புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_m10தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 57-வது வயது


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Nov 06, 2012 3:44 pm

தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  57-வது வயது  131831639380da0eafa3


தமிழகத்தின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், முக்கனிகள் விளையும் பசும்சோலைகள், முத்தமிழ் சிறந்த மக்கள் என இம்மாவட்டத்திற்கு தனிச் சிறப்புகள் உண்டு. தமிழகத்தின் மணிமுடியில் அலங்கார கிரீடமாய் ஜொலிக்கும் இந்த மாவட்டம் முன்பு கேரளாவுடன் இணைந்திருந்தது. இங்கு தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்த பின்பும் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக இம்மாவட்டம் இருந்ததால் அப்போது கேரளாவுடன் சேர்க்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

தொலை நோக்கு திட்டங்கள் மறுக்கப்பட்டன. குறிப்பாக இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வுரிமை தடுக்கப்பட்டது. ஆண்கள் தலைப்பாகையும், பெண்கள் மேலாடையும் அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்க்கல்வி மறுக்கப்பட்டு மலையாளம் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பெருவாரியாக வசித்த தமிழர்கள் கிளர்ந்து எழுந்தனர். சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கை போக்க போராட்டத்தில் குதித்தனர். இதற்காக 1945-ம் ஆண்டில் `திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு உதயமானது.

இவர்கள் குமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர். `குமரி தந்தை' என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி இப்போராட்டக் களத்தில் தீவிரம் காட்டினார். குறிப்பாக குமரி மக்களை சாதிய அடிப்படையில் பிரித்துப் பார்த்த மேல்தட்டு மக்களை ஆக்ரோஷமாக எதிர்த்தார். இரட்டை இருக்கை, இரட்டை குடிநீர் பானை போன்ற முறைகளை ஒடுக்க கடுமையான போராட்டங்களில் குதித்தார். 1948-ம் ஆண்டு நித்திரவிளை அருகே உள்ள மங்காட்டில் குமரி மாவட்ட மீட்புப் போராட்டம் குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது காவல் துறையினர் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் பலியானார்கள். இந்த சம்பவம் போராட்டத்தின் வீரியத்தை நாட்டுக்கே வெளிச்சம் போட்டு காட்டியது. விளைவு கேரளாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, மூணாறு, தேவிக்குளம் பகுதிகளிலும் கிளர்ச்சி வெடித்தது. எங்கும் ஆர்ப்பாட்டம், மறியல் என மாநிலமே கொந்தளித்தது. இதனால் அந்த பகுதிகளிலெல்லாம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு போராட்டக்குழு அஞ்சவில்லை.

தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அணி அணியாக போராட்டக் களத்தில் குதித்தனர். குமரியில் இருந்து போராட்டக்காரர்கள் நேசமணி தலைமையில் பீர்மேட்டிற்கே சென்று தமிழர் பகுதியை தமிழகத்துடன் இணை என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் கன்னியாகுமரி எங்கும் மக்கள் கொதித்து எழுந்தனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போராட்டம் வேகம் எடுத்தது. 1954-ல் மார்த்தாண்டம், புதுக்கடை பகுதிகளில் ஊர்வலமும், மறியல் போராட்டமும் நடந்தது. அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அருளப்பன் , செல்லப்பாபிள்ளை உள்பட 9 பேர் உயிர் இழந்தனர். இவர்களின் உயிர் இழப்பு தென்திருவிதாங்கூர் அரசுக்கு பேரிடியாக மாறியது. ஒட்டு மொத்த மக்களும் அரசுக்கு எதிராக திரும்பியதால் ஆட்சியாளர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

1956-ம் ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கும் முடிவுக்கு திருவிதாங்கூர் அரசு இசைந்தது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்களையும் இணைத்து கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1956 நவம்பர் 1-ந்தேதி இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜரால் கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது. இதற்கான விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. மைதானத்தில் கோலாலமாக நடந்தது. அன்று இந்த மாவட்டம் உதயமாக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுக்கடையில் இவர்களுக்கு நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பேச்சிப்பாறை அணை, தொட்டில் பாலம் என விவசாயிகளின் நலன் காக்கும் பணிகள் நடந்தன. கடற்பரப்பையும், மலை வளத்தையும் காக்க எண்ணிலடங்கா திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனால் இந்தியாவிலேயே கல்வி அறிவுமிக்க மாவட்டம் என்ற புகழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிடைத்தது. இதனால் மக்கள் கண்ணியத்துடன் வாழ தொடங்கினர். இப்படி மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட குமரி மாவட்டம் தமிழகத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட 57-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்கு பாடுபட்ட தீரர்களையும் தியாகிகளையும் இந்த நேரத்தில் நினைவுக் கூர்வது அவசியம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந்தேதியை தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

குமரி மாவட்டத்தில் இன்று மலையாள மொழி பேசும் மக்களும் பல்வேறு சமயங்களை பின்பற்றுவோரும் சகோதரர்களாக இணைந்து வாழ்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 06, 2012 7:33 pm

வீரப்போராட்டத்திற்கு தன்னுயிர் ஈந்தோருக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக