ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
Dr.S.Soundarapandian
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

Go down

மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Empty மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

Post by eraeravi Thu Sep 06, 2012 9:29 pm

மதுரை மண்ணின் மைந்தன்
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

மதுரை புத்தகத் திருவிழாவில் !

தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.

தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .


தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .


சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .

என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.

எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .

மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .

மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum