Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத் இனப்படுகொலை: தனிகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
2 posters
Page 1 of 1
குஜராத் இனப்படுகொலை: தனிகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
குஜராத்தில் 97 பேரை பலிகொண்ட இனப்படுகொலை வழக்கில், முன்னாள் பெண் மந்திரி உள்பட 32 பேர் குற்றவாளிகள் என தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இனப்படுகொலை
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம் நடந்தது. ஏராளமான கரசேவகர்களைப் பலிகொண்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இனக்கலவரங்கள் மூண்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் ஒன்றுதான், நரோடா பாட்டியா இனப்படுகொலை வழக்கு. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கோத்ரா ரெயில் எரிப்பு நடந்த மறுநாளில், (2002, பிப்ரவரி 28-ந் தேதி) நடந்தது. அன்றைய தினம், குஜராத்தில் விசுவ இந்து பரிஷத் முழு அடைப்பு நடத்தியது. அப்போது நரோடா பாட்டியா என்ற இடத்தில் இனக்கலவரம் வெடித்தது. இதில் சிறுபான்மை இனத்தவர்கள் 97 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னாள் பெண் மந்திரி
குஜராத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக மாநில முன்னாள் பெண் மந்திரியும், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வுமான மாயா கொட்னானி, பஜ்ரங்தளத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கி உள்பட 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் நெருங்கிய கூட்டாளி என்று கருதப்படுகிற கொட்னானி, கடந்த 2009-ம் ஆண்டு மந்திரியாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
61 பேர் மீது விசாரணை
முதலில் இந்த வழக்கில் 46 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை 2008-ம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் சுப்ரீம் கோர்ட்டு ஒப்படைத்த பின்னர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் சாட்சி விசாரணை தொடங்குவதற்கு முன்பாக 6 பேர் இறந்து விட்டனர். சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு ஒருவர் இறந்து விட்டார். 2 பேர் ஜாமீனில் விடுதலையாகி பின்னர் தலைமறைவாகி விட்டனர். இன்றுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே 61 பேர் மீதான விசாரணை ஆமதாபாத் தனிக்கோர்ட்டில், கூடுதல் செசன்சு நீதிபதி ஜோத்ஸ்னா யாக்னிக் முன்னிலையில் நடந்துவந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கண்கண்ட சாட்சிகள் உள்பட மொத்தம் 327 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
32 பேர் குற்றவாளிகள்
விசாரணை முடிந்து, ஆகஸ்டு 29-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜோத்ஸ்னா தனது தீர்ப்பினை வழங்கினார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் முன்னாள் பெண் மந்திரி மாயா கொட்னானி, பஜ்ரங்தளத்தின் மூத்த தலைவர் பாபு பஜ்ராங்கி உள்பட 32 பேர் குற்றவாளிகள், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 120(பி) (குற்றச்சதி), 302 (கொலை)படி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என நீதிபதி அறிவித்தார்.
மற்ற 29 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ஜோத்ஸ்னா விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தண்டனை விவரம் எப்போது?
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 32 பேர் மீதான தண்டனை குறித்து நேற்று வாதம் நடைபெற்றது. அரசு தரப்பில் வாதாடிய சிறப்பு அரசு வக்கீல் அகில் தேசாய், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். கோர்ட்டு கருணை காட்டவிரும்பினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வக்கீல் நிரஞ்சன் டிக்கானி, குற்றவாளிகளின் குடும்பச்சூழல், பொருளாதாரப்பின்னணி ஆகியவற்றைக் கோர்ட்டு கருத்தில் கொண்டு, அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து 32 பேர் மீதான தண்டனை விவரம் ஆகஸ்டு 31-ந் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என நீதிபதி ஜோத்ஸ்னா கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குஜராத் இனப்படுகொலை: தனிகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
தீர்ப்பு சரிதான் ஆனால் ,ஒரு தவறுக்கு தீர்ப்பு வழங்க இதனை ஆண்டுகளா? இதுதான் நம்ம நீதிதுரையோட டக்கா
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிப்பு : பரபரப்பு தீர்ப்பு
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!
» 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
» சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!
» 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
» சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|