ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_m10மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by krishnaamma Fri Sep 28, 2012 7:29 pm

தமிழகத்தில், அறிவிக்கப்படாத, 14 மணி நேரம் மின் தடை அமலில் உள்ளதால், 80 சதவீத அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள, அரிசி ஆலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பால், அரிசி விலை கடும் உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம் உட்பட, தமிழகம் முழுவதும், 7,400 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மின் தடையிலிருந்து ஆலைகளுக்கு விலக்கு அளித்து, அரசு உத்தரவு பிறப்பித்தது.ஆனால், தற்போது மின் தடை காரணமாக, அரிசி ஆலைகளுக்குத் தேவையான அளவு மின்சாரம் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி உற்பத்தியில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த, அனைத்து பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை அரிசியாக மாற்றம் செய்வதற்கு, தண்ணீரில் ஊற வைத்தல், தொடர்ந்து அது வேக வைக்கப்பட்டு, அதன் பிறகு, "டிரையர்' மூலம் காய வைத்து, அரவை செய்யப்பட வேண்டும். இது தொடர்ச்சியான ஓர் இயக்கம். இதில் எந்த ஒரு பகுதியையும் தனித்து இயக்க இயலாது. அப்படி இயக்கம் செய்யப்படுமானால், ஊற வைத்த நெல் புளித்து, அரிசி, உணவுத் தன்மையை இழந்து விடும்.இந்த இயக்கம் தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி நடந்தால் மட்டுமே, தரமான அரிசியை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப இயலும். இரண்டு பகுதியாகப் பிரித்து இயக்கப்படும் பட்சத்தில், அரிசி உற்பத்தியாளர்களுக்கு முழு அளவில் நஷ்டத்தையும், தரமான அரிசியை உணவுப் பயன்பாட்டுக்கு வழங்க இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.

அரிசி உற்பத்தி, தங்கு தடையின்றி நடக்க வேண்டுமெனில், ஜெனரேட்டரை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரம் ஆலையை இயக்க வேண்டுமெனில், 35 லிட்டர் டீசலை பயன்படுத்த வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு லிட்டர் டீசல் 50.50 ரூபாய்.இந்த விலை கொடுத்து டீசலை வாங்கி, உற்பத்தி மேற்கொண்டால், தங்களுக்கு கட்டுபடியாகாது என்பதால், பெரும்பாலான அரிசி ஆலைகள், தங்களின் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டன. தமிழகத்தில், ஜூலை கடைசி வாரத்தில் இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 80 சதவீத அரிசி ஆலைகள், அதாவது, 5,920 ஆலைகள், மின் தடை காரணமாக மூடப்பட்டு விட்டன.மீதமுள்ள, 1,480 அரிசி ஆலைகளில், 480 ஆலைகள், ஜெனரேட்டர் உதவியுடன் குறைந்த அளவில் இயங்குகின்றன. மேலும், 1,000 ஆலைகள் வாரத்தில், மூன்று நாள் மட்டுமே உற்பத்தி மேற்கொள்கின்றன.அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அரிசி ஆலைகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து, ஆர்டர் எடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டன. ஆலைகள் உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம், வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அரிசி விலை விவரம் :

சில்லரை விற்பனையில், வெள்ளை பொன்னி பழசு கிலோ, 48 ரூபாய், புதுசு, 46 ரூபாய், பி.பி.டி., (பாபத்லால் பொன்னி), 43 ரூபாய், கர்நாடகா டீலக்ஸ், 42 ரூபாய், ஐ.ஆர்., 20, அம்பை 16 ஆகிய ரகங்கள் தலா, 35 ரூபாய், இட்லி கார் முதல் ரகம் கிலோ, 38 ரூபாய், இட்லி கார் இரண்டாம் ரகம் கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உற்பத்தி பாதிப்பு காரணமாக, இந்த விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் முதல் அதிகபட்சமாக, மூன்று ரூபாய் வரை, இன்னும் சில நாளில் விலை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 7:32 pm

அடக்கொடுமையே சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by krishnaamma Fri Sep 28, 2012 8:10 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அடக்கொடுமையே சோகம்

ஆமாம் ஐயா சோகம் தண்ணீர் இல்லை , மின்சாரம் இல்லை ..... நிம்மதி இல்லை ........... ஒரே இல்லை பாடுதான்............. எங்கே போகிறோம் நாம் ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by யினியவன் Fri Sep 28, 2012 8:12 pm

நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by krishnaamma Fri Sep 28, 2012 8:19 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை

இங்க மட்டும் எல்லாம் இருக்கா இனியவன்? புன்னகை இங்கும் நிறைய இல்லை பாடுதான், நாங்க தமிழகத்தில் இல்லையே தவிர இந்தியாவிலே தானே இருக்கோம் ? சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by Guest Fri Sep 28, 2012 8:44 pm

எகிறும் அல்ல ... எகிறி விட்டது கிலோவிற்கு ரூபாய் 6 முதல் 8 வரை ..
avatar
Guest
Guest


Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:47 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை
தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by கரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 8:57 pm

இது ஒரு புறம் இருக்க அரசு சேமிப்பு கிடங்கில் ஆண்டுதோறும் டன் கணக்கில் தானியம் வீணாகிறதே ?
எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம், அரசு நம்மிடமிருந்து தான் நெல்லை கொள்முதல் பண்ணுகிறார்கள் ஆனால் நியாயவிலை அங்காடியில் கிடைக்கும் அரிசி மட்டும் எப்படி முற்றிலும் மாறுபட்டதாக நிறம் மாறி, வாடை வீசுவது போல கிடைக்கிறது ?,
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by Guest Fri Sep 28, 2012 8:59 pm

KARUR KAVIYANBAN wrote:இது ஒரு புறம் இருக்க அரசு சேமிப்பு கிடங்கில் ஆண்டுதோறும் டன் கணக்கில் தானியம் வீணாகிறதே ?
எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம், அரசு நம்மிடமிருந்து தான் நெல்லை கொள்முதல் பண்ணுகிறார்கள் ஆனால் நியாயவிலை அங்காடியில் கிடைக்கும் அரிசி மட்டும் எப்படி முற்றிலும் மாறுபட்டதாக நிறம் மாறி, வாடை வீசுவது போல கிடைக்கிறது ?,

கேளுங்க அண்ணே ... இது மாதிரி நாலு பேரு அரசங்காத பாது கேட்கணும் .. அதுக்கு ஆள்பவன் தமிழனா இருக்கனும் ..
avatar
Guest
Guest


Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by krishnaamma Fri Sep 28, 2012 9:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் தான் பெங்களூரில்
இருந்து கொண்டு எங்கள படுத்தறீங்க இப்படி. புன்னகை
தெரியாத்தனமா என் வீட்டை கோவையில் வாங்கிவிட்டேன், பெங்களூர்ல வாங்காமே. இப்ப எண்டா இந்த தப்பை பண்ணினோம் என்று தூக்கமே வரமாட்டேன்கிறது யினியவன் சோகம்

நான் பெங்களுரிலே வாங்கிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும் Empty Re: மின் தடையால் 80 சதவீத ஆலைகள் மூடல்: அரிசி விலை எகிறும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவில் பேரழிவு: சர்க்கரை ஆலைகள் மூடல்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்: பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்!
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum