ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம்

Go down

 முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம் Empty முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம்

Post by சிவா Fri Aug 17, 2012 9:26 am

 முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம் First17

கிரானைட் முறைகேடு ஆவணங்களை கடத்துவதாக வந்த தகவலை அடுத்து பி.ஆர்.பி. நிறுவனத்தின் 17 பயணிகள் பஸ்கள் முடக்கப்பட்டன.

பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சீல்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, கலெக்டராக சகாயம் பதவி வகித்தபோது அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மேலூர் பகுதியில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் சோதனையிட உத்தரவிட்டார். அதன்பேரில் 18 குழுக்கள், அனைத்து குவாரிகளையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையில் பி.ஆர்.பி. கிரானைட், ஒலிம்பஸ், சிந்து, பி.எஸ். கிரானைட் உள்பட சில கிரானைட் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்களின் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும் 400 ஏக்கர் பரப்பரளவு கொண்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தை ஆய்வு செய்து அதிரடியாக சீல் வைத்தனர்.

ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

அதைத் தொடர்ந்து, மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர்கள் பி.பழனிசாமி, அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், உறவினர் மகராஜன் ஆகியோர், முன் ஜாமீன் கேட்டுமதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரானைட் குவாரி அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, தற்போது கிரானைட் ஓய்வுபெற்ற கனிமவள அதிகாரி சண்முகவேலும், பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர் உள்பட இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்

பீர்தர்கா மலை

இதற்கிடையே பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பலகோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வருவாய் மற்றும் போலீஸ்துறையினர் இணைந்து கண்டு பிடித்த வண்ணம் உள்ளனர். பெரிய பெரிய அளவிலான அந்த கற்கள் அனைத்தும் மண்ணால் மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. பல லட்சம் உள்ள இந்த கற்களின் மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என தெரிகிறது.

மேலூர் அருகே கீழவளவு சர்க்கரை பீர் தர்கா மலையும், திருப்பத்தூர் ரோட்டில் புறாக்கூட்டு மலையும் உள்ளன. இந்த மலை முழுவதும் முதல் தர கிரானைட் கற்களாகும். இங்கு கிரானைட் கற்களை குறிப்பிட்ட அளவு வெட்டி எடுக்க கனிமவள நிறுவனம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளன.

இதில் சர்க்கரை பீர் தர்கா மலை பாதி அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறது. புறாக்கூட்டு மலையில் கற்கள் எடுக்கப்பட்டதால் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

பஸ்கள் முடக்கம்

இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் பஸ்களில் ஆவணங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மதுரையில் இருந்து பொன்னமராவதி சென்ற பஸ்சையும், பொன்னமராவதியில் இருந்து மதுரை வந்த பஸ்சையும் மேலூரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதற்காக பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. பின்னர் பஸ்களை போலீசார் சோதனை செய்து முடக்கி வைத்தனர்.

அதே போல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் 15 பஸ்களை வருவாய்த்துறையினர் முடக்கி வைத்தனர். அதுமட்டுமின்றி கடந்த 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை பி.ஆர்.பி. நிறுவனம் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் பி.ஆர்.பி. அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் வாங்கிய சொத்துகளும் அதில் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

மர்மச்சாவுகள் பற்றி விசாரணை

கிரானைட் குவாரிகள் உள்ள பகுதிகளில் பலர் மர்மமான முறையில் இறந்ததாகவும், அது குறித்து எந்த மேல் நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் புகார்கள் வந்தன. அது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதிபதி விசாரணை கோரி வழக்கு

இதற்கிடையில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேற்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, விஜயராகவன் ஆகியோர் இந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

அதே போன்று பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் குருவிஜயன், வக்கீல் ரஜினி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி


 முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது
» கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்
» சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
» வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்
» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum