புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
284 Posts - 45%
heezulia
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
19 Posts - 3%
prajai
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_m10புறநானூறு - ஒரு மீளாய்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநானூறு - ஒரு மீளாய்வு


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Sep 11, 2012 8:32 pm

1.கண்ணி கார்நறுங் கொன்றை;காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே! சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப!
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை,
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை,
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே!

பாடலாசிரியர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:தலையிலும், அழகிய மார்பிலும் கொன்றை மலர் அணிந்திருப்பான். அவனது வாகனம் வெண்மையான எருது, அவனது கொடியும் அந்த எருதேயாகும். கழுத்தில் கறையுடயவன்; அக்கறை வேதம் ஓதுகின்ற அந்தணர்களால் புகழப்படும். பெண்ணுருவைத் தனது ஒரு பக்கத்தில் கொண்டவன்; அவ்வுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்ளவும் அவனால் முடியும். பிறைநிலவினைப் போன்று ஒளிரும் நெற்றியுடையவன். அப்பிறை பதினெட்டு கணத்தவராலும் வழிபடப்படுவதாகும். எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்குபவன். நீர் வற்றாத கங்கையைத் தனது கடைமுடியில் கொண்டுள்ளவன். அத்தகைய பெருமான தவமியற்றுபவருக்கு மிகவும் இனிமையானவன்.

மீளாய்வு:
இப்பாடலடிகளில் சிவபெருமானின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஓரளவு புராண, இதிகாசப் பரிச்சயம் கொண்டவருக்கு இப்பாடலில் குறிப்பிடப்படும் பெருமான் சிவபெருமான் என்பது எளிதில் விளங்கி விடும்.

இப்பாடலில் இருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. இப்பாடல் சிவபெருமானைப் புகழ்ந்து எழுதப்பட்டது.
2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.
3.இப்பாடலாசிரியர் பாரதத்தைத் தமிழில் எழுதியுள்ளார். (ஆனால் நம்மிடத்தில் அதன் சுவடிகள் இல்லை)

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

(இக்கருத்துகளைப் பற்றி கலந்துரையாட விரும்பும் தோழர்கள் இத்திரியிலேயே தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும். இது ஒரு தொடர் பதிவு.)




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 11, 2012 10:16 pm

2.வேதம் ஓதுகிற அந்தணர்கள், அதாவது பிராமணர்கள் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் வருணாசிரம முறை வேர்விடத் தொடங்கியது என்பதை உணரலாம்.

தவறான புரிதல் நண்பரே!
> வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

> வேதம் , வேள்வி இவையெல்லாம் தமிழரின் பழக்கம். பிற்காலத்தில் ஒரு பிரிவு ஆரியரால் அவை எடுத்துக் கொள்ளப்பட்டன.

> அந்தணர், வேதியர், மறையோர், ஐயர், பார்ப்பனர் போன்ற சொற்கள் எந்த ஒரு தனிப்பட்ட இனத்தையும் குறிக்கும் சொல் அல்ல. அது சான்றோரைக் குறித்த சொல். பிராமணன் என்ற சொல் மட்டுமே இனத்தைக் குறிக்கும் சொல்.

இதனால் வடவாரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்திலேயே தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது என்பதை அறியலாம்.

> ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நன்றி
சாமி

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Sep 12, 2012 7:09 am

வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.






கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 12, 2012 10:34 pm

சூப்பருங்க அருமை தோழா

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 17, 2012 2:27 pm

நல்ல படைப்பு நண்பரே, தொடருங்கள்.

Rangarajan Sundaravadivel wrote:வேதம் என்பது தமிழ் நான்மறைகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பதைக் குறிக்கும். (ரிக், யசுர், சாமம், அதர்வணம் இவையாவும் வடமொழி வேதங்கள். இவை கடவுளை மறுப்பவை, தேவர்களை மதிப்பவை.)

1.ஆனால் இத்தமிழ் நான்மறைகள் இருந்ததற்கும், அவை ஆரிய நான்மறைகள் அல்லவென்பதற்கும் நம்மிடம் எத்தகைய சரித்திர சான்றும் இல்லை. அவற்றிலிருந்து எப்பகுதியும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் வருகை கி.மு.1500 தான். கடைச்சங்க காலம் என்பது கி.மு. 18 , 000 . ஏறத்தாழ ஆரியர் வருகைக்கு 16500 ஆண்டுகளுக்கு முன்னர்.

2.இறையனார் களவியலுரைப் படி முதற்சங்கம் 4449 ஆண்டுகளும், இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாவது அல்லது கடைச்சங்கம் 1750 ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன. இதன்படி சங்கங்களின் மொத்த காலம் ஏறத்தாழ 9900 ஆண்டுகள் எனலாம். ஆனால் சங்கத்தின் இருப்பை அப்படியே ஏற்றுக் கொண்ட சான்றோர் கூட கி.மு.9700லிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை சங்கம் நிலைபெற்றிருந்தது என்னும் கருதுகோளையே முன் வைக்கின்றனர். (நீங்கள் கி.மு 18000 என்ற கணக்கினை முன் வைத்ததற்கான நூலாதாரங்களைக் காட்டினால் அவற்றை ஆய்ந்து என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்). இதனால் ஆரிய கலாச்சாரம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் நுழைந்ததைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.



உங்களின் கருத்தை ஏற்கிறேன். பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம் .







சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Sep 17, 2012 4:52 pm

பல நேரங்களில் நாம் தமிழை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடமொழி வேதத்தை, நூல்களை ஏற்க மறுக்கிறோம்

நாம் வடமொழி வேதங்களையும், நூல்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை அல்ல. அனைத்தையும் விமர்சனத்துக்கும், ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டும் என்பதே என் அவா, தோழரே.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Sep 17, 2012 10:06 pm

2. மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குணகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே!

பாடலாசிரியர்: புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர்
பாடப் பெற்றவர் சேரமான பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
திணை: பாடாண் திணை
துறை: ஓம்படை வாழ்த்து

பொருள்: மண்ணால் நிரம்பிய நிலமும், அதன் மேல் விளங்கும் ஆகாயமும்,அதனுடன் இயைந்து விளங்கும் காற்றும், காற்றால் பெருகும் நெருப்பும், நெருப்பின் முரணாய் வழங்கும் நீரும் என ஐம்பெரும் பூதங்களாய் வழங்கும் இயற்கையைப் போன்றவனே!

நின்னைப் போற்றாதவரிடம் பொறுமை காட்டுவாய். ஆழ்ந்த அறிவும், ஆற்றலும், வள்ளன்மையும், பகைவரை அடக்கும் வலிமையும் உடையவனே!

உன் ஆட்சிக்குரிய பகுதியில் உள்ள கிழக்குக்கடலில் உதிக்கும் கதிரவன், மீண்டும் உன் ஆட்சிக்குரிய மேற்குக் கடலில் நீராடும். (அஸ்தமிக்கும்) பெரிய நிலப்பரப்பை உடையவனே! வானினை எல்லையாகக் கொண்டவனே!

பிடரிமயிர்களுடைய குதிரைப் படையுடைய ஐவர் (பாண்டவரைக் குறிப்பதாகக் கருதப்பட்டது), நூற்றுவரோடு (கவுரவர்) போர்புரிந்த களத்தில் மிகுந்த சோறு அளித்து உதவி புரிந்தவனே!

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களின் நெறி திரிந்தாலும் தன் கடன் பிறழாத பரிவார சுற்றத்தோடு, நெறி தவறாது நிலைத்து வாழ்க!
சிறுதலையும் பெருங்கண்ணும் உடைய மான், பிணையாகிய தன் பெண் மானுடன் மேவவும், அந்தணர் மாலைப் பொழுதில் அருங்கடன்களை (சந்தியாவந்தனம்) செய்யவும், மூன்று வகையான தீயுடன் சிறந்து விளங்கும் அழகுடைய இமயத்தைப் போன்றும் பொதிகையைப் போன்றும் நீ நீடூழி வாழ்க!

மீளாய்வு: நம்மிடம் சங்க காலத்தைப் பற்றிய வரலாற்று நூற்கள் இல்லை. எனவே நம்மிடம் இருக்கும் சில மூலங்களை வைத்தே நாம் வரலாற்றைக் கட்ட வேண்டும். அதாவது சங்க இலக்கியங்களில் இருந்து. இத்தகு நிலையில் பிழை நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் எது உயர்வு நவிற்சி, எது இயல்பு நவிற்சி என்று நம்மால் பிரித்தறிய முடியாது.

மகாபாரதப் போரைப் பற்றிய தகவல் இப்பாடலில் குறிப்பிடப்பட்ட காரணத்தைக் கொண்டு குருஷேத்திரம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று நம்மால் முடிவு செய்ய முடியாது. பாரதம் ஒரு காவியமாக தமிழில் அக்காலத்தில் பெருந்தேவனாரால் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிகிறோம். எனவே பாரதப் போரின் மீது இப்புலவர் ஏற்றிச் சொல்லும் ஒரு கவித்துவச் சுதந்திரத்தின் பகுதியாகக் கூட இது இருக்கக் கூடும்.

அந்தணரின் சந்தியாவந்தனமும், நான்கு வேதங்களும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. எனவே ஆரியக் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாக விரவியிருந்தது என்பதை உணரலாம்.






கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக