ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!

2 posters

Go down

பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்! Empty பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!

Post by சிவா Fri Sep 14, 2012 12:47 am

கவனக்குறைவாக சிகிச்சை அளிப்பது, ஓவர்டோஸ் கொடுப்பது, தப்பும்தவறுமாக சிகிச்சை அளிப்பது இதனால் நோயாளிகள் இறப்பது என்பது வழக்கமாகி வரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களைத் தாக்காமல் இருக்க டெல்லி அர்சு மருத்துவமனையான தீன் தயாள் உபாத்யாய்மருத்துவமனையில் 'பவுன்சர்கள்' என்ற அடியாட்களை நியமனம் செய்துள்ளனர்.

இவர்கள் பணி என்னவெனில் அவசரநிலை பிரிவு, பிரசவ அறை ஆகியவற்றில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்களை 'கட்டுப்படுத்துவதாம்'!

இவர்கள் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் அல்லது சற்றே கோபமடைந்து கத்தி ஆர்பாட்டம் செய்பவர்கள் போன்றவர்களை 'அப்புறப்படுத்துவார்களாம்'. அதாவது மேலே கைவைக்கக் கூடாது என்பது உத்தரவாம்.

ஆனாலும் இவர்களது சிக்ஸ் பேக் அப்ஸ் பாடியை பார்த்தாலே அங்கு அநியாயம் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்பதுதான் இதன் உண்மையான நோக்கம் என்று டெல்லி வாசிகளில் சிலர் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

சண்டைக் காட்சிகளில் ஹீரோவிடம் அடி வாங்கும் பயில்வான் போல் இவர்கள் இருப்பதால் மக்களில் பலர் சொல் பேச்சு கேட்கின்றனராம். இதனை அந்த மருத்துவமனை மருத்துவரான நிதின் சேத் என்பவரே பல்லிளித்துக் கொண்டு கூறியுள்ளார். இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நோயாளிகள் உறவினர்கள் கையால் 'கவனிப்பு' நடந்ததே இவரது மகிழ்ச்சிக்குக் காரணம் போலும்!

இவர்களை நியமனம் செய்த பிறகு டாக்டர்களின் மூஞ்சி, முதுகுகள் தப்பித்ததாக அவரே கூறுகிறார். அதாவது இவர்கள் நியமனத்திற்குப்பிறகு அசம்பாவித தாக்குதல் சம்பவம் எதுவும் தீன் தயால் மருத்துவமனையில் நிகழவில்லையாம்.

டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்! மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிக்கும்போது நோயாளியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்ற அடிப்படையில் டெல்லியில் ஒரு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 டாக்டர்களுக்கு 'கவனிப்பு' நடந்துள்ளது.

தவறு செய்து நோயாளிகள் உறவினர்கள் நண்பர்களிடம் 'வாங்கி' கட்டிக் கொள்ளும் டாக்டர்களைப் பாதுகாக்க டெல்லி அரசு மருத்துவமனையில் 21 அடியாட்களை நியமித்துள்ளனர்.

இவர்கள் முதலில் பிரச்சனை செய்பவர்களிடம் 'சுமுகமாக' பேசுவார்களாம். பிறகு அப்படியும் சொல் பேச்சு கேட்கவில்லையெனில் கேஷுவல்டி மெடிகல் ஆபிசர் அறைக்கு அந்த நபரை அழைத்துச் செல்வார்களாம் அங்கு 'பிரச்சனை தீர்க்கப்படுமாம்'!

இனிமேல் என்ன நோயாளிகள் இந்த பவுன்சர்களுக்கும் 'லஞ்சம்' கொடுக்க சில பல நூறுகளை அழ வேண்டியதுதான் பாக்கி!

இது என்ன அரசு மருத்துவமனையில் அடியாட்கள் என்று ஆளும் கட்சியைக் கேட்டால் "நல்லதுதானே வேலை வாய்ப்பு கொடுக்கிறோம் பாருங்கள்" என்று கூறினாலும் கூறுவார்கள். விலை வாசி உயர்வினால் 'மகிழ்ச்சியடையும்' அபார மூளை அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாயிற்றே நம் அமைச்சரவை!

இனிமேல் என்ன இந்த மோசமான நடைமுறை மற்ற மருத்துவமனைகளிலும் கடைபிடிக்கப்பட்டால் (இப்போது நடைமுறையில் இல்லை என்று கூறுவதற்கான உத்திரவாதம் இல்லை) நோயாளிகளின் பில்களில் பவுன்சர்கள் சார்ஜ் என்று ஒரு புதிய வகை சேர்க்கப்பட்டாலும் படலாம்!

டாக்டர்களும் நோயாளிகளிடம் இனி கோபாவேசமாகப் பேசலாம் ஏனெனில் எதிர்த்துக் கேட்க முடியுமா? அவரது பக்கத்தில் பொன்னம்பலம் ரேஞ்சிற்கு ஒரு பவுன்சர் நின்று கொண்டிருந்தால் யாருக்குத்தான் எதிர்க்க மனசு வரும்?

நோயாளிகளும், நோயாளிகளின் நண்பர்களும் இனி மைக்கேல் மதன காமராசன் படத்தில் வரும் காமேஸ்வரன் பாணியில் "பீம் பாய் பீம் பாய் எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி டாக்டரை கூப்ட முடியுமா?" என்று கேட்க வேண்டியதுதான்.

டுவெண்டி 20 கிரிக்கெட் வந்த பிறகு தன் மகனும் பணம் அள்ளவேன்டும் என்று கிரிக்கெட் கோச்சிங்கிற்கு அனுப்பும் பெற்றோர்கள் இனி மருத்துவமனை 'பீம் பாய்கள்' பயிற்சி ஏதாவது இருந்தால் அதில் சேர்த்து விட முயற்சி செய்யலாம்!

மிகப்பெரிய முதல் சிறிய மருத்துவமனை வரை மருந்துக் கடைகளை உள்ளேயே அந்த மருத்துவரோ அல்லது மருத்துவமனை நிர்வாகமோ நடத்தி வருவது இன்று சகஜமானது. ஓரிரண்டு பவுன்சர்களை அங்கு நியமித்தால் போதும் டாஸ்மாக் பாணியில் ஜெண்டாமைசின் ஒரு ஊசி 9 ரூபாய் என்றால் 14 ரூபய் கொடு என்று கேட்டு வாங்கலாம்! கொடுதுத் தானே ஆகவேண்டும்? வேறு வழி!

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வருவதுபோல் 'அந்த பொறம்போக்க போஸ்ட்மார்ட்டம் பண்ணு' ரக பேச்சுக்களை இனி மக்கள் சர்வசகஜமாக கேட்கக்கூடிய நிலை ஏற்படும்.

ஒரு அரசு மருத்துவனையிலேயே அடியாட்கள் நியமனம்! அதனை அனுமதிக்கும் அரசு! இந்தியா ஒரு வெட்கங்கெட்ட தேசமாக மாறிக் கொண்டிருக்கிறதா அல்லது ஏதோவொரு பயங்கரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? அனைவரும் யோசிக்க வேண்டிய கேள்வியாகும் இது!


வெப்துனியா


பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்! Empty Re: பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!

Post by யினியவன் Fri Sep 14, 2012 2:14 am

டாக்டர்ட்ட தப்பிச்சா இவங்க மேல அனுப்பி வெச்சிடுவாங்களோ?

ரவுடிங்கள வெச்சு சமாளிக்கறதால இந்த அரசை இனிமே
யாரும் கையாலாகாத அரசுன்னு கேவலமா
சொல்லாதீங்க ஜனங்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
» டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
» டெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்
» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
» டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum