புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_m10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_m10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10 
2 Posts - 18%
heezulia
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_m10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 17, 2012 4:21 pm

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., உழவர் பேரியக்க மாநில தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.

ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.

முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.

தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது.

வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாராப சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறதுப இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.

நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் கோ.ஆலயமணி, உழவர் பேரியக்க தலைவர் இள.க.சடகோபன், மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் (தஞ்சை மத்தி) ம.க.ஸ்டாலின் (தஞ்சை வடக்கு), உழவர் பேரியக்க மாநில செயலாளர் எஸ்.பி. ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாலைமலர்



அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:23 pm

இன்று என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராமதாஸ் அவர்களுக்கு என் நன்றிகள் ... சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக