ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.

Go down

அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Empty அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.

Post by Guest Mon Feb 02, 2009 3:37 am

தோல் நோய்கள் வருவதற்கான காரணங்களை கண்டுபிடித்துவிட்டால், அவற்றை குணப்படுத்துவது எளிது. ஆனால் பல தோல் நோய்கள் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. முக்கியமான சில

தோல் நோய்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டாக்ஸிக் ஹெபிடெர்மல் சிண்ட்ரோம் - Toxic Epidermal Syndrome

தோல் நோய்களில் உயிரையே எடுக்கும் ஆபத்தான நோய் இது. ஒரு சில நுண்கிருமிகளாலும், குறிப்பாக 80 மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் சில வலி நிவாரண மருந்துகள் உடலுக்கு ஒவ்வாமையாக மாறி இந்த கொடிய தோல் நோயை உண்டாக்குகிறது. இவ்வகை தோல் நோய் கண்டவர்களின் தோலிலுள்ள மயிரிழைகள் உதிரும்.

தோல் உரிந்தும், சிவந்தும், அரிப்புடனும் இருக்கும். தொண்டையில் புண், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த தோல் நோய் மனிதனின் இறப்பு கணக்கை அதிகரிக்கும் ஒரு கொடுமையான நோயாகும். இது முடிவில் மனிதனை உயிரிழக்க வைக்கிறது. எனவே மற்ற நோய்களுக்காக வலி நிவாரணி மருந்துகளை எடுக்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியமான தாகும்.

கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் - Contact dermatitis

பலரது தோல் அதிகமான உணர்ச்சியுடன் ஒவ்வாமையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத தோலாக இருக்கும். இவ்வகையானவர்களின் தோல் சில அலர்ஜி பொருட்களான சோப், அமிலம், விஷம், தலைமுடிக்கு பூசிக் கொள்ளும் டை எனப்படும் வேதிப்பொருள் துணிகள் நிறத்தை தரும் சாயப்ச்சுகள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதன் மூலம் இந்த தோல் நோய்கள் ஏற்படுகிறது.

எக்ஸ்போலியேடிவ் டெர்மடைட்டிஸ் - Exfoliative dermatitis

இது இரண்டாவது வகை. இவ்வகை தோல் நோய் நிமோனியே, மைக்கோ பிளாஸ்மா மற்றும் அம்மை நோயை உண்டாக்கும் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் என்ற கிருமிகளாலும் மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் வலிப்பு நோய்க்காக எடுக்கப்படும் மருந்துகளாலும் ஏற்படுகிறது.

தொழிற்சாலைகளால் தோல் நோய்

தொழிற்சாலையில் வேலை செய்யும்போது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பல ரசாயன பொருட்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

எக்ஸ்-ரே மற்றும் கதிர் வீச்சுக்களால் தோல் நோய்

இவை, எக்ஸ்-ரே எடுத்தல் மற்றும் பல நோய்களுக்காக, ரேடியம் கதிர்களை பயன்படுத்தி செய்யப்படும் பரி சோதனைகள் மற்றும் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சையான ரேடியோதெரபி போன்றவற்றின் மூலம் தோலில் ரேடியேசன் உண்டாவதால் இவ்வகை தோல் நோய் உண்டாகிறது.

இந்நோய் கண்டவர்களுக்கு, தோலில் சிவப்பு சிவப்பான தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். பிறகு அக்கொப்புளங்கள் வெடித்து அதிலிருந்து நீர் வடியும். அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

எக்ஸிமா - Eczema

எக்ஸிமா தோலின் மேலோட்டமாக ஏற்படுகிறது. அதாவது தோலின் வெளிப்புற அடுக்கான எபிடெர்மிஸ் இதனால் பாதிக்கப்படுகிறது.

உடலுக்கு ஒவ்வாத சில அலர்ஜிப் பொருட்களான உணவு வகைகள், தூசிகள், மாசுப் பொருட்கள், வேதிப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை தோலின் மீது பூசிக்கொள்ளுதல் மற்றும் சில வகையான பவுடர், எண்ணெய், கிரிம், பெட்ரோல், சோப் போன்றவற்றை கையாள்வதால் சிலரின் தோலுக்கு அது அலர்ஜியாக மாறி இந்த எக்ஸிமா நோய் ஏற்படுகிறது. உலக மக்களில் சுமார் 1% முதல் 3% மக்கள் எக்ஸிமா நோய்க்கு ஆளாகிறார்கள்.

எக்ஸிமா நோயின் அறிகுறிகள்

எரித்திமா என்று சொல்லப்படும் சிவப்பு நிறத்தில் காணப்படும். எக்ஸிமா நோய் கண்டவர்களின் தோலிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்களிலிருந்து நீர் வடியும். தோலில் அரிப்பு மிக மிக அதிகமாக காணப்படும். அவர்களின் தோல் மிகவும் கடினத்தன்மையாக காணப்படும்.

இந்த எக்ஸிமா நோய் பெரியவர்களைத் தவிர குழந்தைகளையும் பாதிக்கிறது என்று சொல்லப்படும். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எக்ஸிமா நோய் பாதிக்கிறது. இந்நோய் கண்ட குழந்தைகளின் முகம், கழுத்து, முழங்கை, மடிப்பு, கால் முட்டி போன்ற இடங்களில் செந்நிற தடிப்புகள் மற்றும் சிறிய கொப்புளங்கள் காணப்படும். சில குழந்தைகளுக்கு இந்த தடிப்புகள் உடல் முழுவதும்கூட ஏற்படலாம்.

மேற்கூறிய தோல் நோய்கள் அல்லாது, வேறு சில நோய்களாலும் தோல் பாதிக்கப்படுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும். Empty Re: அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.

Post by Guest Mon Feb 02, 2009 3:38 am

நீரிழிவு முற்றிய நிலையில் கை விரல்கள், கால் விரல்களில் உள்ள திசுக்கள் அழிந்து, ரத்த ஓட்டம் நின்று செல்கள் அழிந்து நோய் உண்டாகிறது. இதனால் அவ்விடத்திலுள்ள தோல்கள் அழுகிவிடுகின்றன.

சாலை விபத்து, தீ விபத்து, மின்சார தாக்குதல் போன்றவற்றால் தோலில் அழிவு ஏற்படுகிறது.

வாந்தி, வயிற்றுப்போக்கு இவற்றால் உடலிலுள்ள தண்ணீர் வெளியேறி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் தோல் வறட்சியடைகிறது. இதனால் தோல் தன் எலாஸ்டிக் தன்மையை இழந்து, எண்ணெய் பசை உலர்ந்துவிடுகிறது. எனவே அதிகமான அளவு தண்ணீர் உட்கொள்ளுவதன் மூலம் தோல் உலர்வை தவிர்க்கலாம்.

தோல் நோய் வந்தவர்கள், அதை கண்டு பயப்படவோ, வருத்தப்படவோ வேண்டாம். மூலிகை மருத்துவத்தில் எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் தெய்வீக மூலிகைகள் வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி, குப்பைமேனி, தும்பை, வரசன், கடுக்காய், நாவல், பறங்கி பட்டை, நெல்லி மாவிலை, அரசனிலை போன்ற மூலிகைகளை பறித்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பின் சமளவில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் உட்கொள்ளவும். இதனை சுமார் மூன்று, நான்கு மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள மேற்கூறிய எல்லாவித தோல் நோய களும் குணமாகிவிடும்.

கலவை எண்ணெய்

வேப்ப எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டலில் வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங் கையில் விட்டு நாவினால் நக்கி சாப்பிடவும். தினம் உணவுக்கு முன் காலை 1 வேளை மட்டும் உட்கொண்டால் போதும்.

மேலும் தோல் வெடிப்பு, நீர் வடிதல், சொரி, சிரங்கு, அரிப்பு, எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற எல்லாவற்றுக்கும் இக்கலவை எண்ணெயை மேல் பூச்சாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் (துணியில் படாதவாறு கொஞ்சமாக) பூசிக் கொண்டால் விரைவில் குணம் தெரியும்.

மூலிகை குளியல் பவுடர்

இந்நோயாளிகள் மூலிகை குளியல் பவுடர் மட்டும் உபயோகிப்பது நல்லது. வேப்பிலை, துளசி, ஆவாரம், வெட்டி வேர், நெல்லி, பயத்தம் பருப்பு, பூவரசம் , எலுமிச்சம்பழ தோல், மஞ்சள் தூள் சிறிது ஆகியவற்றை சம அளவு கலந்து அரைத்துக் கொண்டு இப்பொடியுடன் சம அளவு சீயக்காய் தூள் கலந்து குளியல் பவுடராகப் பயன்படுத்தலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum