புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_m10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_m10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_m10 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 17, 2012 2:37 pm

 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு 4eb66662-fc45-4034-ba85-259497bd7307_S_secvpf

உலக மதங்களில் பழமையானது புத்தமதம். இதை தோற்றுவித்தவர் கவுதம புத்தர். இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தனன்.

மனிதனுக்கு இறப்பு இருப்பது தெரியாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒருநாள் சவ ஊர்வலத்தை பார்த்து மனம் மாறுகிறார். மனிதனின் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஆசைதான். எனவே ஆசையை ஒழித்து விட்டால் இறைவனை காணலாம் என போதித்த புத்தர், உலக வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார்.

அந்த நாட்களில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் புத்தமத நெறியை பின்பற்றியே ஆட்சி நடத்தினார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப போதகர்களை நியமித்து மடங்களையும் நிறுவினார்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாக புத்த மதம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி, இந்து மதத்தைபோல் வளர்ந்து நிலைத்தது. மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்டை நாடுகளின் இதுபோன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது. இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை நம் நாட்டு மந்திரி நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.

புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி ஒருவர் புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார்.

மாலைமலர்



 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:16 pm

புத்தர் அழுதார்





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 5:18 pm

இது ஒத்து கொள்ள முடியாது. எங்கு அதற்க்கான மரியாதை கிடைக்கிறதோ அங்கு அனுப்புவதில் தவறில்லை. இங்கே எலும்பாக இருப்பது அங்கு தெய்வமாக வழிபடபடுகிறது என்றால் அதில் ஒன்றும் தவறில்லை



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 17, 2012 8:59 pm

காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?

யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 17, 2012 9:16 pm

புத்தர் எலும்பு என்பது தேசிய நினைவு சின்னம் ...இதை காண சுற்றுலா பயணிகள் பலர் வருவார்கள்...இதை தாரை வார்ப்பது தவறு.

தமிழ் இன அழிப்பு செய்த ராஜபக்சேவுக்கு சோனியா கும்பல் அளிக்கும் பரிசுதானோ இது என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 10:57 am

சூப்பருங்க
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.

இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும். என்ன கொடுமை சார் இது

இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Aug 18, 2012 4:49 pm

ராஜா wrote: சூப்பருங்க
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.

இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும். என்ன கொடுமை சார் இது

இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.
ஆமோதித்தல் சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 12:30 am

யினியவன் wrote:காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?

யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.
குட் கொஸ்டின் பாஸ் சூப்பருங்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 19, 2012 1:42 am

புத்தனை வழிபடும் தேசம், புத்தனின் எலும்புக்கு நாயாய் அலையும் கூட்டம்,, ஏன்????? புத்தனின் போதனைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது..

வைரமுத்துவின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

போதிமரம் போதும்
புத்தனை புதைத்துவிடு!

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்கு தீயிடு

சின்னங்கள் போதும்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்கு சிலை
கவிதைக்கு கல்லறை

உரை போதும்பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்கு குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்கு சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்

தலைவனைக் கொன்றுவிடு
பாதுகையை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்கு பூ

கற்பு முக்கியம்
கருவைக் கலை


புத்தனின் பல்போதும்
போதனைகள் தூக்கிஎறி..

புத்தனின் எலும்புவேண்டும்
தமிழர்களின் ரத்தமும் வேண்டும்

இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம் இலங்கை..
இதன் கைக்கூலி காங்கிரஸ்.. வேறென்ன நடக்கும் இங்கே...
 பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு 56667

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்று விடு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக