Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
4 posters
Page 1 of 1
கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
ஆசீர்வாதம்
அன்று ராகவனின் முதலாம் கல்யாண நாள். அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மனைவி ராதிகாவுடன் காலையில் கோவில் சென்றுவிட்டு, மாலையில் தன் மாமனார் வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்திருந்தான்.
மாமனார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராதிகாவின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை என அனைவரும் மிக மகிழ்ச்சியோடு இவர்களின் வரவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாலை சுமார் ஐந்து மணி அளவில் ராகவனும் ராதிகாவும் வந்து சேர்ந்தனர். அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வரவேற்றனர்.
"வாங்க, வாங்க ஏன் இவ்வளவு தாமதம்?" என ராதிகாவின் அப்பா கேட்க,
"உங்க பொண்ணாலதான். சீக்கிரம் கிளம்பச் சொன்னால் கிளம்பினால்தானே" என்ற ராகவன் மெல்ல மனைவியை புன்முறுவலோடு பார்த்தான்.
"மாமா, நீங்கள் தான் அலங்காரம் செய்ய நேரம் செலவாகி இருக்கும். அக்கா ஒன்றும் தாமதமாக்கி இருக்க மாட்டாள்." என்றாள் ரமா கிண்டலாக.
"இருக்காது, அக்காவால்தான் தாமதமாகி இருக்கும். எனக்குத் தெரியாதா?" என மோகன் கூற அனைவரும் சிரித்தார்கள்.
அம்மா, என்ன சமையல்? என ராதிகா கேட்க, "சூடா போண்டா போட்டிருக்கிறேன். முதல்ல, மாப்பிள்ளைக்கு கொண்டுபோய் கொடு." என்ற அம்மா ஒரு தட்டில் ஆவி பறக்க நான்கு போண்டா வைத்தாள்.
"போண்டா சூப்பர்" என ரசித்து சுவைத்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு தட்டில் பீட்ரூட் ஹல்வாவோடு ராதிகா வந்தாள். அனைவரும் கலகலப்பாக சாப்பிட்டு முடித்தனர். தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரில் மாமியார் தன் மருமகளை பல வாரங்களாகத் திட்டிக்கொண்டிருந்தாள். ரமாவின் முதுகலை மற்றும் மோகனின் இளங்கலை படிப்பு பற்றி விசாரித்துவிட்டு மெல்ல ராகவன் ராதிகாவைப் பார்த்தான். ஏதோ சொல்ல வந்தவனை ராதிகா யாருக்கும் தெரியாமல் தடுக்க, ரமா மட்டும் இருவரையும் கவனித்துவிட்டாள். பிறகு, பேச்சு வேறு பக்கம் போய் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியா பெற்றது பற்றி பேசினார்கள்.
ஒரு எட்டு மணியளவில், அனைவரும் இரவு விருந்து முடிந்ததும் ராகவனும் ராதிகாவும் கிளம்பத் தயாரானார்கள். இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகையில், ராதிகாவின் அப்பா "அடுத்த திருமண நாளில் மூவராக ஆசீர்வாதம் பெறவேண்டும்" என வாழ்த்தினார். அப்போது, ராகவன் மீண்டும் ராதிகாவை பார்க்க, ராதிகா கண்களால் மறுக்க, ரமா இம்முறையும் கவனித்துவிட்டாள். இருவரும் கிளம்பினர்.
சில வாரங்களுக்குப்பின்னர், ராகவனுக்கு ரமா அலுவலக நேரத்தில் போன் செய்து "மாமா, கொஞ்சம் பேசணும்" என்றாள். ராகவனும் "என்ன, விஷயம்?' எனக்கேட்க, அருகில் உள்ள உணவு விடுதிக்கு வருமாறு அழைத்தாள். இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, ரமா "மாமா, நான் அக்காவிடம் பலமுறை கேட்டும் என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் அன்று வந்தபோது ஏதோ அப்பாவிடம் சொல்ல வந்தீர்கள், ஆனால், அக்கா அதை சொல்ல விடாமல் தடுத்தாள். அது என்ன விஷயம்? சொல்லுங்க" என்றாள். ராகவனும் வேறு வழிஇல்லாமல் ராதிகாவுக்கு தொடர்ந்து வந்த ஜுரம் பற்றியும் அதை மருத்துவர் பரிசோதனை செய்தபோது எதிர்பாராத விதமாக ராதிகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக் கூறியதையும் விளக்கினான். சற்றே அதிர்ச்சியுடன் இருந்த ராமாவிடம் ராகவன் " தயவுசெய்து உன் அப்பா அம்மாவிடம் இந்த விஷயம் பற்றிக் கூறவேண்டாம். அவர்கள் தாங்க மாட்டார்கள்" என்று கேட்டுக்கொண்டான். ரமாவும் ஒப்புக்கொண்டாள். ரமா ஒரு முடிவுக்கு வந்தவளாக வீடு சென்றாள்.
காலம் கிடுகிடுவென ஓட, அடுத்த திருமண நாளும் வந்தது. ஆனால், பழைய உற்சாகம் யாரிடமும் இல்லை. கடைசியில், ராகவனும் ராதிகாவும் ஆசீர்வாதம் வாங்க காலில் விழும்போது ரமா கையில் ஒரு குழந்தையோடு வந்து, இருவரின் பக்கத்தில் குழந்தையையும் ஆசீர்வாதம் வாங்குவதற்கு விழ வைத்தாள். குழந்தையை கண்டதும் எல்லோரும் அதிர்ச்சியுற, மெதுவாக ரமா குழந்தை பற்றி விளக்கினாள்.
அதாவது, அக்காவிற்கு குழந்தைபாக்கியம் இல்லை என்பதையும், அதனால், பெற்றோரின் சம்மதமின்றி காதலித்து மணமுடித்த தன் தோழி விபத்தில் கணவரோடு அகால மரணமடைந்ததால், தோழியின் குழந்தை அனாதை ஆனதையும், பின்பு அக்குழந்தையை முறையாக தத்து எடுத்ததையும் கூறினாள். ராகவன் அவளை கண்ணீர் மல்க நன்றியோடு பாராட்டினான். மாமனார் ஆசீர்வாதம் பலித்தது.
கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
நிறைய ராகவன்களும் ராதிகாக்களும் ரணத்துடன் இன்றும்...
ஆனால் அதேபோல ராமக்களும் சொற்ப அளவில்...
வாழ்த்துகள்...
ஆனால் அதேபோல ராமக்களும் சொற்ப அளவில்...
வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
யினியவன் wrote:பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கதை எண். 007 - ஆசீர்வாதம் (சிறுகதை சின்னத்திருவிழா)
//கருத்து: பெரியவர்கள் ஆசீர்வாதமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் கட்டாயம் பலிக்கும். எனவே, பெரியோரை என்றும் மதிப்போம்.//
ரொம்ப சரி ,அருமையான கதை
ரொம்ப சரி ,அருமையான கதை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கதை எண்.17 - கு( டீ ) (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 16 - இதோ உதவி (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண்.014 - ரத்தக்கண்ணீர் (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 28 -சில மனிதர்கள் ... (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 002 - நொடிமுள் - (சிறுகதை சின்னத்திருவிழா)
» கதை எண். 16 - இதோ உதவி (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|