ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநானூறு - ஒரு மீளாய்வு

3 posters

Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel Tue Sep 11, 2012 5:02 pm

1.கண்ணி கார்நறுங் கொன்றை;காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே! சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப!
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை,
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை,
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே!

பாடலாசிரியர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:தலையிலும், அழகிய மார்பிலும் கொன்றை மலர் அணிந்திருப்பான். அவனது வாகனம் வெண்மையான எருது, அவனது கொடியும் அந்த எருதேயாகும். கழுத்தில் கறையுடயவன்; அக்கறை வேதம் ஓதுகின்ற அந்தணர்களால் புகழப்படும். பெண்ணுருவைத் தனது ஒரு பக்கத்தில் கொண்டவன்; அவ்வுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்ளவும் அவனால் முடியும். பிறைநிலவினைப் போன்று ஒளிரும் நெற்றியுடையவன். அப்பிறை பதினெட்டு கணத்தவராலும் வழிபடப்படுவதாகும். எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்குபவன். நீர் வற்றாத கங்கையைத் தனது கடைமுடியில் கொண்டுள்ளவன். அத்தகைய பெருமான தவமியற்றுபவருக்கு மிகவும் இனிமையானவன்.

மீளாய்வு:
இப்பாடலடிகளில் சிவபெருமானின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஓரளவு புராண, இதிகாசப் பரிச்சயம் கொண்டவருக்கு இப்பாடலில் குறிப்பிடப்படும் பெருமான் சிவபெருமான் என்பது எளிதில் விளங்கி விடும்.

இப்பாடலில் இருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. இப்பாடல் சிவபெருமானைப் புகழ்ந்து எழுதப்பட்டது.
2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.
3.இப்பாடலாசிரியர் பாரதத்தைத் தமிழில் எழுதியுள்ளார். (ஆனால் நம்மிடத்தில் அதன் சுவடிகள் இல்லை)

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

(இக்கருத்துகளைப் பற்றி கலந்துரையாட விரும்பும் தோழர்கள் இத்திரியிலேயே தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும். இது ஒரு தொடர் பதிவு.)


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by சாமி Tue Sep 11, 2012 6:46 pm

2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.

தவறான புரிதல் நண்பரே!
> வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

> வேதம் , வேள்வி இவையெல்லாம் தமிழரின் பழக்கம். பிற்காலத்தில் ஒரு பிரிவு ஆரியரால் அவை எடுத்துக் கொள்ளப்பட்டன.

> அந்தணர், வேதியர், மறையோர், ஐயர், பார்ப்பனர் போன்ற சொற்கள் எந்த ஒரு தனிப்பட்ட இனத்தையும் குறிக்கும் சொல் அல்ல. அது சான்றோரைக் குறித்த சொல். பிராமணன் என்ற சொல் மட்டுமே இனத்தைக் குறிக்கும் சொல்.

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

> ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நன்றி
சாமி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel Wed Sep 12, 2012 3:39 am

வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Guest Wed Sep 12, 2012 7:04 pm

சூப்பருங்க அருமை தோழா
avatar
Guest
Guest


Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by சதாசிவம் Mon Sep 17, 2012 10:57 am

நல்ல படைப்பு நண்பரே, தொடருங்கள்.

Rangarajan Sundaravadivel wrote:வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.



உங்களின் கருத்தை ஏற்கிறேன். பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம் .





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel Mon Sep 17, 2012 1:22 pm

பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம்

நாம் வடமொழி வேதங்களையும், நூல்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை அல்ல. அனைத்தையும் விமர்சனத்துக்கும், ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும் என்பதே என் அவா, தோழரே.



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Rangarajan Sundaravadivel Mon Sep 17, 2012 6:36 pm

2. மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குணகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே!

பாடலாசிரியர்: புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப் பெற்றவர் சேரமான பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: ஓம்படை வாழ்த்து

பொருள்: மண்ணால் நிரம்பிய நிலமும், அதன் மேல் விளங்கும் ஆகாயமும்,அதனுடன் இயைந்து விளங்கும் காற்றும், காற்றால் பெருகும் நெருப்பும், நெருப்பின் முரணாய் வழங்கும் நீரும் என ஐம்பெரும் பூதங்களாய் வழங்கும் இயற்கையைப் போன்றவனே!

நின்னைப் போற்றாதவரிடம் பொறுமை காட்டுவாய். ஆழ்ந்த அறிவும், ஆற்றலும், வள்ளன்மையும், பகைவரை அடக்கும் வலிமையும் உடையவனே!

உன் ஆட்சிக்குரிய பகுதியில் உள்ள கிழக்குக்கடலில் உதிக்கும் கதிரவன், மீண்டும் உன் ஆட்சிக்குரிய மேற்குக் கடலில் நீராடும். (அஸ்தமிக்கும்) பெரிய நிலப்பரப்பை உடையவனே! வானினை எல்லையாகக் கொண்டவனே!

பிடரிமயிர்களுடைய குதிரைப் படையுடைய ஐவர் (பாண்டவரைக் குறிப்பதாகக் கருதப்பட்டது), நூற்றுவரோடு (கவுரவர்) போர்புரிந்த களத்தில் மிகுந்த சோறு அளித்து உதவி புரிந்தவனே!

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களின் நெறி திரிந்தாலும் தன் கடன் பிறழாத பரிவார சுற்றத்தோடு, நெறி தவறாது நிலைத்து வாழ்க!
சிறுதலையும் பெருங்கண்ணும் உடைய மான், பிணையாகிய தன் பெண் மானுடன் மேவவும், அந்தணர் மாலைப் பொழுதில் அருங்கடன்களை (சந்தியாவந்தனம்) செய்யவும், மூன்று வகையான தீயுடன் சிறந்து விளங்கும் அழகுடைய இமயத்தைப் போன்றும் பொதிகையைப் போன்றும் நீ நீடூழி வாழ்க!

மீளாய்வு: நம்மிடம் சங்க காலத்தைப் பற்றிய வரலாற்று நூற்கள் இல்லை. எனவே நம்மிடம் இருக்கும் சில மூலங்களை வைத்தே நாம் வரலாற்றைக் கட்ட வேண்டும். அதாவது சங்க இலக்கியங்களில் இருந்து. இத்தகு நிலையில் பிழை நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் எது உயர்வு நவிற்சி, எது இயல்பு நவிற்சி என்று நம்மால் பிரித்தறிய முடியாது.

மகாபாரதப் போரைப் பற்றிய தகவல் இப்பாடலில் குறிப்பிடப்பட்ட காரணத்தைக் கொண்டு குருஷேத்திரம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று நம்மால் முடிவு செய்ய முடியாது. பாரதம் ஒரு காவியமாக தமிழில் அக்காலத்தில் பெருந்தேவனாரால் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிகிறோம். எனவே பாரதப் போரின் மீது இப்புலவர் ஏற்றிச் சொல்லும் ஒரு கவித்துவச் சுதந்திரத்தின் பகுதியாகக் கூட இது இருக்கக் கூடும்.

அந்தணரின் சந்தியாவந்தனமும், நான்கு வேதங்களும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. எனவே ஆரியக் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாக விரவியிருந்தது என்பதை உணரலாம்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

புறநானூறு - ஒரு மீளாய்வு Empty Re: புறநானூறு - ஒரு மீளாய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum