை விடுதி குழந்தைகள் வந்து பார்க்கும் காட்சி நெகிழ்ச்சி .படத்தில் நடிகர் சந்தானம் கார் ஓட்டுனராக நடித்து உள்ளார். நகைச் சுவைக் காட்சிகளில் இயக்குனரின் கட்டுப்பாடு உணர முடிகின்றது .நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து உள்ளார் .நடிகர் நாசர் இலங்கைத் தமிழ் பேசும் லண்டன் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் .
ஜி .வி .பிரகாசின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று . எமி ஜாக்சன் சமுதாய அக்கறை இல்லாத போது லண்டன் அழகியாக வென்ற போது நீ அழகு இல்லை என்கிறார் .விக்ரம் .பார்வையற்றோர் துன்பம் உணர எமி ஜாக்சன் கண்களைக் கட்டிக் கொண்டு நடந்து விழுந்து காயம் ஆன முகத்தைத் தடவி நீ அழகு என்கிறார் . நெகிழ்ச்சியான காட்சி .சில காட்சிகள் போரடித்தாலும் பல காட்சிகள் மிக நன்றாக உள்ளது.
அனுஷ்காவை மிக ஆபாசமாக காட்டாமல் மிக மேன்மையான, மென்மையான மருத்துவராக காட்டிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுக்கள் . அரைத்த மாவையே அரைத்த தீவிரவாதி கதை . இந்தக் கதைக்கு என் கதை! உன் கதை ! என்று சண்டை வேறு .பஞ்சாயத்து வேறு ,வழக்கு வேறு .நினைத்தால் சிரிப்பு வருகிறது .
நடிகர் விக்ரம் மிக நன்றாக நடித்து உள்ளார் .தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் .தயவு செய்து தீவிரவாதி கதையை விட்டு விடுங்கள் .பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விக்ரம் ஒரு தலைசிறந்த நடிகர். அவர் படங்கள் வெற்றிப்படங்களே! பகிர்வுக்கு நன்றி ரவி சார்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நேர்த்தியாக கண்முன்னே படத்தை காட்டிவிட்டீர்கள் அருமை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நேற்று தான் படம் பார்த்தேன்...! அனைத்து திருப்பங்களும் நமக்கு தெரிந்த திருப்பங்களே... அந்த காட்சி வருவதற்கு முன்னேயே இது தான் நிகழ போகிறது என்று ஊகிக்க முடிகிறது...! சுவாரசியம் நிரம்ப குறைவு...! ஏமி ஜாக்ஸன், சந்தானம், லக்ஷ்மிராய்க்கு புதுமுகங்களை வைத்து கதை அமைத்திருந்தால், சற்றாவது எதிர்பார்ப்புகள் குறைந்து சுவாரசியம் கூடியிருக்கும்....! ஹ்ம்ம்ம்ம்...! ரொம்ப சுமார் தல.....!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்,
லோகு...!
லோகு- பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
சியான் எதையும் கொஞ்சம் சிரத்தையோடு செய்வாரு,
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படத்தின் இறுதிகாட்சிகளின் போது என் அருகில் அமர்ந்திருந்த சின்ன குழந்தை கூட "டொக் டொக்" என்று ஒலி எழுப்பி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டது
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
badri7986- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012
Re: தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
ரூபாய் 100 த(ர)ண்ட(வ)ம்..
Guest- Guest
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|