ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 10:23 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னாரு - சினிமா விமர்சனம்

2 posters

Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by Guest Sun Sep 09, 2012 7:48 am

மன்னாரு - சினிமா விமர்சனம் Manaru_1

இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படியொரு அதிர்ஷ்டமா என்று இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தே புஸ்ஸாகிப் போனார்கள் பல புதுமுக ஹீரோக்கள்..! ஆனால் ஹீரோவான அப்புக்குட்டியோ தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த இந்த முதல் முத்தத்தை நினைத்தே இன்றுவரையில் உருகிப் போயிருக்கிறார்..!

1985-90-களில் உள்ள போனோமா.. எதையும் மண்டைல ஏத்திக்காம வெளில வந்தோமா.. என்ற டைப்பில் வெளியான புல் எண்ட்டெர்டெயிண்மெண்ட் டைப் கதை இது..! இதன் கருவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஏற்கெனவே பல வடிவங்களில் கொத்துப் புரோட்டா போட்டுவி்ட்டார்கள் என்றாலும், இதில் புதிய நேட்டிவிட்டியில், புதிய திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர்..!

மன்னாரு - சினிமா விமர்சனம் Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3)

கொடைக்கானலை பூர்வீகமாகக் கொண்ட அப்புக்குட்டி 3-ம் வகுப்பு வரை படித்துவிட்டு லாரியில் மணல் லோடு அள்ளும் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார். கூடவே மல்லிகா என்றொரு உறவுக்கார பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறார்.! ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் ஷகிலா போஸ்டரின் அழைப்பின்பேரில் பிட்டு படம் பார்க்கப் போகும் அன்றைய இரவில்தான் நம்ம அப்புக்குட்டிக்கு சனி பிடிக்கிறது..! அவ்வப்போது அறையில் தங்க இடம் கொடுக்கும் நண்பனுக்காக, அவனது ரிஜிஸ்தர் மேரேஜூக்கு சாட்சி கையெழுத்து போடப் போய்.. வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறான் மன்னாரு..!

கல்யாணம் முடிந்த கையோடு நண்பனோடும், அவனது புது மனைவியோடும் மன்னாரு கொடைக்கானலுக்குக் கிளம்பும்போது பெண்ணின் அப்பாவும், வில்லன் கோஷ்டியும் தேடி வர.. மாப்பிள்ளை நண்பன் பயந்து போய் "நீங்க ரெண்டு பேரும் இதே பஸ்ல முன்னாடி போங்க, நான் பின்னாடியே வந்தர்றேன்.." என்று சொல்லி நின்று விடுகிறான்..!


அப்புக்குட்டியும், ஸ்வாதியும் மட்டும் கொடைக்கானலில் வந்திறங்கி ரூமில் தங்குவதற்காக கணவன், மனைவி என்று பொய் சொல்லத் துவங்க.. லாட்ஜில் நின்று கொண்டிருந்த அப்புக்குட்டியின் மாமா, அண்ணனிடம் சிக்கிக் கொண்டு ஊருக்குக் கொண்டு போகப்பட்டு, உண்மையைச் சொல்ல முடியாமல் தம்பதிகளாக காட்சியளிக்க வேண்டிய கட்டாயம்..!

காதலித்த முறைப் பெண் அழுது வடிய.. இங்கே பெண்ணின் அப்பாவும், வில்லனும் கொலை வெறியோடு தேடத் துவங்க.. மாப்பிள்ளை போலீஸ் லாக்கப்பிலும், பின்பு வில்லனின் லாக்கப்பிலும் சிக்கிக் கொண்டிருக்க.. எப்படி முடிந்தது கதை என்பதை தியேட்டருக்கு போய் பாருங்க..!

மனைவியாக அழைத்து வந்தவரை அப்படிச் சொல்ல முடியாமல் வேலைக்காரியாக காட்டும் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன..! தன் மனைவியை, நண்பனின் மனைவி என்று சொல்லும் ஆள் மாறாட்டக் கதைகளும் நிறையவே வந்திருக்கின்றன.. இதில்தான் இப்படியொரு தினுசான கதையை வைத்து கொஞ்சம் கவர்ந்திருக்கிறார் இயக்குநர்..!

அப்புக்குட்டி நிறைவாகவே நடித்திருக்கிறார்..! தண்ணியடித்துவிட்டு அவர் ஆடும் ஆட்டமும், பஸ்ஸில் அவர் செய்கின்ற கலாட்டாவும் மனிதருக்கு நகைச்சுவையும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது..! மல்லிகாவை நினைத்து ஒரு பக்கம் கோபப்பட்டும், ஸ்வாதியிடம் பேசவும் முடியாமல் மனிதர் தவியாய் தவித்து மனதுக்குள் எதுவும் இல்லாத அப்பாவித்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..!

ராட்டினம் ஸ்வாதி ஹீரோயின் என்றாலும், உடன் நடித்திருக்கும் வைசாலிதான் எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்..! ஆள் நல்ல கலர்.. களையான முகம்.. இந்தப் படத்துக்காக கருப்பு மேக்கப்பை போட்டு கொஞ்சம் அழகை குறைத்துவிட்டார்கள்..!

அந்த இயல்பான கிராமத்து இன்னொசென்ட் முகத்தை பார்த்த மாத்திரத்தில் கொண்டு வந்துவிட்டார்.. அப்புக்குட்டியின் கல்யாணச் செய்தி கேட்டவுடன் ஓடி வந்து பார்க்கும் அந்த வேகமும், அதே அப்புக்குட்டி தனது வீட்டு வாசலில் நிற்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு மருகுவதும்.. காதல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் ரொம்பவே இம்ப்ரஸ்ஸிவ்..! தற்கொலைக்கு முயலும் 2 காட்சிகளிலும் ஒரு பாட்டி தண்ணி இறைத்துக் கொடுக்கும்படி கேட்கும்போது எரிச்சலுடன் “சாகவும் விட மாட்டேன்றீங்களே..?” என்ற தனது வெகுளி குணத்தை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறார்.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்..!


ராட்டினத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை நன்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார் இந்த ஸ்வாதி..! உருட்டும் விழிகளும், கேரளத்து மெதுவடை முகமும், உருளைக்கிழங்கு தோற்றமுமாக இன்னும் கொஞ்சம் அழகாய் காட்சியளிக்கிறார். அப்புக்குட்டியின் அப்பாவை குற்றம் சொல்லி பேசுகின்ற ஒரு காட்சியில் மட்டுமே ஏதோ ஒன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி இவருக்கு அதிகப்பட்சம் பரிதவிப்பு எக்ஸ்பிரஷன்களையே கொடுத்திருப்பதால் அப்புக்குட்டியை பார்த்து நாம் பொறாமைப்பட மட்டுமே இந்தச் சிவப்பழகியைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்று நினைக்கிறேன்...!

கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளின் இயற்கை அழகை.. அந்த நேட்டிவிட்டியை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..! “இசையமைப்பாளர் உதயனின் இசையில் எனது குடும்பத்தின் சாயல் தெரிகிறது..” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.. அதற்கு அச்சாரமே “ஊரையெல்லாம் காவல் காக்கும்” பாட்டுதான்..! மனதை வருடும், வார்த்தைகளை மென்று விழுங்காமல் அழகாக ஒலித்து, அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது..!

தம்பி இராமையா பாடல்களை எழுதி, வசனத்தை எழுதியிருக்கிறார். நாய்கூட அப்புக்குட்டியை மதிப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்காக டீக்கடையில் வறுக்கியை வாங்கி நாய்க்கு போட்டு சோதனை செய்யும் காமெடி, வசனமும், கதையும் சேர்ந்தது.. அண்ணியின் கையைத் தட்டிவிட்டு மரியாதை முக்கியம் என்று அப்புக்குட்டி மிரட்டுவதும்.. தம்பி இராமையாவின் மீதான மரியாதையை நிரூபிக்கும் வகையில் பலரும் அவரை கிண்டல் செய்யும் வசனங்களும் அவர் நல்லதொரு ரைட்டர் என்பதை நிரூபிக்கிறது..!

அந்த புது மாப்பிள்ளைக்காரன் அடுத்த பஸ்ஸை பிடித்து ஓடி வந்திருந்தாலோ, அல்லது போலீஸிடம் சிக்கிய பின்பு தப்பித்து இவர்களைத் தேடி வந்திருந்தாலோ படம் உடனுக்குடன் முடிஞ்சு போயிருக்கும்.. அல்லது ஸ்வாதியே திரும்பிப் போயிருந்தாலும் கதை காலிதான்.. இரண்டேகால் மணி நேர படத்திற்காக கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதியிருப்பதால், அந்த லாஜிக்கை நாம் சந்தேகிக்கவே கூடாது.. முடியாது..! எடுத்தவரைக்கும் படம் ரசிக்கும்படியாகத்தான் உள்ளது..!

ஒரேயொரு குறை.. திருநங்கைகளை கிண்டல் செய்வது போல பாடல் காட்சியை வைத்திருப்பதும், அது கதைக்கு ஒட்டாமல் தனித்து நிற்பதும்தான்..! இந்த ஆட்டத்தில் பாண்டியராஜன் வேறு..!? ஏன், எதற்கு என்றுதான் தெரியவில்லை..!

வன்முறை. ஆபாசம்.. அதீத கவர்ச்சி.. இது எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்று நினைத்தீர்களேயானால் அவசியம் இந்தப் படத்திற்குச் செல்லவும்..!
-
உண்மை தமிழன்
avatar
Guest
Guest


Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by யினியவன் Wed Sep 12, 2012 10:36 pm

மன்னாரன் கம்பெனில வேலைக்கு போறவங்க
பொழுதைப் போக்க மன்னாரை போய் பாக்கலான்னு சொல்றீங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by Guest Wed Sep 12, 2012 10:52 pm

யினியவன் wrote:மன்னாரன் கம்பெனில வேலைக்கு போறவங்க
பொழுதைப் போக்க மன்னாரை போய் பாக்கலான்னு சொல்றீங்க...

சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by ராஜா Wed Sep 12, 2012 11:27 pm

யினியவன் wrote:மன்னாரன் கம்பெனில வேலைக்கு போறவங்க
பொழுதைப் போக்க மன்னாரை போய் பாக்கலான்னு சொல்றீங்க...
என்னன்னே இப்படி சொல்லிட்டிங்க , அப்ப நாம் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்னு சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by யினியவன் Wed Sep 12, 2012 11:30 pm

யாராவது அலுவலகத்துல சொல்லி வேலைக்கு ஆப்பு வெச்சிடப் போறாங்க ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by ராஜா Wed Sep 12, 2012 11:46 pm

யினியவன் wrote:யாராவது அலுவலகத்துல சொல்லி வேலைக்கு ஆப்பு வெச்சிடப் போறாங்க ராஜா.
இதுகெல்லாம் பயந்தா இங்க இருக்க முடியுமா அண்ணே , ஆப்பு வச்சா கொஞ்சம் தள்ளி நின்னுக்குவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னாரு - சினிமா விமர்சனம் Empty Re: மன்னாரு - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum