ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

3 posters

Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும் Empty செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Rangarajan Sundaravadivel Thu Aug 16, 2012 8:32 pm

இப்பொழுது தான் செர்பிகோ திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். 1973ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் அது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நாம் ஏன் உண்மைக் கதாநாயகர்களைப் படமாக்கக் கூடாது? அளவுக்கு மீறிய புனைவுகள் குவிந்து கிடக்கின்றன தமிழ்த் திரையுலகில். ஒருநாள் முதல்வர்கள், லஞ்சம் வாங்குபவர்களைக் கொல்லும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தவறு செய்பவர்களைக் கொல்லும் பிராமணன், அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிந்து அதில் சம்பாதித்த கோடிகளை இந்தியாவில் இலவச பல்கலைக்கழகம் தொடங்க நினைக்கும் மென் பொருள் வல்லுநர், நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என்று சொல்லும் போலீஸ் அதிகாரிகள் என எக்கச்சக்கமான வரைமுறையற்ற புனைவுகள். அவற்றைப் பார்க்கச் செல்லும் சராசரி சினிமா ரசிகன் அவர்கள் சொல்லும் வசனங்களுக்குக் கைதட்டுகிறான். தான் அவர்களாவே மாறுவதாக நினைத்துக் கொண்டு இன்புறுகிறான். பாப்கார்ன் மெல்லுகிறான். வீட்டுக்குக் கிளம்புகிறான். மறந்து விடுகிறான். அந்நியன் திரைப்படம் ஏதாவது சமூக மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது என்று யாரால் சொல்ல முடியும்?

நாம் இனி விஷயத்துக்கு வருவோம். செர்பிகோ எதைப்பற்றிய படம். அது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம். தமிழில் எத்தனையோ வந்து விட்டது என்கிறீர்களா? இது விஜயகாந்தின் படம் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்து விளையாடும் படம் அல்ல. நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என வசனம் பேசும் படம் அல்ல. வேட்டையாடு விளையாடு, காக்க காக்க திரைப்படத்தைப் போல் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுடும் போலீஸ் படம் அல்ல. தமிழில் வந்த போலீஸ் வகையறாப் படங்களில் சேரக்கூடிய படம் அல்ல. தமிழில் எத்தனை படங்கள் காவல்துறையினரை மனிதர்களாகக் காட்டியிருக்கின்றன? அஞ்சாதே திரைப்படத்தைச் சொல்லலாம். வேறு திரைப்படங்கள்? தெரிந்தால் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படியானால் இது எப்படிப்பட்ட படம்? சொல்லித் தொலைக்க வேண்டியது தானே என்று சொல்கிறீர்களா? நேர்மையின் கனவுகளோடு காவல்துறையில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க இளைஞனைப் பற்றிய படம். லஞ்சம் வாங்காமல் இருந்த காரணத்தால் சக காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு காவலனின் படம். அதிகமாக மன அழுத்தத்துக்கும், ஏமாற்றத்துக்கும், காயங்களுக்கும் ஆளான ஒரு மனிதனின் படம். அது தான் செர்பிகோ. அது தான் யதார்த்த காவல்துறை நிலைமையை சித்தரித்த படம்.

செர்பிகோ திரைப்படத்தை எப்படி யதார்த்தமாக எடுக்க முடிந்தது என்று நீங்கள் வினாவெழுப்பலாம். பதில் மிக எளிமையானது - செர்பிகோ உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு காவலர். இத்தகைய கதாநாயகர்கள் நம் நடுவில் இல்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள். மக்களுக்காக வாழ்ந்து மரித்தவர்கள், கடமை செய்யப் போன இடத்தில் பலியானவர்கள் நம் நாட்டிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏன் நாம் திரைப்படமாக எடுக்க முயலவில்லை? காரணம் மிக எளிமையானது. நாம் வன்முறையை மகிமைப்படுத்தப் பழக்கப்பட்டிருக்கிறோம். கதாநாயகர்கள் வில்லன்களைக் கொல்லும் போது கரவொலி எழுப்பவும், அவனைக் கொல்லு என்று கூவவும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வன்முறை எந்த அளவுக்கு மோசமானது என்பதை நாம் உணராதவர்களாக இருக்கிறோம். ஏன் இந்த நிலை?

எத்தனையோ படங்கள் கதாநாயக வணக்கங்களாக மட்டும் வந்து போகின்றன. யாராலும் அழிக்க முடியாத பிம்பங்கள் அவர்கள். இத்தகைய குப்பைகளை எதற்காகக் கோடிகளைக் கொட்டி எடுக்க வேண்டும்? பொழுது போக்குத் திரைப்படங்கள் தேவைதான். ஆனால் அதையும் தாண்டிய, கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் எதற்கு? கொலோசியத்தில் கிளேடியேட்டர்கள் சண்டையிடுவதைப் பார்த்து இரசிக்கும் ரோமக் குடிகளின் காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தான நமக்கு இருக்கிறது. நாம் என்று நமது பழக்கங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோம்? என்று புனைவுக்கதாநாயகர்களை விட்டு விட்டு உண்மைக் கதாநாயகர்களை பார்க்கப் போகிறோம்?

என்று?


கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும் Empty Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by rameshnaga Thu Aug 16, 2012 8:38 pm

கிளாஸ்! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும் Empty Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by யினியவன் Thu Aug 16, 2012 10:54 pm

மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.

தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.

நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும் Empty Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Rangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 7:26 am

யினியவன் wrote:மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.

தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.

நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.
நன்றி தோழரே, முயற்சி செய்கிறேன்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும் Empty Re: செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum