புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் கடவுளும் (சிவனும் சக்தியும்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முதலில் எனக்கு பொதுஇடத்தில் முறையாக நாலுவார்த்தை பேசத்தெரியாது. குட்டையைக்
குழப்புகிறேன் என்று அழகாக என்னை வர்ணித்து விடுவார்கள் நானாவது உருப்படியாக
நாலுவார்த்தை சொல்லுவதாவது என்ற அபிப்பிராயம் எனக்கு மேலேஎனக்கு இருக்கும்போது
ஏனிந்த விஷப்பரீட்சை?
சரி இங்கே ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கூறுமாமே! அதுபோல் உனக்கும் நடந்துவிடும் என்று எனக்குப் பின்னால் ஒரு ஒலி கேட்கிறது. வம்பு ஏன்? கூறிவிடுகிறேன்
முதலில் எனக்குச் சமயங்களைப்பற்றி பெரிதாகஎதுவும் தெரியாது. ஒத்துக்கொள்கிறேன் ஆனால் 55 வருடங்கள் பூமியில் வாழ்ந்த அனுபவத்தில் சில மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இதைக்கூறும்போது தெரியாத விடத்து தெரியாது என்னும் உண்மையைக் கூறிவிடுவேன் பிழையாகச்சொன்னால் அதை பிழையென்று ஒத்துக்கொள்வேன்
காதலும் கடவுளும்
எந்த ஒருசமயத்துக்கும் இல்லாத ஒரு விடயம் இந்து சைவ சமயத்துக்குண்டு எங்கள் கடவுள் அல்லது கடவுள்கள் ஜோடியாக மணம்முடித்து சாதாரண வாழ்க்கையோடு ஒத்த வகையில் இருக்கிறார்கள். கடவுளைப்பற்றிக் குறை கூறுவதென்றால் முதலில் இங்கு சிந்திக்கத் தொடக்க வேண்டும்.
ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெரும் ஜோதியே கடவுள் என்றால் அதற்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது எப்படி? அவர்கள் வளர்ந்து கல்யாணம் செய்கிறார்கள். ஒருமகன் முருகன் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்னை விரும்புகிறார். தாத்தா வேஷம் போட்டு அவளிடம் செல்வார். அண்ணன் விநாயகர் யானை வேடத்தில் வருவார் வள்ளி பயத்தில் ஓடிவந்து தாத்தாவைக் கட்டிப் பிடிப்பார். காப்பாற்றுங்க என்று கத்துவார். யானை போய்விட சேனை வயலோரத்தில் டூய்ட் பாட்டோ என்னவோ, சினிமாவில் வரும் சம்பவங்களைக் காணுகிறோம்.
இங்கேயே, ”இதெல்லாம் எனக்கு ஒத்து வராதப்பா ரெம்பத்தான் புழுகுகிறீங்க என்னை விட்டுடுங்க”என்று நாத்திகனாகப் போய்விட வேண்டும். அதாவது அருவமும் உருவமும் இல்லாத ஐம்பெருங் குணங்களை உடைத்த ஒரு தீ வடிவான ஜோதியே உண்மைக் கடவுள் என்னும்போது அத்துடன் நிறுத்திக் கொள்வது ஆரோக்கியம் என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும் ஒருவரே கடவுள் அதுவும் சக்திஎனும் தீப்பிழம்பு வடிவானது என்று கூறவேண்டும். அந்த Universal Power ஐ கையெடுத்துக் கும்பிடவேண்டுமா அல்லது மனதுக்குள் நினைத்தால் மட்டும்போதுமா என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க அப்படியென்றால் கோவில்களோ அங்கு காணும் எந்தச்சிலை வழிபாடுகளோ தேவையில்லை ஒதுக்குங்கள்என்று கூறவேண்டும் இது இவருக்கு நாத்திகப்பட்டத்தை லேசாகக்கொடுத்துவிடும். .
இன்னொன்று கண்ணை மூடிக்கொண்டு அம்மாஅப்பா சொல்வதை அப்படியே ஏற்று கடவுள்கள் எல்லோரும் இருக்கின்றனர் என்று மற்றவர் சொல்வதைக் கேட்காமல் பக்திமயமாக இருப்பது மூன்றாவது இந்த இரண்டு பகுதியிலும் சேராது நடுவில இருக்கும் என்னைப் போன்றவர்களும் உண்டு. அது கடவுள் ஒரு சக்தியின்வடிவம அதற்கு வேறு உருவங்கள் இல்லை.ஆனால்
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மக்களுக்கு அவசியமானதொன்று. அவைஇருக்கட்டும். படிக்காத பாமர மக்களுக்கு பல நெறிகளைக் கூறி வழிகாட்ட இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை என்பது.
கடவுள் வழிபாட்டால் நன்மை அதிகமா தீமை அதிகமா?
இப்படி ஒரு கேள்வியைக்கேட்டால் நன்மைதான் அதிகமென்பேன். அவை என்னென என்பதை பட்டியலிட்டு கூற என்னால் முடியாது. தேவையென்றால் அந்தவிடயத்துக்கு வருவோம் இப்போது எனது ட்தலைப்பு காதலும் கடவுளும்.
சைவ சமயத்தில் பெரிய கடவுளாகிய சிவபெருமான் தனியாக இல்லை. பார்வதி என்ற பெண்ணுடன் இணைந்து காணப்படுகிறார் ஒரு சிவமும் சக்தியும் சேர்ந்த விதிமுறைக்குள் மிகப்பெரிய தத்துவமே அடங்கியுள்ளது. சிவ வழிபாட்டில் சின்னமாக சிவலிங்க பூசை காணப்படுகிறது இது தனித்த ஆண்குறி, பெண்குறியின் அடையாளம் அல்ல. அது தனித்த அந்த வகையானது மட்டுமேயானால் எப்போதோ தேய்ந்து மறைந்து அழிந்து போயிருக்கும்.என்று நான் எண்ணுகிறேன்
அது எம்மால் புரிந்துகொள்ள முடியாத பிரபஞ்சத்தின் காணும் சக்தியைத் பிரபாலித்து நிற்கிறது. அந்த அண்டத்தின் உருவாக்கம், பூமியின் வருகை, அதிலுள்ள உயிரினங்களின் ஆரம்பம் இவையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் காணாததொன்றை உண்மையோ பொய்யோ உரைக்கிறது இது எவ்வளவு நன்மையை தருகிறது என்பது முக்கியம்
உலகில் ஒரு ஆணில்லாமல் பெண்ணால் வாழமுடியாது. பெண்ணில்லாமல் ஆண் தனித்து வாழமுடியாது. முடியும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் எப்படி வாழ்வது? ஒருசாதரண உடல்நிலைகொண்டவரால் முடியாது. இந்த தாம்பத்தியம் இல்லையேல் அவர் காமம் உடலைக் கருக்க ஒன்று பைத்தியம் பிடித்துவிடும் நிலை ஏற்படும். அல்லது உடலில் நோய் ஏற்பட்டு சீக்கிரம் போய்விடுவார். விஞ்ஞான் ரீதியாகவே தாம்பத்யம் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது
ஒரு உறவின் பின் ஏற்படும் சாந்தியும் மன அமைதியும் மூளையை நற்சிந்தனைகள் செலுத்தக்கூடிய பக்குவமும் உடலின் சீரான இரத்த ஒட்டமும் அது எவ்வளவு முக்கியம் என்பது கல்யாணமான எல்லோருக்கும் புரியும். எனவே ஒன்றாக வாழ்வதற்கே ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டனர் அல்லது தானாக உருவாகியுள்ளது என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. ஆணை நோக்கி பெண்ணையும் பெண்ணை நோக்கி ஆணையும் கவரும்விதத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி காதல் எனும் தூண்டுதலை ஏற்படுத்தி அந்தக் காதலுக்காக உலகில் எதையுமே துறக்கத் தக்கதாக வெறி கொள்ளவைத்து பெற்றவர் ஊரையே பகைத்து வெறுத்தும் அவளே வேண்டும் என சிந்திக்கத் தக்கதாக இயங்கக்கூடிய விதத்தில் ஆக்கிவிடுகிறது இத்தக்காதல். இந்த விடயத்தை எமது இந்துசமயம் உள் வாங்கிக்
கொண்டது என்பது என் கருத்து அதாவது நிஜத்தை வாழ்வின் விதியை மறுக்காமல் ஏற்றுக்கொண்டது எமதுசமயம், அல்லது
இயற்கையின் தத்துவத்தை சரியான முறையில் புரிந்துகொண்டது எமதுசமயம்
காதல் இல்லாமல் வாழ்வு இல்லை ;அந்தக் காதலே வாழ்க்கை. வாழ்க்கையே காதல் என்று இருக்கும்போது அதைவிட்டு தனியே ஒரு வாழ்க்கை நெறிமுறைகளை போதனையை எடுத்துச் செல்ல முடியாது என்பது சமயக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களின்
சிந்தனையோ தெரியவில்லை. அதனால் கடவுளாக சிவனையும் சக்தியையும் சேர்த்து உருவாக்கி சிவனில் பாதி சக்தியென்றும், சிவனில்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவனில்லை என்றார்கள்
(தொடரும்)
குழப்புகிறேன் என்று அழகாக என்னை வர்ணித்து விடுவார்கள் நானாவது உருப்படியாக
நாலுவார்த்தை சொல்லுவதாவது என்ற அபிப்பிராயம் எனக்கு மேலேஎனக்கு இருக்கும்போது
ஏனிந்த விஷப்பரீட்சை?
சரி இங்கே ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. சொல்லா விட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கூறுமாமே! அதுபோல் உனக்கும் நடந்துவிடும் என்று எனக்குப் பின்னால் ஒரு ஒலி கேட்கிறது. வம்பு ஏன்? கூறிவிடுகிறேன்
முதலில் எனக்குச் சமயங்களைப்பற்றி பெரிதாகஎதுவும் தெரியாது. ஒத்துக்கொள்கிறேன் ஆனால் 55 வருடங்கள் பூமியில் வாழ்ந்த அனுபவத்தில் சில மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இதைக்கூறும்போது தெரியாத விடத்து தெரியாது என்னும் உண்மையைக் கூறிவிடுவேன் பிழையாகச்சொன்னால் அதை பிழையென்று ஒத்துக்கொள்வேன்
காதலும் கடவுளும்
எந்த ஒருசமயத்துக்கும் இல்லாத ஒரு விடயம் இந்து சைவ சமயத்துக்குண்டு எங்கள் கடவுள் அல்லது கடவுள்கள் ஜோடியாக மணம்முடித்து சாதாரண வாழ்க்கையோடு ஒத்த வகையில் இருக்கிறார்கள். கடவுளைப்பற்றிக் குறை கூறுவதென்றால் முதலில் இங்கு சிந்திக்கத் தொடக்க வேண்டும்.
ஆதியும் அந்தமுமில்லாத அரும்பெரும் ஜோதியே கடவுள் என்றால் அதற்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது எப்படி? அவர்கள் வளர்ந்து கல்யாணம் செய்கிறார்கள். ஒருமகன் முருகன் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்னை விரும்புகிறார். தாத்தா வேஷம் போட்டு அவளிடம் செல்வார். அண்ணன் விநாயகர் யானை வேடத்தில் வருவார் வள்ளி பயத்தில் ஓடிவந்து தாத்தாவைக் கட்டிப் பிடிப்பார். காப்பாற்றுங்க என்று கத்துவார். யானை போய்விட சேனை வயலோரத்தில் டூய்ட் பாட்டோ என்னவோ, சினிமாவில் வரும் சம்பவங்களைக் காணுகிறோம்.
இங்கேயே, ”இதெல்லாம் எனக்கு ஒத்து வராதப்பா ரெம்பத்தான் புழுகுகிறீங்க என்னை விட்டுடுங்க”என்று நாத்திகனாகப் போய்விட வேண்டும். அதாவது அருவமும் உருவமும் இல்லாத ஐம்பெருங் குணங்களை உடைத்த ஒரு தீ வடிவான ஜோதியே உண்மைக் கடவுள் என்னும்போது அத்துடன் நிறுத்திக் கொள்வது ஆரோக்கியம் என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும் ஒருவரே கடவுள் அதுவும் சக்திஎனும் தீப்பிழம்பு வடிவானது என்று கூறவேண்டும். அந்த Universal Power ஐ கையெடுத்துக் கும்பிடவேண்டுமா அல்லது மனதுக்குள் நினைத்தால் மட்டும்போதுமா என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க அப்படியென்றால் கோவில்களோ அங்கு காணும் எந்தச்சிலை வழிபாடுகளோ தேவையில்லை ஒதுக்குங்கள்என்று கூறவேண்டும் இது இவருக்கு நாத்திகப்பட்டத்தை லேசாகக்கொடுத்துவிடும். .
இன்னொன்று கண்ணை மூடிக்கொண்டு அம்மாஅப்பா சொல்வதை அப்படியே ஏற்று கடவுள்கள் எல்லோரும் இருக்கின்றனர் என்று மற்றவர் சொல்வதைக் கேட்காமல் பக்திமயமாக இருப்பது மூன்றாவது இந்த இரண்டு பகுதியிலும் சேராது நடுவில இருக்கும் என்னைப் போன்றவர்களும் உண்டு. அது கடவுள் ஒரு சக்தியின்வடிவம அதற்கு வேறு உருவங்கள் இல்லை.ஆனால்
கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மக்களுக்கு அவசியமானதொன்று. அவைஇருக்கட்டும். படிக்காத பாமர மக்களுக்கு பல நெறிகளைக் கூறி வழிகாட்ட இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை என்பது.
கடவுள் வழிபாட்டால் நன்மை அதிகமா தீமை அதிகமா?
இப்படி ஒரு கேள்வியைக்கேட்டால் நன்மைதான் அதிகமென்பேன். அவை என்னென என்பதை பட்டியலிட்டு கூற என்னால் முடியாது. தேவையென்றால் அந்தவிடயத்துக்கு வருவோம் இப்போது எனது ட்தலைப்பு காதலும் கடவுளும்.
சைவ சமயத்தில் பெரிய கடவுளாகிய சிவபெருமான் தனியாக இல்லை. பார்வதி என்ற பெண்ணுடன் இணைந்து காணப்படுகிறார் ஒரு சிவமும் சக்தியும் சேர்ந்த விதிமுறைக்குள் மிகப்பெரிய தத்துவமே அடங்கியுள்ளது. சிவ வழிபாட்டில் சின்னமாக சிவலிங்க பூசை காணப்படுகிறது இது தனித்த ஆண்குறி, பெண்குறியின் அடையாளம் அல்ல. அது தனித்த அந்த வகையானது மட்டுமேயானால் எப்போதோ தேய்ந்து மறைந்து அழிந்து போயிருக்கும்.என்று நான் எண்ணுகிறேன்
அது எம்மால் புரிந்துகொள்ள முடியாத பிரபஞ்சத்தின் காணும் சக்தியைத் பிரபாலித்து நிற்கிறது. அந்த அண்டத்தின் உருவாக்கம், பூமியின் வருகை, அதிலுள்ள உயிரினங்களின் ஆரம்பம் இவையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் காணாததொன்றை உண்மையோ பொய்யோ உரைக்கிறது இது எவ்வளவு நன்மையை தருகிறது என்பது முக்கியம்
உலகில் ஒரு ஆணில்லாமல் பெண்ணால் வாழமுடியாது. பெண்ணில்லாமல் ஆண் தனித்து வாழமுடியாது. முடியும் என்ற விதண்டாவாதம் வேண்டாம் எப்படி வாழ்வது? ஒருசாதரண உடல்நிலைகொண்டவரால் முடியாது. இந்த தாம்பத்தியம் இல்லையேல் அவர் காமம் உடலைக் கருக்க ஒன்று பைத்தியம் பிடித்துவிடும் நிலை ஏற்படும். அல்லது உடலில் நோய் ஏற்பட்டு சீக்கிரம் போய்விடுவார். விஞ்ஞான் ரீதியாகவே தாம்பத்யம் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது
ஒரு உறவின் பின் ஏற்படும் சாந்தியும் மன அமைதியும் மூளையை நற்சிந்தனைகள் செலுத்தக்கூடிய பக்குவமும் உடலின் சீரான இரத்த ஒட்டமும் அது எவ்வளவு முக்கியம் என்பது கல்யாணமான எல்லோருக்கும் புரியும். எனவே ஒன்றாக வாழ்வதற்கே ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டனர் அல்லது தானாக உருவாகியுள்ளது என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. ஆணை நோக்கி பெண்ணையும் பெண்ணை நோக்கி ஆணையும் கவரும்விதத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி காதல் எனும் தூண்டுதலை ஏற்படுத்தி அந்தக் காதலுக்காக உலகில் எதையுமே துறக்கத் தக்கதாக வெறி கொள்ளவைத்து பெற்றவர் ஊரையே பகைத்து வெறுத்தும் அவளே வேண்டும் என சிந்திக்கத் தக்கதாக இயங்கக்கூடிய விதத்தில் ஆக்கிவிடுகிறது இத்தக்காதல். இந்த விடயத்தை எமது இந்துசமயம் உள் வாங்கிக்
கொண்டது என்பது என் கருத்து அதாவது நிஜத்தை வாழ்வின் விதியை மறுக்காமல் ஏற்றுக்கொண்டது எமதுசமயம், அல்லது
இயற்கையின் தத்துவத்தை சரியான முறையில் புரிந்துகொண்டது எமதுசமயம்
காதல் இல்லாமல் வாழ்வு இல்லை ;அந்தக் காதலே வாழ்க்கை. வாழ்க்கையே காதல் என்று இருக்கும்போது அதைவிட்டு தனியே ஒரு வாழ்க்கை நெறிமுறைகளை போதனையை எடுத்துச் செல்ல முடியாது என்பது சமயக்கோட்பாடுகளை உருவாக்கியவர்களின்
சிந்தனையோ தெரியவில்லை. அதனால் கடவுளாக சிவனையும் சக்தியையும் சேர்த்து உருவாக்கி சிவனில் பாதி சக்தியென்றும், சிவனில்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவனில்லை என்றார்கள்
(தொடரும்)
கடவுளையும், மனிதனின் சராசரி வாழ்வையும் இணைத்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள் அண்ணா!
அருமை, நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் மேலும் எம் மதத்தின் மீதும், எம் குடும்பத்தின் மீதும், எம் இனத்தின் மீதும் எங்களுக்கு பற்று அதிகரிக்கட்டும்.
அருமை, நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் மேலும் எம் மதத்தின் மீதும், எம் குடும்பத்தின் மீதும், எம் இனத்தின் மீதும் எங்களுக்கு பற்று அதிகரிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கடவுளையும், மனிதனின் சராசரி வாழ்வையும் இணைத்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள் அண்ணா!
அருமை, நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். உங்களால் மேலும் எம் மதத்தின் மீதும், எம் குடும்பத்தின் மீதும், எம் இனத்தின் மீதும் எங்களுக்கு பற்று அதிகரிக்கட்டும்.
நன்றிகள் !நிச்சயமாக எழுதுவேன். கொஞ்சம் இதுபற்றி ஆராய்ந்தேன் ! புரிந்தது பாதி புரியாததுமீதி! சொல்ல முடிந்ததை சொல்லுவேன். மீண்டும் நன்றிகள்!
2. ஆதி முதலான சக்தி
(இங்கே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். தலைப்பை விட்டு தவறினாலும் பின்னர் அதற்குள் வருவேன்)
இங்கே எழுதும்போது மனதி ஏற்பட்ட எண்ணங்களை வடித்துளேன். தவறுகள் சுட்டிக்காட்டலாம்)
கடவுளின் காதலைப்பற்றி அடுத்த தொடரில் கூறுகிறேன் . இப்போது ஆதிசக்தி யிலிருந்து தொடங்கி என்மனக்கருத்துக்கலைப்பகிர்கிறேன்
இந்த பிரபஞ்சம் எப்படி வந்தது என்று எவருக்கும் தெரியாது. இப்படித் தானென்று ஊகித்துச் சொல்வதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்றும் இல்லை. ஆனாலும் அந்த ஊகங்கள் என்னவென்று பார்த்தால் ஆகமுதல் ஆரம்பம் ஒரு ஒளிவடிவமான அதி பிரகாசமான சக்தியொன்றே இருந்ததாகக் கொள்ளலாம். புராணங்களும் ஆதிசக்தி ஒளியின் வடிவென்றே கூறுகிறது. காந்தஅலைகள் செறிந்த அதி புத்திசாலி அமைப்பான இந்த சக்தியே எமது உலகின் கர்த்தாவாக இருக்கவேண்டும் . அது இந்த பிரபஞ்சத்தில் எம் ஆராய்வு எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்து எம்மைக் கட்டுப்படுத்து கிறதோ என்பது ஒரு ஊகம்.. இந்தஒளிவடிவானது. மிகப் பிரமாண்டமான பிரகாசம் கொண்டு கோடிகோடி சூரியன்கள் சேர்ந்ததுபோன்று, கண்களால் பார்க்கமுடியாத அளவுமிகப் பிரகாசமாக இருக்கவேண்டும். இதைப் பார்த்தாலே கண்கள் குருடாக்கி விடும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம்... ( இதனால்தான் இன்றும் கடவுளைக் கண்களால் காண முடியாமல் இருக்கிறதோ .என்னவோ???)
கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டாலும் மாபெரும் வல்லமை வாய்ந்த ஒளியாக பரலோகத்தில் இருப்பவரே பரிசுத்த ஆண்டவர் என்கிறது.. ஆகவே ஒளியொன்றே எம்மை தாங்கும் இவ்வுலத்தின் ஆதிமூல கர்த்தாவாக இருக்க வேண்டும் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இன்றும் பிரபஞ்சத்தில் விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மகாபெரும் நெருப்பு ஜுவாலைகளும் ஒளித்திரள்களும் வெடித்துத் சிதறும் சூரியக் குஞ்சுகளும் நட்சத்திரங்களுமாகப் பெரும் நெருப்பு வீச்சுக்களையே படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
எம் அறிவுக்கு எட்டியதே இதுவென்றால் எம் பார்வைக்கு எட்டாத இடத்தில் எங்கோ எம்மைஉருவாக்கிய சக்திஎனும் மாபெரும் ஜோதி பிரபஞ்சத்தில் எந்ததிக்கில் இருக்கிறதோ அது எப்படி இருக்குமோ எவ்வளவு பிரமாண்டமானதுவோ அறியோம்.
இந்த மாபெரும் சக்தியே (இந்தசக்தி வேறு சிவனின் சக்தி வேறு!) நாளடைவில் தீக்குளம்பின் கூறுகளாகச் சிதறிக் குளிர்ந்து பூமி மற்றும் கோள்கள் எல்லாம் உருவாகியும் அண்டங்களில் நட்சத்திரங்களையும் சூரியக் குழந்தைகளையும் காந்த சக்தி வலயங்களுடன் கூடி சுழற்சியையும் உருவாக்கி யிருக்கலாம்
. இரகசியம் என்ற் ஆங்கில நூலில் rhonda Byrne யின் கூற்றின்படி மகா சக்தியான ஓர் காந்த வடிவம் வானத்திலே காணப்படுவதாகவும் அண்டவெளியிலிருந்து காந்த அலைகளூடாக எம்து மூளையோடு அதற்கு தொடர்பு கொண்டு காணப்படுவதாகவும், எமது மூளையின் காந்த அலைகளை அதுபுரிந்து அதன் விருப்பப்படி வாழ்வின் முறைகளை சூழலை மாற்றியமைத்துக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதனால் நாம் எது அடிக்கடி எண்ணுகிறோமோ அது நடக்கும்..என்றவர் நல்ல எணங்களோடு இருக்கும்போது, உங்களுக்கு நல்லதே நடக்கும்; தீயது நடக்கக் கூடாது எனப்பயந்தாலும் அதிகம்
தீமைகளையே எண்ணுவதால் தீமையே நடக்கும் என்று எழுதியுள்ளார்.
சக்திக்கு எப்போதும் இயக்கம் உண்டு. எமது இந்த ஆதிசக்தியானதும் அசைந்து கொண்டிருக்கிறது. அண்டவெளியில் பாருங்கள். எல்லாமே அசைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தப்பிரமாண்டமான கோளங்களை லாவகமாகச் சுற்றி ஏதோ ஒருசக்தி கட்டுபடுத்துகிறது என்று தெரிகிறது. தங்கள் நிலையிலிருந்து தவறிவிடாமல் சுழன்று கொண்டிருக்கின்றன.
இந்த அண்டத்தின் சூரியனைச் சுற்றும்கோளங்களின் சுழற்சியைபோலவே அணுவை எடுத்துப் பார்த்தாலும் இலத்திரன்கள் சுற்றுகின்றன. அதுபோல் எமது உடலிலும் இழையங்களின் உள்ளே மிகச் சிறிய cellஐ ஆரய்ந்தால் அங்கும் அதே சுழற்சி இருக்கிறது
எம்து உடலில் இரத்தம் சுழன்று கொண்டிருக்கிரது சுவாசம் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக சுழற்சியாக இயங்குகிறது. ஒரு சுழற்சியின் வடிவமே வாழ்க்கை.
அப்படி நிலைத்து நிற்காது காற்றைப்போல் அசையும் இந்த அண்டத்தின் பொறிமுறை அசைவேயாகும். நாம் பிறக்கிறோம், தந்தையின் அணுவும் தாயின் முட்டையும் சேர்ந்து கருவாகிறது அதன்பின் வளர்ச்சி. இதன்போது மூளை உருவாகிறது. மனிதமாகிறது இது தானாகவே நடக்கிறதா? அப்படித் தெரியவில்லையே! எல்லாமே ஒரு அட்டவணை வைத்துத் தயாரிப்பதுபோல் ஒழுங்காக நடக்கிறதே என்னைபொறுத்தவரையில் இதற்கு எங்கிருந்தோ ஒரு அறிவுறுத்தல் உண்டு இப்படி நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு அதற்கு இந்த சக்தியே மூலாதாரம். இந்த காந்த அலைகளின் இழுப்பு இல்லையென்றால் சூரியனை உலகம் சுற்ற வேண்டியதில்லை. பூமியில் நாம் ஒட்டியிருக்க வேண்டுமென்பதில்லை. அண்ட வெளிக்குள் விழுந்து விடுவோம் பூமி உடைந்து சிதறலாம் , சூரியன் அணைந்து போகலாம்.
இனி மனிதனின் எண்ணங்களைப் பார்ப்போம். நினைவுகள்தான் வாழ்க்கை. உலகில் நாம் வாழுகிறோம் என்றால் அந்த வாழ்க்கை ஐம்புலன்களால் உணரப்படும் மின் அலைகளின் கலவையான எண்ணங்களே. அந்த மின்னழுத்த மாற்றம் மூளையில் அனுபவங்களைக் ஏற்படுத்துகிறது. அவள் அழக்காக இருக்கிறாள். இது எம்மது மூளையில் தோன்றும் மின்னேற்ற விளைவுகளே! ஒருவருக்கு அழகானது மற்றவருக்கு இல்லாமல் போகலாம். இந்த மின்சார உணர்வுகள் கெட்டு மூளையின் மின்னேற்றம் இறங்கிவிட்டால் மிஞ்சுவது வெறு பிணம் மட்டுமே அதைத் தூக்கி எரித்துவிடவேண்டியதுதான் அந்த மின்சாரத்தை கருவில் சிசுவில் ஏற்றுவது யார்? சக்தியா வானத்தின் காந்தமின் அலைகளா . நிச்சயமாக !
(தொடரும்)
(இங்கே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். தலைப்பை விட்டு தவறினாலும் பின்னர் அதற்குள் வருவேன்)
இங்கே எழுதும்போது மனதி ஏற்பட்ட எண்ணங்களை வடித்துளேன். தவறுகள் சுட்டிக்காட்டலாம்)
கடவுளின் காதலைப்பற்றி அடுத்த தொடரில் கூறுகிறேன் . இப்போது ஆதிசக்தி யிலிருந்து தொடங்கி என்மனக்கருத்துக்கலைப்பகிர்கிறேன்
இந்த பிரபஞ்சம் எப்படி வந்தது என்று எவருக்கும் தெரியாது. இப்படித் தானென்று ஊகித்துச் சொல்வதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்றும் இல்லை. ஆனாலும் அந்த ஊகங்கள் என்னவென்று பார்த்தால் ஆகமுதல் ஆரம்பம் ஒரு ஒளிவடிவமான அதி பிரகாசமான சக்தியொன்றே இருந்ததாகக் கொள்ளலாம். புராணங்களும் ஆதிசக்தி ஒளியின் வடிவென்றே கூறுகிறது. காந்தஅலைகள் செறிந்த அதி புத்திசாலி அமைப்பான இந்த சக்தியே எமது உலகின் கர்த்தாவாக இருக்கவேண்டும் . அது இந்த பிரபஞ்சத்தில் எம் ஆராய்வு எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்து எம்மைக் கட்டுப்படுத்து கிறதோ என்பது ஒரு ஊகம்.. இந்தஒளிவடிவானது. மிகப் பிரமாண்டமான பிரகாசம் கொண்டு கோடிகோடி சூரியன்கள் சேர்ந்ததுபோன்று, கண்களால் பார்க்கமுடியாத அளவுமிகப் பிரகாசமாக இருக்கவேண்டும். இதைப் பார்த்தாலே கண்கள் குருடாக்கி விடும் சக்திவாய்ந்ததாக இருக்கலாம்... ( இதனால்தான் இன்றும் கடவுளைக் கண்களால் காண முடியாமல் இருக்கிறதோ .என்னவோ???)
கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டாலும் மாபெரும் வல்லமை வாய்ந்த ஒளியாக பரலோகத்தில் இருப்பவரே பரிசுத்த ஆண்டவர் என்கிறது.. ஆகவே ஒளியொன்றே எம்மை தாங்கும் இவ்வுலத்தின் ஆதிமூல கர்த்தாவாக இருக்க வேண்டும் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. இன்றும் பிரபஞ்சத்தில் விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மகாபெரும் நெருப்பு ஜுவாலைகளும் ஒளித்திரள்களும் வெடித்துத் சிதறும் சூரியக் குஞ்சுகளும் நட்சத்திரங்களுமாகப் பெரும் நெருப்பு வீச்சுக்களையே படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
எம் அறிவுக்கு எட்டியதே இதுவென்றால் எம் பார்வைக்கு எட்டாத இடத்தில் எங்கோ எம்மைஉருவாக்கிய சக்திஎனும் மாபெரும் ஜோதி பிரபஞ்சத்தில் எந்ததிக்கில் இருக்கிறதோ அது எப்படி இருக்குமோ எவ்வளவு பிரமாண்டமானதுவோ அறியோம்.
இந்த மாபெரும் சக்தியே (இந்தசக்தி வேறு சிவனின் சக்தி வேறு!) நாளடைவில் தீக்குளம்பின் கூறுகளாகச் சிதறிக் குளிர்ந்து பூமி மற்றும் கோள்கள் எல்லாம் உருவாகியும் அண்டங்களில் நட்சத்திரங்களையும் சூரியக் குழந்தைகளையும் காந்த சக்தி வலயங்களுடன் கூடி சுழற்சியையும் உருவாக்கி யிருக்கலாம்
. இரகசியம் என்ற் ஆங்கில நூலில் rhonda Byrne யின் கூற்றின்படி மகா சக்தியான ஓர் காந்த வடிவம் வானத்திலே காணப்படுவதாகவும் அண்டவெளியிலிருந்து காந்த அலைகளூடாக எம்து மூளையோடு அதற்கு தொடர்பு கொண்டு காணப்படுவதாகவும், எமது மூளையின் காந்த அலைகளை அதுபுரிந்து அதன் விருப்பப்படி வாழ்வின் முறைகளை சூழலை மாற்றியமைத்துக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதனால் நாம் எது அடிக்கடி எண்ணுகிறோமோ அது நடக்கும்..என்றவர் நல்ல எணங்களோடு இருக்கும்போது, உங்களுக்கு நல்லதே நடக்கும்; தீயது நடக்கக் கூடாது எனப்பயந்தாலும் அதிகம்
தீமைகளையே எண்ணுவதால் தீமையே நடக்கும் என்று எழுதியுள்ளார்.
சக்திக்கு எப்போதும் இயக்கம் உண்டு. எமது இந்த ஆதிசக்தியானதும் அசைந்து கொண்டிருக்கிறது. அண்டவெளியில் பாருங்கள். எல்லாமே அசைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தப்பிரமாண்டமான கோளங்களை லாவகமாகச் சுற்றி ஏதோ ஒருசக்தி கட்டுபடுத்துகிறது என்று தெரிகிறது. தங்கள் நிலையிலிருந்து தவறிவிடாமல் சுழன்று கொண்டிருக்கின்றன.
இந்த அண்டத்தின் சூரியனைச் சுற்றும்கோளங்களின் சுழற்சியைபோலவே அணுவை எடுத்துப் பார்த்தாலும் இலத்திரன்கள் சுற்றுகின்றன. அதுபோல் எமது உடலிலும் இழையங்களின் உள்ளே மிகச் சிறிய cellஐ ஆரய்ந்தால் அங்கும் அதே சுழற்சி இருக்கிறது
எம்து உடலில் இரத்தம் சுழன்று கொண்டிருக்கிரது சுவாசம் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக சுழற்சியாக இயங்குகிறது. ஒரு சுழற்சியின் வடிவமே வாழ்க்கை.
அப்படி நிலைத்து நிற்காது காற்றைப்போல் அசையும் இந்த அண்டத்தின் பொறிமுறை அசைவேயாகும். நாம் பிறக்கிறோம், தந்தையின் அணுவும் தாயின் முட்டையும் சேர்ந்து கருவாகிறது அதன்பின் வளர்ச்சி. இதன்போது மூளை உருவாகிறது. மனிதமாகிறது இது தானாகவே நடக்கிறதா? அப்படித் தெரியவில்லையே! எல்லாமே ஒரு அட்டவணை வைத்துத் தயாரிப்பதுபோல் ஒழுங்காக நடக்கிறதே என்னைபொறுத்தவரையில் இதற்கு எங்கிருந்தோ ஒரு அறிவுறுத்தல் உண்டு இப்படி நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு அதற்கு இந்த சக்தியே மூலாதாரம். இந்த காந்த அலைகளின் இழுப்பு இல்லையென்றால் சூரியனை உலகம் சுற்ற வேண்டியதில்லை. பூமியில் நாம் ஒட்டியிருக்க வேண்டுமென்பதில்லை. அண்ட வெளிக்குள் விழுந்து விடுவோம் பூமி உடைந்து சிதறலாம் , சூரியன் அணைந்து போகலாம்.
இனி மனிதனின் எண்ணங்களைப் பார்ப்போம். நினைவுகள்தான் வாழ்க்கை. உலகில் நாம் வாழுகிறோம் என்றால் அந்த வாழ்க்கை ஐம்புலன்களால் உணரப்படும் மின் அலைகளின் கலவையான எண்ணங்களே. அந்த மின்னழுத்த மாற்றம் மூளையில் அனுபவங்களைக் ஏற்படுத்துகிறது. அவள் அழக்காக இருக்கிறாள். இது எம்மது மூளையில் தோன்றும் மின்னேற்ற விளைவுகளே! ஒருவருக்கு அழகானது மற்றவருக்கு இல்லாமல் போகலாம். இந்த மின்சார உணர்வுகள் கெட்டு மூளையின் மின்னேற்றம் இறங்கிவிட்டால் மிஞ்சுவது வெறு பிணம் மட்டுமே அதைத் தூக்கி எரித்துவிடவேண்டியதுதான் அந்த மின்சாரத்தை கருவில் சிசுவில் ஏற்றுவது யார்? சக்தியா வானத்தின் காந்தமின் அலைகளா . நிச்சயமாக !
(தொடரும்)
/// மகா சக்தியான ஓர் ஒளிவடிவம் வானத்திலே காணப்படுவதாகவும் அண்டவெளியிலிருந்து காந்த அலைகளூடாக எம்து மூளையோடு அதற்கு தொடர்பு கொண்டு காணப்படுவதாகவும், எமது மூளையின் காந்த அலைகளை அதுபுரிந்து அதன் விருப்பப்படி வாழ்வின் முறைகளை சூழலை மாற்றியமைத்துக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதனால் நாம் எது அடிக்கடி எண்ணுகிறோமோ அது நடக்கும்..என்றவர் நல்ல எணங்களோடு இருக்கும்போது, உங்களுக்கு நல்லதே நடக்கும்; தீயது நடக்கக் கூடாது எனப்பயந்தாலும் அதிகம் தீமைகளையே எண்ணுவதால் தீமையே நடக்கும்
Original source: http://www.eegarai.net/t88949-topic#ixzz25enEIHX0
///
எண்ணம் போல் வாழ்வு என்பது இதனால்தானோ.
மிகவும் நன்று, தொடருங்கள் அண்ணா!
Original source: http://www.eegarai.net/t88949-topic#ixzz25enEIHX0
///
எண்ணம் போல் வாழ்வு என்பது இதனால்தானோ.
மிகவும் நன்று, தொடருங்கள் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
3 வது பகுதி
இருட்டாக இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் எங்கும்நிறைந்த ஒளியாக வியாபித்த ஆதிசக்தியானது மகப்பெரிய சக்தியென்பதில் ஐயமில்லை
விஞ்ஞானக் கூற்றின்படி இந்த மாபெரும் தீ பிரமாண்டமே சூனியத்தில் வெடித்து சிதறியே பிரபஞ்சக் கோள்கள் உருவாகியது என்று கூறுப்படுகிறது அந்த சக்தியிலிருந்து பிறந்துதான் தான் அண்டத்தில் காணும் அனைத்துமாகும். அப்படியே பூமியும் உருவாகியது அல்லது அந்த சக்தி உருவாக்கியது. அதனால்தான் இந்தபூமிக்குள் இன்னும் அந்த சக்தியான நெருப்பு காணப்படுகிறது. இந்த சக்தியே அண்டமெங்கும் கோள்கள் சுற்ற விதிமுறைகளை வழிவகுத்தது. அதே விதிமுறையை வைத்து உலகின் பொருட்களாக மனிதம் உட்பட்ட உயிரினங்கள் எல்லாம் படைத்தது.
இரகசியம் என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது
இதையே சற்று மாறுதலாக நான் பார்க்கிறேன். அதாவது எமது மூளையில் ஏற்படும் எண்ணங்களும் அதற்கேற்ப மாறும் மின்னேற்றங்களும் அதன்விளைவாக மூளை கொடுக்கும் கட்டளைகளையும் பிரபஞ்சத்தில் அந்த சக்தியை சென்றடைகின்ற்ன. அங்கிருந்து எங்கள் வேண்டுதலுக்கு பதில் கிடைக்கிறது ஆமாம் இப்படித்தான் அதன் அமைப்போ அந்த பிரபஞ்சத்தின் சக்தி எங்கள் மூளையைப் போலவும், பிரபஞ்சம் என்கிற உடலில் அதன் அங்கங்களாக கோள்கள் சூரியன்கள், உலகம், நாம் எல்லாமுமே இருப்பதாகவும் இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டனவாகவும் கூறலாமோ?.
நாம் ஒரு முள்ளை மிதிக்கும்போது ஏற்படும்வலி நரம்புவழியாக ஓடி மூளைக்கு தகவல் கொடுப்பதுபோல் எமது எண்ணங்கள் அண்டவெளியூடாக அந்த சக்தியை அடைகிறது. அங்கிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டு எம்மைவந்து அடைந்து வாழ்க்கையில் போக்கை
மாற்றுகிறது அந்தக்கட்டளையே விதி என்கிறோம். ’முள்ளை மிதித்த காலைத் தூக்கு முள்ளைக் காலிலிருந்து எடு’ என்னும் விதியைப்போல..
ஆகவே இரகசியம் என்கிற நூலின் கருத்தை ஒட்டியதாக எனது எண்ணங்களும் திகழ்கின்றன. ஆகவே ஒரு மனிதனின் உடலும் மூளையும் போலத்தான் அண்டவெளியும் ஆதிசக்தியும் உள்ளன..ஒரு தடவை விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் யார்பெரிது என்று போட்டிவந்தபோது சிவன்
அண்டம் முழுதாய் வியாபித்து நின்று அடிமுடி தேடிவரச் செய்தாரே! அதனிலும் பெரியது இந்தசக்தி.
சரி இனி தலைப்பை ஒட்டி கூறவிளைகிறேன்.
நான் வேதம் புராணம் எதுவும் படிக்கவில்லை. ஆனால் புராணத்தைக் கண்டவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதுகிறேன் பிழை இருப்பின் மன்னிக்க
ஆதிசக்தி உலகில் முதல் கடவுளாக இருந்தது நடந்தமாற்றங்கள் சில அறிந்தேன். காலங்களை நான்கு யுகங்களாகப் பிரித்து முதல்
யுகத்தில் மனிதர்கள் காணும் படியாக சக்தி இருந்ததாகவும் அடுத்தயுகத்தில் மனிதருக்கும் சக்திக்குமிடையில் சிறு இடைவெளி ஏற்பட்டதாகவும் மூன்றாவது யுகத்தில் இன்னும் பெரிதாகி, இப்போது கலியுகத்தில் அந்த சக்தி, காளி (இரண்டுமே kali) உருவெடுத்து நிற்பதாகவும் மனிதரின் கொடுமைகளால் உலகை பிரளயத்தில் அழிக்கும் முடிவைசெய்வாள் என்றும் பல கதைகள் உண்டு முடிந்தால் இன்னொரு சமயம் அதைப்
பார்ப்போம்
ஆதிசக்தியானது பிரபஞ்சத்தை ஆளுமைகொண்ட பெரும்சக்தியாக விளங்கியது. பிரபஞ்சத்தில் உருவாக்கம் மாறுதல் அழிப்பு போன்றவற்றில் மாபெரும் சக்தியாக விளங்கிய ஆதிசக்தி தன்படைப்புக்களான மும்மூர்த்திகளையும் அழைத்து பிரமனிடன் ,” நீ இதுவரை ஏதும் செய்யும் வலிமையற்றவனாக இருந்தாய். இன்று முதல் இந்த உலகின் படைப்பு தொழிலை நீயே பொறுப்பேற்கிறாய் என்று கூறி தன் சக்தியிலிருந்து ஒரு சிறு பாகத்தை பிரித்து எடுத்து சரஸ்வதியை உருவாக்கி , “இதோ உனக்கு வலிமை சேர்ப்பதற்காக என்னுடைய ஒரு பாகத்தை உனக்கு துணையாக அனுப்பிவைக்கிறேன்.
இருவரும் ஒன்றுசேர்வதால் மாபெரும் சக்தியைப் பெறுகிறீர்கள். அதன்மூலம் ஆக்கும் தொழிலை தடையின்றிப் பிரபஞ்சம் முழுதும் நிறைவேற்றுக” எனப் பணித்தது. அதேபோல விஷ்ணுவை அழைத்து இலக்குமியை தன்னிலிருந்து பிரித்தெடுத்து அவரிடம்
ஒப்படைத்து இருவரும் ஒன்றுசேர்ந்து காத்தல் தொழிலை செய்யும்படியும், சிவனிடம் அழித்தல் வேலையை ஒப்படைத்து சக்திபெறுவதற்காக
மற்றையவர்களைப்போல சக்தியை உருவாக்கி சிவனிடம் வழங்கியதாவும் கூறப்படுகிறது..
இதிலிருந்து ஆண்களுக்கு பெண்ணின்மூலமாகவே சக்தி ஏற்படுவதாகவும் அவளே படைத்தல் தொழிலுக்கு உதவியும் (கருப்பையில் உருவாக்கியும்) காத்தலுக்குரிய சக்தியை வழங்குவதாகவும் அழித்தலுக்கும் உதவுவதாகவும் கொள்ளலாம்.. அதன்படி ஆணும்பெண்ணும் சேரும் சக்தியில்தான் உயிர்களை உருவாக்கமுடிகிறது. காப்பற்ற முடிகிறது. .அழிவுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. தாமே அழிந்து புதிய
வரவுகளுக்கு இடம்கொடுப்பதுதான் இதன் தத்துவமோ தெரியவில்லை
(தொடரும்)
***************************
இருட்டாக இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் எங்கும்நிறைந்த ஒளியாக வியாபித்த ஆதிசக்தியானது மகப்பெரிய சக்தியென்பதில் ஐயமில்லை
விஞ்ஞானக் கூற்றின்படி இந்த மாபெரும் தீ பிரமாண்டமே சூனியத்தில் வெடித்து சிதறியே பிரபஞ்சக் கோள்கள் உருவாகியது என்று கூறுப்படுகிறது அந்த சக்தியிலிருந்து பிறந்துதான் தான் அண்டத்தில் காணும் அனைத்துமாகும். அப்படியே பூமியும் உருவாகியது அல்லது அந்த சக்தி உருவாக்கியது. அதனால்தான் இந்தபூமிக்குள் இன்னும் அந்த சக்தியான நெருப்பு காணப்படுகிறது. இந்த சக்தியே அண்டமெங்கும் கோள்கள் சுற்ற விதிமுறைகளை வழிவகுத்தது. அதே விதிமுறையை வைத்து உலகின் பொருட்களாக மனிதம் உட்பட்ட உயிரினங்கள் எல்லாம் படைத்தது.
இரகசியம் என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது
இதையே சற்று மாறுதலாக நான் பார்க்கிறேன். அதாவது எமது மூளையில் ஏற்படும் எண்ணங்களும் அதற்கேற்ப மாறும் மின்னேற்றங்களும் அதன்விளைவாக மூளை கொடுக்கும் கட்டளைகளையும் பிரபஞ்சத்தில் அந்த சக்தியை சென்றடைகின்ற்ன. அங்கிருந்து எங்கள் வேண்டுதலுக்கு பதில் கிடைக்கிறது ஆமாம் இப்படித்தான் அதன் அமைப்போ அந்த பிரபஞ்சத்தின் சக்தி எங்கள் மூளையைப் போலவும், பிரபஞ்சம் என்கிற உடலில் அதன் அங்கங்களாக கோள்கள் சூரியன்கள், உலகம், நாம் எல்லாமுமே இருப்பதாகவும் இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டனவாகவும் கூறலாமோ?.
நாம் ஒரு முள்ளை மிதிக்கும்போது ஏற்படும்வலி நரம்புவழியாக ஓடி மூளைக்கு தகவல் கொடுப்பதுபோல் எமது எண்ணங்கள் அண்டவெளியூடாக அந்த சக்தியை அடைகிறது. அங்கிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டு எம்மைவந்து அடைந்து வாழ்க்கையில் போக்கை
மாற்றுகிறது அந்தக்கட்டளையே விதி என்கிறோம். ’முள்ளை மிதித்த காலைத் தூக்கு முள்ளைக் காலிலிருந்து எடு’ என்னும் விதியைப்போல..
ஆகவே இரகசியம் என்கிற நூலின் கருத்தை ஒட்டியதாக எனது எண்ணங்களும் திகழ்கின்றன. ஆகவே ஒரு மனிதனின் உடலும் மூளையும் போலத்தான் அண்டவெளியும் ஆதிசக்தியும் உள்ளன..ஒரு தடவை விஷ்ணுவுக்கும் பிரமனுக்கும் யார்பெரிது என்று போட்டிவந்தபோது சிவன்
அண்டம் முழுதாய் வியாபித்து நின்று அடிமுடி தேடிவரச் செய்தாரே! அதனிலும் பெரியது இந்தசக்தி.
சரி இனி தலைப்பை ஒட்டி கூறவிளைகிறேன்.
நான் வேதம் புராணம் எதுவும் படிக்கவில்லை. ஆனால் புராணத்தைக் கண்டவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதுகிறேன் பிழை இருப்பின் மன்னிக்க
ஆதிசக்தி உலகில் முதல் கடவுளாக இருந்தது நடந்தமாற்றங்கள் சில அறிந்தேன். காலங்களை நான்கு யுகங்களாகப் பிரித்து முதல்
யுகத்தில் மனிதர்கள் காணும் படியாக சக்தி இருந்ததாகவும் அடுத்தயுகத்தில் மனிதருக்கும் சக்திக்குமிடையில் சிறு இடைவெளி ஏற்பட்டதாகவும் மூன்றாவது யுகத்தில் இன்னும் பெரிதாகி, இப்போது கலியுகத்தில் அந்த சக்தி, காளி (இரண்டுமே kali) உருவெடுத்து நிற்பதாகவும் மனிதரின் கொடுமைகளால் உலகை பிரளயத்தில் அழிக்கும் முடிவைசெய்வாள் என்றும் பல கதைகள் உண்டு முடிந்தால் இன்னொரு சமயம் அதைப்
பார்ப்போம்
ஆதிசக்தியானது பிரபஞ்சத்தை ஆளுமைகொண்ட பெரும்சக்தியாக விளங்கியது. பிரபஞ்சத்தில் உருவாக்கம் மாறுதல் அழிப்பு போன்றவற்றில் மாபெரும் சக்தியாக விளங்கிய ஆதிசக்தி தன்படைப்புக்களான மும்மூர்த்திகளையும் அழைத்து பிரமனிடன் ,” நீ இதுவரை ஏதும் செய்யும் வலிமையற்றவனாக இருந்தாய். இன்று முதல் இந்த உலகின் படைப்பு தொழிலை நீயே பொறுப்பேற்கிறாய் என்று கூறி தன் சக்தியிலிருந்து ஒரு சிறு பாகத்தை பிரித்து எடுத்து சரஸ்வதியை உருவாக்கி , “இதோ உனக்கு வலிமை சேர்ப்பதற்காக என்னுடைய ஒரு பாகத்தை உனக்கு துணையாக அனுப்பிவைக்கிறேன்.
இருவரும் ஒன்றுசேர்வதால் மாபெரும் சக்தியைப் பெறுகிறீர்கள். அதன்மூலம் ஆக்கும் தொழிலை தடையின்றிப் பிரபஞ்சம் முழுதும் நிறைவேற்றுக” எனப் பணித்தது. அதேபோல விஷ்ணுவை அழைத்து இலக்குமியை தன்னிலிருந்து பிரித்தெடுத்து அவரிடம்
ஒப்படைத்து இருவரும் ஒன்றுசேர்ந்து காத்தல் தொழிலை செய்யும்படியும், சிவனிடம் அழித்தல் வேலையை ஒப்படைத்து சக்திபெறுவதற்காக
மற்றையவர்களைப்போல சக்தியை உருவாக்கி சிவனிடம் வழங்கியதாவும் கூறப்படுகிறது..
இதிலிருந்து ஆண்களுக்கு பெண்ணின்மூலமாகவே சக்தி ஏற்படுவதாகவும் அவளே படைத்தல் தொழிலுக்கு உதவியும் (கருப்பையில் உருவாக்கியும்) காத்தலுக்குரிய சக்தியை வழங்குவதாகவும் அழித்தலுக்கும் உதவுவதாகவும் கொள்ளலாம்.. அதன்படி ஆணும்பெண்ணும் சேரும் சக்தியில்தான் உயிர்களை உருவாக்கமுடிகிறது. காப்பற்ற முடிகிறது. .அழிவுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. தாமே அழிந்து புதிய
வரவுகளுக்கு இடம்கொடுப்பதுதான் இதன் தத்துவமோ தெரியவில்லை
(தொடரும்)
***************************
மூன்றாவது பகுதிக்கு நன்றி அண்ணா! இன்னும் சிறிது நேரத்தில் படிப்பேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|