ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

+2
ரா.ரமேஷ்குமார்
சிவா
6 posters

Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by சிவா Sun Sep 23, 2012 8:40 am

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Ms01


டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, பிரதமர் மன்மோகன்சிங் எதிரே, சட்டையைக் கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்மோகன்சிங் முன்னிலையில்

டெல்லி விஞ்ஞான் பவனில், ஆசிய பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் வந்திருந்தார்.

மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து மைக் அருகே சென்று பேச முயன்றபோது, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார்.

சட்டையை கழற்றி கோஷம்


உடனே தனது சட்டையைக் கழற்றி கையில் வைத்துக்கொண்ட அவர், மன்மோகன்சிங்குக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பினார். "பிரதமரே திரும்பிப்போ; டீசல் விலை உயர்வை வாபஸ் பெறு'' என்று, தொடர்ந்து சில வினாடிகள் அவர் குரல் எழுப்பினார்.

இந்த திடீர் சம்பவத்தால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் சிறிது நேரம் தனது பேச்சைத் தொடங்காமல் காத்து இருந்தார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கறுப்பு பூனைப்படை பாதுகாவலர்கள், அவருடைய வாயை பொத்தியபடி, குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்

டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கோஷம் எழுப்பியவர் பெயர், சந்தோஷ்குமார் சுமன் (வயது 32) என்றும், கிழக்கு டெல்லியில் சகார்பூர் பகுதியில் வசித்து வருபவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் சுமன், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் டெல்லி வக்கீல்கள் பிரிவு தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். பிரதமர் பங்கேற்ற கருத்தரங்கு டெல்லி சட்ட கல்வி நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முறைப்படி அழைப்பிதழ் பெற்று சுமன் கருத்தரங்கில் பங்கேற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. வக்கீல் சுமனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாலு பிரசாத் கண்டனம்

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சியைச் சேர்ந்த வக்கீல் சுமன் கோஷம் எழுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். சுமன் இடம் பெற்றுள்ள தனது கட்சியின் டெல்லி பிரிவு கிளையை உடனடியாக கலைத்துவிட்டதாகவும் லாலு பிரசாத் அறிவித்து இருக்கிறார்.

வக்கீல் சுமனின் பின்னணி தெரியாமல், டெல்லி தலைவர்கள் அவரை கட்சியில் சேர்த்துவிட்டதாக கூறிய லாலு பிரசாத், சுமன் ஏற்கனவே பிரதமருக்கு எதிராக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார். தான் டெல்லி வந்ததும் கட்சி கிளையை மாற்றி அமைக்கப்படும் என்று கூறிய அவர், சுமனுக்கு டெல்லி பார் கவுன்சில் வழங்கிய அனுமதியை ரத்து செய்யும்படி கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.

சரத் யாதவ் பாராட்டு


அதே நேரத்தில், பீகார் மாநிலத்தில் லாலு கட்சிக்கு எதிரான முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், வக்கீல் சுமன் நடத்தியது சத்யாகிரக போராட்டம் என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

"சுமனின் தைரியத்தை அவருடைய இந்த நடவடிக்கை காட்டுகிறது. இது தனிநபர் சத்யாகிரகம். அவர் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. மத்திய அரசால் சீர்திருத்த நடவடிக்கை என்று அழைக்கப்படும் அறிவிப்புக்கு எதிரான மக்களின் கோபத்தை பிரதிபலித்து இருப்பதாக'' அவர் கூறினார்.

பா.ஜனதா கருத்து

அதே நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும், மக்கள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும், சரத் யாதவ் அழைப்பு விடுத்தார்.

வக்கீல் சுமன் கோஷம் எழுப்பிய சம்பவம், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மீதான மக்களின் கோபத்தை பிரதிபலிப்பதாக, பா.ஜனதா கருத்து தெரிவித்து உள்ளது. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் இந்த தகவலை தெரிவித்தார்.

விசாரணை நடத்த வற்புறுத்தல்

"மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையினால் மக்கள் கோபம் அடைந்து உள்ளனர். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக மக்கள் பல்வேறு முறையில் போராட்டம் நடத்தி வருவதாக'' அவர் மேலும் கூறினார்.

பிரதமர் பங்கேற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இதுபோன்று கோஷம் எழுப்பப்பட்டு இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷாநவாஸ் உசேன் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

தினத்தந்தி


மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 23, 2012 8:56 am

பிரமருக்கு எதிராக நேருக்கு நேர் பேசிய அவரின் தைரியம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று... மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 224747944 மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 224747944 மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 224747944


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by கேசவன் Sun Sep 23, 2012 9:07 am

"பிரதமரே திரும்பிப்போ; டீசல் விலை உயர்வை வாபஸ் பெறு''
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 1357389மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 59010615மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Images3ijfமன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by balakarthik Sun Sep 23, 2012 10:26 am

என்னாது குண்டு கட்டா தூக்கிட்டு போனாங்களா ஆள பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே ஹி ஹி ஹி எல்லாம் ஒரு டவுட்டுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by யினியவன் Sun Sep 23, 2012 11:55 am

இவரு சட்டைய கழட்டி என்ன பண்றது
ஊழல் பெரிச்சாளிகளை தோலுரித்து தெருவில் துரத்தனும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 12:53 pm

இப்படி போறபக்கமெல்லாம் செய்தார்கள் என்றால் கொஞ்சம் சொரணை வரும் என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு Empty Re: மன்மோகன்சிங் எதிரே, சட்டையை கழற்றி கோஷம் எழுப்பியவரால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum