Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
2 posters
Page 1 of 1
இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
![இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது Rock](https://2img.net/h/dailythanthi.com/images/news/20120910/rock.jpg)
இந்தியாவின் 100-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-21, இரு வெளிநாட்டு செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
ஸ்ரீஹரிகோட்டா, செப்.10-
விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கை கோள்களை அனுப்புவதிலும், இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (`இஸ்ரோ') 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தனது முதல் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தை தொடங்கியது.
அதன்பின்னர், பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து 62 செயற்கைகோள்களையும், பிற நாடுகளின் செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் 37 ராக்கெட்டுகளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
இந்தியாவின் 100-வது ராக்கெட்
இந்தியாவின் 100-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஏவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 51 மணி நேர `கவுண்ட்டவுன்`, கடந்த 7-ந் தேதி காலை 6.51 மணிக்கு தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில், ராக்கெட்டிற்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டன. விண்வெளி பயணத்திற்காக இந்த ராக்கெட் நேற்று காலை தயாராக இருந்தது.
பிரதமர் வருகை
100-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் இரவே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சென்று தங்கினார்.
நேற்று காலை 9.15 மணிக்கு, ஏவுதளத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, கட்டுப்பாட்டு அறைக்கு பிரதமர் மன்மோகன்சிங் வந்தார். அவரை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர்.
விண்ணில் பாய்ந்தது
அதையடுத்து, சரியாக காலை 9.53 மணிக்கு இந்தியாவின் 100-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-21, இரு செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது, தீப்பிழம்பை கக்கியபடி பலத்த சத்தத்துடன் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிடங்களில் 655 கிலோ மீட்டர் தூரம் சென்று, புவி வட்டப்பாதையில் 2 செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. ராக்கெட் ஒவ்வொரு நிலையாக சென்றடைந்தபோது, அதனை பிரமாண்டமான எலக்ட்ரானிக் கருவியில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங், அவ்வப்போது கைதட்டி பாராட்டு தெரிவித்தார். அங்கிருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
வெளிநாட்டு செயற்கை கோள்கள்
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் விண்ணிற்கு சுமந்து சென்ற 2 செயற்கைகோள்களும் வெளிநாடுகளை சேர்ந்தவை ஆகும். பிரான்ஸ் நாட்டின் 712 கிலோ எடை கொண்ட ஸ்பாட்-6 என்ற புவியின் பரப்பை துல்லியமாக ஆய்வு செய்யக்கூடிய செயற்கைகோளும், 15 கிலோ எடையுள்ள ஜப்பான் நாட்டின் பிராய்ட்டர்ஸ் என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணிற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளிநாட்டு வாடிக்கையாளருக்காக அதிக எடைகொண்ட பாட்-6 என்ற செயற்கைகோளை முதல் முறையாக இப்போதுதான் அனுப்பி உள்ளது. ஜப்பான் நாட்டு செயற்கைகோள், அந்த நாட்டில் உள்ள கான்சாய் மாவட்டத்தை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் பிடிக்கும் திறன்கொண்ட அதிநவீன கேமராவுடன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
கைதட்டி மகிழ்ச்சி
இந்தியாவின் 100-வது ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது, ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் வீடுகளின் மொட்டை மாடியில் நின்று ஆர்வத்துடன் பார்த்தனர். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தபோது, அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து முன்பு இதேபோல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை, முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, வாஜ்பாய், ஐ.கே.குஜ்ரால், ராஜீவ்காந்தி ஆகியோர் நேரில் வந்து பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
இப்போது, பிரதமர் மன்மோகன்சிங் நேரில் வந்து 100-வது ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விஞ்ஞானிகளை பாராட்டியது அவர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமர் மன்மோகன்சிங்குடன், மத்திய இணை மந்திரி நாராயணசாமி, ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி ஆகியோரும் வந்தனர்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
பி.எஸ்.எல்.வி. ராக்கெட், இதுவரை ஏவப்பட்ட 22-ல் 21 வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கியது. அப்போது, `இஸ்ரோ'வின் சொந்த செயற்கைக்கோளான ஆர்யபட்டா, ரஷ்யாவின் ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான பி.எஸ்.எல்.வி. ராக்கெட் முதன்முதலில் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 1994-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்று இலக்கை எட்டியது.
அன்றிலிருந்து நேற்று வரை ஏவப்பட்ட அனைத்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. நேற்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட்டையும் சேர்த்தால், இதுவரை மொத்தமாக 22 தடவை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில், 21 தடவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கியது. அப்போது, `இஸ்ரோ'வின் சொந்த செயற்கைக்கோளான ஆர்யபட்டா, ரஷ்யாவின் ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான பி.எஸ்.எல்.வி. ராக்கெட் முதன்முதலில் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 1994-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்று இலக்கை எட்டியது.
அன்றிலிருந்து நேற்று வரை ஏவப்பட்ட அனைத்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. நேற்று ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட்டையும் சேர்த்தால், இதுவரை மொத்தமாக 22 தடவை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில், 21 தடவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
எங்க நாட்டுல எப்பதான் ராக்கட் விடப்போரானுங்கலோ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
செவ்வாய்கிரகத்திற்கும் விண்கலம் அனுப்பப்படும்: விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் போட்டி இல்லை. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி.
செவ்வாய்கிரகத்திற்கும் விண்கலம் அனுப்பப்படும் என்றும், விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் போட்டி இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்தியாவின் 100-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-21, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிறகு, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்
இன்று இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21, சுமந்து சென்ற 2 வெளிநாட்டு செயற்கைகோள்களும், தனது சூரிய வெப்ப தகடுகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்டது. பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டுக்கான மொத்த செலவு மற்றும் வர்த்தக ரீதியாக அனுப்பப்பட்ட 2 செயற்கைகோள்களின் மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்று சொல்ல முடியாது. வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் நம்மை அணுகி கொண்டிருப்பதால் இதை வெளியே சொல்லக்கூடாது. பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டின் அடிப்பகுதி மட்டும் ரூ.90 கோடியில் அமைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கைகோள்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது என்று பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நமது வாடிக்கையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுணக்கம் இல்லை
சந்திராயன்-2-ஐ பொறுத்தவரை ரஷ்யாவுடன் நாம் சேர்ந்து செயல்படுத்தும் திட்டமாகும். 2013-2014-ல் சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ப நாம் தயாராகி வருகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பம், விண்ணில் சுற்றி வரும் கருவி (ரோவர்) அவற்றை நாம் செய்து வருகிறோம். அந்த செயல்பாட்டில் எந்த சுணக்கமும் இல்லை.
சந்திராயன்-2-க்கு தேவையான தரையிறங்கும் கருவியை (லேண்டர்) ரஷ்யாதான் செய்துதர வேண்டும். இந்த நிலையில், ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து சமீபத்தில் அனுப்பிய செயற்கைகோளில் பின்னடைவு ஏற்பட்டதால், அது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.
சீனாவுடன் போட்டியில்லை
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, பலவிதமான செயல்பாடுகளை கொண்டது. இதை தொலைநோக்கு திட்டமாக பார்க்க வேண்டும். புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது, செவ்வாய்கிரகத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பது, இன்னும் பல விண்வெளி ஆராய்ச்சிகளை செய்வது போன்றவற்றுக்காக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தலைசிறந்து விளங்கும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா போன்ற எந்த நாட்டுடனும், நாம் போட்டிபோடவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பலவிதமான திட்டங்களை எடுத்து செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் வரும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் செவ்வாய்கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பலாம். பி.எஸ்.எல்.வி. மூலம் அதற்கான விண்கலத்தை அனுப்ப முடியும். அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம்
இந்தப்பணியில் நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப்பணியை பொறுத்தவரை நாம் படிப்படியாகத்தான் செயல்பட முடியும். 2013-ம் ஆண்டில் இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், 2016-2018-ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பலாம்.
கிரையோஜெனிக் எந்திரத்தை பொறுத்த அளவில் நாகர்கோவில் அருகேயுள்ள மகேந்திர கிரியில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 31 முறை ஆய்வக சோதனைகள் முடிந்துள்ளன. அனைத்து சோதனைகளும் வரும் நவம்பர் மாதம் முடிவடையும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 58 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளது. அப்போது, தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் அதற்கான செயற்கைகோள்களும் அனுப்பப்படும்.
ஒருங்கிணைக்கும் மையம்
செவ்வாய் கிரகத்தை வட்டமடித்து ஆய்வு செய்வது, புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது போன்றவற்றிற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அந்த பணிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பது விரைவில் தெரியவரும்.
விண்ணில் இருந்து விழும் விண்வெளி கழிவுகளை முன்கூட்டியே கண்டுபிடித்து, அவை நம் செயற்கைகோள்களுடன் மோதாமல் தடுக்க ஸ்ரீஹரிகோட்டாவில், `மல்டி ஆப்ஜெக்ட் டிராக்கிங் ரேடார்' என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். மேலும், ராக்கெட் உருவாக்குவதற்கான பாகங்களை ஒருங்கிணைக்கும் மையம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
செவ்வாய்கிரகத்திற்கும் விண்கலம் அனுப்பப்படும் என்றும், விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் போட்டி இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்தியாவின் 100-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-21, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிறகு, இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்
இன்று இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21, சுமந்து சென்ற 2 வெளிநாட்டு செயற்கைகோள்களும், தனது சூரிய வெப்ப தகடுகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்டது. பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டுக்கான மொத்த செலவு மற்றும் வர்த்தக ரீதியாக அனுப்பப்பட்ட 2 செயற்கைகோள்களின் மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்று சொல்ல முடியாது. வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் நம்மை அணுகி கொண்டிருப்பதால் இதை வெளியே சொல்லக்கூடாது. பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட்டின் அடிப்பகுதி மட்டும் ரூ.90 கோடியில் அமைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கைகோள்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது என்று பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நமது வாடிக்கையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுணக்கம் இல்லை
சந்திராயன்-2-ஐ பொறுத்தவரை ரஷ்யாவுடன் நாம் சேர்ந்து செயல்படுத்தும் திட்டமாகும். 2013-2014-ல் சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ப நாம் தயாராகி வருகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பும் தொழில்நுட்பம், விண்ணில் சுற்றி வரும் கருவி (ரோவர்) அவற்றை நாம் செய்து வருகிறோம். அந்த செயல்பாட்டில் எந்த சுணக்கமும் இல்லை.
சந்திராயன்-2-க்கு தேவையான தரையிறங்கும் கருவியை (லேண்டர்) ரஷ்யாதான் செய்துதர வேண்டும். இந்த நிலையில், ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து சமீபத்தில் அனுப்பிய செயற்கைகோளில் பின்னடைவு ஏற்பட்டதால், அது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.
சீனாவுடன் போட்டியில்லை
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, பலவிதமான செயல்பாடுகளை கொண்டது. இதை தொலைநோக்கு திட்டமாக பார்க்க வேண்டும். புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது, செவ்வாய்கிரகத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பது, இன்னும் பல விண்வெளி ஆராய்ச்சிகளை செய்வது போன்றவற்றுக்காக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தலைசிறந்து விளங்கும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா போன்ற எந்த நாட்டுடனும், நாம் போட்டிபோடவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பலவிதமான திட்டங்களை எடுத்து செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் வரும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் செவ்வாய்கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பலாம். பி.எஸ்.எல்.வி. மூலம் அதற்கான விண்கலத்தை அனுப்ப முடியும். அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம்
இந்தப்பணியில் நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப்பணியை பொறுத்தவரை நாம் படிப்படியாகத்தான் செயல்பட முடியும். 2013-ம் ஆண்டில் இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், 2016-2018-ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பலாம்.
கிரையோஜெனிக் எந்திரத்தை பொறுத்த அளவில் நாகர்கோவில் அருகேயுள்ள மகேந்திர கிரியில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 31 முறை ஆய்வக சோதனைகள் முடிந்துள்ளன. அனைத்து சோதனைகளும் வரும் நவம்பர் மாதம் முடிவடையும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 58 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளது. அப்போது, தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் அதற்கான செயற்கைகோள்களும் அனுப்பப்படும்.
ஒருங்கிணைக்கும் மையம்
செவ்வாய் கிரகத்தை வட்டமடித்து ஆய்வு செய்வது, புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பது போன்றவற்றிற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அந்த பணிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பது விரைவில் தெரியவரும்.
விண்ணில் இருந்து விழும் விண்வெளி கழிவுகளை முன்கூட்டியே கண்டுபிடித்து, அவை நம் செயற்கைகோள்களுடன் மோதாமல் தடுக்க ஸ்ரீஹரிகோட்டாவில், `மல்டி ஆப்ஜெக்ட் டிராக்கிங் ரேடார்' என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். மேலும், ராக்கெட் உருவாக்குவதற்கான பாகங்களை ஒருங்கிணைக்கும் மையம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
நல்ல தகவலுக்கு நன்றி மாமா அங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-10 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|