Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
5 posters
Page 1 of 1
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
மதுவின் தீமை குறித்து எத்தனையோ விதமாகக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிவருகின்றன. வெளிவரும். காரணம், மது நேற்றும் விற்கப்பட்டது. இன்றும் விற்பனையாகிறது. நாளையும் விற்பனையாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில்லை என அரசுகள் மிகுந்த உறுதியாக இருக்கும்போது, மதுவின் தீமைகளை விளக்கி, மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவர வேண்டியதும் அவசியம்தானே?
குடங்குடமாய் பாலைத் தந்தேனே என அரசுகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாலும் கூடவே ஒருதுளி விஷத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே ஒரு துளி விஷமாய் மது விற்பனை.
அண்மையில் நாளிதழ்களில் ஓரிரு நாள் இடைவெளியில் இரண்டு செய்திகள் கண்ணில்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் வகுப்பறையில் கிடந்த இருக்கைகளை உடைத்து எடுத்துச் சென்று விற்று மது குடித்தனர் என்பது. மற்றொன்று கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரவுதோறும் மர்ம நபர்கள் புகுந்து வகுப்பறைகளை மதுக்கூடங்களாக மாற்றி மதுகுடித்து மகிழ்கிறார்கள் என்பது.
இரண்டுமே மது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, வகுப்பறை சம்பந்தப்பட்டது என்பதுதான் இதில் கூடுதல் வேதனை. கன்னியாகுமரி மாவட்டம் "படித்தோர் நிறைந்த' மாவட்டம் என்னும் புகழ்பெற்றது. இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அப் பெருமையைப் பின்னுக்குத் தள்ளி, "குடித்தோர் அதிகரித்துக் கொண்டிருக்கும்' மாவட்டம் என்னும் பெருமையைப் பெற்றுவிடுமோ என நினைக்க வைக்கிறது.
"மூத்தகுடி' தோன்றியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் இன்று "குடியில், மற்ற மாவட்டங்களைவிட மூத்தது' என்னும் பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை. "பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என உலகுக்குத் தமிழகம் உரைத்த காலம்போய் இன்று 'எது செய்தேனும் மது குடி' எனப் புதுமொழியைத் தந்துவிடுமோ என சமூகநல ஆர்வலர்களைக் கவலையும், அச்சமும் கொள்ளச் செய்கிறது மதுரைச் சம்பவம். இறையனாரின் இலக்கியப் பாட்டில் குற்றம் கண்டுபிடித்து தமிழை வளர்த்த நக்கீரப் பரம்பரையினர் இன்று மது பாட்டில் பிடித்து இன்பம் கண்டு மகிழ்கிறார்கள் போலும்!
மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை (அது இருந்தால், குடிப்பார்களா எனக் கேட்கக்கூடாது) பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் மதுவின் தீமைகளை விளக்கி புள்ளிவிவரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள். இதனால், குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக ஏழைகளைப் பாடாய்ப்படுத்தும் விலைவாசிபோல அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் இதிலும் ஓர் ஆச்சரியம். விலைவாசி ஏறி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டாலும் "டாஸ்மாக்' கடைகளில் பாதிக்கும் மேல் விற்பனையாவது ஏழைகளின் புண்ணியத்தால்தான்.
ஒருவேளை, அரசுகளிடமிருந்து சில இலவசங்களைப் பெறும் அவர்கள், அவற்றைப் பலமடங்காக்கி அரசுக்கு நன்றி உணர்வுடன் திருப்பித் தரவேண்டும் என்ற கண்ணியத்தோடு தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு கடமை ஆற்றுகிறார்களோ என்னவோ?
முன்பெல்லாம் மது குடிப்பது அவமானம். இப்போதோ அதனால் அரசுக்கு வருமானம். அதேபோல, முன்பு மது குடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதோ மது குடிக்காதவர்களைத்தான் விரல்விட்டு எண்ண முடிகிறது. காலப்போக்கில், "மணமகன் தேவை' விளம்பரம் செய்வோர் "மணமகன் குடித்தாலும் பரவாயில்லை' என்ற சலுகை அளித்துத்தான் மணமகனைத் தேட வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.
மாணவர்களுக்கு மது விற்கக் கூடாது, குறைந்தபட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என, மதுவிலக்கை வலியுறுத்தும் சிலர் கோருகின்றனர். அதுகூடத் தவறுதான். குடிக்க வேண்டும் என முடிவெடுத்து கடைக்கு வரும் மாணவன் தன் உண்மையான வயதைச் சொல்வானா? அல்லது குடிக்க வேண்டும் என ஆசைப்படும் ஒருவன், குறிப்பிட்ட வயது வரும்வரை பொறுமையுடன் காத்திருப்போம் என நினைத்து மதுக்கடைக்குச் செல்லாமலிருப்பானா? இவ்வாறு மதுவிலக்கில் "சில விலக்குகளை'க் கோராமல் மாணவர்களை மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைக் குடியிலிருந்து மீட்க ஒரேவழி, ""மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவதுதான்''.
(நன்றி - தினமணி - மா. ஆறுமுககண்ணன்)
குடங்குடமாய் பாலைத் தந்தேனே என அரசுகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாலும் கூடவே ஒருதுளி விஷத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே ஒரு துளி விஷமாய் மது விற்பனை.
அண்மையில் நாளிதழ்களில் ஓரிரு நாள் இடைவெளியில் இரண்டு செய்திகள் கண்ணில்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் வகுப்பறையில் கிடந்த இருக்கைகளை உடைத்து எடுத்துச் சென்று விற்று மது குடித்தனர் என்பது. மற்றொன்று கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரவுதோறும் மர்ம நபர்கள் புகுந்து வகுப்பறைகளை மதுக்கூடங்களாக மாற்றி மதுகுடித்து மகிழ்கிறார்கள் என்பது.
இரண்டுமே மது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, வகுப்பறை சம்பந்தப்பட்டது என்பதுதான் இதில் கூடுதல் வேதனை. கன்னியாகுமரி மாவட்டம் "படித்தோர் நிறைந்த' மாவட்டம் என்னும் புகழ்பெற்றது. இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அப் பெருமையைப் பின்னுக்குத் தள்ளி, "குடித்தோர் அதிகரித்துக் கொண்டிருக்கும்' மாவட்டம் என்னும் பெருமையைப் பெற்றுவிடுமோ என நினைக்க வைக்கிறது.
"மூத்தகுடி' தோன்றியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் இன்று "குடியில், மற்ற மாவட்டங்களைவிட மூத்தது' என்னும் பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை. "பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என உலகுக்குத் தமிழகம் உரைத்த காலம்போய் இன்று 'எது செய்தேனும் மது குடி' எனப் புதுமொழியைத் தந்துவிடுமோ என சமூகநல ஆர்வலர்களைக் கவலையும், அச்சமும் கொள்ளச் செய்கிறது மதுரைச் சம்பவம். இறையனாரின் இலக்கியப் பாட்டில் குற்றம் கண்டுபிடித்து தமிழை வளர்த்த நக்கீரப் பரம்பரையினர் இன்று மது பாட்டில் பிடித்து இன்பம் கண்டு மகிழ்கிறார்கள் போலும்!
மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை (அது இருந்தால், குடிப்பார்களா எனக் கேட்கக்கூடாது) பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் மதுவின் தீமைகளை விளக்கி புள்ளிவிவரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள். இதனால், குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக ஏழைகளைப் பாடாய்ப்படுத்தும் விலைவாசிபோல அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
ஆனால் இதிலும் ஓர் ஆச்சரியம். விலைவாசி ஏறி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டாலும் "டாஸ்மாக்' கடைகளில் பாதிக்கும் மேல் விற்பனையாவது ஏழைகளின் புண்ணியத்தால்தான்.
ஒருவேளை, அரசுகளிடமிருந்து சில இலவசங்களைப் பெறும் அவர்கள், அவற்றைப் பலமடங்காக்கி அரசுக்கு நன்றி உணர்வுடன் திருப்பித் தரவேண்டும் என்ற கண்ணியத்தோடு தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு கடமை ஆற்றுகிறார்களோ என்னவோ?
முன்பெல்லாம் மது குடிப்பது அவமானம். இப்போதோ அதனால் அரசுக்கு வருமானம். அதேபோல, முன்பு மது குடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதோ மது குடிக்காதவர்களைத்தான் விரல்விட்டு எண்ண முடிகிறது. காலப்போக்கில், "மணமகன் தேவை' விளம்பரம் செய்வோர் "மணமகன் குடித்தாலும் பரவாயில்லை' என்ற சலுகை அளித்துத்தான் மணமகனைத் தேட வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.
மாணவர்களுக்கு மது விற்கக் கூடாது, குறைந்தபட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என, மதுவிலக்கை வலியுறுத்தும் சிலர் கோருகின்றனர். அதுகூடத் தவறுதான். குடிக்க வேண்டும் என முடிவெடுத்து கடைக்கு வரும் மாணவன் தன் உண்மையான வயதைச் சொல்வானா? அல்லது குடிக்க வேண்டும் என ஆசைப்படும் ஒருவன், குறிப்பிட்ட வயது வரும்வரை பொறுமையுடன் காத்திருப்போம் என நினைத்து மதுக்கடைக்குச் செல்லாமலிருப்பானா? இவ்வாறு மதுவிலக்கில் "சில விலக்குகளை'க் கோராமல் மாணவர்களை மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைக் குடியிலிருந்து மீட்க ஒரேவழி, ""மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவதுதான்''.
(நன்றி - தினமணி - மா. ஆறுமுககண்ணன்)
Re: மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
இது வரை மது அருந்தியவர்கள் அனைவரையும் குடிக்க வேண்டாம் என்றும் சொல்ல முடியாது அவர்களாளும் அதை தவிர்க்க முடியாது(கள்ளசாராயம் காச்சி ஆவது குடித்து விடுவார்கள்) ஆனால் புதியதாக மது அருந்தி பழகுபவர்களின் எண்ணிக்கையை அதிக பட்சமாக குறைக்கலாம்.மாணவர்கள் இடையே தண்ணி அடித்தால் தான் சந்தோஷம் அது ஒரு பொழுது போக்கு என்ற எண்ணம் மாற வேண்டும்.வீதிக்கு வீதி மது கடைகளை திறந்து வைத்தால் விளையாட்டாக பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மது குடிக்க பழகி விட்டு சிலர் வாழ்க்கையையும் பாழ்படுத்தி கொள்கிறார்கள்...
பூரண மது விலக்கு அவசியமான ஒன்று தான்...
பூரண மது விலக்கு அவசியமான ஒன்று தான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
ரா.ரமேஷ்குமார் wrote:இது வரை மது அருந்தியவர்கள் அனைவரையும் குடிக்க வேண்டாம் என்றும் சொல்ல முடியாது அவர்களாளும் அதை தவிர்க்க முடியாது(கள்ளசாராயம் காச்சி ஆவது குடித்து விடுவார்கள்) ஆனால் புதியதாக மது அருந்தி பழகுபவர்களின் எண்ணிக்கையை அதிக பட்சமாக குறைக்கலாம்.மாணவர்கள் இடையே தண்ணி அடித்தால் தான் சந்தோஷம் அது ஒரு பொழுது போக்கு என்ற எண்ணம் மாற வேண்டும்.வீதிக்கு வீதி மது கடைகளை திறந்து வைத்தால் விளையாட்டாக பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மது குடிக்க பழகி விட்டு சிலர் வாழ்க்கையையும் பாழ்படுத்தி கொள்கிறார்கள்...
பூரண மது விலக்கு அவசியமான ஒன்று தான்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?
![மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுவுக்கு ஏன் விலக்கு?
» மதுவுக்கு ஏன் விலக்கு?
» வரி விலக்கு ஆணையம்....
» ஜெயலலிதாவிற்கு மட்டும் விலக்கு
» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
» மதுவுக்கு ஏன் விலக்கு?
» வரி விலக்கு ஆணையம்....
» ஜெயலலிதாவிற்கு மட்டும் விலக்கு
» ரூ. 5 லட்சம் வரை வருமான வரி விலக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|