ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

3 posters

Go down

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Empty கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by அசுரன் Sun Sep 16, 2012 9:59 pm

அசுரன் wrote:போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி எங்கேனும் விதிமீறல் இருந்தால் கதை போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


அழிந்த + அழியாத நினைவுகள்


நான் ஒரு எழுத்தாளன். நான் அப்படிச் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். என்றாலும் நான் அப்படித்தான் சொல்வேன். நீங்களும் கேட்டுக் கொள்ள வேண்டும். என் கதையைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா? அப்படியென்றால் நான் ஒரு எழுத்தாளன் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.

கெளசல்யாவைப் பார்த்து ரொம்ப நாளாகிப் போனது. அவளது முகங்கூட நினைவை விட்டு நழுவிக் கொண்டிருந்தது. அவளது தோற்றத்தைப் பற்றி எந்த நினைவும் இல்லை. அவள் அழகானவள் என்பது மட்டுந்தான் நினைவிலிருக்கிறது. ஒருநாள் அவளைப் பார்த்துப் பேச வேண்டும். இப்பொழுதெல்லாம் தொலைபேசியில் கூடப் பேசிக் கொள்வதில்லை. அவளுக்கு ஏதோ கோபமாக இருக்கலாம். ஒருவேளை எனக்குக் கூட ஏதாவது கோபமான இருக்கலாம். எதனால் எங்களுக்குள் பிரச்சினை வந்தது என்பதே மறந்து போயிற்று.

திரும்ப அவளிடம் பேச வேண்டும். திரும்பவும் காதலிக்க வேண்டும். அவளில்லாமல் நாட்கள் போகப் போக தனிமையும் வெறுமையும் கயிறுகளாய் மாறி என்னைச் சுற்றிக் கொள்கின்றன.

அவளுடைய தொலைபேசி எண்ணையும் என்னுடைய மொபைலில் இருந்து அழித்து விட்டேன். பத்திலக்க எண்ணை நினைவில் வைக்கவும் எனக்கு ஞாபக சக்தி இல்லை. அவளுடைய குரலும் மறந்து போய்விட்டது. ஆனால் அது கேட்பதற்கு இனிமையானது என்பது மட்டும் தான நினைவிருக்கிறது.

அவளை முழுதாக மறந்து விடக் கூடாது. மறந்துவிட்டால் அது என்னையே நான் மறந்து போனது மாதிரி. அவளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவளுடைய முகவரி கூட நினைவில்லை. அவள் எந்த ஊர்? கோயம்புத்தூரில் வைத்துப் பார்த்தேனா? இல்லை, சென்னையில் வைத்துப் பார்த்தேனா? அதுவும் நினைவில்லை. எல்லாமே மறந்து போய் விட்டது. பெயர் மட்டும் எப்படியோ நினைவில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

"கெளசல்யா", அழகான பெயர் அல்லவா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அது அழகான பெயர்தான். நான் அவளைக் கெளசி என்று செல்லமாகக் கூப்பிடும்போது, அது பிடிக்காமலோ, பிடித்துப் போயோ தலையை எத்தனை முறை செல்லமாகக் குட்டியிருப்பாள்? குட்டியிருப்பாளா? அதுவும் நினைவில்லை. தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

நீங்கள் இப்பொழுது என்னைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். இவன் ஒரு விசித்திரப் பிராணி என்று. காதலியையும், காதலையும் எப்படி ஒருத்தனால் மறக்க முடியும்? ஆனால் எனக்கு ஞாபக மறதி அதிகம்.

கடைசியாக அவளுடன் கொஞ்சிப் பேசியது எப்பொழுது என்பது கூட நினைவில்லை. ஒரு வாரமாகவும் இருக்கலாம். ஒரு வருடமாகவும் இருக்கலாம்.
இந்த நிலைமையில் நான் எப்படி அவளைத் தேடுவது? என் நண்பர்களில் யாருக்காவது அவளை நிச்சயம் நினைவிருக்கும். அவர்களுக்கு அந்த அளவுக்கு ஞாபக மறதி இல்லை. பேசிக் கேட்க வேண்டும்.

முதலில் ராமுக்கு போன் பண்ணிப் பேசினேன்.

"டேய்! நான் சரவணன் பேசுறேண்டா"

"சொல்றா"

"நம்மகூட படிச்ச கெளசல்யாவோட ஃபோன் நம்பர், அட்ரஸ் ஏதாவது இருக்காடா?"

"கெளசல்யான்னு யாருமே நம்ம கூட படிக்கலடா"

"நல்லா ஞ்ாபகப்படுத்திப் பாருடா"

"இல்லடா, அப்படி யாரும் படிக்கல"

"சரிடா, அப்புறம் பாக்கலாம்"

மறுமுனையின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தேன்.

குமாரிடம் பேசலாம். அவனிடம் தான் நான் பெண்களைப் பற்றி அதிகமாகப் பேசியிருக்கிறேன். அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

அவனை ஃபோனில் விளித்தேன். "நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிஸியாக..." என்று அந்தக் குரல் தொடர்ந்தது. ஒரு மணி நேரம் இதே நிலை தான். காதலியிடம் பேசிக் கொண்டிருப்பானோ? இருக்கலாம்.

ஒருவழியாக அவன் என் அழைப்புக்குப் பதில் கொடுத்தான்.

"டேய், நான் சரவணன் பேசுறேண்டா"

"என்ன விஷயம், சொல்லு"

"ஒரு மணிநேரமா ட்ரை பண்ணிகிட்டிருக்கேன். யாருகிட்டடா அப்பிடி பேசிகிட்டிருந்த?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ சொல்லு"

"பரவாயில்ல, யாருகிட்டனு சொல்லு"

"ஜே கிட்ட தான் பேசிகிட்டிருந்தேன்"

ஜே என்பது அவன் முன்னாள் காதலிக்கு அவன் இட்டிருந்த செல்லப் பெயர். ஏதோ பிரச்சினையில் பிரிந்து விட்டார்கள். அவன் அவளைப் பற்றி என்னிடம் பல அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறான்.

"உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்ல"

"அதெல்லாம் முடிஞ்சிருச்சுடா"

எனக்கும் கெளசல்யாவுக்கும் இருக்கும் பிரச்சினையும் சீக்கிரம் முடிந்து விடும்.

"எப்ப கல்யாணம்?"

"சீக்கிரமே, வீட்டில ஓகே சொல்லிட்டாங்க"

எனக்கும் கெளசல்யாவுக்கும் சீக்கிரமே வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடக்கும். இவனுக்கெல்லாம் நடக்கும் போது எனக்கு நடக்காதா?

"நம்ம கூட படிச்ச கெளசல்யா போன் நம்பர் இருக்காடா?"

குமார் மறுமுனையில் சிரிக்கத் தொடங்கினான்.

"சீரியசா பேசிகிட்டிருக்கேன். சிரிச்சு கடுப்பேத்தாத"

"என்னடா ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிற?"

"இதுக்கு மேல ஏதாவது கிண்டலா பேசினீனா கெட்ட வார்த்தைலயே திட்டிருவேன்டா"

குமார் மவுனித்தான்.

"சொல்றா, பரதேசி"

"கெளசல்யான்னு ஒரு பொண்ணே இல்லடா", குமார் அமைதியான குரலில் சொன்னான்.

தொடர்ந்தான், "காலேஜ்ல படிக்கும் போது நீதான் ஒரு லவ் ஸ்டோரி எழுதின. அதில வர பொண்ணோட பேரு தான் கெளசல்யா. அந்தக் கேரக்டரையே நீ காதலிக்கத் தொடங்கிட்டதா சொன்ன. ஆனா அது இப்படியாகும்னு நான் நெனக்கல"

நான் முழுமையாக வெறுமையாகிப் போனேன்.



Last edited by அசுரன் on Mon Sep 17, 2012 12:22 am; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by பூவன் Sun Sep 16, 2012 10:06 pm

நன்று ....
எனக்குள்ளும் பதிந்தது இந்த அழியாத நினைவு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Guest Tue Oct 16, 2012 7:54 pm

நகையுடன் பயணிக்கும் கதை அருமை ... சிறிய கதைதான் ஆனால் மனதில் நிறைய நாட்கள் நிற்கும் ...

நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by krishnaamma Fri Oct 19, 2012 8:37 pm

கதை எழுதறவங்க கற்பனை உலகிலே வாழ்வாங்க என்று கேள்விப்பட்டிருக்கேன் , அதுக்குன்னு இப்படியா? புன்னகை
.
. anyhow நல்ல கதை புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா) Empty Re: கதை எண். 003 - அழிந்த + அழியாத நினைவுகள் - (சிறுகதை சின்னத்திருவிழா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum