ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே!

Go down

புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Empty புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே!

Post by kirikasan Fri Sep 14, 2012 7:43 pm

கவிதையில் புதிர். இதன் விடையை ஊகிக்க முடிகிறதா. கொஞ்சமாவது ஊகிக முடிந்தால் பாராட்டுக்கள்!
விளக்கம் விடைநாளை தருவேன்
(புதிர்கவிதை பெண்ணைக் க்ண்டேன்)

பரவும்காற்றில் சுனையொன்றருகே
பாதம் பதிய நடை கொண்டேன்
வரவை அறியா தவளை ஒன்றும்
வடிவில் மலராய் கண்டே “பார்
அருகும்வாழ்வில் அழகின்பக்கம்
அறியாதெல்லாம் முன்வைத்து
திருவெண்முகமோ திங்கள் ஆகத்
தோன்றக் கண்டேன் திருமகளே!”

மதியோ விதியோ மலரோ அறியேன்
மனமும் வாடிக் காண்கிறேன்
மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்
மதியும் சோராதிருப்பாய் பெண்ணே
மாற்றம் கொள்ளக் கேட்கின்றேன்
புதிரின் விடையைக்கூறு உன்னைப்
புதிதாய் ஆக்கி வைக்கின்றேன்

இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்

திறமை கொண்டாள் திரும்பிக்கண்டு
தெய்வக் கோவிற் சிலையென்றே
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
சரியாய் விடையும் பகர்ந்தாள் அவளை
சிறிதே புகழ்ந்து பார்பெண்ணே

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்

ஆவின் கன்று அவனை அறியும்
ஆனால் பதிலும் அதுவல்ல
தாவென் றேதும்கேளா தருவான்
தருமோர் பதிலும் அதுவென்றேன்
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

தாவரம் நீரில் வளரும் இவளோ
தனியே கண்ணீர் மரமாமோ
பூவரசம் பூப்போன்றே மெதுவாய்ப்
புன்னகை பூக்கக்கண்டேநான்
தாவரமென்று கேட்டால் நானும்
தர மாட்டேனோ ஏனென்றேன்
பாவின் புதிரை நீயும் சொல்லு
பார்ப்போம் எழிலார் பெண்ணென்றேன்

வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே
மதியென் றெந்தன் வதனம்கண்டீர்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்

விளைந்தாய் அழகாய் வளர்ந்தாயன்றி
வலிந்தாய் மனமும் பொலிந்தாயில்
விளைவாய் என்னக் கலந்தாய் அன்பில்
குழைந்தாய் இனிமேல் குழந்தாய் என்
எழுந்தே வானில் இரவியும்காண
பொழுதே விடிந்துபோம் நாளில்
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்

ஆறும் குணமும் இன்றிக் கடலில்
அலையில் கயலைக் காண்பேனாம்
மாறிக் கயலில் கடலைக் கண்டேன்
மாதே இசைந்தேன் மனதில் கொள்
எட்டும் விழியின் இறைநீர் குன்ற
தட்டும் கொண்டு வருவோம் காண்
தாவென் றுன்னை அன்னை கேட்பாள்
சரியா என்றேன் மலர்ந்திட்டாள்


Last edited by kirikasan on Tue Sep 25, 2012 3:29 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதிர் கவிதை விடையை ஊகிக்க முடிகிறதா??? விடை உள்ளே! Empty விளக்கம்

Post by kirikasan Tue Sep 25, 2012 3:27 pm

மன்னிக்கவும் புதிருக்கு விளக்கம் தர சற்று தாமாதித்திவிட்டேன்

புதிருக்கு விடை


மூன்றாவது அடி

வரவை அறியாதவளை ’வடிவில் ஒன்றும்
மலராய் கண்டே’ எனப் பொருள் கொள்க



மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்

சூரியனும் சந்திரனும் சேர்ந்தால் (நேர்கோட்டில்)அமாவாசை . அது போல் என்மதிமுகமும் சிந்தனை அறிவும் சேர்ந்ததால் இருள் வந்ததோ என்று ஒரு பொருள் படப் பேசுகிறாள்


. முதற் கேள்வி

1. தாகம் கொண்டான். தண்ணீர் கேட்கிறான் அவள் நீர் அள்ளிக் கொடுகிறாள்.



இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
//காகம்// கரையும்


கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்
முதல் நான்குவரியிலிம்சொல்லப்படுவது காகம்
’கா’’தா’ல் கொள்மின் என்றதால் கா எழுத்து தா வாக மாறுகிறது.அதனால் தாகம்

தாகத்துக்குக் தண்ணீர் கேட்கிறான்.

விடை

விடை
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
மாதம் நாளும் ஒன்றாம்--// திங்கள்/ மாதத்தின் பொதுபெயர் நாளுக்கும் உண்டு
வந்தால் மறுநாள்--//செவ்வாய்’//
இருந்தோர் நகை //புன்னகை// (சிவந்த வாயிலிருந்து ஒரு புனகையை வீசி

பின்னர்
இதனைக்கொள்வீர் ”நீர்” என்றாள்-- //நீர். தண்ணீர்//
***************************
இரண்டாவது புதிர்க் கேள்வி

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
விடை மா (கனி ஈயும்)
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
விடை
மாமா (மாமன் பெண்)- கன்னி

/அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்/
(கனி - கன்னி) விடை
மெய்யெழுத்து வித்தியாசம்
கன்று மா என்று கத்தும் விடையல்ல

அவள் கூற்று
வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே

வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
இதுவும் வழக்கமாக நான்செய்வதுதான்

’விழி’ கொள்ளும்
’விதியில்’ காணும் பொது //வி//
வேகம் முன் வைத்தால் //விவேகம்//
***
விடை கூறுகிறாள்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்
அவள் என்னை என்று கன்னி யை குறிக்கிறாள்.
*****************
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

பூவின் தோழன் காற்று. பிரிக்கும் பொருள் பூவிலிருந்து மணம் எடுத்துகொள்ளும். அதன்படி உன்னை மணம் செய்து கொள்வேன் என்கிறான்
***
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்
நாலில் ஒன்று ( கால்) குளத்தில் கால்வைத்து நிற்கிறாள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum