புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பச்சை குத்துதல் Poll_c10பச்சை குத்துதல் Poll_m10பச்சை குத்துதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை குத்துதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 12:31 pm

கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது "பச்சை குத்தும்'' கலையாகும். கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த. கைவினைக் கலை' (Folk crafts) இது. இந்தப் பச்சை குத்தும் கலை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இன்றும் காணப்படுகின்றது. பழங்குடி மக்களிடம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா பாலினீசியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இவ்வழக்கமுள்ளது.

மஞ்சள் பொடியை அகத்திக் கீரையோடு அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்த கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கி ஊசிகளைக் கொண்டு உடலில் பச்சை குத்துவர். கரும்பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகைமையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் பச்சை குத்துதல் என்று விளக்கம் தருவர். (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, (பக்.656_657) பச்சை குத்துவதற்குப் பயன்படும் பொருள்கள் குறித்துப் பின்வருமாறு எடுத்துக் கூறுவர்.

"கரியாந் தழைச்சாறுடன் சிறுது மஞ்சள் பொடி கலந்து பசை போலாக்கி புதுமண் கலயத்தின் மீது பூசுவார்கள். பின் இந்தச் சாற்றையும் விளக்கெண்ணையையும் கலந்து அகல் விளக்கில் ஊற்றி திரியை எரிய விடுவார்கள். கலயத்தை விளக்கின் மீது பிடித்தால் அதன் மீது அடர்ந்த புகைபடியும். அதைச் சுரண்டி எடுத்து சேமிப்பார்கள். பச்சை குத்தும்போது அளவாக எடுத்து, தேங்காய் மூடி அல்லது சுரைக்காய் குடுவையில் பாலைத் தரவேண்டும். அவர்களால் முடியாத பட்சத்தில் இன்னொரு பெண்ணின் பாலைப் பயன்படுத்துவார்கள்.'' (தினகரன் நாளிதழ், வசந்தம் 1.10.2006. ப.3)

கொங்குநாட்டில் குறவர் இனப்பெண்கள் பச்சை குத்துவதைத் தொழிலாகச் செய்தனர். கைக்கோளர்களும் பச்சை குத்தும் தொழிலைச் செய்துள்ளனர். சமுதாய வரலாற்றைத் தொன்மைக் காலத்திலிருந்து கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் பச்சை குத்தும் கலை வளர்ச்சியில்

1.பாலியல் நிலை,
2.சமயச்சடங்கு,
3.அழகியல் கூறு


என்னும் மூன்று விதமான சிந்தனைப் போக்கு இருப்பதைக் காணலாம். பச்சை குத்தும் கலையின் எச்சமாகத் தற்காலத்தில் மருதாணி இட்டுக் கொள்வதும், வண்ணங்களால் உடம்பில் ஒவியங்கள் தீட்டிக் கொள்வதும் காணப்படுகின்றன. கொங்கு நாட்டுப் புறமக்களிடம் தரவுகளைச் சேகரித்து அவைகளைத் தொகுத்தும், வகுத்தும் ஆராய்ந்து பார்த்ததில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பச்சை குத்தும் கலை உள்ளத்தை அறிய முடிகின்றது.

பெண்கள் பருவமடையும் போது பச்சை குத்தப்பட்டது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பச்சை குத்தப்பட்டது. அது போன்று கர்ப்பணிப் பெண்களுக்கு பச்சை குத்தும் பழக்கமும் காணப்பட்டது. பச்சை குத்தும் பழக்கம் தமிழர் பண்பாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

தொன்மைச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களிடம் பாலியல் இச்சையைத் தூண்டுவதற்கு பெண்களின் தொடைகள், வயிற்றுப் பகுதி, மார்பகங்கள், ஆகியவைகளில் பச்சை குத்தும் வழக்கம் இருந்திருக்கின்றன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் பெண்ணின் மார்பகத்திலும், பெண் உடம்பிலும் பசுமையான செடி, கொடி, இலை, மலர்களை, ஒவியமாக வரைந்து கொண்டால், செடியின் வித்து ஒன்று நூறாகப் பெருகி விளைவதைப் போலவே மனிட இனமும் ஒன்று நூறாகப் பெருகி வளரும் என்று நம்பினர்கள். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பாலியல் தொடர்பான ஓவியங்களை பெண்களின் மறைவிடங்களில் வரைந்து கொண்டனர்.

தற்காலத்தில் இவ்வகையான வழக்கம் இல்லையென்றாலும் பெண்கள் ஆண்களின் பெயர்களையும் ஆண்கள் பெண்களின் பெயர்களையும், மார்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருப்பதை கொங்கு நாட்டில் மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

சமயச் சடங்கிற்காகப் பச்சை குத்தும் வழக்கம் கொங்குநாட்டில் காணப்படுகின்றது. பச்சை குத்தும் கலை சமயத்தோடு இணைக்கப் பட்டது மிகவும் பிற்காலத்திலேயாகும். தாங்கள் இன்ன சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்காக, சங்கு, சக்கரம், சூலம், வேல் போன்ற கடவுளர்களின் சின்னங்களைக் குத்திக் கொண்டனர். அஃதன்றியும், கடவுளர்களின் உருவங்களை உடம்பில் குத்திக் கொள்வதன் மூலம் அக்கடவுளர்களின் அருள் கிட்டுமென்று கருதி பச்சை குத்திக் கொண்டனர். இன்றைய இளம் தலைமுறையினர் வெறும் சடங்கிற்காக கையில் ஒரே ஒரு புள்ளியை மட்டும் பச்சை குத்திக் கொள்கின்றனர் (நேர்காணல், பொன்.மணிமேகலை, உடுமலை 5.12.2007).


பச்சைக் குத்திக் கொண்டால் பேய், பிசாசு போன்றவை தமக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பச்சை குத்திக் கொள்வதை இன்றும் கொங்கு நாட்டுப்புறக் கிராமங்களில் காணமுடிகின்றது.

தற்காலத்தில் அழகிற்காக பச்சை குத்திக் கொள்ளும் போக்குக் காணப்படுகின்றது. இளம் பெண்கள் பச்சைக் குத்திக் கொள்வதற்கு மாற்றாக (alternative) அழகிய வண்ண வண்ண ஓவியங்களைத் தங்கள் உடல்மீது வரைந்து கொள்கின்றனர். வயதான கொங்கு நாட்டுப்புறப் பெண்கள் அழகிற்காக செடி, கொடி, மலர் போன்றவைகளைப் பச்சை குத்திக் கொண்டிருப்பதை இன்றும் காணமுடிகின்றது. சுருங்கக் கொண்ட அவர்களின் கை கால்களின் மீது இன்றும் அழியா ஓவியங்களாய் காணப்படுகின்றன. கொங்கு நாட்டுப் புறத்தில் தங்களை வீரர்கள் என்று பிறரிடம் காட்டிக் கொள்வதற்காக முரட்டுத்தனமும், போர்க்குணமும் கொண்ட மனிதர்கள் மார்பின் இடது புறத்தில் போர்க்காட்சிகளை ஓவியமாகப் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்ததென்று கூறுவர். (நேர்காணல், சூர்யகாந்தன், கோயம்புத்தூர், 10.1.2008) கொங்கு நாட்டுப்புறமக்களிடம் அழகிற்காகப் பச்சை குத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

உடலை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணமும், தாங்கள் இறந்தாலும் தங்கள் உடலிலுள்ள ஓவியங்கள் அழியாமலிருக்க வேண்டும் என்ற ஆசையும் மனிதர்களிடம் இருந்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கொங்கு நாட்டுப்புற மக்களிடம் பச்சை குத்தும் கலை, அழகுக்கலையாகப்' பரிணாமை வளர்ச்சி பெற்றிருப்பதைக் கள ஆய்வு மூலம் அறிய முடிகிறது. முந்தைய தலைமுறையினரிடம் அழகுக்காகப் பச்சை குத்தும் வழக்கம் உள்ளதெனினும் இளந் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பெற்றோர்களின் வற்வுறுத்தலுக்காகவே இதை ஏற்றுக் கொள்கின்றனர். அதுவும் சமயத் தொடர்பான நம்பிக்கையாக அமைந்துள்ளது. பாலியல் தொடர்பாகப் பச்சை குத்தும் வழக்கமுள்ளதா? என்பதை அறிய முடியவில்லை. எனினும் பெண்கள் ஆண்களின் பெயர்களையும், ஆண்கள் பெண்களின் பெயர்களையும் பச்சை குத்தும் வழக்கம் இன்றும் கொங்கு நாட்டுப் புறத்திலுள்ளது. சமயத்தொடர்பான கடவுள் உருவங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் ஆகியோரின் உருவங்களைப் பச்சை குத்திக் கொள்கின்றனர். தற்காலத்தில் அழகுணர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகின்றது. பச்சை குத்தும் கலையை மேலும் ஆழமாகத் தரவுகளைச் சேகரித்து பச்சை குத்தும் கலையை ஆராய்ந்தால் கொங்குநாட்டு மக்களின் சமூக, உளவியல், பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்ளலாம்.

முனைவர் க.இந்திரசித்து



பச்சை குத்துதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 12:39 pm

பச்சை குத்துதல் Icon_eek பச்சை குத்துதல் Icon_eek பச்சை குத்துதல் Icon_eek

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக