ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்  Empty சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Post by Guest Wed Sep 19, 2012 10:59 am

பல்பொருள் சில்லரை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச் சரவையின் முடிவு. நாடு முழுவதிலுமுள்ள கோடிக் கணக்கான சிறுகடை வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை, அரசின் இந்த முடிவு அழித்து நிர்மூலமாக்கும். சில்லரை விற்பனைத்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். மிகக்கடுமையான அளவில் நீடிக்கும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவ சாய நெருக்கடியின் துயரம் ஆகிய வற்றின் பின்னணியில், இந்த முடிவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சின் மக்கள் விரோத, நாசகர குணாம்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

அமெரிக்க மற்றும் இதர மேற்கத்திய அரசுகளின் நிர்ப்பந்தங் களுக்கு பணிந்துசெயலாற்ற மத்திய அரசு ஆவலோடு இருக்கிறது என்ப தும், தனது சொந்த மக்களின் நலன் களை பாதுகாப்பதைவிட வால் மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ஃ போர் போன்ற பன்னாட்டு நிறுவனங் களின் நலன்களுக்கு சேவை செய்யவே ஆவலோடு இருக்கிறது என்ப தும் மேலும் பகிரங்கமாக அம்பலமாகியுள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு நிபந்தனைகள் என்ற பெயரில் அரசு அறி வித்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவையாகவும், எந்த தரப்பு மக்களையும் பாதுகாக்க உகந்தவையாகவும் இல்லை. ரூ.520 கோடி முதலீட்டுத்தகுதி என் பது வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃ போர் போன்ற பகாசுர சில்லரை வர்த் தக நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் இந்த கம்பெனி கள் பல்லாயிரம் கோடி டாலர் முத லீட்டு சக்தி கொண்டவை.

அந்நிய சில்லரை விற்பனை மையங்கள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசின் கட்டுப்பாடு, எந்தவிதத்திலும் அர்த்தமற்றது. ஏனென்றால், மேற் கண்ட பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் கூடுதல் வருமா னம் கொண்ட பிரிவினரை முழுமையாக தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு இது போன்ற மாநகரங்களில் முதலில் கடைவிரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். இத்தகைய பெரும் நகரங்களில் மிக அதிக அளவிலான சில்லரை விற்பனையாளர்கள் குவிந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


உலகிலேயே சில்லரை வியாபாரம் மிக அதிக அளவிலும், மிக விரிவான அளவிலும் நடக்கும் நாடு இந்தியா தான். இங்கு ஆயிரம் நபர்களுக்கு 11 சிறு கடைகள் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 1.2 கோடிக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இக்கடை களில் 6 கோடிக்கும் அதிகமான மக் கள் வேலை செய்து வருகிறார்கள். இவற்றில் 95 சதவீத கடைகள் தங்களுக்கு தாங்களே சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொண்ட நபர்களால் 500 சதுர அடி பரப்பிற்கும் குறைவான இடத்தில் நடத்தப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பன் னாட்டு நிறுவனங்களின் சில்லரை விற்பனை கடைகள் நுழைந்தால், நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மிக மிகக் கடுமையான முறையில் தாக்கப்படுவார்கள். எங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தனவோ, அங்கெல்லாம் சிறு கடை வியாபாரிகள் நிர்மூலமாக்கப் பட்டார்கள் என்பதே உலகம் முழுவ திலுமுள்ள அனுபவம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ச்சி யடைந்த நாடுகளில் சிறு அளவிலான சில்லரை விற்பனைக்கடைகள் என் பவை முற்றிலும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சிறுகடை வியாபாரிகள் தங்களது தொழிலிலி ருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்ட னர். இப்போது வரைமுறையின்றி வளர்ந்து நிற்கும் சூப்பர் மார்க்கெட் டுகளின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கடுமையான உரிம விதிமுறைகளை இந்நாடு கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.


சில்லரை வர்த்தகத்துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்தபட்சம் 50 சதவீதம் அள விற்கு, சில்லரை விற்பனை நடவடிக் கைகளுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறி அரசு நியாயப்படுத்துகிறது. (இந்த முதலீடு உணவு மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தல், தயாரிப் புப்பணி, விநியோகம், வடிவமைப்பு மேம்பாடு, தரக்கட்டுப்பாடு, சேமிப் புக்கிடங்குகள், குளிர்பதன வசதி கொண்ட கட்டமைப்புகள் மற்றும் பேக்கிங் போன்ற துறைகளில் செய் யப்படவேண்டும் என்று அரசு கூறு கிறது.)

இந்த நிபந்தனை, நாட்டில் சரக்குகளைக் கையாள இன்னும் கூடுதல் வாய்ப்பு வசதிகள், குளிர்பதன கிடங்கு வசதிகள் போன்றவற்றை உரு வாக்க உதவும் என்றும், இது விவசாயி களுக்கு பலனளிக்கும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால், பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் சில்லரை விற்பனை மையங்களால் நடத்தப் பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், சிறு விவசாயிகளுக்கு எந்தவிதத்தி லும் பலனளிக்கவில்லை என்பதே உலகம் முழுவதிலுமுள்ள அனுபவம். மாறாக, விவசாயிகளுக்கு மிக மிகக் குறைவான விலையே கிடைக்கப் பெற்றுள்ளது. விளைபொருட்க ளுக்கு தன்னிச்சையாக தர நிர்ணயம் செய்துகொண்டு, விவசாயிகளின் பொருட்கள் அந்தத் தரத்தை பூர்த்தி செய்வதாக இல்லை என்று கூறி விலையை அப்பட்டமாகக் குறைப் பதே அனுபவமாக இருந்திருக்கிறது.

பன்னாட்டு பெரும் நிறுவனங்களை விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது என்ற அரசின் திட் டம், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தனது பொறுப்பு களை கைவிடும் முயற்சியே ஆகும். இது நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிகக்கடுமையான பாதகத்தை ஏற் படுத்தும்.


சிறு உற்பத்தியாளர்களும் கசக்கிப் பிழியப்படுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களால் முன்கூட்டியே விலைகள் தீர்மானிக்கப்பட்டு, போட் டியிலிருக்கும் இதர சிறு உற்பத்தி யாளர்கள் அனைவரும் வெளியேற் றப்படுவார்கள். அதுமட்டுமின்றி உணவுப்பொருட்கள் போன்ற அத் தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான நுகர்பொருட்களின் ஒட்டுமொத்த சப்ளை மீதும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டை கொண்டுவரும்.

உள்நாட்டுச் சந்தைக்குள் அந்நிய நாடுகளிலிருந்து கொள்முதல் செய் யப்படும் பொருட்கள் வெள்ளமெனப் பாயும். இப்படி பொருட்கள் வந்து குவிவது, சில்லரை விற்பனையில் பொருட்களின் விலை குறையவும், நுகர்வோருக்கு பலன் கிடைக்கவும் உதவும் என்று கூறப்படுவது முற்றி லும் மோசடித்தனமானது. ஏகபோக சந்தை அதிகாரமும், பெருமளவி லான பொருட்களை இருப்பு வைக் கும் திறனும் கொண்ட இந்த மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், விலைக்குறைப்பில் ஈடுபடாது; மாறாக பொருட்களை பதுக்கி வைத்து, அதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே முனையும்.


கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் பணத்தைக்கொடுத்து பொருளை பெற்றுச்செல்லும் வர்த்த கத்தில் பன்னாட்டு பெரும் நிறுவனங் கள் ஈடுபட்டுள்ளன; இதற்காக அரசு அனுமதியும் அளித்துள்ளது. இந்த அனுமதியை பெற்ற நிறுவனங்கள், நுகர்வோருக்கு நேரடியாக பொருட் களை விற்பனை செய்யக்கூடாது என்ற தடையை தொடர்ந்து மீறியே வந்திருக்கின்றன; ஆனால் இதை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. அதேபோல சுயகட்டுப்பாடு என்ற முறையிலான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எவை யும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக இந்த நிபந்தனைகளை அமல்படுத்து வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.


இந்தியாவில் சில்லரை வர்த்தகத் துறையை தாராளமாக திறந்துவிட வேண்டுமென்று நீண்ட காலமாகவே மத்திய அரசை பன்னாட்டு பெரும் நிறுவனங்களும் அந்நிய அரசாங்கங் களும் தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந் திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் காலத்தில், இந்த முடிவை மேற்கொள்ள விடாமல் எதிர்க் கட்சிகளும் பொது இயக்கங்களும், சிறு வணிகர் சங்கங்களும் தடுத்து நிறுத்தின. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட் சிக்காலத்தில், நாசகர சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு முழுமை யாக பணிந்துவிட்டது.


அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பு மக்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்த்து நிற்க வேண் டும் என்று கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் , அனைத்து பொது அமைப்புகளும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற மொத்த -சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு திறந்து விட மத்தியில் ஆளும் அரசுக்குக் காரணம் என்ன இருக்க முடியும் ?


தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர பொதுத் துறை நிறுவனங்கள் இவற்றையெல்லாம் முடக்கி வருவது போலவேதான், இவற்றிலெல்லாம் அந்நிய நாட்டுக் கம்பெனிகளை நுழைய விடுவதுபோலவேதான் ....... இந்த முடிவும் எடுக்கப் பட்டுள்ளது. நமக்கு பாதகம் வந்தால் எதிர்க்க வேண்டும் என்பதும், தொழிற் சங்கங்கள் என்ன செய்தன என்று வரட்டுக் கேள்விகள் எழுப்புவதும் , இது போன்ற பொதுவான பாதகங்கள் என்றால் அதைப் பற்றி நமக்கு கவலையில்லை என்பதும் , அதற்கு சித்தாந்த சாயங்கள் பூசுவதும் ஒரு தவறான பார்வை ஆகும்.


இறுதியாக இதுபோன்ற முடிவு ,விவசாயத் துறையின் மீதும் , குடிதண்ணீர் மீதும், மின்சாரத் துறை மீதும் முழுமையாகப் பாயும் போது, இந்தநாட்டின் அனைத்து குடிமக்கள் முதுகிலும் பேரிடியாக, அந்த அடி விழுந்து இருக்கும். அப்போது எல்லாம் முடிந்து போய் இருக்கும்.


மீண்டும் புதுவித காலனியாதிக்கத்தில் நாம் அடிமைப் பட்டு இருப்போம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

---
NFPE P3 திருப்பூர் வலை பூ


Last edited by புரட்சி on Wed Sep 19, 2012 11:09 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்  Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Post by ராஜா Wed Sep 19, 2012 11:02 am

பணம் சம்பாதிக்க பெற்ற தாயையே விலை பேசும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரைக்கும் இந்தியாவின் நிலை இப்படி தான் போயி கொண்டிருக்கும்....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்  Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Post by Guest Wed Sep 19, 2012 11:03 am

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா :

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு : வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது

இரு சாராரும் கடுமையாக வாதிட்டு வருகிறார்கள்

அதில் பல முக்கிய விஷயங்கள் விடுபடுவதாகவும், ஒரு சில விஷயங்கள் தவறாகவும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது

எனவே இந்த இடுகைத்தொகுப்பு

-oOo-

முதலில் சில அடிப்படை விஷயங்களை நினைவுபடுத்துவோம்

-oOo-

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகிய மூன்று சொற்களும் அடிக்கடி குழப்பப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றாலும் கூட ஒரே பொருள் தருபவை அல்ல

தாராளமயமாக்கம் (liberalisation) என்றால் அரசின் சட்ட திட்டங்களை தளர்த்துவது. (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை)
உலகமயமாக்கம் என்றால் ஒரு நாட்டு நிறுவனம் அடுத்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) உதாரணமாக இன்பொசிஸ் அமெரிக்காவின் மென்பொருள் விற்கலாம். ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் விற்கலாம்
தனியார்மயமாக்கம் என்றால் அரசு செய்த ஒரு வியாபாரம் அல்லது சேவை தனியார் வசம் வருவது (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) : உதாரணம் அரசு மட்டுமே அளித்து வந்த விமான சேவை தனியாரும் அளிக்க ஆரம்பித்தது . . . இதற்கு நேர் எதிர் அரசுடமை. தனியாரிடம் இருந்த வங்கி, பேரூந்து ஆகியவற்றை அரசு வாங்கியது அரசுடைமை (தற்போதைய உதாரணம் - டாஸ்மாக் !!)

-oOo-

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் இந்த மூன்றும் உள்ளன

-oOo-

தனக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை ஒரு மனிதன் தானாகவே வேட்டையாடி உண்ணும் வரை பணம் என்பதே தேவையில்லாமல் இருந்தது

ஆனால்

ஒருவர் வேட்டையாட, விவசாயம் செய்ய, ஒருவர் உடை தயாரிக்க, என்று பரிவர்த்தனை செய்ய மாறியவுடன் பணம் தேவைப்பட்டது

-oOo-

ஒருவருக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது (உதாரணம் அரிசி)
அதை மற்றொருவர் உற்பத்தி செய்து வைத்திருக்கிறார்

இவர் அவரிடம் இருந்து பணம் செலுத்தி வாங்குகிறார்

இது ஒரு பரிவர்த்தனை

-oOo-

ஒருவருக்கு ஒரு சேவை தேவைப்படுகிறது (உதாரணம் கல்வி)
அதை மற்றொருவரால் அளிக்க முடியும்

இவர் அவரிடம் இருந்து பணம் செலுத்தி சேவையை பெறுகிறார்க

இது ஒரு பரிவர்த்தனை

-oOo-

எனவே பரிவர்த்தனை என்பதில்

ஒரு விற்பவர் அல்லது சேவை அளிப்பவர்
ஒரு வாங்குபவர் அல்லது சேவை பெறுபவர் என்று இரு நபர்கள் உள்ளனர்
அதில் பணம் கைமாறுகிறது

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

பணம் எப்பொழுதுமே

வாங்குபவரிடமிருந்து அல்லது சேவை பெறுபவரிடமிருந்து
விற்பவருக்கு அல்லது சேவை அளிப்பவருக்கு கைமாறும்

-oOo-

ஒரு பரிவர்த்தனை முடிந்தால்

வாங்குபவர் அல்லது சேவை பெறுபவர் ஏழை ஆவார். (பொருள் இருக்கும், பணம் குறைந்து விடும்)
விற்பவர் அல்லது சேவை அளிப்பவர் பணக்காரர் ஆவர் (பொருள் இருக்காது. ஆனால் அதிகம் பணம் இருக்கும்)

-oOo-

விற்பவருக்கு வேறு ஒரு பொருள் தேவைப்படலாம். அவர் அடுத்த பரிவர்த்தனை செய்யலாம்
இம்முறை அவர் பொருள் வாங்குபவர் ஆகிறார்
மற்றொருவர் விற்கிறார்

இந்த முறையும்
வாங்குபவர் அல்லது சேவை பெறுபவர் ஏழை ஆவார்
விற்பவர் அல்லது சேவை அளிப்பவர் பணக்காரர் ஆவர்

-oOo-

இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்

எதையும் வாங்காமல் நீங்கள் தயாரித்த / உற்பத்தி செய்த பொருட்களை விற்றுக்கொண்டு மட்டுமிருந்தால் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்
எதையும் விற்காமல் நீங்கள் பொருட்களை வாங்கிக்கொண்டு மட்டுமிருந்தால் ஏழை ஆகிவிடுவீர்கள்

அல்லது

சேவை எதுவும் பெறாமல் நீங்கள் சேவை அளிப்பவராக மட்டும் இருந்தால் நீங்கள் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்
சேவை அதுவும் அளிக்காமல், நீங்கள் சேவை பெறுபவராக மட்டும் இருந்தால் நீங்கள் ஏழை ஆகிவிடுவீர்கள்

இதையே மேலும் விரிவாக பார்க்கலாம்

-oOo-

நீங்கள் பெற்ற சேவை, வாங்கிய பொருட்களின் மதிப்பை விட நீங்கள் அளிக்கும் சேவை, உற்பத்தி செய்து விற்கும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருந்தால் நீங்கள் பணக்காரர் ஆகிவிடுவீர்கள்
நீங்கள் பெற்ற சேவை, வாங்கிய பொருட்களின் மதிப்பை விட நீங்கள் அளிக்கும் சேவை, உற்பத்தி செய்துவிற்கும் பொருட்களின் மதிப்பு குறைவாக நீங்கள் ஏழை ஆகிவிடுவீர்கள்

-oOo-

தனிநபர் என்பதை விட்டு விட்டு ஒரு குடும்பமாக பார்க்கலாம்

அந்த குடும்பம் (அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து) பெற்ற சேவை, வாங்கிய பொருட்களின் மதிப்பை விட அவர்கள் (அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து) அளிக்கும் சேவை, உற்பத்தி செய்து விற்கும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருந்தால் அவர்கள் பணக்காரர் ஆகிவிடுவா ர்கள்
அந்த குடும்பம் (அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து) பெற்ற சேவை, வாங்கிய பொருட்களின் மதிப்பை விட அவர்கள் (அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து) அளிக்கும் சேவை, உற்பத்தி செய்து விற்கும் பொருட்களின் மதிப்பு குறைவாக இருந்தால் அவர்கள் ஏழையாகி ஆகிவிடுவா ர்கள்

சரி

பொருட்கள் என்றால் என்ன / அவர் எதை விற்கிறார் என்றால்

ஒன்று, அவராக உற்பத்தி செய்த அரிசி, அல்லது உடை போன்றவற்றை விற்கலாம்
அல்லது , அவரது பரம்பரை பொருட்களை விற்கலாம்

இதிலிருந்து நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய விஷயம்

ஒரு குடும்பம் தனது செலவுகளுக்கு (அதாவது வாங்கும் பொருட்கள் + பெறப்படும் சேவைகளுக்கு) ஏற்ற அளவு அல்லது அதை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும். இல்லையேல் சில நாட்களில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும்
அல்லது அந்த குடும்பத்திற்கு பரம்பரை சொத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் வேலை செய்யாமல் கூட அந்த பரம்பரை சொத்தை விற்று காலத்தை ஓட்டலாம்ம்

அப்படி என்றால்

இருக்கும் பரம்பரை சொத்துக்களை விற்றாலோ, அல்லது தான் உற்பத்தி செய்த பொருட்களை விற்றாலோ, அல்லது தான் அளிக்கும் சேவைக்கோ கிடைக்கும் பணமானது, அவர்கள் பொருட்களை வாங்குவதற்கான செலவு மற்றும் பெற்ற சேவைக்கான செலவை விட குறைவு என்றால் அந்த குடும்பத்தின் நிதிநிலைமை அதிகரிக்கும்
இருக்கும் பரம்பரை சொத்துக்களை விற்றாலோ, அல்லது தான் உற்பத்தி செய்த பொருட்களை விற்றாலோ, அல்லது தான் அளிக்கும் சேவைக்கோ கிடைக்கும் பணமானது, அவர்கள் பொருட்களை வாங்குவதற்கான செலவு மற்றும் பெற்ற சேவைக்கான செலவை விட அதிகம் என்றால் அந்த குடும்பத்தின் நிதிநிலைமை குறையும்

இந்த கணக்கை அப்படியே ஒரு ஊருக்கு பொருத்தி பார்க்கலாம்
அதன் பிறகு அப்படியே ஒரு நாட்டிற்கும் பொருத்தி பார்க்கலாம்
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அவர்களின் வரவு - செலவு சார்ந்தது
வரவு என்றால் (இந்த இடத்தில் வரவு என்ற சொல்லை பயன்படுத்தும் அர்த்தம் வேறு. பொதுவாக பொருளாதார துறையிலோ, நிதித்துறையிலோ பயன்படுத்தும் அர்த்தம் வேறு)

அங்குள்ள பரம்பரை சொத்து, அதாவது இயற்கை வளங்கள் (கச்சா எண்ணை, கிராணைட், ஆற்று மண் !!!, நீர், கனிமங்கள் போன்றவை), அடுத்தவருக்கு விற்கப்படுவதால் வரும் பணம்
அந்த நாட்டு மக்கள் சில பொருட்களை உற்பத்தி செய்து அடுத்தவருக்கு விற்பதால் கிடைக்கும் பணம்
அந்த நாட்டு மக்கள் சில சேவைகளை அடுத்தவருக்கு அளிப்பதால் கிடைக்கும் பணம்

செலவு என்றால் (இந்த இடத்தில் செலவு என்ற சொல்லை பயன்படுத்தும் அர்த்தம் வேறு. பொதுவாக பொருளாதார துறையிலோ, நிதித்துறையிலோ பயன்படுத்தும் அர்த்தம் வேறு)

அந்த நாட்டு மக்கள் சில பொருட்களை அடுத்தவரிடமிருந்து வாங்குவதால் செலவழியும் பணம்
அந்த நாட்டு மக்கள் சில சேவைகளை அடுத்தவரிடம் இருந்து பெறுவதால் கிடைக்கும் பணம்

அப்படி என்றால் ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்பொழுது முன்னேறும் / சிறப்படையும் / மேல் நோக்கி செல்லும்

அந்த நாட்டு மக்கள் அடுத்த நாட்டு மக்களுக்கு விற்கும் பொருள் (பரம்பரை + உற்பத்தி) மற்றும் அளிக்கும் சேவைக்கு அவர்கள் அடுத்த நாட்டினரிடம் இருந்து பெறும் பணமானது, அவர்கள் அடுத்த நாட்டில் இருந்து வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகள் ஆகியவற்றிற்கு செலவழியும் பணத்தை விட அதிகம் இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும்

அப்படி என்றால் ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்பொழுது சீரழியும் / வீழ்ச்சி அடையும் / கீழ் நோக்கி செல்லும்

அந்த நாட்டு மக்கள் அடுத்த நாட்டு மக்களுக்கு விற்கும் பொருள் (பரம்பரை + உற்பத்தி) மற்றும் அளிக்கும் சேவைக்கு அவர்கள் அடுத்த நாட்டினரிடம் இருந்து பெறும் பணமானது, அவர்கள் அடுத்த நாட்டில் இருந்து வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகள் ஆகியவற்றிற்கு செலவழியும் பணத்தை விட குறைவாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக கீழ் நோக்கி செல்லும்

சில உதாரணங்களை பார்க்கலாம்

சவுதி அரேபியா, இந்தியாவிற்கு கச்சா எண்ணை விற்றால் இந்த பரிவர்த்தணை மூலம்

அரபு தேசத்தின் பொருளாதாரம் வளரும்
இந்திய தேசத்தின் பொருளாதாரம் வீழும்

இந்தியா, சவுதி அரேபியாவிற்கு மாருதி சீருந்துகளை விற்றால் இந்த பரிவர்த்தணை மூலம்

அரபு தேசத்தின் பொருளாதாரம் வீழும்
இந்தியாவின் பொருளாதாரம் வளரும்

சவுதி அரேபியா இந்தியாவிற்கு விற்கும் கச்சா எண்ணையின் விலையும், இந்தியா சவுதி அரேபியாவிற்கு விற்கும் மாருதி சீரூ ந்துகளின் அளவும் ஒன்று போலிருந்தால், இந்த பரிவர்த்தணை மூலம்

இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் எந்த மாற்றமும் வராது

இந்திய மென்பொருள் நிறுவனங்கள் (உதாரணம் - இன்பொசிஸ், டி.சி.எஸ் ஆகியவை) அமெரிக்க மக்கள் / நிறுவனங்களுக்கு மென்பொருள் அளித்தால், அந்த பரிவர்த்தனை மூலம்

இந்திய பொருளாதாரம் வளரும்
அமெரிக்க பொருளாதாரம் வீழும்

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்திய மக்களிடம் ஐபோன் (ஐபோன் என்பது ஒரு உதாரணம் மட்டுமே) விற்றால், அந்த பரிவர்த்தனை மூலம்

இந்திய பொருளாதாரம் வீழும்
அமெரிக்க பொருளாதாரம் வளரும்

-oOo-

ஆண்டின் இறுதியில், அல்லது பத்தாண்டுகளின் இறுதியில், ஒரு நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்றால்
அந்த நாடு, அடுத்தவரிடம் இருந்து வாங்கிய (பொருள்+சேவை) யைவிட அதிக மதிப்பிற்கு அடுத்தவருக்கு (பொருள் + சேவை) அளித்திருக்க வேண்டும்

-oOo-

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு - வேண்டுமா, வேண்டாமா ? அது நல்லதா கெட்டதா என்ற கேள்விக்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும்

அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம்
எனக்கு கெட்டதாக இருக்கலாம்

இந்த இடுகைத்தொடரின் நோக்கம் - சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு நல்லது என்றோ கெட்டது நிறுவுவது அல்ல

இந்த இடுகைத்தொடரின் நோக்கம், இது குறித்த அடிப்படை விபரங்களை சரியான தரவுகளை உங்களுக்கு தருவதே . . . அதை வைத்து சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உங்களுக்கு நல்லதா, கெட்டதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

-oOo-

முதலில் சில்லறை வணிகத்திற்கு ஆதரவாக இங்கு வைக்கப்படும் கருத்துக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்

-oOo-

1. 1990களுக்கு பின் இந்திய பொருளாதாரம் வளர காரணம் தாராளமயமாக்கம், உலகமயமாக்கம், தனியார்மயமாக்கமே !! எப்படி மென்பொருள் துறை தாராளமயமாக்கப்பட்ட, உலகமயமாக்க ப்பட்ட, தனியார்மயமாக்கப்பட்டவுடன் இந்திய பொருளாதாரம் முன்னேறியதோ, அதே போல் சில்லறை வணிகத்தின் அந்நிய முதலீடு வந்தவுடன், அதே போன்ற முன்னேற்றம் இருக்கும்

இதில் பாதி உண்மை இருந்தாலும், மீதி வடிகட்டிய பொய் !!

இதை பொத்தாம் பொதுவாக சொல்பவர் ஒன்று பொருளாதார அடிப்படை தெரியாத முட்டாளாக இருக்கவேண்டும், அல்லது தெரிந்தும் உங்களை ஏமாற்ற முயல்பவராக இருக்க வேண்டும்

1990களின் நமக்கு பணம் வந்த முக்கிய துறைகள் : மென்பொருள் துறை, மற்றும் business process outsourcing

இவை இரண்டிலும் நாம் விற்பவர், அமெரிக்கா வாங்குபவர்
அதாவது நாம் வியாபாரி, அவர்கள் வாடிக்கையாளர்கள்
அதாவது நாம் முதல் போட்டோம், லாபம் எடுத்தோம்
எனவே நமக்கு பணம் வந்தது


ஆனால்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில்

அவர்கள் வியாபாரிகள், நாம் வாடிக்கையாளர்கள்
அவர்கள் முதல் போடப்போகிறார்கள் (அது தான் அந்நிய முதலீடு),
அவர்களுக்கு லாபம் வரும்
இதில் நம் பணம் அமெரிக்காவிற்கு செல்லுமே தவிர, மென்பொருள் துறையில் நடந்தது போல் அங்குள்ள பணம் இங்கு வராது

இதை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்

அடுத்த முறை யாராவது, மென்பொருள் துறையை உலகமயமாக்கியவுடன் பெங்களூர் கலிபோர்னியாவாக மாறிவிட்டதை போல் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் புதுக்கோட்டை டெக்சாஸ் ஆகும் என்றால் நம்பாதீர்கள் . . .இந்த வியாபாரத்தில் நாம் வாடிக்கையாளர்கள். அந்த நிறுவனம் நஷ்டப்பட்டாம் மட்டுமே நமக்கு லாபம். அவர்களுக்கு லாபம் கிடைத்தால் புதுக்கோட்டை டெக்சாஸ் ஆகாது . . . . எனக்கு தெரிந்து சோமாலியாவாகத்தான் வாய்ப்பு உள்ளது . . .

-oOo-

2. உலகமயமாக்கம் என்பது காலத்தின் கட்டா யம்
இந்த அளவு உண்மை
உலகமயமாக்கம் என்பது காலத்தின் கட்டாயம் அதை மறுக்க முடியாது

-oOo-

3. நம் நிறுவனங்கள் அமெரிக்காவின் வியாபாரம் செய்கிறார்கள். உலகமயமாக்கம் வேண்டாம் என்றால் அவர்களை திரும்பி வரச்சொல்லவேண்டுமே
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே
இந்திய நிறுவனம் அமெரிக்க வாடிக்கையாளர் என்றால் எனக்கு முழு சந்தோஷமே
என் பிரச்சனையே அமெரிக்க நிறுவனம், இந்திய வாடிக்கையாளர் என்ற உறவு தான்

-oOo-

4. அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் விற்பதை தடை செய்தால், நான் எப்படி ஐபோன் வாங்குவதாம் ?
நீங்கள் தாராளமாக ஐபோன் வாங்கலாம். ஆப்பிள் இங்கு விற்க எந்த தடையும் இல்லையே

-oOo-

5. ஆப்பிள், டெல், எச்.பி, சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு தடை இல்லையே. பிறகு ஏன் சில்லறை வணிகத்திற்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடு

இந்த கேள்விக்கு சற்று விரிவாக பதிலை பார்க்கலாம்

அதற்கு முன்னர் அனைத்து துறைகளையும் மூன்றாக பிரிக்கலாம்

இந்தியாவை விட அமெரிக்காவால் சிறப்பாக, குறைந்த செலவில் உற்பத்தி / சேவை / உற்பத்தி + சேவை வழங்கக்கூடிய துறைகள் : உதாரணம் - ஐபோன்
அமெரிக்கா, இந்தியா, இருவராலும் சேவை வழங்கக்கூடிய துறைகள் - உதாரணம் விவசாயம், சில்லறை விற்பனை, கல்வி, மருத்துவம்
அமெரிக்காவை விட இந்தியாவால் சிறப்பாக, குறைந்த செலவில் உற்பத்தி / சேவை / உற்பத்தி + சேவை வழங்கக்கூடிய துறைகள் : உதாரணம் - மென்பொருள்

இப்பொழுது உலகமயமாக்கம் இல்லாத ஒரு நிலையும், உலகமயமாக்கம் இருக்கும் போது வரக்கூடிய மூன்று வேறுபட்ட காட்சிகளையும் பார்க்கலாம்

முதலில் உலகமயமாக்கம் இல்லாத நிலை

அதாவது இந்தியாவிற்கு தேவைப்படும் அனைத்தும் இந்திய நிறுவனங்களால் அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கு தேவைப்படும் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களால் அளிக்கப்படுகிறது

இந்த நிலையில், அமெரிக்காவிற்கு தரமான அல்லது குறைந்த விலையில் மென்பொருள் கிடைக்காது. இந்தியாவிற்கு தரமான அல்லது குறைந்த விலையில் ஐபோன் கிடைக்காது

அடுத்தது அமெரிக்க பொருளாதாரம் முன்னேறக்கூடிய நிலை

அமெரிக்காவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. அமெரிக்காவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவையும் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு தேவைப்படும் மென்பொருள் இந்திய நிறுவங்களால் வழங்கப்படுகிறது
இந்தியாவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. இந்தியாவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவையும் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவின் மென்பொரும் தேவை மட்டுமே இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது

இந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும், அமெரிக்க பொருளாதாரம் வளரும்

அடுத்தது சமன் நிலை

அமெரிக்காவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. அமெரிக்காவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவையும் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு தேவைப்படும் மென்பொருள் இந்திய நிறுவங்களால் வழங்கப்படுகிறது
இந்தியாவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. இந்தியாவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவை இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவின் மென்பொருள் மட்டுமே இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது

இந்த நிலையில், நாம் ஐபோன் போன்ற பொருட்களுக்கு கொடுக்கும் விலையை, மென்பொருள் மூலம் திரும்ப பெறுகிறோம். விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவைகளை அவரவர் பார்த்துக்கொள்வதால் இரு நாட்டு பொருளாதாரமும் சமன்நிலையில் இருக்கும்

அடுத்தது இந்திய பொருளாதாரம் முன்னேறக்கூடிய நிலை


அமெரிக்காவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. அமெரிக்காவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவை இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு தேவைப்படும் மென்பொருள் இந்திய நிறுவங்களால் வழங்கப்படுகிறது
இந்தியாவிற்கு தேவையான ஐபோன் அமெரிக்க நிறுவனங்களால் வழங்குகப்படுகிற து. இந்தியாவிற்கு தேவையான விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்றவை இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவின் மென்பொரும் தேவை இந்திய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது

இந்த நிலையில் அமெரிக்கா அதிகம் வாங்குகிறது. குறைவாக விற்கிறது. எனவே இந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும், இந்திய பொருளாதாரம் வளரும்

-oOo-

ஐபோனை அமெரிக்க நிறுவனமும், மென்பொருளை இந்திய நிறுவனங்களும் விற்கும் நிலையில், இருவருக்கும் பொதுவான துறைகளான விவசாயம், சில்லறை வணிகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் யாரோ ஒருவர் மட்டும் முதலீடு செய்தால் அவர்கள் பொருளாதாரமே வளரும்.

இந்தியா வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்க நிறுவனங்களின் ஒரு சில தயாரிப்புகள் / சேவைகள் கண்டிப்பாக தேவை என்ற நிலையில், அந்த துறையில் அமெரிக்க நிறுவனத்தை அனுமதித்துள்ளோம்
அதே போல், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்திய நிறுவனங்களின் ஒரு சில தயாரிப்புகள் / சேவைகள் கண்டிப்பாக தேவை என்ற நிலையில், அந்த துறையில் இந்திய நிறுவனங்களை அனுமதித்துள்ளார்கள். இந்த நிலையில் அவரவர் நாட்டில் அவரவர் நாட்டை சேர்ந்த நிறுவனக்கள் பிற பொது சேவைகளை செய்வதே இரு நாடுகளுக்கும் நல்லது

அதை விட்டு அமெரிக்காவில் விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இந்திய நிறுவங்கள் முதலீடு செய்தால் - இந்திய பொருளாதாரத்திற்கு நல்லது, அமெரிக்க பொருளாதாரத்திறு கெட்டது
அதே போல் இந்தியாவில் விவசாயம், வணிகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அமெரிக்க நிறுவங்கள் முதலீடு செய்தால் - அமெரிக்க பொருளாதாரத்திற்கு நல்லது, இந்திய பொருளாதாரத்திற்கு கெட்டது

-oOo-

6. சில்லறை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் வரி கட்டுவதில்லை. அந்நிய நிறுவனங்கள் இந்த துறைக்கு வந்தால் ஒழுங்காக வரிகட்டுவார்கள் என்கிறார்களே

கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம் !!

-oOo-

7. ஐபோன் போன்ற பொருட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து விட்டு, சில்லறை வணிகத்திற்கு அளித்தாலும் சமண்பாடு இருக்குமே. அப்படி செய்யலாமா ? போன்ற கேள்விகளுக்கும், நீங்கள் மறுமொழியில் கேட்கும் பிற கேள்விகளுக்கும் இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகையில் பதிலளிக்கிறேன்
--
பயணங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்  Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Post by Guest Wed Sep 19, 2012 11:06 am

அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்யும்?

முதல் மூன்றாண்டுகளில் ஏறக்குறைய பதினாறாயிரம் (16,000) கோடி ரூபாய். இந்த முதலீட்டை டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற இந்திய பெரும் பணக்காரர்கள் செய்ய இயலாதா? இந்தத் தொகை இந்திய அரசாங்கம் அலைக்கற்றை மற்றும் நிலக்கரி உரிமங்களில் வீணடித்த அல்லது தனியார் துறைக்கு தாரை வார்த்த தொகையில் பத்தில் ஓரு பங்கே. அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப்பணத்தின் தொகையில் இது ஒரு துளியே. ஆகவே அயல் நாட்டு முதலீடு இந்தியாவிற்கு அவசியம் என்ற கருத்து முரண்பாடாகவே உள்ளது.

இலவச கணினி, மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், ஆடு, அரிசி என அடுக்கிக்கொண்டே செல்லும் பட்டியல் செலவுகளை மாநில வாரியாக கணக்கெடுத்தால் இந்த பதினாறாயிரம் கோடி ஜுஜுபியாக தோன்றும்.

அடுத்ததாக வேலைவாய்ப்பு…

கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு. காதில் கிலோ மீட்டர் கணக்கில் சுற்றப்படும் பூ இதுவே. அதாவது நூறு இந்தியரில் ஒருவர். சிறிய கடைகளில் வேலை செய்வோர் பெரிய கடைக்கு செல்லக்கூடும். ஆகவே புதிய வேலை உருவாக்கம் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கும்.

மேலும் சில்லறை வியாபார நிறுவனங்களில் வேலை செய்வோரின் நிலைமை ‘அங்காடித் தெரு’ மூலம் தமிழகம் தெரிந்து கொண்டது. சென்னையில் சரவணா ஸ்டோர் போன்ற கடைகளுக்கு சென்று வருவோர் இந்த நிலைமையை நேரடியாகவே உணரலாம். மேலும் இந்த வேலைவைப்பானது நீண்ட காலம் உதவாது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குமேல் ஒருவர் வேளையில் தொடர்வது இயலாத காரியமே.

அடுத்த மாற்றமாக கூறப்படுவது நிலம் சார்ந்த தொழில் பெருக்கம். இதனால் பலனடைவது யார்? ஏற்கனவே சென்னையில் வீடு வாங்குவதென்பது எட்டாக்கனியாக இருக்கிறது. 25 லட்சத்தில் வீடு வாங்க விரும்புவோர் சென்னைக்கு வெளியே 25 கிலோ மீட்டர்கள் கடந்தாக வேண்டும்.

வீடுகளின் விலையை அர்த்தமேயில்லாமல் ஏற்ற இது இன்னொரு வாய்ப்பாக அமையும். “வால்மார்ட் 5 நிமிட தூரத்தில்” போன்ற விளம்பரங்கள் கட்டாயம் வரும். ஆனால் அந்த தூரத்தை ஆம்புலன்சில் சென்றால் கூட 5 நிமிடத்தில் அடைய முடியாது. சென்னையின் எல்லை இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் செங்கல்பட்டு அல்லது விழுப்புரம் வரை விரிவடைந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சென்னையில் வேலை என்றால் விடியற்காலை ஐந்து மணிக்கே கிளம்பி விடுவது உசிதம் என்றாகிவிடும்.

அடுத்ததாக விலையேற்றத்தை கட்டுப்படுத்துதல். இது எவ்வாறு சாத்தியம் என்று புரியவில்லை. பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊர்களில் மட்டுமே அந்நிய நிறுவங்களின் கடைகள் தொடங்க அனுமதி என்கின்றனர்.

அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு நகரங்களில் மட்டுமே கடைகளை திறக்க இயலும். மற்ற பெரும்பாலான ஊர்களில் எவ்வாறு விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்? காலப்போக்கில் சிறிய ஊர்களிலும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றே தோன்றுகிறது. இவர்கள் கொண்டுவர இருக்கும் குளிர்சாதன கிடங்குகளை ஏன் அரசோ அல்லது இந்திய தனியார் நிறுவனங்களோ ஏற்று நடத்தக்கூடாது. தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்கிறார்கள்.

இஸ்ரோ ஏவும் ராக்கெட்டுகளை விட சிரமான தொழில்நுட்பமோ? இந்த அந்நிய நிறுவனங்களின் கணினி தொடர்பான தொழில்நுட்பத்தை நம் நாட்டு கம்பெனிகளே செய்து தருகின்றன. இந்தியன் தன்னை தாழ்த்திக்கொள்ளும் இன்னொரு அத்தியாயம் இதுவே.

ஏன் 51 சதவீத முதலீடு? அதாவது கிட்டத்தட்ட பாதி முதலீடு இந்திய நிறுவனங்களின் பங்கு. இதிலிருந்தே தெரியவில்லையா இந்திய பெரும் பணக்காரர்களின் பலம். ஏன் இதை 49 சதவீதமாக மாற்றக்கூடாது.

அந்த இரண்டு சதவீதம் இந்திய நிறுவனங்களால் கொணர முடியாதா? 45 சதவீதம் அந்நிய நிறுவனங்கள் 45 சதவீதம் இந்திய நிறுவனங்கள் 10 சதவீதம் இந்திய அரசு என்றால் இந்த அந்நியர்கள் முதலீடு செய்ய தயாராய் இருப்பார்களா? இரண்டு சதவீத வேறுபாட்டில் கட்டுப்பாடு கைமாறும் என்பது இந்திய பாராளுமன்ற பெரும்பான்மை போன்றதே.

உணவு அல்லாத மற்ற பொருட்கள் மட்டும் விற்கலாம் என்றால் இந்த முதலீடு வருமா? இவர்கள் எதை குறி வைத்து வருகிறார்கள்? குளிர்சாதன கிடங்கு வசதி எதற்கு? காலங்காலமாக இருந்துவந்த அன்றாடம் காய்கறி வாங்கும் வழக்கம் ஒழிந்து வீட்டில் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தேவையான காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் அடைத்து உபயோகிக்கும் நாகரிகம் நம்மிடையே நிலை கொண்டுவிட்டது.

விவசாயிகள் வறுமையில் உழல்வதும் விளைநிலங்கள் நகர்ப்புறங்கள் ஆவதும் நாட்டின் அழிவுக்கான அறிகுறிகள்.

இதே வால்மார்ட் நிறுவனம் ஜெர்மனி மற்றும் தென் கொரிய நாடுகளில் பெருத்த நஷ்டமடைந்து வெளியேறியது. வால்மார்ட் நிறுவனத்தின் 40 சதவீத கிளைகள் வட அமெரிக்க கண்டத்துக்கு வெளியே உள்ளன. ஆனால் இந்த 40 சதவீத கிளைகள் கொணரும் வருமானம் 20 சதவீதம் மட்டுமே.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வட அமெரிக்கவை தவிர வேறெங்கிலும் இவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பதே. இந்தியாவில் தகிடுதத்தம் செய்யாமல் இவர்கள் லாபமடைய இயலுமா? அவ்வாறு தகிடுதத்தம் செய்யும் வேளையில் பாதிக்கப்படப்போவது யார்?

மக்கள் இதனால் எனக்கென்ன என்று அலட்சியம் செய்யாமல் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
--

கட்டுரை
avatar
Guest
Guest


Back to top Go down

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்  Empty Re: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - ஒரு பார்வை - விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum