ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?

2 posters

Go down

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Empty அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?

Post by Guest Thu Aug 16, 2012 12:32 pm

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? 16-assam-violence

குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை.

இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் காயமடைந்தனர். பூடான் எல்லைப் பகுதியில் கலவரம் நடந்த பகுதி உள்ளது.

காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் அழகான ஒரு பகுதி அஸ்ஸாம்தான் என்று வர்ணித்திருந்தார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்த இரு அழகான பூமிகளும் இன்று அக்னிப் பிழம்பாக மாறி நிற்கின்றன. காஷ்மீர் பிரச்சனை தெரிந்ததுதான். அஸ்ஸாமில் இனப் பிரச்சினை பெரிய அளவில் தலைவிரித்தாடி வருகிறது.

இந்தக் கலவரத்திற்கு என்ன காரணம், அங்கு நடந்து கொண்டிருப்பதுதான் என்ன என்பது குறித்த ஒரு ரவுண்டப்....

அஸ்ஸாம் மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அஸ்ஸாமியர்கள் ஆவர். 30 சதவீதத்திற்கும் மேலான முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் அஸ்ஸாமி மொழி பேசக் கூடியவர்கள்தான். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய இனப் பிரிவு உண்டு. அவர்கள்தான் போடோக்கள். இவர்கள் பழங்குடியினத்தவர். அஸ்ஸாமியர்களில் 5 சதவீதத்தினர் போடாக்கள் ஆவர்.

இப்போது பிரச்சனை என்னவென்றால், போடோ இனத்தவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து பெருமளவில் அஸ்ஸாமுக்குள் ஊடுறுவி வசித்து வரும் முஸ்லீம் மக்களுக்குத்தான் மோதல் முட்டியுள்ளது. போடோக்கள் அஸ்ஸாம் வனப்பகுதியில் பெருமளவில் உள்ளனர். அந்த வன வளத்தை நம்பித்தான் இவர்கள் உள்ளனர். ஆனால் தங்களுக்குப் போட்டியாக வங்கதேசத்து முஸ்லீம்கள் வந்து விட்டதாக போடோக்கள் கருதுகிறார்கள். முஸ்லீம்கள் இனியும் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரமே நிர்மூலமாகிவிடும் என போடோக்கள் அஞ்சுகின்றனர்.

இதையடுத்து போடோக்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது தான் தற்போது இனக்கலவரமாக வெடித்துள்ளது.

போடோ இனத்தவர்கள் நடத்திய வெறித் தாக்குதலால், அஸ்ஸாம் முழுவதும் பரவி வசித்து வரும் முஸ்லீம்களில் லட்சட்கணக்கானோர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினர் கடுமையாக திணறி வருகின்றனர்.

இந் நிலையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுவிட்ட சூழல் குறித்த தகவல்கள் மெல்ல மெல்ல வெளியே பரவியது. இந் நிலையில் தான் மும்பை, புனே, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் அஸ்ஸாமியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

அஸ்ஸாமியர்கள் என நினைத்து வட கிழக்கு மாநிலத்தவர் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த திபெத்தியர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால் நாடு முழுவதுமே அஸ்ஸாமியர்கள், வட கிழக்கு மாநிலத்தவர் இடையே பெரும் பதற்றமும் அச்ச உணர்வும் பரவியுள்ளது.

இந்த நிலையில்தான் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர் சிலர். அதாவது ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர் நாடு முழுவதும் அஸ்ஸாமியர்களைக் குறிவைத்து பெரும் தாக்குதல் நடக்கப் போகிறது என்பதே இந்த வதந்தி.

இதனால்தான் பெங்களூரிலிருந்து ஆயிரக்கணக்கான அஸ்ஸாமியர்களும் வட கிழக்கு மாநிலத்தவரும் அவசரம் அவசரமாக ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் இவர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளது ரயில்வே.

இவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தரப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. கர்நாடக காவல்துறை அமைச்சரான அசோக் நள்ளிரவில் ரயில் நிலையத்துக்கே சென்று இந்த மக்களுக்கு சமாதானம் சொல்லிப் பார்த்தும் பலனில்லை.

இந்த சூழ்நிலையில்தான் தற்போது அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

இந்த புதிய கலவரத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றன் என்பது மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் செயல்படும் விதத்தைப் பொறுத்தே இருக்கிறது.

அஸ்ஸாமில் கலவரத்தில் ஈடுபடுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாக வேண்டும். அதே போல நாட்டின் பிற பகுதிகளில் அஸ்ஸாமியர்கள் மற்றும் வட கிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்துவோரும் மிகக் கடுமையாக இரும்புக் கரம் ஒடுக்கப்பட்டாக வேண்டும்.

இந்த விவகாரத்தை வைத்து எந்தக் கட்சியும் அரசியல் செய்யாமல் இருப்பதே மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்.

--

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Empty Re: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?

Post by ராஜா Thu Aug 16, 2012 12:45 pm

என்ன கொடுமை சார் இது ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். இந்தியர்களே பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது சென்று வாழுங்கள் என்று சொல்லும் காலம் வரபோகிறது. சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Empty Re: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?

Post by பிளேடு பக்கிரி Thu Aug 16, 2012 1:05 pm

நல்ல அரசு..



அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன? Empty Re: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்தது... நடப்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum