ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

3 posters

Go down

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sat Sep 22, 2012 9:18 am


கூட்டிச் செல், காட்டிச் சொல்


குணசேகரன் அன்றைய தினசரியில் ஒரு வரி விடாது படித்துக் கொண்டிருந்தார். வேகமாக அவருக்கும் செய்தித் தாளுக்கும் இடையில் நுழைந்த கோபி சொன்னான் - "அப்பா, நீங்களே நியாயம் சொல்லுங்கள். இந்த அம்மா பண்ணுவது சரியான்னு? தினமும் என்னை எவ்வளவு வேலை வாங்குகிறார்கள் தெரியுமா? காலையில் எழுந்து இரவில் படுக்கும்வரை எத்தனை வேலைகள் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? "
"என்ன?" என்பது போல் கோபியைப் பார்த்தார் குணசேகரன்.

கோபி தொடர்ந்தான் - காலையில் எழுந்ததும் படுக்கையை மதிக்கச் சொல்வது, பால் வாங்கி வரச் சொல்வது, வீடு சுத்தம் செய்யச் சொல்வது, கடைக்குச் சென்று காய்கறி வாங்கிவரச் சொல்வது, படிக்கச் சொல்வது, எழுதச் சொல்வது" என்று மூச்சிறைக்க சொல்லிக் கொண்டே போனான்.

குணசேகரன் அவன் கேள்விகளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல், அவனிடம் "நாளை நான் உன்னை ரெண்டு முக்கியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்லப் போகிறேன்" - என்றார்.
உடனே மகிழ்ச்சியோடு சரி என்பதுபோல் தலையாட்டினான் கோபி.
மறுநாள் காலை வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட கோபி, குளித்துவிட்டு வெளியே செல்லத் தயாரானான்.
குணசேகரனும் தயாராகி இருவரும் வெளியே கிளம்பினர்.
"அம்மா, நான் போயிட்டு வரேன்" என்று முறையாக ஜானகியிடம் சொல்லிவிட்டு, துள்ளி குதித்து அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான் கோபி.

குணசேகரனும், கோபியும் முதலில் ஒரு மலைப்பகுதிக்கு பக்கத்தில் சிலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்தனர். அங்கு முதலில் மலைப்பகுதியிலிருந்து வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள் பல அளவுகளில் தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றின் அளவுகளுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறு அவை பலவகை சிலைகள் செய்வதற்கு ஏதுவாக பிரிக்கப்பட்டன. பின்பு, குணசேகரன் கோபியை முதலில் அம்மி, உரல் செய்யும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாறைகள் முறையே அம்மி மற்றும் உரல் முதலியவற்றின் அளவுகள் வரையப்பட்டு முறையாக வெட்டி உருவாக்கப்பட்டன. மற்றொரு பகுதியில் சாமிசிலைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கு சென்ற இருவரும் தூரமாக அமர்ந்து சிலைகள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் பாறைகள் குத்துமதிப்பாக சதுரமாகவும், செவ்வகமாகவும் உடைத்தேடுக்கப்பட்டன. பின்பு மற்றொரு பகுதியில் அவை திறமைவாய்ந்த கல்தச்சர்களால் மேலும் செதுக்கப்பட்டு பாதி உருவத்தை அடைந்தன. பின்பு, அவை மற்றொரு பகுதியில் மேலும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் சிலையாகப் பரிமளித்தன. கடைசியாக அவை பொருளின் தன்மைக்கேற்ப பல வாகனங்களில் பல விற்பனை தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையெல்லாம் கூர்ந்து கவனித்த கோபி தன் தந்தையிடம் "இவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்?" என்று வினவ, அவரும் "இவற்றை உருவ அமைப்புக்கேற்ப வேறு வேறு விற்பனை தளங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்" என்றார்.

"இவற்றின் விலைகள் என்னவாக இருக்கும்?" எனக்கேட்ட கோபியிடம் "வா, சென்று காணலாம்" என்று கூறி, அவற்றின் விற்பனை தளங்களுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபி அம்மி, உரல் போன்றவற்றின் விலை குறைவாக இருப்பதையும், சிலைகளின் விலை அதிகமாக இருப்பதையும் கண்டான். மேலும், சமுதாயத்தில் அம்மிக்கும் சிலைகளுக்கும் உள்ள மதிப்பை குணசேகரன் மகனுக்கு கண்கூடாக விளக்கினார். அன்று காலதாமதமானதால் இருவரும் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

மறுநாள், அதிகாலையிலேயே விழித்த கோபி மீண்டும் அப்பாவுடன் செல்லத் தயாரானான். இப்போது, அவர்கள் சென்ற இடம் 'வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை'. அங்கு கோபி எவ்வாறு ஒரு கருப்புக்கல் பல பயிற்சிகளை, நிலைகளை கடந்து வைரமாக பரிமளிக்கிறது எனக் கண்டான். பின்பு, வைரநகைகள் விற்பனை செய்யும் இடத்தில் வைரத்தின் மதிப்பை குணசேகரன் அவனுக்கு விளக்கினார். பின்னர், இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டுக்கு வந்ததும் கோபி தான் கண்ட அனைத்தையும் தன் அம்மாவிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்போது, அவன் அம்மா ஜானகி "நீ, அம்மி, உரல் போல விலை போக விரும்புகிறாயா? அல்லது சிலையாகவும் வைரமாகவும் பரிமளிக்கப் போகிறாயா?" எனக் கேட்க, உடனே, கோபி "நான் சிலையாகவும், வைரமாகவுமே விரும்புகிறேன்" என்றான்.

"அப்படியானால், அதற்கேற்ப உன்னை பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?" என குணசேகரன் கேட்க, "அப்பா, நான் தயார்" என்று கூறிய கோபியின் கண்களில் அம்மா ஏன் அத்தனை வேலைகளை சொல்கிறாள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டதை, இருவரும் கண்டனர்.

கருத்து: எப்போது உன்னை நீ பல பயிற்சிகளுக்கு உட்படுத்திக் கொள்கிறாயோ, உன் நிலை சமுதாயத்தில் உயரும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by யினியவன் Sat Sep 22, 2012 9:55 am

பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Guest Tue Oct 16, 2012 8:12 pm

யினியவன் wrote:பாஸ் பூட்ட மறந்துட்டீங்களே?

புரியவில்லை அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Thu Oct 18, 2012 8:57 pm

நல்ல கதை புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது போல த்தான் குழந்தைகளுக்கு பக்குவமாக சொல்லித்தரனும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 006 - கூட்டிச் செல், காட்டிச் சொல் (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum