புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_m10இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 1:05 pm

இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே! / கோ. சரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணி மேரி கல்லூரி, சென்னை / தினமணி

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் காலத்தால் முற்பட்டவரும், தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவரும், முழுமைக்கும் உரை எழுதியவரும் இளம்பூரணரே! "உரையாசிரியர்' என்ற பொதுப்பெயரை சிறப்புப் பெயராகப் பெற்றவர். இத்தகு சிறப்பு வாய்ந்த இளம்பூரணரை ஒரு திறனாய்வாளர் என்று கூறுவது மிகவும் பொருந்தும்.

திறனாய்வாளருக்குரிய பண்புகள்
திறனாய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ""பொதுவாக அழகியல் உணர்வு, கலை இலக்கியத்தை இரசிக்கக்கூடிய, அனுபவிக்கக்கூடிய திறன் இவை திறனாய்வாளனுக்குரிய அடிப்படையான பண்புகள். இலக்கியத்தைப் பற்றியும் பரந்த உலகியல் வாழ்வு பற்றியும் பொதுவான அறிவும், அந்த - அல்லது இதனை ஒத்த பொருள்கள் பற்றிய ஆழமான அறிவும், சரியான புலனுட்பமும், எதிர்கொள்பவற்றில் குறிப்பிடத்தக்கவை கண்டால் அவற்றை பளிச்செனப் பற்றிக்கொள்ளும் துடிப்பான ஆற்றலும், எதிர்வினை நிகழ்வதில் வேகமும், உள்ளார்ந்த அறிவின் கூர்மையும், எதனையும் வகுத்தும் தொகுத்தும் பொதுமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் பார்க்கின்ற பக்குவமும் திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற பண்புகள்'' எனத் "திறனாய்வுக்கலை' என்ற தம் நூலில் தி.சு. நடராசன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பண்புகள் இளம்பூரணர் உரையில் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

சொற்பொருளறிவு
தொல்காப்பிய நூற்பாக்களில் உள்ள புரியாத, கடுமையான சொற்களுக்கு இளம்பூரணர் தமது உரையில், "குயின் என்பது மேகம்', "அழனென்பது பிணம்', "காரகமென்பது கரடி', உரன் என்பது அறிவு', "எழில் என்பது அழகு', "வியப்பென்பது தம்மைப் பெரியராக நினைத்தல்', "அலராவது சொல்லுதல்' "மூங்கா என்பது கீரி', "நவ்வி என்பது புள்ளிமான்' எனப் பல அருஞ்சொற்களுக்குத் தேவையான இடங்களில் பொருள் கூறி விளக்கிச் செல்வதிலிருந்து அவருடைய சொற்பொருளறிவு வெளிப்படுகிறது.

கணக்கியலறிவு
கணித அறிவில் சிறந்த கணக்காயனார், கணிமேதாவியார் முதலிய புலவர் பலர் வாழ்ந்த இலக்கிய உலகில் இளம்பூரணரும் தமது உரையில் கணக்கியல் அறிவினைப் பதிவு செய்யுள்ளார். இதனை, மாத்திரைக்கு இலக்கணம் கூறும்போது (எழுத்து-7) நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைப் பற்றிக் கூறுவதிலிருந்தும் (எழுத்து-437), எண்ணுப் பெயரொடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணரும் புணர்ச்சி பற்றிக் கூறும்போது கழஞ்சு, தொடி, பலம் போன்ற நிறைப்பெயரையும் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு போன்ற அளவுப் பெயர் களையும் குறிப்பிடுவதிலிருந்து அவரது கணக்கியலறிவு புலப்படுகிறது.

வானியலறிவு
மழை, வெப்பம், காற்றழுத்தத்தாழ்வு, புயல் போன்றவற்றைப் பற்றி இன்று வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து கணித்துக் கூறுகின்றனர். ஆனால், இளம்பூரணர் அன்றே தம் உரையில் கோள்நிலை, மழைநிலை பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார். இதனை, புறத்திணையியலில் வாகைத்திணை பற்றிய நூற்பாவில் "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' (பொருள்-74) என்பதற்கு, அறிவன் என்றால் "கணியன்' என்றும், மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதல்' என்பதற்குப் பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன் வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்' என்று இளம்பூரணர் கூறும் உரை விளக்கத்திலிருந்து அவரது வானியல் அறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவியலறிவு
"பரத்தையின் பால் பிரிந்த தலைவன், தலைவிக்குப் பூப்பு நேரும் காலத்தை அறிந்தவுடனே தன் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்(பொருள்-185). பூத்தோன்றி மூன்று நாள் கழித்துப் பின்பு பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியாமல் உறைதல் வேண்டும். ஏனெனில், அது கருத்தோன்றும் காலம்' என்கிறார்.

கலையுணர்வு
கலைகளிலும் இளம்பூரணருக்கு ஈடுபாடு உண்டு என்பதை, அகத்திணையியலில் பிரிவின்கண் தலைமகனுக்குக் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துக் கூறும் நூற்பாவில் (பொருள்-44) "வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு' என்பதற்கு, "வாயான் வகுத்தப் பக்கமாவது ஓதுதல், கையான் வகுத்தப் பக்கமாவது படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும்' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது கலையுணர்வை அறிய முடிகிறது.

மேற்கண்டவற்றிலிருந்து இளம்பூரணரின் பல்துறை சார்ந்த அறிவும், உலகியல் அறிவும் தெளிவாகப் புலப்படுகிறது. இதன் வழி "இளம்பூரணர் உரையும் ஒரு திறனாய்வே' என்ற முடிவுக்கு நாம் வரலாம்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக