Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
5 posters
Page 1 of 1
ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
ஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல் கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு! அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்! பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தக் 320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறுமதியில், ஐந்து மடங்கால் குறைந்து நிற்கின்றது என்று சொல்லும்போது, ஈபெல் கோபுரம் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி எதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மதிப்புக் கணிப்பீட்டைச் செய்தார்கள்? இந்த நாட்டின் அற்புதமான சின்னங்கள் எந்த அளவுக்கு மற்றையோரைக் கவர்கின்றன, இது எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது போன்றவற்றையெல்லாம் மனிதில் வைத்துக் கொண்டுதான் கணிப்பீடு இடம்பெற்றிருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது, இந்த அடையாளச் சின்னங்கள் இல்லையென்றால், அந்தந்த நாடுகளுக்குப் பேரிழப்புத்தான் என்பது தெரிகின்றது.
1889இல்தான் பிரெஞ் புரட்சியின் ஞாபகார்த்தமாகவே இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. இந்தக் கோபுரத்தை வடிவமைத்தவர் பொறியியலாளர் Gustave Eiffel இன் நிறுவனம் என்பதால் அவர் பெயரால் இக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1930இல் நியூ யோர்க் நகரின் Chrysler கட்டடம் எழுப்பப்படும் வரை, ஈபெல் கோபுரமே, உலகின் மிக உயர்ந்த கோபுரமாக இருந்து வந்திருக்கின்றது.
இங்கே ஒரு வேடிக்கையான விடயத்தைச் சொல்லியாக வேண்டும். இந்தக் கோபுரம் 20 வருடங்களுக்கு அழியாது நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுப்பப்பட்டதாம். ஆனால் இதுவே ஏறத்தாழ 120 வருடங்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது என்பது நம்ப முடியாதது ஆனால் நிஜமான சங்கதி! உலகிலேயே மிக அதிகமான தொகையினரால் பார்க்கப்படும் உலோகத்தாலான ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக உலகில் இந்தக் கோபுரமே நிமிர்ந்து நிற்கின்றது.
300வேறு வேறு உலக நாடுகளின் முத்திரைச் சின்னங்கள், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுள்ளன. இந்தப் பெரிய தொகையில் ஈபெல் கோபுரம் முதலிடத்தைப் பிடித்தது என்பது பெரியெதாரு சாதனைதான். இந்த முடிவை சில இத்தாலிய பத்திரிகைகள் வரவேற்கவில்லை. விமர்சித்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும. 1944இல் ஹிட்லர் ஆக்ரமிப்பின்போது, இக் கோபரம் அழிக்கப்படாமல் தப்பியது நமது பெரிய அதிஸ்டந்தான்!. பிரான்சிலுள்ள முக்கிய அடையாளச் சின்னங்களையெல்லாம் அழித்து விடுங்கள் என்று ஹிட்லர் கொடுத்த கட்டளை அதிகாரிகளால் அப்பொழுது நிறைவேற்றப்படாததால்தான், இன்றும் இந்தக் கோபுரம் நம்மிடையே உயர்ந்து நிற்கின்றது. எதிரிகளின் வருகையை கோபுரத்திலிருந்து வசதியாகப் பார்க்க முடியும் என்பதும் அழிவிலிருந்து மீண்டதற்கு இன்னொரு காரணம்!
உல்லாசப் பயணிகள் இந்தக் கோபுரத்தை 7 வருடத்திற்கு ஒரு தடவை பெயின்ட் அடித்து வருகின்றார்கள். இந்த வேலையை முழுமையாக முடிக்க 6 தொன் எடையுள்ள பெயின்ட் தேவைப்படுகின்றது. கோபுரம் துருப்பிடிக்காமல் இருக்கவே இந்த முன் ஏற்பாடு! இந்தக் கோபுரத்தில் ஏறுவதானால் மூன்று நிலைகள் உண்டு. தெற்காக உள்ள தளத்தில் ஆரம்பிக்கும் முதலாவது இரண்டாவது நிலைகளுக்கு படிகள் மூலம் ஏறிச் சென்று விடலாம். மூன்றாவது நிலைக்குச் செல்வதானால் லிப்ட் உபயோகித்தாக வேண்டும். லிப்டில் இருந்து வெளியேறியதும், 15 படிகள் ஏறினால்தான், உச்சியில் நின்று நகரைப் பார்க்கும் நிலையத்தை எட்ட வசதியளிக்கும்.
இன்னொரு சுவையான சம்பவத்தையும் இங்கே முடிவில் சொல்லிவிடலாம். 20 வருடததிற்கான கட்டடம் என்று முடிவெடுக்கப்பட்டு அ10ரம்பத்தில் இதற்கு பாரிஸ் நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், 20 வருட முடிவில் இக் கட்டடத்தை அடியோடு அழிப்பதற்கான உத்தரவு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றதாக இக் கோபுரம் இருந்தமையால், அழிக்கக் கொடுக்க உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
1000 வருடங்கள் தொன்மையான இலண்டன் கோபுரந்தான் பிரித்தானியாவின் அதிக மதிப்பு வாய்ந்த அடையாளச் சின்னமாக இருக்கின்றது. இதன் மதிப்பை56 பில்லியன் பவுண்ட்ஸ் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
பாரிஸ் நகர அதிகாரிகளிடமும் ஹிட்லரிடமும் இரண்டு தடவைகள் தப்பிப் பிழைத்து ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட இந்த அற்புத கோபுரம், முதலிடத்தைத் தட்டியிருப்பதில் அதிசயமில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
அந்தந்த மதிப்புகளுக்கேற்ப கணித்த, ஐரோப்பாவின் முதல் 7 அடையாளச் சின்னங்கள் இதோ!
1. Eiffel Tower, Paris: 344 billion pounds
2. The Colloseum, Rome: 72 billion pounds
3. The Sagrade Familia Cathedral, Barcelona: 71 billion pounds
4. The Duomo Cathedral, Milan: 65 billion pounds
5. The Tower of London: 56 billion pounds
6. The Prado Museum, Madrid: 46 billion pounds
7. Stonehenge, UK: 8.3 billion pounds
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் 2 லட்சம் அதாவது வருடம் 73 மில்லியன்ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
பாயிண்டு சரி அனியா...அதுக்கு ஏன் அப்படி ஒரு சிரிகேசவன் wrote:திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் 2 லட்சம் அதாவது வருடம் 73 மில்லியன்ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
பாயிண்ட்டு சரி இல்லை அய்யா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிண்டு சரி அனியா...அதுக்கு ஏன் அப்படி ஒரு சிரி
அவர்கள் சொல்லுவது அந்நிய தேசத்து பயனியர்.
திருப்பதிக்கு வருவது 99% நம் நாட்டினரே.
அதோடு அவர்கள் சொல்லுவதும் ஐரோப்பாவில் இதுவே கூடுதல் என்று.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
யினியவன் wrote:பாயிண்ட்டு சரி இல்லை அய்யா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிண்டு சரி அனியா...அதுக்கு ஏன் அப்படி ஒரு சிரி
அவர்கள் சொல்லுவது அந்நிய தேசத்து பயனியர்.
திருப்பதிக்கு வருவது 99% நம் நாட்டினரே.
அதோடு அவர்கள் சொல்லுவதும் ஐரோப்பாவில் இதுவே கூடுதல் என்று.
அடடே பாயிண்டுக்கே பாயிண்டா இதுதான் பாயின்ட் டு பாயின்ட்டோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
நாமக்கல் டு புழல் - பாயிண்ட்டு பாயிண்ட்டு...balakarthik wrote:அடடே பாயிண்டுக்கே பாயிண்டா இதுதான் பாயின்ட் டு பாயின்ட்டோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
நீங்கள் சொல்வதும் சரிதான். பாயிண்டிலேயே அடிக்கிறீங்கயினியவன் wrote:பாயிண்ட்டு சரி இல்லை அய்யா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிண்டு சரி அனியா...அதுக்கு ஏன் அப்படி ஒரு சிரி
அவர்கள் சொல்லுவது அந்நிய தேசத்து பயனியர்.
திருப்பதிக்கு வருவது 99% நம் நாட்டினரே.
அதோடு அவர்கள் சொல்லுவதும் ஐரோப்பாவில் இதுவே கூடுதல் என்று.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீங்கள் சொல்வதும் சரிதான். பாயிண்டிலேயே அடிக்கிறீங்க
அவர்த்தான் இங்கே ஒரு பெரும் புள்ளியாசே அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» ஷாப்ட்டஸ்ப்ரி நினைவுச் சின்னம்
» மாவீரர் நினைவுச் சின்னம்
» நினைவுச் சின்னம் - சிங்கிள் வரி சிறுகதைகள்
» மண்டேலாவின் வித்தியாசமான நினைவுச் சின்னம்!
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
» மாவீரர் நினைவுச் சின்னம்
» நினைவுச் சின்னம் - சிங்கிள் வரி சிறுகதைகள்
» மண்டேலாவின் வித்தியாசமான நினைவுச் சின்னம்!
» மெரினா கடலுக்கு நடுவே 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' - அனுமதி வழங்கிய மத்திய அரசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|