ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
heezulia
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
mohamed nizamudeen
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
VENKUSADAS
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
heezulia
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
mohamed nizamudeen
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 
VENKUSADAS
 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_m10 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by சிவா Mon Sep 10, 2012 12:27 pm

மது வகைகள் பாட்டிலுக்கு இன்று முதல் ரூ.5 முதல் ரூ.45 வரை அதிரடியாக விலை உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரை வருவாய் அதிகரிக்கும்.

டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் 6,802 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 4,730 டாஸ்மாக் கடைகளில், மது அருந்துவதற்கு வசதியாக பார் வசதி செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்காற்றுகிறது.

இருப்பு கணக்கெடுப்பு

இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்கள் இருப்பு கணக்கெடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மதுபாட்டில்கள் உள்ளன என்ற விவரத்தை டாஸ்மாக் பிராந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயரப்போகிறது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மதுபானங்களின் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை.

குவார்ட்டர் விலை ரூ.5 உயர்வு

இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் மது வகைகள் பாட்டிலுக்கு ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகள் (சாதாரண ரகம்), குவாட்டர் பாட்டில் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.5 விலை உயர்ந்து, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், ரம், பிராந்தி, விஸ்கி போன்றவற்றின் நடுத்தர ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை அதிகரிக்கப்படுகிறது. பிரீமியம் ரக வகைகளும் இதேபோல், ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது.

ரூ.45 வரை அதிகரிப்பு

இதேபோல், அரை (ஆப்) மற்றும் முழு (புல்) பாட்டில் மது விலைகள் ரூ.45 வரை உயர்த்தப்படுகிறது. சாதாரண ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.125, ரூ.130 மற்றும் ரூ.135 ஆக உள்ளது. இனி இந்த வகைகள் அனைத்தும் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது. இதில் நடுத்தர ரகங்கள் தற்போது ரூ.145, ரூ.155 ஆக உள்ளது. இந்த வகைகள் அனைத்தும் இனி ரூ.165 ஆக உயரும். பிரீமியம் ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.155, ரூ.160 ஆக உள்ளது. இவற்றின் விலை இனி ரூ.180 ஆக உயரும்.

முழு பாட்டில் சாதாரண ரகத்தின் விலை தற்போது ரூ.235, ரூ.245, ரூ.255 ஆக உள்ளது. இனி இந்த ரகங்கள் அனைத்தும் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.280க்கு விற்கப்படும். முழு பாட்டில் நடுத்தர ரகங்களின் விலை தற்போது ரூ.280, ரூ.295க்கு ஆக உள்ளது. இனி ரூ.320 ஆக இவற்றின் விலை உயர்த்தப்படும். பிரீமியம் ரக முழு பாட்டில் விலை தற்போது ரூ.315, ரு.320, ரூ.360 ஆக இருந்தது,. இனி இவற்றின் விலை ரூ.360 ஆக உயர்த்தப்படும்.

ஆனால், பீர் வகைகள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரூ.800 கோடி வருவாய் அதிகரிக்கும்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டு 536 லட்சம் பெட்டிகள் மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு, 600 லட்சம் பெட்டிகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுபானம் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு, வருவாய் 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த விலை உயர்வால் அரசுக்கு ரூ.800 கோடி மேலும் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மது பிரியர்கள் அதிர்ச்சி

மதுவகைகள் இன்று முதல் பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்படுவதால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கும் மது பிரியர்கள், மேலும் விலை உயர்த்தப்படுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

தினத்தந்தி


 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 12:52 pm

நல்ல வேல நாங்க எல்லாம் தண்ணி அடிக்கிறது இல்ல, மாமா அங்களுக்குதான் இப்ப ரொம்ப சிரமமாயிடும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by balakarthik Mon Sep 10, 2012 1:33 pm

மப்பென்று வாழ்வுதனில் வந்துவிட்டால் மண்ணில்
மாந்தர்க்கு விலையேற்றம் பெரிதில்லை - டாலமன் மப்பையா ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம்  மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by யினியவன் Mon Sep 10, 2012 1:36 pm

மப்பும் மந்தாரமுமாய் வந்த ஓமன் கிளைக்கு வாழ்த்துகள்.

சரக்கினில் போதை ஏற ஏற
சரக்கின் விலையும் ஏறும் ஏறும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 1:39 pm

இதுக்கு பேருதான் முன் ஏத்தமா? வாழ்க தமிழகம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by balakarthik Mon Sep 10, 2012 1:40 pm

யினியவன் wrote:சரக்கினில் போதை ஏற ஏற
சரக்கின் விலையும் ஏறும் ஏறும்...


அதனாலேத்தான்

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பார் அதை நாடுன்னு

நயண்டி அடிச்ச நையாண்டி புலவர் பாடினாரு


ஈகரை தமிழ் களஞ்சியம்  மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by யினியவன் Mon Sep 10, 2012 1:43 pm

மாணிக்கம் நடேசன் wrote:இதுக்கு பேருதான் முன் ஏத்தமா? வாழ்க தமிழகம்.
ஏத்த ஏத்த கூட்டம் குறையல
ஏத்த ஏத்த போதை குறையல

ஏத்தமிகு வாழ்வு ஏட்டளவில் இல்லையென
நிரூபிக்கும் தமிழகம் வாழ்க வாழ்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by சிவா Tue Sep 11, 2012 1:12 pm

அமலுக்கு வந்தது "சரக்கு' விலை உயர்வு

சென்னை : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பானங்களின் விலை உயர்வு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. குவார்ட்டருக்கு, ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளதால், குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தாலும், விற்பனையில் எந்த மந்தமும் ஏற்படவில்லை. ஐந்து ரூபாய் மற்றும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக, சமீபத்தில் பீர் பாட்டில்களுக்கு தலா ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைப் போல, தற்போது பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மது பானங்களுக்கும் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குவார்ட்டர் பாட்டில், 75 ரூபாயிலிருந்து, 80 ரூபாயாகவும், 85 ரூபாயிலிருந்து, 90 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளைத் தவிர மற்ற மது வகைகளின் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. டாஸ்மாக் கடைகளில், வழக்கம் போல் குடிக்கச் சென்ற குடிமகன்கள், விலை உயர்வை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், புதிய விலைக்கு சரக்குகளை வாங்கிச் சென்றனர். "விற்பனையில் எந்த மந்தமும் நேற்று ஏற்படவில்லை' என, டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "மது பானங்களின் விலை உயர்வால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி! : "மது பானங்களின் விலையை அதிகரித்ததன் மூலம், டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என்று வெளியான தகவல்களுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைகளில் பணியாற்றி வந்த, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தில், 2003, நவம்பரில், தனியாரிடம் இருந்து மது விற்பனையை அரசே ஏற்று நடத்தத் துவக்கியது. 2003 - 04ம் நிதியாண்டில், 3,639 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை, 10 ஆண்டுகளில், 26 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2012 நிதியாண்டில், டாஸ்மாக் மூலம் விற்பனை வரி, ஆயத்தீர்வை மூலம் மட்டுமே, 22 ஆயிரம் கோடி அளவுக்கும், பார் டெண்டர், காலி பாட்டில், அட்டைப் பெட்டி வகையில், மேலும் 4,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் கிடைக்கும் என, திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை முன் உதாரணமாகக் கொண்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், அக்., 2, காந்தி ஜெயந்தி அன்று மூடப்பட்டு விடும் என, தகவல்கள் பரவி வந்தன. இதனால், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வந்த, 35 ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் பீதி நிலவியது. டாஸ்மாக் மது பான விற்பனையை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகரில் உள்ள கடைகளுக்கு ஏர்கூலர், பில்லிங் மெஷின்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதே போல், பிற நகரங்களில் செயல்படும் கடைகளுக்கும், இந்த திட்டத்தை விரிவுபடுத்த, டாஸ்மாக் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், 6,900க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில், மது பானங்களின் விலை, நேற்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற வதந்திக்கு, அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

"கொசுறு' வருவாய்க்கு ஆப்பு! : டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலையில், ஐந்து ரூபாயில் முடியும் சரக்குகளை விற்பனை செய்யும் போது, சில்லரை இல்லை என்ற காரணம் காட்டி, டாஸ்மாக் ஊழியர்கள் பலரும், "கொசுறு' வருவாய் ஈட்டி வந்தனர். சில வாடிக்கையாளர்கள் சில்லரை கேட்டு நச்சரித்தாலும், இரண்டு ரவுண்டு சரக்கு உள்ளே போனதும், போதை தலைக்கேறிய அவர்களிடம், சில்லரை பணத்தைக் கொடுக்காமல் டபாய்க்கும் கலையில் கை தேர்ந்தவர்களாக சில ஊழியர்கள் உள்ளனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த, ஐந்து ரூபாயில் முடியும் மது பாட்டில்கள் அனைத்தும், கூடுதலாக, ஐந்து ரூபாய் முதல், 95 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் தொகையை, "ரவுண்டு' தொகையாக நிர்ணயித்துள்ளனர். இனி எந்த மது பாட்டில்களும் ஐந்து ரூபாயில் முடியும் தொகையுடன் விற்பனை செய்யப்பட மாட்டாது. குவார்ட்டர் பாட்டில்கள் அனைத்தும், 70, 80, 90, 100 என்று விற்பனை தொகையை, "ரவுண்டாக' மாற்றி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், "கொசுறு' பணம் கிடைக்க வழியின்றி போனதால், டாஸ்மாக் ஊழியர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by அசுரன் Tue Sep 11, 2012 1:15 pm

balakarthik wrote:
யினியவன் wrote:சரக்கினில் போதை ஏற ஏற
சரக்கின் விலையும் ஏறும் ஏறும்...


அதனாலேத்தான்

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பார் அதை நாடுன்னு

நயண்டி அடிச்ச நையாண்டி புலவர் பாடினாரு
இப்படியெல்லாம் பேசினீங்கன்னா இனி பாட்டில் ரேசன் கடையில் தான் தருவாங்க அம்மா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by balakarthik Tue Sep 11, 2012 1:23 pm

அசுரன் wrote:இப்படியெல்லாம் பேசினீங்கன்னா இனி பாட்டில் ரேசன் கடையில் தான் தருவாங்க அம்மா!
நல்லதுத்தானே அப்படியே சிகப்பு கார்டு வசுருக்குரவங்களுக்கேல்லாம் மாசம் பத்து லிட்டர் ரம் ப்ரீயா கொடுக்கணுமுன்னு மனு கொடுக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம்  மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது Empty Re: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி: பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை உயருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அதிர்ச்சி செய்தி- அதிரடியாக உயரும் விலை: ஏப்ரல் 1 முதல் அமல்
» ரூ.1,000 முதல் ரூ.1,800 வரை அதிகரிக்கும் மின்சார இணைப்புக்கான டெபாசிட் உயருகிறது
» நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.
» மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி - தாமதமாகிறது அகவிலைப்படி உயர்வு
» அதிர்ச்சி செய்தி தொடர்கிறது :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum