ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

4 posters

Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Tue Oct 02, 2012 10:10 pm

டுட்சொ பாம்பூஜீ…!


காலை நேரம், 10 மணி இருக்கலாம். ஆதர்ஸ்-இன் வீட்டுக்கு முன் 4 பைக்குகள் நிற்கின்றன. உள்ளே அவனது நானோ நின்று கொண்டிருக்கிறது. கார் வேண்டுமென்று தந்தையிடம் கேட்டதற்கு பலனாக இந்த ஆட்டோ.. சாரி.. நானோ…. நால்வரும் வீட்டுக்குள் சென்றனர். அறைக்குள் இருந்து மிகுந்த சந்தோசத்துடன் ஆதர்ஸ் வந்தான்.
"வாங்கடா…!"
செல்வா, "என்னடா பசங்களா? நாந்தான் நண்பன பாக்க வரலாம்னு வந்தா உங்களுக்கும் ஆதர்ஸ பாக்கணும்னு தோனிடுச்சா..!"
மௌலி, " அய்யா செல்வா சாமி, திருவாய மூடு…!"(செல்வா அய்யப்பனுக்கு வருடம் தவறாமல் மாலை போடும் பக்தன், இம்முறையும் கழுத்தில் மாலை)
"டேய் மால போட்ருக்கேண்டா… இல்லாட்டி.. உன்னைலா… சொல்லக்கூடாது.. சாமி சரணம்…"
சந்துரு, "மாப்ள், இவனுக இப்புடித்தான்.. ஹௌ ஆர் யூ டா??"
ஆதர்ஸ், "டேய்.. முதல்ல என்ன பேச விடுங்க டா.. நீங்க எல்லரும் ஒரே நேரத்துல வர்றதெல்லாம் உங்களுக்கே தெரியாம நான் பண்ண மேஜிக்…!"
வந்தி, "அப்புடியா? என்னடா சொல்ற..?" (வந்தியத்தேவன் முழுப்பெயர், அழைப்பது வந்தி.. சில சமயம் சத்தாய்ப்பதற்காக வாந்தி, பூந்தி)
"வாங்க மேல்ரூம் போயிடலாம்…"
செல்வா,"அந்த ரூம் திறக்க விடுறதில்ல, உள்ள தாத்தாவோட பொக்கிஷம் இருக்கு, அது இதுன்னு சரடா விடுவ..? இப்போ என்ன சாவிய ஆட்டைய போட்டியாக்கும்??"
"அப்பா அம்மா ரெண்டு பேரும் ரிஷிகேஷ் நேபால் எல்லாம் சுத்திப்பாக்க போயிருக்காங்கடா.. வர 20 நாளாவது ஆகும்…"
"ஏய் அப்புடின்னா… என்ன சொல்ல வர்ற.. சாமி சரணம்.. டேய் இதெல்லாம் தப்புடா.. நான் மாலைய கழட்டினக்கப்புறம் இதெல்லாம் நடக்கக் கூடாதா.. ஈஸ்வரா என் முன்னாலே தண்ணீ அடிக்கப்...."
"டேய்… பரதேசி…"
"ஏய் சாமி சரணம்.. சாமி சரணம்.. சொல்லு…"
சந்த்ரு,"கொஞ்சம் பேசாம இரேண்டா.. சரக்க நிப்பாட்டத்தான் மால போட்டனு உங்க தெரு பாப்பாக்கு கூட தெரியும்.."
மௌலி," மச்சி, அந்த ஃப்ரிட்ஜ் ல கூல் ட்ரிங்க் இருக்கா டா???"
வந்தி ஆதர்ஸை நோக்கி."நீ வா.. நம்ம பேசலாம்.. இவனுக வேஸ்ட்… மேல் ரூம்ல என்னடா?"
"எங்க தாத்தாவோட பொக்கிஷம் இருக்கு டா…!"
"அதத்தான் பல வருசமா சொல்றியே தம்பி… கூல்ட்ரிங்க்ஸ் ஸ்னாக்ஸ் எதாவது சாப்டுக்கிடே பேசலாமா…"
வந்தி,"ப்ச்…. நீ சொல்லு டா…"
ஆதர்ஸ்,"வாங்க மேல போலாம்…!"
ஐவரும் மாடி வழியாக மேல் அறைக்கு சென்றனர். அது ஒரு பழைய பர்மா தேக்கு கதவு கொண்டது, கைவினைப்பாடுகள் அதிகமாக இருந்தது. செல்வா கதவின் ஓரத்தில் இருந்த ஒரு பொம்மையை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். வந்தி செல்வா தலையில் தட்ட, ஆதர்ஸ் கதவைத் திறந்தான். உள்ளே அறை முழுதும் புத்தகங்கள். எல்லாம் தாத்தாவின் புத்தகங்கள். பழைய அறைக்கு உண்டான அனைத்து வெண்பா பாடல்களுக்கும் அது நூறு விழுக்காடு எடுத்தது. சுவற்றில் இரு இளைஞர்கள் ஏவுகணைக்கு முன் நின்று காலை வெளிச்சத்தில் கண் சற்றே சுருங்க, தோல்மேல் கைபோட்டு பாவணை காட்டினர். ஆதர்ஸிடம் கேட்காமலே அவர்களுக்கு அதிலிருப்பவர் அவன் தாத்தா என்று தெரிந்தது. நால்வரும் அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டிருக்கும்போதே, இன்னும் வாய்பிளக்க சந்தர்ப்பம் கொடுத்தது அந்த மின்விசிறி. பழைய மாடல் மின்விசிறியான அது, மூன்று இறக்கைகளும் வளைந்து முன்னோக்கி (அதாவது தரைநோக்கி) தொங்கிக் கொண்டிருந்தது.
செல்வா,"டேய் இது உங்க தாத்தா செஞ்சதாடா? எப்புடி இதுல இருந்து காத்து வரும்?"
ஆதர்ஸ்,"இது நான் செஞ்சது டா..!"
சந்த்ரு,"டேய் இங்க வா… எதும் தல சூடாயிடுச்சா இல்ல அப்பர் ஃபெர்த் ஆட்டம் கண்டுடுச்சா? ஃபேன ஏண்டா வளச்ச???"
"அது நான் வளைக்கல, தானா வளஞ்சுடுச்சு…"
"கன்ஃபாமா ஃபெர்த் காலி…"
வந்தி,"டேய் ஆதர்ஸ் என்னடா சொல்ற??"
"கேளு, நேத்து நைட் அப்பா ரூம்ல இந்த ரூமோட கீய கண்டுபிடிச்சேன், சரி இங்க என்னதான் இருக்குன்னு பாக்க மேல வந்து கதவ தொறந்தேனா.. உள்ள ஒரே குப்ப.. அப்பறம் என்னால முடிஞ்ச அளவு சுத்தம் செஞ்சேன். அதோ அங்க தெரியுதுபார் ஒரு பெட்டி.. அதுகிட்ட போனேன். ஓபன் பண்ண பாஸ்வட் கேட்டுச்சு. நெரய போட்டு பாத்தேன். கடசியா யோசிச்சேன், தாத்தா இறக்கும்போது என்ன நெஞ்சுல தூக்கிவெச்சு, தூக்கத்திலே செத்துட்டாராம். என்மேல அவ்வளோ பிரியம். அதனால என் பேர பாஸ்வடா கொடுத்தேன் ஓபன் ஆயிடுச்சு..! உள்ள் ஒரு ஃபாட்டில்(bottle) நெறய சொல்யூசன் மாறி பிங்க்(pink) கலர்ல இருந்துச்சு. கூடவே இந்த டைரியும்."
சந்த்ரு, "உங்க தாத்தா பெரிய ஆள் டா…! அந்த காலத்துலே பாஸ்வட் குடுக்குற மாறி பெட்டியெல்லா ரெடி பண்ணிருக்காரு…!"
"டேய் எங்க தாத்தா நம்ம நாட்டு D.R.D.Oல வேல பாத்துருக்கார்டா…!"
வந்தி, "அத விடு டா… இந்த ஃபேன் எப்புடி வளச்ச???"
"அதத்தாண்டா சொல்ல வர்றேன்.. இந்த ஃபாட்டில்ல இருக்க லிக்விட்ல(liquid) ஒரு சொட்டு வாயில போட்டு முழுங்குனா, நெனச்சதுலா நடக்குதுடா… அதுனால தான் இந்த ஃபேன் இப்புடி நிக்குது… அந்த சொல்யூசன டேஸ்ட் பண்ணி பாக்கலாம்னு நாக்கில ஒரு சொட்டு வெச்சேன்.. கொஞ்சம் கசப்பா இருந்துச்சு. அதுக்குமேல அத தொடல, அப்பறம்,காத்து சரியா வரலன்னு எப்போவும் தனியா பேசுறமாறி மனசுக்குள்ளயே ஃபேன்கிட்ட 'நீ என்ன ஃபேன், காத்தே காணோம், சுத்துறதவிட பேசாம வளஞ்சு தொங்கு…!'னு சொன்னேன் பாரு... வளஞ்சுடுச்சு.."
வந்தி,"என்னடா சொல்ற..."
"ஆமாடா, எல்லாம் இந்த டைரியினால, அதோ படத்துல இருக்காரே அவரும், எங்க தாத்தாவும் திக் ப்ரெண்ட்ஸாம்.. தாத்தா ஏவியேசன் டிப்பார்ட்மெண்ட், அவர் ஃப்ரெண்ட் நேவல் ரிசர்ச்.. ரெண்டுபேரும் ஒரே காலேஜ், கெமிஸ்ட்ரில மேஜர். ரெண்டு பேரும் ரிட்டயர் ஆனப்பறம் பெரிய ஆராய்ச்சியில ஈடு பட்டிருக்காங்க.. சாகாம உயிர் வாழுறதுக்கு ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணீருக்காங்க... லெபாரட்ரி அவரோட ஃப்ரெண்ட் வீட்டுல தான் இருந்துருக்கு. ஆனா தாத்தா அவ்வளோ சீரியஸா ஆராய்ச்சியில ஈடுபடலைன்னும், அதுனால அவங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வந்ததாவும் எழுதிருக்கார். ஒரு நாள் அவர் ஃப்ரெண்ட் எதோ செய்யப்போய் ரெண்டு மூணு சொல்யூசன் சேந்து ஒரு பெரிஸிபிடேட்டா மாறிடுச்சாம்... அத டெஸ்ட் பண்ணாமயே வெச்சுருந்துருக்கார். ஆனா பல மாசமா லேபுக்கே தாத்தா போகாதனால அவர் ஃப்ரெண்ட் ரொம்ப டென்ஷன் ஆயி, இனிமே 'இங்க வராத'ன்னு திட்டிட்டாராம்… ஆனா ப்ராஜக்ட்க்கு பாதி பணம் தாத்தா கொடுத்தனால கண்டுபிடிப்புல எனக்கும் பங்கு இருக்குன்னு சொல்லி சண்ட போட்ருக்காங்க… தாத்தா கடசியா அந்த பெரிசிபிட்டேட்ட அவருகிட்ட இருந்து பிடுங்கிட்டு வந்துட்டாராம்."
செல்வா,"யூ மீன் ஆட்டையப் போட்டு வந்துட்டார்…?"
"ச்சோ… ஆமாடா.. ப்ராஜக்ட் ட்ராப் ஆயிடுச்சு, அதுக்கப்பறம் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லையாம். இந்த மேட்டர் நடந்த ஒரே வாரத்துல தாத்தாவோட ஃப்ரெண்ட் இறந்துபோயிட்டாராம். தாத்தாவுக்கு எதோ குற்றவுணர்ச்சி ஏற்பட்டுருக்கு. ஆனாலும் கருத்துவேறுபாடு காரணமா அவர் பாடிய பாக்கக்கூட போகலையாம்டா. அப்போ பூட்டி வெச்சதுதான் இந்த சொல்யூசன, இதோட பேர் கூட எங்க தாத்தாவுக்கு தெரியலை…"
சந்த்ரு, மௌலி, செல்வா மூவரும் தலையை சொரிந்தனர். வந்தி மட்டும்,
"எப்புடிடா நெனச்சதெல்லாம் நடக்குதுன்னு கண்டுபிடிச்ச..?"
"இந்த ஃபேன வெச்சுத்தாண்டா.."
"வேற எதாவது ட்ரை பண்ணியா…"
"ஓ…"
"என்ன செஞ்ச?"
"இப்போ.. நீங்கள்ளா நான் கூப்பிட்டா ஒரே நேரத்துல ஒன்னா என் வீட்டுக்கு வந்துருக்கீங்க..?"
சந்துரு, மௌலி, செல்வா மூவரும், "இல்ல…!!"(கோரஸாக கூவினர்)
"இதுதான் என் செக்கண்ட் டெஸ்ட்… எப்புடி.."
வந்தி, "சூப்பர்டா…! ஆனா, இது கோயினிசிடன்ஸா(coincidence) கூட இருக்கலாம்ல… இன்னைக்கு சண்டே… எல்லாரும் ஃப்ரீ... அதுனாலக்கூட…! "
ஆதர்ஸ்,"அப்போ இந்த ஃபேன் வளஞ்சதுக்கு என்ன சொல்ற…!"
வந்தி,"அதுதாண்டா என்ன யோசிக்க வெக்குது…!"
செல்வா, "அப்போ ஒன்னு செய்யலாம், நம்ம எல்லாரும் ஒவ்வொரு சொட்டு வாயில விட்டு நெனச்சது நடக்குதான்னு பாப்போம்…! ம்?"
மௌலி, "கை குடு.. எப்புடியாவது அந்த லிக்விட வாயில போட்டுட்டு ஒரு கௌவன்மெண்ட் ஜாப்-கு ரெடி பண்ணனும்…"
சந்த்ரு, "ஆமாடா...அவள எப்பிடியாவது என் பின்னாடி நாய் மாரி சுத்த வைக்கனும்.. ஏண்டி எப்புடி அலையவுட்ட…!"
ஆதர்ஸ்,"டேய் நமக்கு ரிசல்ட் உடனே தெரியுர மாரி எதாவது யோசிங்க டா..!"
வந்தி,"ஆமா… அதான் கரெக்ட்.. நெனச்சது நடக்க ஆரம்பிச்சுட்டா அப்பறம் என்னவேணா செஞ்சுக்கலாம்..."
அனைவரும் அதனை ஒத்துக் கொண்டனர். முதல் சொட்டை எடுத்து வந்தி வாயில் விட்டான்,
2-ஆம் சொட்டை செல்வா விட்டுக்கொண்டான், மனதுக்குள் "இந்த ரூம் பூராம் சரக்கா வந்து சேரணும் சாமி…" என்று நினைத்துக் கொண்டான்.
3-ஆம் சொட்டை சந்த்ரு விட்டுக்கொண்டான், மனதுக்குள் "ஏஞ்சலினா ஜூலி இப்போ இங்க வந்தே ஆகணும் 'dot'.." என்று தலைவர் ஸ்டைலில் நினைத்துக் கொண்டான்.
4-ஆம் சொட்டை மௌலி விட்டுக்கொண்டான், மனதுக்குள் "வீடு பூராம் பணக்குவியலா கொட்டிக் கிடக்கனும்" என்று நினைத்துக் கொண்டான்.
ஆதர்ஸுக்கு அந்த லிக்விடின் மேல் இருந்த நம்பிக்கையினால் அதனை விட்டுக் கொள்ளவில்லை.
சற்றுநேரம் ஆகியும் 4பேர் நினைத்த எதுவும் நடக்கவில்லை, ஆதர்ஸ் சற்று ஏமாற்றத்துடன் "என்னடா, நீங்க என்ன நெனச்சீங்க.. எதாவது நடந்ததா??"
"டேய் மௌலி நீ என்னடா நெனச்ச??" மௌலி நினைத்ததை சொன்னான்.
"டேய் செல்வா… நீ" அவனும் சொன்னான்.
"சந்த்ரு…" அவனும் சொன்னான்.
அதற்கு அனைவரும் சிரித்தனர். ஆதர்ஸ், "உன் மூஞ்சிக்கு ஏஞ்சலினா ஜூலியா ஏண்டா…?"
சிரிப்புச் சத்தம் வீட்டை கலகலக்க வைத்தது.
வந்தியை பார்த்து ஆதர்ஸ், " நீ என்னடா நெனச்ச…?"
வந்தி, "மழை பொத்துக்கிட்டு ரூம்க்குள்ள ஊத்தணும்னு….!"
அனைவரும் ஒரு முறை மேலே விட்டத்தைப் பார்த்து இன்னொரு முறை 'கெக்கபெக்க' செய்தனர்.
ஆதர்ஸ்,"ஹூம்….! எதுவும் நடக்கலியே… ஆனா அந்த ஃபேன்… என்ன எழவோ… சாரிடா… உங்கள எல்லாம் டென்ஷன் பண்ணிட்டேன்.."
"விடுடா…" என்றனர் அனைவரும்.
சந்த்ரு எதோ நகைச்சுவை சொல்ல அனைவரும் மறுபடி வீட்டை கலகலக்க வைத்தனர். சற்றுநேரம் கழித்து அனைவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு மல்லாந்தனர். மாலை ஐந்து மணியானது, 5பேரும் சற்றே துயில் கலைந்தனர்.
ஆதர்ஸ்,"டேய் யாருக்காவது இங்க நாம அஞ்சு பேரும் ஏன் இன்னைக்கு சந்திச்சோம்னு ஞாபகம் இருக்கா..?"
நால்வரும்,"இல்லடா…"
வெகுநேரம் யோசித்தும் ஆதர்ஸ்க்கு தான் எதற்காக அவர்களை அழைத்தோம் என ஞாபகம் இல்லை. ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். நால்வரும் சென்றபின் ஆதர்ஸ் மேல் ரூமுக்கு சென்றான் ரூம் திறந்திருந்தது. மின்விசிறி வளைந்து கிடந்தது. மேல் இருந்த பெட்டியைக் காணவில்லை. பெட்டி காணாமல் போனதைப்பற்றி ஆதர்ஸ் சற்றும் கண்டுகொள்ளவில்லை. ஏதோ நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொண்டான். அறையை பூட்டி விட்டு கீழே ஓடி வந்தான்.
வந்தி மாலை 5.30க்கு ஒரு பெட்டியுடன் வீட்டுக்கு வந்தான். யாருக்கும் தெரியாமல் கொள்ளைபுறம் உள்ள வீட்டுக்குள் சென்றான். அந்த பெட்டியை பத்திரமாக மேசையில் வைத்துவிட்டு ஒரு புகைப்படத்தைப் பார்த்துவிட்டு சென்றான். புகைப்படத்தில் ஆதர்ஸ் வீட்டில் பார்த்த அதே இரு இளைஞர்கள் வெயில் காரணத்துக்காக கண்ணை சுறுக்கி ஏவுகணை அருகே நின்று கொண்டிருந்தனர்.

கதை இத்துடன் முடிந்தது. இதுவரை ஏதேனும் புரியாவிட்டால் கீழ் உள்ள பின்குறிப்புகளில் படித்து தெரிந்து கொள்ளவும்.

பின்குறிப்பு 1: முதல் சொட்டை வாயினுள் விட்ட வந்தி, "இவங்க நினைக்கிற எதுவும் நடக்கக் கூடாது" என்று நினைத்துக் கொண்டான்.

பின்குறிப்பு 2: அனைவரும் தூங்கியதும் வந்தி அந்த பெட்டியை எடுத்து தன் இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துவிட்டு, பின் வெகுநேரம் யோசித்தபின் லிக்விடில் இருந்து இன்னொரு சொட்டு விட்டுக் கொண்டான். "மற்ற நால்வரும் நடந்தது அனைத்தையும் மறந்துவிட வேண்டும்" என்று நினைத்துக் கொண்டான். பின் வந்து படுத்துக் கொண்டான்.

பின்குறிப்பு 3: கதையின் தலைப்பை மூன்று புள்ளிகளைத் தவிர்த்து வலமிருந்து இடமாக படிக்கவும்.



Last edited by அசுரன் on Fri Oct 12, 2012 9:47 pm; edited 2 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by யினியவன் Wed Oct 03, 2012 1:29 pm

இதை எழுதினது யாராய் இருக்கும்ன்னு ஒரு பொறி தட்டுது... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Wed Oct 03, 2012 6:52 pm

யினியவன் wrote:இதை எழுதினது யாராய் இருக்கும்ன்னு ஒரு பொறி தட்டுது... புன்னகை
எப்படி என்று தனிமடலில் சொல்லுங்கள் யினி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Mon Oct 08, 2012 9:43 pm

இந்த கதையில் கடைசியாக ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Fri Oct 12, 2012 9:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by க அருண்குமார் Sun Oct 14, 2012 10:28 pm

சூப்பருங்க
கதை சுவாரசியமாக உள்ளது....வாழ்த்துக்கள் புன்னகை
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…!  (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண்.12 - டுட்சொ பாம்பூஜீ…! (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum