ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

5 posters

Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by சிவா Wed Sep 26, 2012 10:27 am




விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இதில் மண் எடுக்க முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன், தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன், சதானந்தம் ஆகியோர் உரிமம் பெற்றிருந்தனர். இதில் முறைகேடாக மணல் அள்ளியதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து பொன்முடியைக் கைது செய்ய போலீசார் ஐதராபாத் விரைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 2.46 லட்சம் யூனிட் மணல் கூடுதலாக வெட்டி எடுத்திருப்பதாக தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொன்முடி உள்பட 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் ஐதராபாதில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐதராபாத் விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார்.


செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by சிவா Wed Sep 26, 2012 10:28 am

நில ஆக்ரமிப்பு: கார்த்தி சிதம்பரம் இடத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

கார்த்தி சிதம்பரம் மீது கொடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் அவரது இடத்தின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாயார் நளினி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமா௦ன நிலம் நீலாங்கரையை அடுத்த முட்டுகாட்டு அருகே கரிக்காட்டு குப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியில் அந்த இடத்தை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை மற்றும் ஆற்றங்கரையை ஒட்டிய 11 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக கார்த்தி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் பல காலமாக மீன் பிடிப்பதற்க்காக அவ்வழியாக சென்று வருவதால் தங்களுக்கு பாதை வேண்டும் என்று தெரிவித்தபோது கார்த்தி தரப்பினர் மிரட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், இந்த நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இடத்தை 20 பேர் கொண்ட குழு அங்கு சென்று சோதனை நடத்தியது.

இதில் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள் ,கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் 100 மீட்டர் வரை ஆக்கிஅரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை அதிகாரிகள் இன்று இடித்தனர்.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பில் காவல்துறையிநர் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.


செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by பூவன் Wed Sep 26, 2012 12:20 pm


கல்லில் தப்பித்த பொன்முடி மணலில் சிக்கினாரா?

கல் கடத்தல் வழக்கில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன்முடி, மணல் மேட்ட ரில் மாட்டிக்கொண்டார்!

கடந்த 23-ம் தேதி காலை 9 மணிக்கு, பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை போலீஸ் தனது வளையத்தில் கொண்டு வந்ததுமே விழுப்புரத்தில் விறுவிறு திருப்பங்கள். வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் முறைகேடு செய்தாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜெயச்சந்திரனி டம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி, அவருடைய மகன் பொன்.கௌதம சிகாமணி, அவருடைய மைத்துனர் ராஜமகேந்திரன் மற்றும் சதானந்தம் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.






பூத்துறை கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில சுமார் 25 ஏக்கர் இடம் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இருக்கிறது. இதே இடத்தில் பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனுக்கும் இடம் இருக்கிறது. இவர், பொன்முடிக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கமானவர். பொன்முடி கனிம வள அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கௌதம சிகாமணிக்குக் குவாரி நடத்த அனுமதி வழங்கினார். செம்மண் எடுப்பதற்காக 15.10.2007 முதல் 14.10.2010 வரைதான் அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், ஜெயச்சந்திரனும் கௌதம சிகாமணியும் கடந்த தி.மு.க. ஆட்சி முழுவதும் செம்மண் எடுத்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகும், செம்மண் எடுப்பதைத் தொடர்ந்தனர்.

இந்தப் பணியில் கௌதம சிகாமணியோ, ஜெயச் சந்திரனோ நேரடியாகத் தலையிடுவது கிடையாது. புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் அமுதா எர்த் மூவர்ஸ் மற்றும் அமுதா டிராவல்ஸ் நடத்திவரும், சதானந்தம் என்பவருடைய வண்டியில்தான் செம்மண் ஏற்றிச் செல்வார்கள். ஒரு இடத்தில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வாங்கியவர்கள், மூன்று இடங்களில் எடுத்தனர். 20 அடி மணல்தான் எடுக்க வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால், இவர்கள் 90 அடி வரை மணல் எடுத்து இருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தாசில்தார் தலைமையில் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத் துள்ளனர்'' என்றார்கள்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ''வானூர் தாசில்தார் குமாரபாலன் கொடுத்த புகாரின் பேரில், மணல் குவாரியில் நடந்த முறைகேடு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இந்த வழக்கில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்காக பொன்முடியை முதல் குற்றவாளியாகவும், மணல் குவாரி முறைகேட்டுக்காக கௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் மற்றும் சிலரைக் குற்றவாளிகளாகவும் சேர்த்து இருக்கிறோம். ஜெயச்சந்திரனை விசாரணைக்காக அழைத்தோம். மற் றவர்களை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகிறோம்'' என்றார்.

பொன்முடிக்கு நெருக்கமான வட்டாரத்தினரோ, ''அ.தி.மு.க. அரசு ஒரு பொய்யான வழக்கை ஜோடித்து இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பொன்முடி தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் சென்று எஸ்.பி-யைச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். வழக்கு போடப்பட்ட தகவல் தெரிந்ததும் எங்கள் மாவட்டச் செயலாளர் கைதாவதற்காகக் கிளம்பி வந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷன்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தக வல்கள் கிடைத்ததால், முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்கள்.

''இதற்குமுன், விழுப்புரம் மாவட்ட ஆர்.டி.ஓ-வாக இருந்த பிரியா, இந்த மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, பொன்முடி தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்ததாம். இதனால், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது, உயர் அதிகாரிகள் மாறிவிட்ட நிலையில், மீண்டும் அதைத் தூசிதட்டி எடுத்து இருக்கின்றனர். கடந்த ஆட்சியின்போது, தாசில்தார் குமாரபாலன் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது, அவரை வேண்டும் என்றே மூன்று இடங்களுக்கு மாற்றினார்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் பொன்முடிதான். அதனால், அதற்குப் பழிவாங்கும் விதமாக, வசமாக ஆப்பு வைத்திருக்கிறார். இதில் இருந்து பொன்முடி தப்பிக்க முடியாது'' என்று கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

வேறு சில குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 12:25 pm

மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by பூவன் Wed Sep 26, 2012 12:33 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...உப்பைத் தின்றவன் தண்ணி குடிக்கனுமோ இல்லியோ ? மகிழ்ச்சி

அதுவும் உப்பு தண்ணி தான் அய்யா கிடைக்கும் /////
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by யினியவன் Wed Sep 26, 2012 12:41 pm

உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.

செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by பூவன் Wed Sep 26, 2012 12:42 pm

யினியவன் wrote:உப்ப உப்ப (உடல்) நம்ம பணத்தை தின்றவன் தண்ணி குடிக்கிறான்.

செம்மண் அவருக்கு பொன் மண் இப்ப வாயில மண்.

மொத்தமா இனி மண்ணோடு மண் தான் .............
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by அருண் Wed Sep 26, 2012 12:49 pm

இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள். என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by பூவன் Wed Sep 26, 2012 12:51 pm

அருண் wrote:இன்னும் விட்டிருந்தால் தமிழ் நாட்டையை சுத்தமாக சுரண்டி இருப்பார்கள். என்ன கொடுமை சார் இது
மண்ணு கல்லையும் சுரண்டி விட்டார்கள் , இன்னும் என்ன சுரண்ட இருக்கிறது .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்! Empty Re: செம்மண் மோசடி: பொன்முடியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டான 4 சிறுவர்களை போலீசார் கைது செய்ய திட்டம்
» கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» "ஈமு' கோழி மோசடி: கல்லாக்கட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!!
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum