ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
Dr.S.Soundarapandian
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
heezulia
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 
i6appar
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_m10இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

3 posters

Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by அசுரன் Thu Sep 13, 2012 9:19 pm

நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.

தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.

கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.

கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.

அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.

அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.

இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.

உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.

கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!

தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !

நன்றி இணையதளம்

கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by யினியவன் Thu Sep 13, 2012 9:23 pm

கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.

நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by ஜாஹீதாபானு Fri Sep 14, 2012 1:39 pm

நான் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன் பகிர்வுக்கு நன்றி தம்பி... அருமையிருக்கு

கடைசியில் நீங்க சொன்ன கருத்து சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை ! Empty Re: இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum