புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
92 Posts - 61%
heezulia
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
1 Post - 1%
viyasan
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
19 Posts - 3%
prajai
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இல்லறம் !! Poll_c10இல்லறம் !! Poll_m10இல்லறம் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறம் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Sep 28, 2012 8:40 pm

---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---


கடமைகளையெல்லாம் விடாமல் செய்து வா ; ஆனால் உள்ளத்தை மட்டும் இறைவனிடம் இருத்து ! மனைவி , மக்கள் , தந்தை , தாய் அனைவருடனும் சேர்ந்து வாழ் ! அவர்களுக்கு தொண்டுகள் செய் ! அவர்களிடம் மிகவும் அன்புடன் பழகு ! ஆனால் அவர்கள் உண்மையில் உணக்கு சொந்தமானவர்களல்ல என்பதை மறக்காதே !

பணக்காரர்களின் வீட்டு வேலைகாரி அந்த வீட்டின் வேலைகளையெல்லாம் செய்கிறாள் ; ஆனால் அவளூடைய சிந்தனையெல்லாம் தன் சொந்த வீட்டின் மீதே உள்ளது ! எஜமானரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே வளர்க்கிறாள் ; அவர்களை கண்ணே பொன்னே என்றெல்லாம் கொஞ்சுகிறாள் ! ஆனால் அந்த குழந்தைகள் தனக்கு சொந்தமே அல்ல என்பதை அவளுடைய உள்ளம் நன்றாக அறியும் !

ஆமை நீரில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கிறது ; ஆனால் அதன் எண்ணமெல்லாம் நதிக்கரையில் அதன் முட்டைகள் கிடக்கிற இடத்தில் இருக்கும் ! அதுபோல உனது கடமைகள் அனைத்தையும் செய் : ஆனால் மனதை மட்டும் இறைவனிடம் வை !

முட்செடிகளை தின்பதில் ஒட்டகத்திற்கு அலாதி ஆனந்தம் ! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும் அது மேலும் மேலும் முட்செடிகளை தின்னவே முயலுகிறது ! அதுபோல உலகியல் மனிதன் எவ்வளவோ துயரையும் வேதனையையும் அனுபவிக்கிறான் ! ஆனால் ஒரு சில நாட்களில் அதையெல்லாம் மறந்து விட்டு ; மீண்டும் பழைய போக்கிலேயே வழ்வதற்கு தலைப்படுகிறான் !

உன்னுடைய சொந்த மதத்தில் நிலைத்து நில் ; ஆனால் மதவெறி , சகிப்பற்ற தன்மை , பிறமத வெறுப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடு !

கண்ணாமூச்சி விளையாட்டில் நீ ஒருதடவை தாய்ச்சியை தொட்டு விட்டால் அதன் பிறகு உனக்கு ஆபத்து இல்லை ! அதுபோல இறைவனுடன் தொடர்பை -- உறவாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டோமானால் அதன் பின்னர் இல்லறத்தில் -- உலகில் பயமின்றி வாழலாம் !

மனம் பால் போன்றது ! அதனை தண்ணீராகிய உலகத்தில் சேர்த்தாயானால் இரண்டும் கலந்து போகும் ! முதலில் பாலை அமைதியான ஒரு இடத்தில் வைத்து அதை தயிராக உறைய விடவேண்டும் ! பிறகு அதிலிருந்து வெண்ணெயை கடைந்து எடுக்க வேண்டும் ! வெண்ணெயை நீரீல் வைத்தால் அது கலப்பதில்லை ; மிதக்கிறது ! அதுபோல் தனிமையில் சாதனைகள் செய்து மனம் என்னும் பாலிலிருந்து ஞானம் , பக்தி ஆகிய வெண்ணெயை கடைந்தெடு ! உலகமாகிய நீரில் அவற்றை தாராளமாக மிதக்க வைக்கலாம் !அவை உலகுடன் கலக்காது !

சிலர் ஞானத்தைப்பற்றி கேட்டுள்ளனர் ! ஒரு சிலரே அதை சுவைத்துள்ளனர் ! வெகு சிலரே அதை உணர்ந்து அனுபவிக்கின்றனர் ! இறைவனுடன் தொடர்பு உண்டான பிறகே மன அமைதி கிடைக்கும் ! அவருடைய வார்த்தை கிடைத்தாலோ ஆனந்த அனுபவம் உண்டாகும் ! ஆன்ம பலமும் இறைவனால் பயன்படுத்தப்படுகிற அனுபவமும் உண்டாகும் !

ஒரு கையால் கடமையை செய் ! மறு கையால் கடவுளை பற்றிக்கொள் !

கடவுள் உன்னை உலகில் வைத்துள்ளார் ! நீ என்ன செய்ய முடியும் ? எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணித்து விடு ! அவருடைய திருவடிகளில் பணிந்து கிட ; அப்போது எந்த குழப்பமும் உன்னை மேற்கொண்டுவிடாது ! கடவுளே எல்லாவற்றையும் செய்கிறார் -- பார்த்துக்கொள்ளுகிறார் என்பதை உணர்ந்து கொள்வாய் ! கடவுளே எனக்கு எல்லாமும் என்பது உள்ளனுபவமாகி ஞானமும் பக்தியும் அருள வேண்டும் என கண்ணீர் மல்க பிரார்திக்கிற நிலை உருவாக வேண்டும் !

இல்லறத்தார்கள் இடையிடையே சத்சங்கத்தை நாடி செல்லுவது மிகவும் அவசியம் ! பிறவிப்பெருங்கடலில் அல்லாடுகிற இல்லறத்தாரின் துன்பத்தை சாதுக்களின் -- மகான்களின் செர்க்கை பெருமளவில் தணிக்கும் ! சாதுக்களை -- மகான்களை தரிசிக்க ஒருபோதும் வெறும் கையுடன் போகக்கூடாது ! ஒரு சிறு பழமே ஆனாலும் சரி ; பெரியவர்களை காண செல்லும் போது ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டே போக வேண்டும் !

உயிர்களிடம் அன்பு , மெய் அடியார்களுக்கு சேவை , இறைவனை துதித்தல் - இவை இல்லறத்தாரின் கடமைகள் !

பணம் நமக்கு தருவதெல்லாம் சோறும் கறியும் மட்டுமே ! பணத்தையே எல்லாமுமாக கருதாதே !

இடையறாத சாதனைதான் வெற்றிக்கு வழி ! பெண்கள் அவல் இடிப்பதை பார்த்திருக்கிறேன் ; குழந்தைகளுக்கு பால் கொடுப்பார்கள் , அவல் வாங்க வருவோருடனும் விலையும் பேசுவார்கள் , அதே நேரத்தில் உலக்கை விழுந்து கைகால்கள் நசுங்காமலும் அவலை இடித்துக்கொண்டே இருப்பார்கள் !

கடவுளை அடைவதற்கு சில அனுகூலங்கள் வேண்டும் ! அவை நல்லோர் தொடர்பு , விவேகம் , உத்தம குருவின் ஆசிகள் என்பன ஆகும் !

உலகில் தந்தையும் தாயும் பரமகுரு !அவர்கள் உயிரோடு இருக்கு மட்டும் முடிந்த அளவு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் ! பராமரிக்க போதிய பண வசதி அற்றவர்கள் கூட தனிமையில் அவர்களை எண்ணி அழவேண்டும் ; அப்போதுதான் நாம் அவர்களுக்கு பட்டுள்ள கடனை பூர்த்தி செய்ய முடியும் !!
விவேகத்துடன் செயல்பட வேண்டும் !அவ்வப்போது உலகின் அமளி துமளிகளிலிருந்து விலகி தனிமையில் சாதனைகள் புரிந்து இறைவனை அடைய முயலவேண்டும் ! அப்போதுதான் லட்சிய இல்லறத்தார்களாக பரிணமிக்க முடியும் !


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 6:52 am

நல்ல தகவல், நன்றி சார்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 7:33 am

ஆன்மீகத்தின் வாயிலாக அறிவு வளர்க்கும் சுடருக்கு நன்றிகள் பல

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 8:58 am

இல்லறமா இல்லாத அறமா, ஏன் சார் இப்படி?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக