Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
Page 1 of 1
காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியதில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக செத்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-லாரி மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அதேபோல வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் அருகே பழுதாகி ரோட்டோரம் நின்றிருந்தது. மதியம் 2.50 மணி அளவில் ஓசூரிலிருந்து வேகமாக வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில் திடீரென பயங்கரமாக மோதியது.
9 பேர் பரிதாப சாவு
இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் ஐயோ, அம்மா, என்று அலறி துடித்தனர். அரசு பஸ் டிரைவர் வேலூரை சேர்ந்த சிட்டிபாபு (வயது 52) என்பவர் பஸ்சிலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். அப்போது பஸ்சிலிருந்த சில பயணிகள் அவரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்தது. பஸ்சிலிருந்த 2 பெண்கள், 3 ஆண்கள், ஒரு சிறுமி என மொத்தம் 6 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஊர், பெயர் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
7 பேர் அடையாளம்
இறந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மட்டும் சிறிது நேரத்தில் அடையாளம் தெரிந்தது. அவர்கள் விவரம் வருமாறு:-
ராஜேஷ் (வயது 40) சென்னை தரமணி, விஜயபாபு (35) சென்னை, சுபாஷிணி (40) சென்னை, சுபாஷிணியின் கணவர் மோகன் (55) சாத்தாங்காடு திருவொற்றிïர், ஜோதி (55) ஆவடி, சரிதா (31/2) தந்தை பெயர் சரவணன் உத்தண்டி, சென்னை, உதயசூரியன் (60) கோட்டபாளையம், வேலூர், இன்னும் 2 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை.
துண்டான சிறுமியின் உடல்
இதில் சிறுமி சரிதாவின் உடல் இரண்டு பாகங்களாக சிதறி தலை பாகம் தனியாகவும், கால் பாகம் தனியாகவும் இருந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சரிதாவின் தாய் ரேணுகா. இவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மயக்க நிலையில் இருப்பதால் அவரது மகள் இறந்த விவரம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
10 பேர் படுகாயம்
மேலும் பஸ்சில் பயணம் செய்த சென்னை பெரம்பூரை சேர்ந்த வளர்மதி (42), நாகலிங்கம் (53), கவுரி (36), சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த நாகராஜ் (42), வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த ரமா (34), செஞ்சியை சேர்ந்த மாலதி (24), வேலூர் பஸ் கண்டக்டர் கஜேந்திரன் (58), பெங்களூரை சேர்ந்த நவீன் (29), ரேணுகா (31), சென்னையை சேர்ந்த தண்டபாணி (35), வேலூரை பஸ் டிரைவர் சிட்டிபாபு (52) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக 6 பேர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நேரில் பார்த்தவர்கள்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சேக்கான்குளத்தை சேர்ந்த சசிகுமார், ரூபஸ் பொன்னையா, கே.சுரேஷ் ஆகியோர் நிருபரிடம் கூறியதாவது:-
உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. ஒருசில நொடியில் அசுரவேகமாக வந்த அரசு பஸ், லாரி மீது மோதியது. வெடிகுண்டு வெடித்தது போல சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த நாங்கள் உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தோம்.
பட்டப்பகலில் ஒரு அரசு பஸ் டிரைவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவர் கவனக்குறைவாகவும் தூங்கிக்கொண்டும் வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகள் துடிதுடித்து இறந்த சம்பவம் மிகவும் பரிதாபமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அமைச்சர்கள் விரைந்தனர்
காயமடைந்தவர்களில் பெங்களூரை சேர்ந்த நவீன் (29), செஞ்சியை சேர்ந்த மாலதி (24) ஆகியோர் விரைவில் திருமணம் செய்யப்போகும் தம்பதிகள். சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இந்த பஸ்சில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் படுகாயமடைந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
டிரைவர் கைது
கலெக்டர் ஹனீஷ் சாப்ரா, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வி.பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் எஸ்.ரமேஷ், படுநெல்லி வி.தயாளன், எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி வீரப்பன், தாசில்தார் பன்னீர்செல்வம், மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குநர் பிரம்மதேவி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் வேலூரை சேர்ந்த சிட்டிபாபுவை கைது செய்தனர்.
லாரி டிரைவர் வேலூர் சுமைதாங்கியை சேர்ந்த செல்வம் (50) என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினத்தந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் - ஜெயலலிதா உத்தரவு
காஞ்சீபுரம் அருகே சாலை விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா இரங்கல்
காஞ்சீபுரம் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல், ராஜகுளம் கூட்டுறவு வங்கி அருகில் நேற்று (வியாழக்கிழமை) ஓசூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 9 நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை புரியவும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.
தலா ரூ.1 லட்சம்
மேலும், இந்த சாலை விபத்தில் 10 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த துயர சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காஞ்சீபுரம் அருகே சாலை விபத்தில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா இரங்கல்
காஞ்சீபுரம் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல், ராஜகுளம் கூட்டுறவு வங்கி அருகில் நேற்று (வியாழக்கிழமை) ஓசூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், பஸ்சில் பயணம் செய்த 9 நபர்கள் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை புரியவும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.
தலா ரூ.1 லட்சம்
மேலும், இந்த சாலை விபத்தில் 10 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த துயர சம்பவத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
» அரியலூர் அருகே பயங்கர பஸ் விபத்து 10 பேர் பலி
» காமன் வேல்ட் விளையாட்டு அரங்கம் அருகே விபத்து .4 பேர் படுகாயம்
» ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்
» அரியலூர் அருகே பயங்கர பஸ் விபத்து 10 பேர் பலி
» காமன் வேல்ட் விளையாட்டு அரங்கம் அருகே விபத்து .4 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|