Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு
2 posters
Page 1 of 1
டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு
இலங்கை தமிழர் பிரச்சினையில், நான் காணும் கனவு நிறைவேறும் வரை அனைவரையும் அரவணைத்துப் போராடுவேன் என்று சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு
ஈழத்தமிழர்களின் இனிய விடியலை காண்பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிருற்ற கல்லறைகளாக மாறிவிட்ட மாவீரர்களாம் தியாக தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்தி இந்த உரையைத் தொடங்குகிறேன்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக இங்கு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டெசோ தொண்டர்கள், செயலாளர்கள் ஊருக்கு ஊர் சென்று ஆங்காங்கே நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டங்களிலே ஈழத்தமிழர்களின் அவலநிலை, அவர்களுக்கு நாம் தர வேண்டிய பாதுகாப்பு, அவர்களுக்கு நாம் நீட்டவேண்டிய உதவிக்கரம் பற்றி பேசி, அவர்களுக்கு பேராதரவை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசுக்கு அழுத்தம்
நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று இங்கு பேசிய தலைவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். காலையில் பேசியவர்களும், வெளிநாட்டில் இருந்து வநëதவர்களும், நண்பர்களும் எடுத்துரைத்தார்கள். மாலையில் பேசிய திருமாவளவன், இலங்கை பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று பலமுறை இங்கே எடுத்துரைத்தார்.
நான் அவருக்கு ஒன்றை சொல்வேன். அண்டை நாடான இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகளை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளை பாதுகாத்து வரும் இந்திய அரசு, அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏனென்ற கேள்வி தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது என்பதை இந்த மாநாடு இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
முதலில் காயத்திற்கு மருந்து
எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத்தமிழ் மக்கள் அரசியல் பொருளாரம், பண்பாட்டு உரிமைகளை பெற்றெடுத்து சமத்துவம், அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.
அந்த தீர்மானத்தின் இறுதியாக, இலங்கையில் உள்ள தமிழர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இதைவிட இந்திய அரசுக்கு வேறு என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும்? என்று எனக்குப் புரியவில்லை. இதுதான் சரியான அழுத்தம் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு இந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தீர்மானத்திற்கு வலுசேர்க்க...
ஆனால், இந்த தீர்மானத்தை வைத்துக் கொண்டே இந்திய அரசுக்கு நம்மால் அழுத்தம் கொடுக்க முடியும். இந்த தீர்மானமே இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம்தான் என்பதை திருமாவளவன் உணர்வார். மற்றவர்களும் இதை மிக நன்றாக உணர்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, இன்றைக்கு நிமëமதியான, இனிமையான வாழ்வு பெற இன்றைக்கு இடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவர்களைப் போல இருக்கின்ற வாழ்க்கையில் இருந்து விடுபட வீரமணி மற்றும் நண்பர்கள் எல்லாம் எடுத்து சொன்னதைப் போல் இந்த மாநாட்டின் வெற்றி, இந்த மாநாட்டில் எவ்வளவு பேர் கூடினார்கள்? மாநாடு எத்தனை நாள் நடைபெற்றது? எவ்வளவு மணி நேரம் நடைபெற்றது? என்பது அல்ல. இந்த மாநாட்டினுடைய வெற்றி, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்து உணர வேண்டும்.
நாம் இந்த தீர்மானத்தின் மூலம் ஒவ்வொருவரும், தமிழ் ஆர்வம் உள்ள அத்தனை பேரும், ஈழத்தமிழர்கள்பால் அன்பு கொண்ட அத்தனை பேரும், இரக்கம் கொண்ட அத்தனை பேரும் அழுத்தம் கொடுத்து இந்த தீர்ëமானத்திற்கு வலு சேர்ப்பார்களேயானால், நாம் காணுகின்ற கனவு நிச்சயமாக நிறைவேறும்.
நான் காணும் கனவு
இலங்கையில் இருக்கும் அல்லல், உடனடியாக தீரும். ஒரே ஈழநாடு பெற வேண்டும் என்று கேட்டீர்களேயானால், அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரேயொரு சமாதானம் என்னவென்றால், முதலில் காயம்பட்டுக் கிடப்போரை, ரணத்தை, காயத்தை ஆற்ற அவர்களை உயிர் பிழைக்க முதலுதவி தேவைப்படுவதைப் போல, டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதலுதவிகளை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நாம் அவற்றை செய்யத் தொடங்கி இருக்கின்றோம்.
அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
மாநாட்டில் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திச்செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், புலவர் இந்திரகுமாரி, நடிகை குஷ்பு, கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
`டெசோ' ஆய்வரங்கம்
முன்னதாக, நேற்று காலை சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிடன் ஓட்டலில் `டெசோ' மாநாடு தொடர்பான ஆய்வரங்கம் நடந்தது.
இந்த ஆய்வரங்கத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, டெசோ உறுப்பினர் சுப.வீரபாண்டியன், சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
பங்கேற்றவர்கள்
ஆய்வரங்கத்தில், மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், காந்திச்செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், எ.வ.வேலு, பொன்முடி, தேசிய மாநாட்டு கட்சியின் பொது செயலாளர் எஸ்.டி.சாதிக் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி கோவிந்த்ராவ் ஆதிக், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி கே.சி.தியாகி, நவசமா சமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரமபாகு கர்ண ரத்தினே.
சர்வதேச பொது மன்னிப்பு சபை இந்திய தலைவர் அனந்த பத்மநாபன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
3 மணி நேர ஆய்வரங்கம்
காலை 10.15 மணிக்கு தொடங்கிய ஆய்வரங்கம் மதியம் 1.15 மணி வரை, தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு பிரதிநிதிகளும், ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
முன்னதாக, ஆய்வரங்கத்தை தொடங்கிவைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
`டெசோ' மாநாட்டில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இரு அமைப்புகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு
போர் நடந்த போது இப்படி ஒரு மாநாட்டையும் , ராஜினமாவையும் நடத்த தவறிய இனத்துரோகி நீங்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம் .. இனி எத்துனை மாநாட்டை நடத்தினாலும் அது மாறப்போவதில்லை ...
பிரபாகரன் தான் தமிழ் இனத்தலைவர் , நீங்கள் தமிழ் இனத்துரோகி அது என்றைக்கும் மாறாது ..
பிரபாகரன் தான் தமிழ் இனத்தலைவர் , நீங்கள் தமிழ் இனத்துரோகி அது என்றைக்கும் மாறாது ..
Guest- Guest
Re: டெசோ மாநாட்டில் கருணாநிதி பேச்சு
"
அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"
"அடுத்த 4G ஊழல் முடிந்தவுடன்" என் மக்களை (மகளை) காப்பாற்ற " உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"
அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"
"அடுத்த 4G ஊழல் முடிந்தவுடன்" என் மக்களை (மகளை) காப்பாற்ற " உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன்"
Similar topics
» தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு
» தமிழின அழிப்புக்கு துணை போன கருணாநிதி எந்த முகத்துடன் டெசோ நடாத்துகிறார்: வைகோ
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
» இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி
» தமிழின அழிப்புக்கு துணை போன கருணாநிதி எந்த முகத்துடன் டெசோ நடாத்துகிறார்: வைகோ
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்
» டெசோ மாநாடு நடத்தப்படுவது ஏன்? கருணாநிதி விளக்கம்
» இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|