Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
4 posters
Page 1 of 1
சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும், சமையல் கியாஸ் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
முழு அடைப்பையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ரெயில் மறியல் மற்றும் பஸ் மறியல் போராட்டங்களும் நடந்தன. சென்னை நகரில் மதியம் வரை மொத்தம் 23 இடங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
போராட்டத்தையொட்டி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுரோட்டில் அமர்ந்து டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் கட்டுப்பாடு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்தும், மத்திய அரசை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். ஏராளமானோர் நடுரோட்டில் அமர்ந்து இருந்ததால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதித்தது.
திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பீமாராவ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் பாக்கியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா கட்சியினர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே திரண்டு வந்திருந்தனர். கியாஸ் கட்டுப்பாட்டை கண்டித்து விறகு அடுப்புடன் நடுரோட்டில் சமையல் செய்ய முயன்றனர்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதான அகில இந்திய செயலாளர் முரளிதரராவ், இல.கணேசன், துணை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.என்.பாலாஜி டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் ரவி, ஜெய்சங்கர், பிரகாஷ் மற்றும் ஆறுமுகராஜ், திருப்புகழ், ஹான்ஸ் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் கி.பிரபாகரன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் மறியல் நடந்தது. நிர்வாகிகள் நிலவழகன், மின்னல் மதி, புஷ்பராஜன், உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சி.ஐ.டி.யு,, ஏ.ஐ.டி.யு.சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் சம்பத், இந்திய கம்யூனிஸ்டு சேவு செய்யனம், சி.ஐ.டி.யூ. காசிநாதன், சுந்தர்ராஜன், ஆட்டோ தொழிற்சங்க கருணாநிதி, மனோகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்தனர். 3-வது பிளாட்பாரத்தில் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மூலக்கொத்தளம் சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் வெஸ்ட்கோஸ்ட் ரெயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மந்தைவெளி பஸ்டெப்போ அருகில் தி.மு.க. கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்ணா சாலை தபால் நிலையம், கோயம்பேடு டெலிபோன் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிண்டி ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவேந்திர பிஸ்வாஸ், பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் செங்கல்பட்டு பீச் இடையேயான ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதை தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையம் எதிரே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் காரணமாக கிண்டியில் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் லெனின் சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாரியப்பன், ஜெகநாதன் விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் விசுவநாதன் உள்பட 100 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், நகர செயலாளர் பூபாலன், இம்தியாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆவடி நகர செயலாளர் ஆதவன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநின்றவூர் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் வடிவேலு, மாவட்ட குழு கவுன்சிலர் ராபர்ட் எபினேசர், பூவை ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி ஜெயராமன் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூரில் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பகுதி செயலாளர் ராமசுப்பு உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
குரோம்பேட்டையில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பொற்றாமரை சங்கர், முத்துக்குமார், பாலாஜி, குமார், சேகர், பல்லாவரம் நகரசபை கவுன்சிலர் வைரம் சீனிவாசன், ஹரிபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திறந்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
முழு அடைப்பையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று ரெயில் மறியல் மற்றும் பஸ் மறியல் போராட்டங்களும் நடந்தன. சென்னை நகரில் மதியம் வரை மொத்தம் 23 இடங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
போராட்டத்தையொட்டி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுரோட்டில் அமர்ந்து டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் கட்டுப்பாடு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்தும், மத்திய அரசை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். ஏராளமானோர் நடுரோட்டில் அமர்ந்து இருந்ததால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதித்தது.
திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பீமாராவ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் பாக்கியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா கட்சியினர் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே திரண்டு வந்திருந்தனர். கியாஸ் கட்டுப்பாட்டை கண்டித்து விறகு அடுப்புடன் நடுரோட்டில் சமையல் செய்ய முயன்றனர்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதான அகில இந்திய செயலாளர் முரளிதரராவ், இல.கணேசன், துணை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.என்.பாலாஜி டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் ரவி, ஜெய்சங்கர், பிரகாஷ் மற்றும் ஆறுமுகராஜ், திருப்புகழ், ஹான்ஸ் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் கி.பிரபாகரன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் மறியல் நடந்தது. நிர்வாகிகள் நிலவழகன், மின்னல் மதி, புஷ்பராஜன், உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சி.ஐ.டி.யு,, ஏ.ஐ.டி.யு.சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் சம்பத், இந்திய கம்யூனிஸ்டு சேவு செய்யனம், சி.ஐ.டி.யூ. காசிநாதன், சுந்தர்ராஜன், ஆட்டோ தொழிற்சங்க கருணாநிதி, மனோகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்தனர். 3-வது பிளாட்பாரத்தில் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மூலக்கொத்தளம் சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் வெஸ்ட்கோஸ்ட் ரெயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மந்தைவெளி பஸ்டெப்போ அருகில் தி.மு.க. கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்ணா சாலை தபால் நிலையம், கோயம்பேடு டெலிபோன் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிண்டி ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவேந்திர பிஸ்வாஸ், பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் செங்கல்பட்டு பீச் இடையேயான ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதை தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையம் எதிரே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மறியல் காரணமாக கிண்டியில் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நகர செயலாளர் லெனின் சுந்தர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாரியப்பன், ஜெகநாதன் விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் விசுவநாதன் உள்பட 100 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், நகர செயலாளர் பூபாலன், இம்தியாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆவடி நகர செயலாளர் ஆதவன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநின்றவூர் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் வடிவேலு, மாவட்ட குழு கவுன்சிலர் ராபர்ட் எபினேசர், பூவை ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி ஜெயராமன் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூரில் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பகுதி செயலாளர் ராமசுப்பு உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
குரோம்பேட்டையில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பொற்றாமரை சங்கர், முத்துக்குமார், பாலாஜி, குமார், சேகர், பல்லாவரம் நகரசபை கவுன்சிலர் வைரம் சீனிவாசன், ஹரிபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திறந்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
என்ன பண்ணி என்ன புண்ணியம்.. அவங்க நெனச்சதை செஞ்சுட்டாங்களே! ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
முதலில் 14 மணி நேர கரண்டு கட்டுக்கு ஏதாவது செய்யுங்கப்பா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
கட்சி சார்பற்ற நாட்டு நலனே முக்கியம் என கருதும் நீண்ட கால திட்டங்கள் கொண்டு வந்தால் தான் எதிர்காலம் நல்லாருக்கும்.
இந்த எண்ணம் இல்லாத இன்றைய கட்சிகள் எது ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் தொடரும்.
இந்த எண்ணம் இல்லாத இன்றைய கட்சிகள் எது ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
வேற என்னத்த உங்களால செய்ய முடியும்
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இருளில் மூழ்கியது: சென்னையில் 14 இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல்
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» சென்னையில் மறியல், பேரணி; ஸ்டாலின் கைது
» பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
» எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» சென்னையில் மறியல், பேரணி; ஸ்டாலின் கைது
» பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
» எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|