ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

3 posters

Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by அசுரன் Thu Sep 13, 2012 9:19 pm

நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.

தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.

கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.

கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.

அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.

அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.

இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.

உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.

கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!

தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !

நன்றி இணையதளம்

கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by யினியவன் Thu Sep 13, 2012 9:23 pm

கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.

நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by ஜாஹீதாபானு Fri Sep 14, 2012 1:39 pm

நான் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன் பகிர்வுக்கு நன்றி தம்பி... அருமையிருக்கு

கடைசியில் நீங்க சொன்ன கருத்து சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum