Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
4 posters
Page 1 of 1
ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நடிகர்களின் பகட்டு விளம்பரத்தால் லட்சக்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் தற்போது குப்பாடு போடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் ரூ.200 கோடி மோசடி செய்ததே இந்த குப்பாடுக்கு காரணம்.
புதிய பொருட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டு வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த நடிகை, நடிகர்களை நாடுகின்றனர். இப்படி விளம்பரத்தில் வரும் நடிகர்களை நம்பி பொதுமக்களும் அந்த பொருட்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில்தான் தெரிகிறது அந்த பொருட்கள் அனைத்தும் போலியானவை என்று. அதேபோலதான் தற்போது ஈமு கோழி வளர்ப்பு விளம்பரமும்.
ஈமு கோழி வளர்த்தால் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் தமிழக நடிகர், நடிகைகள் வைத்து பிரபலப்படுத்தியது. இந்த விளம்பரத்தில் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு நம்ம நடிகர், நடிகைகள் நடித்து விடுகின்றனர். அந்த வகையில் ஈமு கோழி விளம்பரத்தில் நடிகர்கள் பார்த்தீபன், பாக்கியராஜ், தலைவாசல் விஜய், பறவை முனியம்மா, டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் பார்த்திபன் சேல் மாவட்டம் மேட்டூரில் உள்ள 'பேபி ஈமு பாம்ஸ் மேட்டூர் டேம்' என்ற தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம், வாழ்க்கை வாழத்தான், வாழ்ந்து ஜெயிக்கத்தான் என்ற பாடலுடன் தொடங்குகிறது. பின்னர், முட்டையில் இருந்து கோழி வந்திச்சா, கோழியிலிருந்து குஞ்சு வந்திச்சா என்று குழந்தைகள் கேட்க அதற்கு நடிகர் பார்த்தீபன், முட்டையில் இருந்து கோழி வந்திருக்கலாம் ஆனா ஈமு கோழியில் இருந்துதான் இலாபம் வந்தது என்கிறார்.
பின்னர், ருக்கு ருக்கு ஈமு, கோடி கோடி கொட்டுதுங்கு இலாபம், கொக்கரக்ரோ கொக்கோ என்ற பாடலுடன் 'கோழினா ஈமு பேபினா இலாபம்' விளம்பரத்தை முடித்து வைக்கிறார் பார்த்தீபன்.
இப்படி பிரபல நடிகர்கள் நடித்துள்ள விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் நம்பி இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். பணத்தை வாங்கிக் கொண்டு 5 நிமிட விளம்பரத்தில் நடித்து விட்டு சென்று விடுகின்றனர் நடிகர்கள். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்தான்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் பொதுமக்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான சுசி ஈமு கோழிப்பண்ணையும், அதன் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் பல லட்சம் முதலீடு செய்திருந்தனர். இவர்களுக்கு ஈமு கோழி வளர்க்க நிறுவனத்தின் மூலம் செட் அமைத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்பதற்கு கூலியாக மாதம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வளர்ப்பு கூலி வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் சார்பில் செக் வழங்கப்பட்டு இருந்தது. நிறுவனத்தில் கணக்கில் வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் செக் திரும்ப வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பெருந்துறையில் உள்ள ஈமு கோழிப்பண்ணையையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் வந்து குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் ஈமு கோழிப்பண்ணை அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிறுவனத்தின் சார்பில் வளர்ப்புக்கூலி வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால் போலீசார் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பொன்னி, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோழிப்பண்ணை நிறுவனத்தின் மேலாளர் சரியான நேரத்திற்கு பணம் வந்து சேரவில்லை. விரைவில் முதலீட்டாளர்களுக்கு வழங்கிவிடுவோம் என்று கூறினார். ஆனால் அவர்கள் வழங்கவேண்டிய தொகை அதிக அளவில் இருந்ததால், நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். மேலும் நிறுவனத்தில் உரிமையாளர் எங்கே என்று விசாரித்தபோது, அவர் எங்கு சென்றார் என்று அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், மணக்கரடு அய்யன் தோட்டத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவர், பெருந்துறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார், சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவன உரிமையாளர் குரு, பணியாளர்கள் கதிர்வேல், சுந்தரமூர்த்தி, அமுதன், மகாராஜன், சுரேஷ், விஜயகுமார், செந்தில் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக போலீசார் சென்றபோது அவர்கள் 8 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ் கூறுகையில், நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து நிர்வாகிகள், பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
//நிதி மோசடி, சீட்டு மோசடி என்று பல வகையில் மக்கள் ஏமாந்தாலும், அவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களை மிகவும் சுலபமாக இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறுப்படுகிறது.//
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
சொல்லப்போனால், ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
பிள்ளைகளுக்கு ஆசைகாட்டி தவறான வழியில் கொண்டு சென்றப்பின்.... தவறான வழியில் போக ஆசைப்பட்ட பிள்ளைகள் இருக்கும் வரை தவறிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல் முடியுமா? அதனால் முதலில் அரசாங்கம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை முதலிலெயே அடையாளம் காணவேன்டும் தண்டிக்க வேன்டும.. வியாபாரம் என்றாலே குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் என்பது தானே தாரக மந்திரம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்...விரும்பினேன் உங்களின் pathivai
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈமு கோழி வளர்ப்பும், நடிகர்களின் பகட்டு விளம்பரமும்!
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.
azhagan77- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012
Similar topics
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» மோசமான நடிக நடிகைக்கு விருது :)
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விளம்பர யுக்தி
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» மோசமான நடிக நடிகைக்கு விருது :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|