ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

5 posters

Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by அருண் Sun Sep 02, 2012 12:23 pm

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Tamil_News_large_539416

சொத்து குவிப்பு, நில ஆக்கிரமிப்பு, அவதூறு என, பல வழக்குகளால் தடுமாறும் தி.மு.க., தலைமைக்கு, இதையெல்லாம் விட, "டென்ஷன்' கொடுப்பது, கோஷ்டிமோதல் பஞ்சாயத்துகள் தான். அதிகார மையங்களின் ஆதரவாளர்களாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும், "பிரிந்து' கிடக்கும், "உடன்பிறப்புகளை' சமாதானப்படுத்துவதும், சமரசம் செய்து வைப்பதும் கருணாநிதியின் முக்கிய வேலையாக மாறி விட்டது என்று வருந்துகின்றனர் தி.மு.க., முன்னணி தலைவர்கள்.

அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த மூன்று, "பஞ்சாயத்து'கள், கருணாநிதியை கவலைப்பட வைத்ததாக கூறும், தி.மு.க.,வினர், அது குறித்து தெரிவித்த விவரம்:

ஜாதி விவகாரம்:


கன்னியாகுமரியில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்க சென்ற எம்.பி.., கனிமொழியை வரவேற்று, "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கருணாநிதியின் பாசக்கனியே, கழகத்தின் மொழியே, எங்களின் அடையாளமே வருக' என்ற வாசகங்கள், இடம் பெற்ற போஸ்டர்கள், "நாடார் பேரவை' சார்பில், நெல்லையில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, காமராஜர், மறைந்த நாடார் சங்க பேரவை தலைவர் கராத்தே செல்வின், கனிமொழி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, அவருக்கு ஜாதி ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என, கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பரபரப்பு போஸ்டர்:


அடுத்த விவகாரம், சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபுவின் ஏற்பாட்டில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். "மாற்றம் ஏற்படும் என நம்புவோமாக' (change we beleive in) என்ற வாசகத்துடன் கூடிய இந்த போஸ்டரில், கருணாநிதியின் படம் ஓவியமாகவும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நிற்பது போல் பெரியதாக இடம் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், ஓபாமா பயன்படுத்திய வாசகம் என்பதால், அ.தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போஸ்டர்களை சேகர்பாபு அடித்து உள்ளார். ஆனால், கனிமொழி தரப்பில், "கருணாநிதியின் தலைமையில் மாற்றம் தேவை' என்ற நோக்கோடும், "ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்' என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டவே, இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக, கனிமொழி தரப்பில் புகார் ஓலை வாசிக்கப்பட்டுள்ளது.


விளக்க நோட்டீஸ்:


தி.மு.க.,விற்கு அடிக்கடி தலைவலியை கொடுக்கும், மதுரை பஞ்சாயத்துதான், மூன்றாவது விவகாரம். மதுரையில் சமீபத்தில் நடந்த, "டெசோ' மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில், நடிகை குஷ்பு பங்கேற்றார். இந்தக் கூட்டத்தை, மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்கள் சிலர் புறக்கணித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமைக்கு புகார் வந்தது. இதற்கு விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விவகாரங்களும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை கவலைக்குள்ளாகி விட்டதாக கூறுகின்றனர் தி.முக.,வின் முன்னணி நிர்வாகிகள்.


அவர்கள் கூறியதாவது:


கட்சி தலைமையின் அதிகார மையங்களாக ஸ்டாலின், அழகிரி ஆகியோர் விளங்குகின்றனர். திகார் சிறை வாசத்திற்கு பின், கனிமொழியின் முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கையினால், அவரும் மூன்றாவது போட்டியாளராக மாறியுள்ளார். இவர்களின் ஆதரவாளர்கள் ஏற்படுத்தும் கலகமே, பஞ்சாயத்துகளுக்கு வழிவகுக்கிறது.


கண்டுகொள்ளவில்லை:


நெல்லை விவகாரத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அங்கிருந்து, காரில் நெல்லை வழியாக சென்ற போது, அவரை வரவேற்க, கட்சியினர் யாரும் வரவில்லை. நாடார் பேரவை நிர்வாகிகள் மட்டும் வரவேற்றுள்ளனர். அன்றைய தினம் ஸ்டாலின் நெல்லையில் இருந்ததால், அவர்கள் கனிமொழியை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், அதே நெல்லை மாவட்ட பிரமுகர்கள் சிலர், "ஜாதி ரீதியாக கனிமொழிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது' என்ற புகாரை, கருணாநிதிக்கு தெரிவித்துள்ளனர். அதற்கு கருணாநிதி, "தானாகவே வந்து ஆதரவு கொடுத்தால் எந்த அரசியல்வாதி வேண்டாம் என சொல்ல முடியும்' எனக் கூறி, புகாரை தலைவர் தட்டிக் கழித்து விட்டார்


சரியான அர்த்தம் தான்:


சேகர்பாபுவின் போஸ்டர் விவகாரத்தையும், கனிமொழி தரப்பில் கருணாநிதியிடம் புகார் எழுப்பப்பட்டது. தி.மு.க., தலைவராக நீங்கள் இருக்கும் போது, "மாற்றம் தேவை' என்று எப்படி போஸ்டர் போட, ஸ்டாலின் அனுமதிக்கலாம்? உங்கள் படத்தை சிறியதாக போட்டு விட்டு, ஸ்டாலின் படத்தை மட்டும் பெரியதாக போடுவது, எந்த வகையில் நியாயம்? என்று பஞ்சாயத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் அழைத்து, விசாரணை நடத்தியபின், "போஸ்டரின் வாசகத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்ற அர்த்தத்தில் தான் இடம் பெற்றுள்ளது. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அவரது படத்தை பெரியதாக போடுவதில் ஒன்றும் தவறில்லை' எனக் கூறி கனிமொழி தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளார். ஆளுங்கட்சியின் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல், கட்சியில் ஏற்படும் இந்த, கலகங்கள் கட்சித் தலைமையை பாதித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty Re: கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by விநாயகாசெந்தில் Sun Sep 02, 2012 1:11 pm

அழுகை தாத்தாவுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி ஜாலி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty Re: கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by அசுரன் Sun Sep 02, 2012 1:15 pm

காடு போகிற வயசுல இவருக்கு எதுக்கு அரசியல் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty Re: கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by பிளேடு பக்கிரி Sun Sep 02, 2012 1:18 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty Re: கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by ராஜா Sun Sep 02, 2012 1:47 pm

"தினை விதைத்தவன் தினை அறுப்பான் தலைவரே " , உங்களை மாதிரி ஆட்கள் எதை விதைத்தீர்களோ அதை தான் கடைசில் அனுபவிக்க வேண்டியிருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..! Empty Re: கலகத்தை ஏற்படுத்திய போஸ்டர்கள்: கலங்கிய கருணாநிதி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum