Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டு, சபாநாயகர் பொறுப்புகளை துணை சபாநாயகர் தனபால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், டி.ஜெயக்குமார்.
திடீர் ராஜினாமா
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து, சட்டசபை சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அடுத்த மாதம் தமிழக சட்டசபை வைரவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 179 (பி)-ன் கீழ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முற்பகல் ராஜினாமா செய்துள்ளார்.
துணை சபாநாயகர் கவனிப்பார்
சபாநாயகர் பதவி காலியானதால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 180 (1)-ன்படி, சபாநாயகரின் அலுவலக பொறுப்புகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார்.
இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் பி.தனபால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
ஜெயக்குமாரின் ராஜினாமா நேற்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
புதிய சபாநாயகர் தேர்வு
புதிய சபாநாயகர் தேர்வு பற்றி சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் கூறுகையில், ``சட்டப்பேரவை தலைவர் தேர்தல், பேரவை கூட்டம் ஒன்றில் நடைபெற வேண்டும் என்று பேரவை விதி 7 உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் 30-ந் தேதி தொடங்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறலாம். அதற்கான தேதியை கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பார்.
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், கடந்த முறை ஜெயக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சட்டசபை வைரவிழா
அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி சட்டசபையின் வைரவிழா நடைபெறும் என்றும், மறுநாள் 30-ந் தேதி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை வைரவிழா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதால் அந்த விழாவின்போது சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கருதினால், குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் சட்டசபை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சபாநாயகர் டி.ஜெயக்குமார், சட்டசபை வைர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16 மாதங்களாக சபாநாயகர் பதவி வகித்துவந்த டி.ஜெயக்குமார் தலைமையில் இரண்டு முறை சட்டசபையில் கவர்னர் உரையாற்றி இருக்கிறார். இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை அவர் நடத்தியிருக்கிறார்.
தினமலர்
சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், டி.ஜெயக்குமார்.
திடீர் ராஜினாமா
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து, சட்டசபை சபாநாயகராக டி.ஜெயக்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அடுத்த மாதம் தமிழக சட்டசபை வைரவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 179 (பி)-ன் கீழ், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி முற்பகல் ராஜினாமா செய்துள்ளார்.
துணை சபாநாயகர் கவனிப்பார்
சபாநாயகர் பதவி காலியானதால், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 180 (1)-ன்படி, சபாநாயகரின் அலுவலக பொறுப்புகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார்.
இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் பி.தனபால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
ஜெயக்குமாரின் ராஜினாமா நேற்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
புதிய சபாநாயகர் தேர்வு
புதிய சபாநாயகர் தேர்வு பற்றி சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் கூறுகையில், ``சட்டப்பேரவை தலைவர் தேர்தல், பேரவை கூட்டம் ஒன்றில் நடைபெற வேண்டும் என்று பேரவை விதி 7 உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் 30-ந் தேதி தொடங்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறலாம். அதற்கான தேதியை கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பார்.
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், கடந்த முறை ஜெயக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே, இந்த முறையும் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சட்டசபை வைரவிழா
அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி சட்டசபையின் வைரவிழா நடைபெறும் என்றும், மறுநாள் 30-ந் தேதி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை வைரவிழா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா என்பதால் அந்த விழாவின்போது சபாநாயகர் இருக்க வேண்டும் என்று கருதினால், குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் சட்டசபை அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சபாநாயகர் டி.ஜெயக்குமார், சட்டசபை வைர விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பதவியை ராஜினாமா செய்தது, அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 16 மாதங்களாக சபாநாயகர் பதவி வகித்துவந்த டி.ஜெயக்குமார் தலைமையில் இரண்டு முறை சட்டசபையில் கவர்னர் உரையாற்றி இருக்கிறார். இரண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை அவர் நடத்தியிருக்கிறார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
"ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"
மேற்கொண்டு விளக்கத்தை விளக்கமாக விளக்க விரும்பவில்லை கொக்கரக்கோ கும்மாங்கோ
வாடி இருக்குமாம் கொக்கு"
மேற்கொண்டு விளக்கத்தை விளக்கமாக விளக்க விரும்பவில்லை கொக்கரக்கோ கும்மாங்கோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
நல்லவன் அ.தி.மு.க.விலும் வாழ முடியாது...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
ரா.ரா3275 wrote:நல்லவன் அ.தி.மு.க.விலும் வாழ முடியாது...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
தத்துவம் எண் 5001 ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
pooven wrote:ரா.ரா3275 wrote:நல்லவன் அ.தி.மு.க.விலும் வாழ முடியாது...
ஜெயக்குமார் (மட்டும்) விதிவிலக்கல்ல...
தத்துவம் எண் 5001 ....
தம்பி உடையான் தத்துவத்திற்கு அஞ்சான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
காதல் பித்துவத்துக்கு?ரா.ரா3275 wrote:தம்பி உடையான் தத்துவத்திற்கு அஞ்சான்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
யினியவன் wrote:அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
எவரு நல்லவர்
நல்லவர் எவரு
என அறிந்த
நல்லவர் எவரும் இல்லை ...
நல்லவரை தேடி அலைவோர் சங்கம் ......500001
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
யினியவன் wrote:அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
கொள்ள கூட்டத்துல கொஞ்சூண்டு நல்லவனும் நல்லவன்தானே அண்ணா...
Last edited by ரா.ரா3275 on Sun Sep 30, 2012 9:52 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அவரு நல்லவரா? கொப்புரானே சத்தியமா எனக்கு தெரியாது!!!
கொள்ள கூட்டாத்துல கொஞ்சூண்டு நல்லவனும் நல்லவன்தானே அண்ணா...
கொஞ்ச நல்லவனா
இல்ல ரொம்ப கெட்டவனா .
கொள்ளகூட்டமா இல்லை
மக்கள் வெள்ள கூட்டமா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நடந்தது என்ன ? தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டது எப்படி?
» கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்
» தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர்கள் அறிவிப்பு
» தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா
» பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்
» கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத்குமார் நீக்கம்
» தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் வேட்பாளர்கள் அறிவிப்பு
» தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா
» பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|