Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
5 posters
Page 1 of 1
சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவையாவன.
௧.திருவுந்தியார்
௨. திருக்களிற்றுப்படியார்
௩. சிவஞான போதம்
௪. சிவஞான சித்தியார்
௫. இருபா இருபஃது
௬. உண்மை விளக்கம்
௭. சிவப்பிரகாசம்
௮. திருவருட்பயன்
௯. வினா வெண்பா
௧௦. போற்றிப் பஃறொடை வெண்பா
௧௧. கொடிக்கவி
௧௨. நெஞ்சு விடு தூது
௧௩. உண்மை நெறி விளக்கம்
௧௪. சங்கற்ப நிவாரணம்.
இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று
என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.
இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.
திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624
624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.
இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர்.
இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.
(தொடரும்)
௧.திருவுந்தியார்
௨. திருக்களிற்றுப்படியார்
௩. சிவஞான போதம்
௪. சிவஞான சித்தியார்
௫. இருபா இருபஃது
௬. உண்மை விளக்கம்
௭. சிவப்பிரகாசம்
௮. திருவருட்பயன்
௯. வினா வெண்பா
௧௦. போற்றிப் பஃறொடை வெண்பா
௧௧. கொடிக்கவி
௧௨. நெஞ்சு விடு தூது
௧௩. உண்மை நெறி விளக்கம்
௧௪. சங்கற்ப நிவாரணம்.
இவற்றை
உந்திக் களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் – வந்த அருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று
என்ற பழைய வெண்பா ஒன்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.
இவற்றுள் சிவஞான போதம் என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் தலைமணி நூல். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி, அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும் நுட்பமும் அமையச் சித்தாந்த கருத்துகளை முழுமையாக விளக்கும் முதல்நூல் இது.
திருக்குறளை விட சிவஞான போதம் மிகவும் சுருங்கியது.
அதன் சுருக்கம் வருமாறு:
சூத்திரம்(நூற்பா): 12
வரிகள்: 40
சொற்கள்: 216
எழுத்துக்கள்: 624
624 எழுத்துக்களிலேயே எல்லாக்கருத்துக்களையும் செறிவாகக் கூறிய ஒரு நூல் உலகிலேயே இது ஒன்றுதான் என்று கூறலாம்.
இத்தகைய ஒப்புயர்வற்ற முழுமுதல்நூலைச் செய்தருளியவர் மெய்கண்டார்; இந்நூலாலும் பிறவாற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிய உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும் தங்கள் நூல்களாலும் உபதேசங்களாலும் எங்கும் சித்தாந்தத்தினை விளங்கச் செய்தனர்.
இதன் பெருமையைத் “திருக்குறள் ஆகிய தமிழ் வேதம் பசு; திருமூலர் திருமந்திரம் ஆகிய தமிழ் ஆகமம் அந்தப் பசுவின் பால்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என்னும் நால்வரின் பாடல்களாகிய திருமுறைகள் அப்பாலின் நறுநெய்; மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் அந்நெய்யின் இனிய சுவையாகும்” என்று பெரியோர்கள் பாராட்டியுள்ளனர்.
(தொடரும்)
Last edited by சாமி on Wed Dec 12, 2012 8:32 pm; edited 2 times in total
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
நன்று சாமி அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
அருமை தொடர் சாமி ஐயா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
கடவுள் வணக்கம்
பாடல் எண் : 1
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.
படிக்க வசதியாக :
கல்லால் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே
பொழிப்புரை :
மலைவு (உள்ளவர்களுக்கு) மலைவு இல்லார் கல்லால் நீழல் (கீழ் இருந்து) அருளிய (வற்றைச் சொல்லுவதற்கு) நல்லார் (கள்) பொல்லார் (உடைய) இணைமலர் (களை) புனைவரே.
மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன், மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து, அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க, நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன், பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின், இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, புனைவரே: வணங்குவார்களே, அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)
பாடல் எண் : 1
கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.
படிக்க வசதியாக :
கல்லால் நிழல் மலைவு
இல்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே
பொழிப்புரை :
மலைவு (உள்ளவர்களுக்கு) மலைவு இல்லார் கல்லால் நீழல் (கீழ் இருந்து) அருளிய (வற்றைச் சொல்லுவதற்கு) நல்லார் (கள்) பொல்லார் (உடைய) இணைமலர் (களை) புனைவரே.
மலைவு: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வேதங்களிலே உள்ள உயர்ந்த கருத்துக்கள் பற்றி ஐயப்பாடு உள்ளவர்களுக்கு, எந்தவித ஐயப்பாடும் திரிபும் இல்லாத, அந்த வேதங்களைத் தோற்றுவித்தவனாகிய ஈசன், மலைவு இல்லார் கல்லால் நீழல்: அருள் வீழ்ச்சியின் வடிவாகிய ஆலமரத்தின் நிழலிலே தென்முக கடவுளாக அமர்ந்திருந்து, அருளிய: அந்த ஐயப்பாடுகளை நீக்கும் வண்ணம் விளக்கமாக அருளிச் செய்தவற்றை இங்கு நான் எடுத்துரைக்க, நல்லார்: நல்லோர் ஆகிய சான்றோர்கள் தாம் நூல் செய்யும் முன், பொல்லார்: செதுக்கும் உளியால் பொல்லப்படாத, வடிவமைக்கப்படாத இயற்கை வடிவனனாகிய பிள்ளையார் பெருமானின், இணைமலர்: அறிவுச்சத்தி ஆக்கசத்தியென்னும் இரண்டு திருவடித்தாமரைகளை, புனைவரே: வணங்குவார்களே, அதைப்போல நானும் பணிந்து இந்த ‘சிவஞானபோதம்’ என்னும் நூலைத் துவங்குகிறேன்.
(தொடரும்)
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
அழகான தொடக்கம், அருமையான விளக்கவுரை.
தொடருங்கள் சாமி
தொடருங்கள் சாமி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
இப்படி எல்லாம் தமிழில் நூல்கள் உள்ளனவா?
அறிய வைத்ததற்கு நன்றி !
அறிய வைத்ததற்கு நன்றி !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
அவையடக்கம்
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.
பொழிப்புரை :
தம்மை உணர்ந்து: தான் யார் என்பதை நன்கு உணர்ந்த மெய்ப்பொருள் சைவர்,
தமையுடைய தன்னுணர்வார்: தம்மை உடைமைப் பொருளாகக் கொண்டுள்ள, தம்முடைய இறைவன் சிவபெருமானையும் நன்றாக அறிவார்கள்.
எம்மை உடைமை: என்னை அவர்களின் உறவாக, உடையவராகக் கொண்டுள்ளதாலே,
எமையிகழார்: எம்மையும், எம்மால் இயற்றப்படுகின்ற, இந்நூலையும் ஏதும் குறையிருப்பினும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.
தம்மை உணரார்: அவ்வாறு தான் யார் என்பதை உணராதவர்கள்,
உணரார்: அவர்களை ஆட்கொள்ள வேண்டிய சிவபெருமானையும் அறிய மாட்டார்கள்.
உடங்கியைந்து தம்மிற் புணராமை: இப்படி, நம்மை இயக்கும் இறை சிவபெருமானுக்கு, நாம் அடிமை, நாம் அவனது உடமைப்பொருள் என்று உணராதவர்கள்,
கேளாம் புறன்: சொல்பவற்றையெல்லாம் நான் புறந்தள்ளிவிடுவேன்.
(தொடரும்)
தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.
பொழிப்புரை :
தம்மை உணர்ந்து: தான் யார் என்பதை நன்கு உணர்ந்த மெய்ப்பொருள் சைவர்,
தமையுடைய தன்னுணர்வார்: தம்மை உடைமைப் பொருளாகக் கொண்டுள்ள, தம்முடைய இறைவன் சிவபெருமானையும் நன்றாக அறிவார்கள்.
எம்மை உடைமை: என்னை அவர்களின் உறவாக, உடையவராகக் கொண்டுள்ளதாலே,
எமையிகழார்: எம்மையும், எம்மால் இயற்றப்படுகின்ற, இந்நூலையும் ஏதும் குறையிருப்பினும் இகழ்ந்து பேச மாட்டார்கள்.
தம்மை உணரார்: அவ்வாறு தான் யார் என்பதை உணராதவர்கள்,
உணரார்: அவர்களை ஆட்கொள்ள வேண்டிய சிவபெருமானையும் அறிய மாட்டார்கள்.
உடங்கியைந்து தம்மிற் புணராமை: இப்படி, நம்மை இயக்கும் இறை சிவபெருமானுக்கு, நாம் அடிமை, நாம் அவனது உடமைப்பொருள் என்று உணராதவர்கள்,
கேளாம் புறன்: சொல்பவற்றையெல்லாம் நான் புறந்தள்ளிவிடுவேன்.
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Re: சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்) தொடர் பதிவு!
அருமையான விளக்கம். தொடருங்கள்!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Similar topics
» மெய்கண்டார் மீட்டும் மெய்ப்பொருள் - சிவஞான போதம்
» நூல் அறிமுகம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» கா ..கா ..கா -இந்திரா சௌந்தர்ராஜன் அமானுசிய தொடர் நூல் வடிவில் .
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
» நூல் அறிமுகம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» கா ..கா ..கா -இந்திரா சௌந்தர்ராஜன் அமானுசிய தொடர் நூல் வடிவில் .
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|